search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Basavaraj Bommai"

    • கன்னடம், மொழியாக அல்லாமல் நமது வாழ்க்கையாக இருக்க வேண்டும்.
    • கன்னடம் நமது தாய்மொழி மட்டுமின்றி தேசிய மொழியும் கூட.

    பெங்களூரு :

    கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் கர்நாடக ராஜ்யோத்சவா விழா கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அத்துடன் கன்னட கொடியையும் ஏற்றினார். அதைத்தொடர்ந்து அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். பின்னர் அவர் உரையாற்றினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

    கன்னடம் நமது தாய்மொழி மட்டுமின்றி தேசிய மொழியும் கூட. கர்நாடகத்தில் அனைத்து துறைகளிலும் கன்னட மொழி பயன்பாட்டை கட்டாயமாக்க வருகிற சட்டசபை கூட்டத்தொடரில் சட்டம் நிறைவேற்றப்படும். கன்னடத்திற்கு சட்ட பாதுகாப்பு வழங்கப்படும்.

    கன்னடத்திற்காகவே வாழ வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்க வேண்டும். கன்னடம் எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்பட வேண்டும். கர்நாடகத்தில் அடுத்த 3, 4 ஆண்டுகளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

    ரூ.7 லட்சம் கோடிக்கு தொழில் முதலீடுகள் வந்தால் கர்நாடகம் வளர்ச்சி அடையும். கன்னடம், மொழியாக அல்லாமல் நமது வாழ்க்கையாக இருக்க வேண்டும்.

    கர்நாடகத்தில் ஒரே ஆண்டில் 8 ஆயிரம் பள்ளி கட்டிட வகுப்பறைகளை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம். 1956-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் உருவானது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து இவ்வாறு வகுப்பறை கட்டிடங்களை கட்டினால் பள்ளி கட்டிடங்களுக்கு பற்றாக்குறை இருக்காது. 'விவேகா' என்ற பெயரில் நாங்கள் பள்ளி கட்டிடங்களை கட்டுகிறோம்.

    கர்நாடகத்தில் அரசு துறைகளில் 2½ லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அடுத்த 2 ஆண்டுகளில் இந்த காலியிடங்கள் நிரப்பப்படும். நடப்பாண்டில் 1 லட்சம் காலியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இந்த காலியிடங்கள் நிரப்பும்போது கன்னடர்களுக்கு வேலை கிடைக்கும். கர்நாடகத்தில் நாளை (இன்று) உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இதன் மூலம் சுமார் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

    கர்நாடகத்தில் 10 வேளாண் மண்டலங்கள் உள்ளன. இந்த ஆண்டு மழை அதிகமாக பெய்து அணை, ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனர். வறட்சி பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அடுத்த 3, 4 ஆண்டுகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது. வீடுகளை இழந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

    கர்நாடகத்தில் அதிக எண்ணிக்கையில் அறிவுசார் அடிப்படையிலான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆராய்ச்சியில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. அதனால் கர்நாடகம் அறிவுசார் மாநிலம் ஆகும். நமது மண்ணில் ஞானம், உழைப்பு, உழைப்புக்கு மரியாதை உள்ளது.

    விவசாய வித்யா திட்டத்தின் கீழ் விவசாயிகள், விவசாய கூலித்தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதுவரை 6 லட்சம் குழந்தைகளுக்கு இந்த உதவித்தொகையை வழங்கியுள்ளோம். 5 லட்சம் பெண்களுக்கு சுயதொழில் செய்வதற்கு உதவி செய்யும் திட்டத்தை அமல்படுத்த உள்ளோம். கிராமப்புற இளைஞர்களுக்கு சுயதொழில் செய்ய உதவி செய்கிறோம்.

    நாட்டிலேயே அதிக ஞானபீட விருதுகளை பெற்ற மாநிலம் கர்நாடகம்.உலகமயமாக்கல், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல் போன்றவற்றால் நாம் பல்வேறு புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.

