search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhavanisagar Dam"

    • பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
    • தண்ணீரின் வேகம் குறைந்து அருகே உள்ள கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதில் கீழ்பவானி வாய்க்காலில் சத்தியமங்கலம் அடுத்த தங்க நகரம் என்ற பகுதிக்கு கிளை வாய்க்கால் பிரிந்து செல்கிறது. கீழ்பவானி வாய்க்காலில் இருந்து இந்த கிளை வாய்க்காலில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் தங்க நகரம் என்ற இடத்தில் உள்ள கிளை வாய்க்காலில் தண்ணீர் செல்லும் அடிப்பகுதியில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வேகமாக சென்றது. மேலும் வாய்க்காலின் மேல் பகுதியில் பெரிய அளவிலான குழி ஏற்பட்டது.

    இது பற்றிய தகவல் அந்த பகுதி பொதுமக்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் தங்க நகரம் பகுதியில் கீழ்வாய்க்கால் பகுதியில் அதிகளவில் குவிந்தனர்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அய்மன் ஜமால், இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    மேலும் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பணியாளர்கள் மூலம் குழி மேலும் பெரிதாகி உடைப்பு ஏற்படாமல் இருக்க முதல் கட்டமாக கிளை வாய்க்கால் அடைக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. இதனால் தண்ணீரின் வேகம் குறைந்து அருகே உள்ள கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.

    மேலும் இது குறித்து தகவல் கிடைத்ததும் பொதுப்பணித்துறை நீர் வளப்பிரிவு பொறியாளர்கள் நேரில் வந்து ஆய்வு செய்து உடைப்பை அடைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.

    இதைதொடர்ந்து மணல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டு தண்ணீர் மேலும் கசியாத வகையில் அங்கு அடுக்கி வைக்கப்பட்டது. பவானிசாகர் அணையில் இருந்து வாய்க்காலுக்கு வரும் தண்ணீர் முழுமையாக நின்றதும் குழியை சரி செய்யும் பணி தொடங்கப்பட்டது. மேலும் பொக்லைன் எந்திரம் மூலம் குழியை சரி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    உடைப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்த வால்வு சரிசெய்யும் பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
    • மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மற்ற பிரதான அணைகளான குண்டேரி பள்ளம், வரட்டு பள்ளம், பெரும்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவு எட்டியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகள் நீர்நிலைகள் ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன.

    மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த 17-ந் தேதி பவானி சாகர் அணை 102 அடியை எட்டியது.

    அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விட ப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது.தொடர்ந்து இன்று 10 -வது நாளாக பவானிசாகர் அணை 102 அடியில் நீடிக்கிறது

    அணைக்கு வினாடிக்கு 2600 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு 2600 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மற்ற பிரதான அணைகளான குண்டேரி பள்ளம், வரட்டு பள்ளம், பெரும்பள்ளம் அணை தனது முழு கொள்ள ளவு எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது.
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இதையடுத்து அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 102 அடியை எட்டியது. அணையின் விதிப்படி 102 அடி எட்டியதும் அணையின் பாதுகாப்பு கருதி கீழ் மதகு வழியாக அணைக்கு வரும் நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு வெளி யேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றுக்க ரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4300 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து அப்படியே 4,300 கன அடி நீர் உபரிநீராக பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக பவானிசாகர், தொட்டம் பாளையம் , நடுப்பாளையம், சத்திய மங்கலம், அரியப்ப ம்பாளையம், சதுமுகை, பவானிசாகர் கூடுத்துறை வரை உள்ள ஆற்று கரையோர பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    பொதுப்பணித்துறையினர் கண்காணிப்பு

    இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் பொதுப்பணித்துறையினர் வருவாய்