    நமது கலாசாரம் சிறப்பானது. கன்னட கொடியை எல்லா துறைகளிலும் பறக்க விட வேண்டும். நல்ல கல்வி, சுகாதாரம், வேலை, தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் அடிப்படை வசதிகளை கொண்ட எதிர்காலத்தை கட்டமைக்க வேண்டியது அவசியம். அவ்வாறு செய்தால் உலகிலேயே கர்நாடகம் சிறந்த மாநிலமாக திகழும்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    விழாவில் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. கன்னட மொழி மீது உணர்வு பூர்வமாக பற்றை வெளிப்படுத்தும் பாடல்களுக்கு பள்ளி குழந்தைகள் நடனமாடினர். இந்த விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    • மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு வழங்கப்பட்ட கர்நாடகா ரத்னா விருதை அவரது மனைவி அஸ்வினி பெற்றுக் கொண்டார்.
    • இதனை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ரஜினிகாந்த் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர். வழங்கினர்.

    கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 29-ந் தேதி மாரடைப்பு காரணமாக தனது 46 வயதில் உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் ரசிகர்கள், திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. புனித் ராஜ்குமார் மறைவையடுத்து அவரது கலைப்பணி மற்றும் சமூக சேவை ஆகியவற்றை கருத்திற்கொண்டு அவருக்கு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என கர்நாடகா முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்தார்.


    விருது பெற்ற புனித் ராஜ்குமார் மனைவி அஸ்வினி

    மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு இந்த விருதை வழங்குவதற்காக, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தொடர்ந்து ரஜினிகாந்த் விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் இன்று பெங்களூர் சென்றார். இதையடுத்து நடிகர் புனித் ராஜ்குமாருக்கு வழங்கப்பட்ட கர்நாடகா ரத்னா விருதை அவரது மனைவி அஸ்வினி பெற்றுக் கொண்டார். இதனை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் வழங்கினர்.


    பசவராஜ் பொம்மை - ரஜினிகாந்த்

    இந்நிலையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "மாபெரும் நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். அவர்கள் எங்கள் அழைப்பிற்கு பதிலளித்து புனித் ராஜ்குமாருக்கு 'கர்நாடகா ரத்னா' விருதை வழங்குவதற்காக கர்நாடகாவிற்கு வந்து கன்னடத்தில் பேசி கன்னடத்தின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தினார்கள். அவர்களுக்கு என் நன்றி" என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


    • ரிஷி சுனக் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பெங்களூருக்கு அடிக்கடி வருபவர்.
    • இங்கிலாந்து எம்.பி.யானபோது பக்வத் கீதையை கொண்டு வந்து பதவியேற்றார்.

    இங்கிலாந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக்கின் பெற்றோர் இருவரும் இந்திய வம்சாவளியினர். பெற்றோர் வழி தாத்தாக்கள் அப்போதைய ஒன்றிணைந்த பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தவர்கள். ரிஷி சுனக் தந்தை யாஷ்வீர் சுனக், இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற மருத்துவர். தாய் உஷா சுனக் மருந்து கடை நடத்தி வந்தார். 1960 ஆம் ஆண்டு கென்யாவில் இருந்து இங்கிலாந்துக்கு ரிஷி சுனக் குடும்பம் குடி பெயர்ந்தது.

    ரிஷி சுனக் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர். கர்நாடகாவில் உள்ள இன்போசிஸ் ஐ.டி.நிறுவனத் தலைவர் நாராயண மூர்த்தியின் மகள் அக்சதா மூர்த்தியை ரிஷி சுனக் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கிருஷ்ணா மற்றும் அனுஷ்கா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

    ரிஷி சுனக் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பெங்களூருக்கு அடிக்கடி வருகை தந்துள்ளார். யார்க்ஷயர் தொகுதி எம்.பி.யாக அவர் பதவியேற்ற போது கையில் பகவத் கீதையை கொண்டு சென்றிருந்தார். போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராக அவர் இருந்தார்.

    இந்தியாவை பல ஆண்டுகள் தங்கள் ஆட்சியின் கீழ் அடிமைப்படுத்தி வைத்திருந்த இங்கிலாந்தின் இளம் வயது பிரதமராக பொறுப்பேற்கும் ரிஷி சுனக்கிற்கு இந்தியாவின் பலவேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


    டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இது ஒரு நல்ல செய்தி, உலகம் முழுவதும் இந்தியர்கள் தங்கள் அடையாளத்தை பதித்துள்ளனர் என்று கூறியுள்ளார். இங்கிலாந்தின் பிரதமராக பதவியேற்கும் ரிஷி சுனக், அந்நாட்டை வெற்றிகரமாக வழிநடத்த அவருக்கு ஞானமும் வலிமையும் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 


     கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அளித்துள்ள பேட்டியில், 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டதாகவும், இந்தியர்களின் இவ்வளவு பெரிய வளர்ச்சியை அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். இன்று பல நாடுகளில் இந்தியர்கள் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தற்போது, ​​பிரிட்டனின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியும் சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 


    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், இங்கிலாந்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது பெருமைக்குரிய தருணம் என்று ஐம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை பிரிட்டன் பிரதமராக இங்கிலாந்து ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை நினைவூட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • காங்கிரஸ் ஆட்சியில் நிறைய ஊழல்கள் நடைபெற்றன.
    • கர்நாடக மக்கள் பொய்யை நம்ப மாட்டார்கள்.

    பெங்களூரு :

    யாதகிரி மாவட்ட பா.ஜனதா சார்பில் ஜனசங்கல்ப பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:-

    நாட்டை பற்றியோ அல்லது கர்நாடகத்தை பற்றியோ ராகுல் காந்திக்கு ஒன்றும் தெரியாது. மக்களின் உணர்வுகள் என்ன என்பதும் அவருக்கு தெரியாது. காங்கிரஸ் ஆட்சியில் நிறைய ஊழல்கள் நடைபெற்றன. அதுகுறித்த ஆவணங்களை அவருக்கு அனுப்பி வைப்பேன். ராகுல் காந்தி நாட்டின் பிரதமராக முடியாது.

    ஊழல் விவரங்களை அனுப்பி வைப்பேன் என்று நான் கூறியதும் காங்கிரஸ் தலைவர்களுக்கு ஆதங்கம் ஏற்பட்டுள்ளது. நான் ஆதாரங்களுடன் பேசுகிறேன். ஆனால் காங்கிரசார் எனது அரசு மீது ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். நாங்கள் ஒன்றும் மரக்கன்றுகள் கிடையாது.

    முழுவதுமாக வேர்களுடன் வளர்ந்த மரங்கள். கர்நாடக மக்கள் பொய்யை நம்ப மாட்டார்கள். சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கு ஊழலற்ற சிறப்பான நிர்வாகத்தை வழங்க உறுதி பூண்டுள்ளோம். நாங்கள் தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளோம். ஆனால் மாநிலத்தில் 50 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் அந்த சமூக மக்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை.

    முந்தைய காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) ஆட்சியில் நாகமோகன்தாஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு பரிந்துரைத்த அம்சங்களை நாங்கள் அமல்படுத்தி இட ஒதுக்கீட்டை உயர்த்தியுள்ளோம். இந்த கல்யாண-கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காங்கிரசாரின் உண்மையான சாயம் வெளுக்கும்.
    • எடியூரப்பாவை காங்கிரஸ் தலைவர்கள் விமர்சிக்கிறார்கள்.

    பெங்களூரு :

    விஜயநகர் மாவட்ட பா.ஜனதா சார்பில் கட்சியின் பொதுக்கூட்டம் அங்குள்ள புனித் ராஜ்குமார் மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

    தலித் மக்கள், மாணவர்கள், பெண்கள், இளைஞர்களின் எதிர்காலத்தை நாங்கள் பலப்படுத்தியுள்ளோம். அவர்கள் பயப்பட வேண்டியது இல்லை. ஆனால் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அச்சம் உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை மூடிமறைக்க ஊழல் தடுப்பு படையை தொடங்கி லோக்அயுக்தாவின் அதிகாரத்தை பறித்தனர்.

    நாங்கள் லோக்அயுக்தாவை மீண்டும் பலப்படுத்தியுள்ளோம். காங்கிரசார் செய்த ஊழல்கள் அனைத்தும் தற்போது வெளியே வந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அப்போது காங்கிரசாரின் உண்மையான சாயம் வெளுக்கும். எடியூரப்பாவை காங்கிரஸ் தலைவர்கள் விமர்சிக்கிறார்கள்.

    இதை கண்டு அவர் பயப்பட மாட்டார். அவரை ஒடுக்க காங்கிரசார் முயற்சி செய்தனர். அவர் மீது பொய் வழக்குகளை போட்டனர். ஆனால் அவர் மீண்டும் முதல்-மந்திரி ஆனார். நேருவின் கால் தூசுக்கு மோடி சமமா? என்று சித்தராமையா கேட்டுள்ளார். காந்தியின் கால் தூசுக்கு நேரு சமமா? என்று நாங்களும் கேட்க முடியும். கொரோனா நெருக்கடி காலத்தில் மக்களுக்கு தடுப்பூசி போட்டு காப்பாற்றினோம். இதை உலகமே பாராட்டியது.

    உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. ஆனால் இந்தியாவின் பொருளாதாரம் பலமாக உள்ளது. டி.கே.சிவக்குமார், சித்தராமையாவை ஒற்றுமைப்படுத்தியே ராகுல் காந்தி சோர்வடைந்துவிட்டார். நாட்டை 2 ஆக பிரித்தது காங்கிரஸ். ஆட்சி அதிகாரத்திற்காக நாட்டை உடைத்தனர். இப்போது ஒற்றுமை யாத்திரையை காங்கிரசார் நடத்துகிறார்கள். காலிஸ்தானுக்கு இந்திரா காந்தி ஆதரவு கொடுத்தார்.

    விவசாயிகளின் குழந்தைகளின் கல்விக்கு பயம் இல்லை. எங்கள் அரசு விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், டாக்சி, ஆட்டோ டிரைவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். கர்நாடகத்தில் தற்போது தலித் மக்கள் பயத்தில் உள்ளதாக காங்கிரசார் கூறுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் தான் வீரசைவ-லிங்காயத் சமூகத்தை உடைக்க முயற்சி நடைபெற்றது. அப்போது மக்கள் அச்சம் அடைந்தனர்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜன சங்கல்ப யாத்திரை என்ற பெயரில் எடியூரப்பா, பசவராஜ்பொம்மை ஆகியோர் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்கள், மக்களை சந்திக்க உள்ளனர்.
    • முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் ராய்ச்சூரில் இருந்து தங்களது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைக்க அக்கட்சி மேலிடம் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், இந்திய ஒற்றுமைக்கான பாதயாத்திரையை ராகுல்காந்தி கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கினார்.

    அவர் மைசூரு, துமகூரு வழியாக நேற்று சித்ரதுர்காவில் தனது நடைபயணத்தை மேற்கொண்டார். அவரது பாதயாத்திரைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

    இதற்கு பதிலடியாகவும், சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டும் பா.ஜனதா மேலிடம் காங்கிரஸ் பாதயாத்திரைக்கு போட்டியாக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, தற்போதைய முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை ஆகியோரை களத்தில் இறக்கியுள்ளது. இரு தலைவர்களும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள்.

    அதன்படி ஜன சங்கல்ப யாத்திரை என்ற பெயரில் எடியூரப்பா, பசவராஜ்பொம்மை ஆகியோர் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்கள், மக்களை சந்திக்க உள்ளனர். அவர்களின் சுற்றுப்பயணம் வடகர்நாடகத்தில் உள்ள ராய்ச்சூரில் இன்று தொடங்குகிறது.

    முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் ராய்ச்சூரில் இருந்து தங்களது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளனர். 50 தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்த 2 தலைவர்களும் முடிவு செய்து உள்ளனர்.

    ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கி, கொப்பல் மாவட்டம் குஷ்டகி, விஜயநகர் மாவட்டம் ஊவினஅடஹள்ளி, பல்லாரி மாவட்டம் சிருகுப்பாவில் அடுத்த 3 நாட்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள்.

    அதன்பின்னர் 2 நாட்கள் ஓய்வு எடுக்கும் பசவராஜ் பொம்மை மைசூருவில் 16-ந் தேதி நடக்கும் எஸ்.சி. சமூக மாநாட்டில் கலந்து கொள்கிறார். அதன்பின்னர் பீதர், யாதகிரி, கலபுரகி மாவட்டங்களில் பசவராஜ் பொம்மை சுற்றுப்பயணம் செய்கிறார்.

    • கர்நாடக முதல் மந்திரி சிக்கபல்லாபூரில் உள்ள ஈஷா மையத்தில் நாக மண்டபத்தை திறந்து வைத்தார்
    • இந்த நாக மண்டபம் அக்டோபர் 10-ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிக்கபல்லாபுராவின் புறநகரில் ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது.

    இந்நிலையில், முதல் மந்திரி பசவராஜ் பொம்மை சிக்கபல்லாபுராவின் புறநகரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சத்குரு முன்னிலையில் நாக மண்டபத்தை நேற்று திறந்து வைத்து, ஈஷா அறக்கட்டளையின் ஆன்மீகப் பணிகளை துவக்கி வைத்தார்.

    தொடக்க விழாவின் ஒரு பகுதியாக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, சுகாதாரத் துறை மந்திரி கே.சுதாகர் ஆகியோர் ஆரத்தி செய்து மலர்களை அர்ப்பணித்தனர்.

    அப்போது பேசிய முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, மண்ணைப் பாதுகாப்பதற்கான சத்குருவின் சமீபத்திய விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம் உலகம் முழுவதும் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. கர்நாடகாவில் விவசாயிகளுக்கு நன்மை தருகின்ற வகையில் மண்ணின் தரத்தைப் பாதுகாக்க மாநில அரசு உறுதிபூண்டுள்ளது. சத்குரு நமது விவசாயிகளின் இதயங்களில் இருக்கிறார் என தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய சத்குரு, சிக்கபல்லாப்பூர் அருகே உள்ள மையத்தில் 112 அடி ஆதியோகி சிவன் சிலை, எட்டு நவக்கிரக கோவில்கள் மற்றும் தனித்துவமான பைரவி கோவில் ஆகியவை அமைக்கப்படும். இந்த செயலில் மக்கள் அனைவரும் ஈடுபட வேண்டும்.

    ஒருவரது வாழ்க்கையில் காணப்படாத தடைகளை அகற்றுவதில் நாகத்தின் அருள் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனவே உலகெங்கிலும் உள்ள அனைத்து கலாச்சாரங்களும் பாம்பு வழிபாட்டைக் கொண்டுள்ளன என குறிப்பிட்டார்.

    புதிதாக கட்டப்பட்டுள்ள நாக மண்டபம் அக்டோபர் 10-ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும்.

    • கர்நாடகத்தில் 100 ஆரம்ப சுகாதார நிலையங்கள் சமுதாய நிலையங்களாக தரம் உயர்த்தப்படுகிறது.
    • ஆயுஸ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டையை பயன்படுத்துவதற்கான விதிமுறைகள் எளிமையாக்கப்படும்.

    பெங்களூரு :

    பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கே.சி.ஜெனரல் ஆஸ்பத்திரியில் 50 படுக்கைகள் கொண்ட ஜெயதேவா இதய நோய் ஆஸ்பத்திரி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இதய நோய் மைய திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த மையத்தை திறந்து வைத்து பேசியதாவது:-

    கர்நாடகத்தில் 100 ஆரம்ப சுகாதார நிலையங்கள் சமுதாய நிலையங்களாக தரம் உயர்த்தப்படுகிறது. ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் ரூ.8 லட்சம் செலவு செய்யப்படும். அங்கு படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும். மேலும் அந்த சமுதாய நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 'டெலிமெடிசன்' வசதி செய்து கொடுக்கப்படும்.

    ஆயுஸ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டையை பயன்படுத்துவதற்கான விதிமுறைகள் எளிமையாக்கப்படும். புதிதாக 81 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்படுகின்றன. மூத்த குடிமக்களுக்கு தாலுகா, கிராம அளவில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். பெங்களூருவிலும் இத்தகைய முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்படும்.

    மூத்த குடிமக்களுக்கு கண் பரிசோதனை, தேவைப்பட்டால் அதற்கு அறுவை சிகிச்சை, ஏழைகளுக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் திட்டங்கள் விரைவில் தொடங்கப்படும். ஏழைகளுக்கு காது கேளாதோருக்கு நவீன கருவியை இலவசமாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரத்த சுத்திகரிப்பு செய்யும் திறனை அதிகரித்துள்ளோம்.

    விவசாயிகளுக்கு சுகாதார வசதிகள் செய்து கொடுக்கப்படும் வகையில் யசஸ்வினி மருத்துவ காப்பீட்டு திட்டம் வருகிற நவம்பர் மாதம் 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் புதிதாக 4,000 அங்கன்வாடி மையங்கள் தொடங்கப்படுகின்றன. நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு தூய்மை மிக முக்கியம் ஆகும். அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதிக்குள் அனைத்து அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக கழிவறை அமைத்து கொடுக்கப்படும்.கர்நாடகத்தில் புதிதாக 430 நம்ம மருத்துவ கிளினிக்குகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பெங்களூருவில் மட்டும் 240 கிளினிக்குகள் தொடங்கப்படும். அதாவது வார்டுக்கு ஒரு கிளினிக் தொடங்கப்படுகிறது. பல்வேறு இடங்களில் உயர் பன்னோக்கு ஆஸ்பத்திரிகள் நிறுவப்படுகின்றன. பெங்களூருவில் மட்டும் 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படுகிறது.

    ஜெயதேவா இதய நோய் ஆஸ்பத்திரியில் சிறப்பான முறையில் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதனால் இதன் மையங்கள் கே.சி.ஜெனரல் போல் மாநிலத்தின் பிற அரசு ஆஸ்பத்திரிகளிலும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு தேவையான உதவிகளை அரசு செய்ய தயாராக உள்ளது.

    இந்திரா காந்தி குழந்தைகள் ஆஸ்பத்திரி, ஜெயதேவா, கித்வாய், நிமான்ஸ் உள்பட முக்கிய ஆஸ்பத்திரிகள் சிறப்பான முறையில் செயலாற்றி வருகின்றன. இந்த கே.சி.ஜெனரல் ஆஸ்பத்திரியில் விபத்து பிரிவு அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும். அனைவருக்கும் நல்ல தரமான மருத்துவ சேவைகளை வழங்குவது அரசு மற்றும் தனியார் துறையின் கடமை ஆகும். அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றுகிறவர்களுக்கு பணியுடன் சமூக பொறுப்பும் உள்ளது. சுகாதாரமான சமுதாயம் இருந்தால் வளர்ச்சி சாத்தியமாகும்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

    • பசவராஜ் பொம்மையின் படத்துடன் ‘பே-சி.எம்.’ என போஸ்டர்கள் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
    • அவதூறு பிரசாரத்தை சிலர் திட்டமிட்டு மேற்கொண்டு வருகிறார்கள்.

    பெங்களூரு :

    கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா அரசு நடந்து வருகிறது. இந்த நிலையில், அரசு ஒப்பந்த பணிகளுக்கு மந்திரிகள் 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக, அரசு ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார். இதுதொடா்பாக ஏற்கனவே பிரதமர் மோடிக்கும், ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் கடிதமும் எழுதி அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. ஒப்பந்ததாரர்களின் குற்றச்சாட்டை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடர்ந்து மறுத்து வருகிறார்.

    அதேநேரத்தில் கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அரசுக்கு எதிராக 40 சதவீத கமிஷன் பிரச்சினையை கையில் எடுத்து கொண்டு காங்கிரஸ் தலைவர்களான டி.கே.சிவக்குமார், சித்தராமையா உள்ளிட்டோர் எழுப்பி வருகிறார்கள். இந்த 40 சதவீத கமிஷன் விவகாரத்தில் அரசுக்கு எதிராக தீவிர போராட்டம் நடத்த போவதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் அறிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் பெங்களூரு நகரில். 40 சதவீத கமிஷன் பெறுவதாக கூறி, பா.ஜனதா அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு நூதன முறையில் பிரசாரம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது போஸ்டர்களில் 'கியூ.ஆர்' கோடில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் படத்துடன் 'பே-சி.எம்.' என போஸ்டர்கள் வடிவமைக்கப்பட்டு இருந்தது. பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல்-மந்திரியின் புகைப்படத்துடன் 'பே-சி.எம்.' போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.

    அதாவது செல்போன் செயலி மூலமாக பணம் செலுத்துவதற்கு 'கியூ.ஆர்' கோடை ஸ்கேன் செய்வது போல, காங்கிரசார் ஒட்டி இருக்கும் போஸ்டர்களில் உள்ள 'கியூ.ஆர்' கோடை ஸ்கேன் செய்தால், அதில் பா.ஜனதா ஆட்சியில் நடந்த முறைகேடுகள், 40 சதவீத கமிஷனுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட தகவல்கள், சம்பந்தப்பட்ட செல்போனுக்கு கிடைக்கும் வகையில் செய்யப்பட்டு இருந்தது.

    கர்நாடக பா.ஜனதா அரசு, ஒப்பந்த பணிகளுக்கு 40 சதவீதம் கமிஷன் பெறுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு கூறி வந்த நிலையில், இதுபோன்ற நூதன போஸ்டர்களை ஒட்டி காங்கிரசார் பிரசாரத்தில் ஈடுபட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பெங்களூருவில் முதல்-மந்திரி புகைப்படத்துடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை உடனடியாக கிழித்து அகற்றும்படி மாநகராட்சி தொழிலாளர்கள், ஊழியர்களுக்கு, அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதைத்தொடர்ந்து, நகரின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள் கிழித்து அகற்றப்பட்டது.

    அதே நேரத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் புகைப்படத்துடன் கூடிய 'கியூ.ஆர்' கோடு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்ததால், அந்த போஸ்டர்களை ஒட்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஐகிரவுண்டு, சதாசிவநகர், சேஷாத்திரிபுரம், பாரதிநகர் உள்ளிட்ட பல போலீஸ் நிலையங்களில் மாநகராட்சி அதிகாரிகள் புகார் அளித்தார்கள். அந்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போஸ்டர்கள் ஒட்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறுகையில், "கர்நாடகத்தில் எனது புகழுக்கும், கர்நாடகத்தின் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்த சதி செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இத்தகைய அவதூறான சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

    இதுகுறித்து சட்ட நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த அவதூறு பிரசாரத்தை சிலர் திட்டமிட்டு மேற்கொண்டு வருகிறார்கள்.

    இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சமூக வலைத்தளங்களில் பரப்ப எங்களுக்கும் தெரியும். ஆனால் எங்களுக்கு எதிரான பிரசாரம் பெரிய பொய் என்பது பொதுமக்களுக்கு தெரியும். இந்த அவதூறு பிரசாரத்திற்கு மதிப்பு கிடையாது. கர்நாடகத்தின் புகழை கெடுக்கும் மேற்கொள்ளப்படும் எத்தகைய முயற்சிக்கும் முடிவுக்கட்ட அரசு நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    • மழையால் ஒட்டுமொத்த பெங்களூருவும் பாதிக்கப்பட்டுள்ளது.
    • கடந்த 90 ஆண்டுகளில் இத்தகைய மழை பெய்யவில்லை.

    பெங்களூரு :

    பெங்களூருவில் கடந்த 4-ந்தேதி இரவு கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சர்ஜாப்புரா, மாரத்தஹள்ளி, மகாதேவபுரா, பொம்மனஹள்ளி, இந்திராநகர், எச்.ஏ.எல். உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வீடுகளில் சிக்கியுள்ள குடியிருப்புவாசிகள் ரப்பர் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள். பெல்லந்தூர் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் ஏரி, குளங்கள், நீர் நிலைகள் மற்றும் அவற்றின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டிடங்களை கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. அதனால் பெங்களூருவில் தற்போது ஏற்பட்டுள்ள மழை-வெள்ள பாதிப்புக்கு காங்கிரஸ் கட்சியே காரணம்.

    ஆனால் அதைத்தொடர்ந்து நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஏரிகளை நிர்வகிக்கும் பணியை ஒரு சவாலாக ஏற்று மேற்கொண்டு வருகிறோம். நகரில் ராஜகால்வாய்களை மேம்படுத்த ரூ.1,500 கோடி நிதியை ஒதுக்கியுள்ளோம். நேற்று(நேற்று முன்தினம்) ரூ.300 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றியுள்ளோம். தரமான முறையில் ராஜகால்வாய்களை அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

    கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூருவில் வரலாறு காணாத மழை பெய்ததாக சொல்ல முடியாது. கடந்த 90 ஆண்டுகளில் இத்தகைய மழை பெய்யவில்லை. அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளன. சில ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகின்றன. இன்னும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையால் ஒட்டுமொத்த பெங்களூருவும் பாதிக்கப்பட்டுள்ளது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். அது தவறு.

    மகாதேவபுரா, சர்ஜாப்புரா பகுதிகள் தான் கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. மகாதேவபுராவில் மட்டும் 69 ஏரிகள் உள்ளன. அந்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    • அவருக்கு சில இருதய பிரச்சினைகள் இருந்தன.
    • இவ்வளவு சீக்கிரம் இறந்துவிடுவார் என்று நாங்கள் நினைக்கவில்லை.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் பாஜக தலைமையிலான அரசில், உணவு வழங்கல், நுகர்வோர் விவகாரங்கள் துறை மற்றும் வனத்துறை அமைச்சராக பணியாற்றி வந்தவர் உமேஷ் கட்டி (வயது 61). நேற்றிரவு பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள தமது வீட்டின் கழிவறையில் உமேஷ், மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

    அவரை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பால் ஏற்கனவே உமேஷ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் கோவிந்த் கர்ஜோல், சுகாதார அமைச்சர் கே சுதாகர் மற்றும் பல பாஜக தலைவர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர்.   


    உமேஷ் கட்டியின் அகால மரணம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்று கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை குறிப்பிட்டுள்ளார். என்னுடைய மிக நெருங்கிய நண்பரை இழந்துவிட்டேன், அவர் எனக்கு சகோதரராக இருந்தார்.  அவருக்கு சில இருதய பிரச்சினைகள் இருந்தன, ஆனால் அவர் இவ்வளவு சீக்கிரம் இறந்துவிடுவார் என்று நாங்கள் நினைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். பாகேவாடியில் அரசு மரியாதையுடன் உமேஷ் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்றும், பெலகாவி மாவட்டம் முழுவதும் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

    எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அமைச்சர் உமேஷ் மறைவுச் செய்தி ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

    பெலகாவி மாவட்டத்தில் உள்ள பாகேவாடியில் பிறந்த உமேஷ் கட்டி, ஹுக்கேரி சட்டமன்றத் தொகுதியில் இருந்து எட்டு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். ஜே.எச்.படேல், பி.எஸ். எடியூரப்பா, டி.வி.சதானந்த கவுடா மற்றும் ஜெகதீஷ் ஷட்டர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக அவர் பணியாற்றியுள்ளார். 

    • கர்நாடகத்தில் முதல்-மந்திரி மாற்றப்படுவதாக வரும் தகவல்கள் உண்மை இல்லை.
    • 2023 நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.

    பெங்களூரு :

    ஆந்திர மாநிலம் மந்திராலயத்திற்கு முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். நேற்று காலையில் அவர் ராகவேந்திரா சுவாமியை சந்தித்து ஆசி பெற்றார். முன்னதாக மந்திராலயத்தில் வைத்து எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    கர்நாடகத்தில் முதல்-மந்திரி மாற்றப்படுவதாக வரும் தகவல்கள் உண்மை இல்லை. பசவராஜ் பொம்மையே இன்னும் 8 மாதங்கள் முதல்-மந்திரியாக இருப்பார். அடுத்த சட்டசபை தேர்தலையும் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா சந்திக்கும். அடுத்த ஆண்டு (2023) நடைபெறும் சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும். கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று காங்கிரஸ் கட்சியினர் கனவு காண்கிறார்கள். அவர்களது கனவு பலிக்காது.

    பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்க மாநிலம் முழுவதும் வருகிற 21-ந் தேதியில் இருந்து நான் உள்பட அனைத்து தலைவர்களும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். பெங்களூருவுக்கு வந்த அமித்ஷா, சட்டசபை தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். பா.ஜனதாவில் நான் புறக்கணிக்கப்படுவதாக கூறுவதில் உண்மை இல்லை. பா.ஜனதா கட்சி எனக்கு அனைத்து பதவிகளையும் கொடுத்துள்ளது.

    சிகாரிபுரா தொகுதியில் விஜயேந்திரா போட்டியிட வாய்ப்பளிக்கும்படி பா.ஜனதா மேலிடத்திடம் அனுமதி கேட்டுள்ளேன். சிகாரிபுரா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் விஜயேந்திரா வெற்றி பெறுவார். பா.ஜனதா பற்றியும், தலைவர்களை பற்றியும் காங்கிரஸ் கட்சியினர் தேவையில்லாத பொய் குற்றச்சாட்டுகளை கூறி மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். வருகிற 21-ந்தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து ஓரிரு நாட்களில் ஆலோசனை நடத்தி அறிவிக்கப்படும்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

    ×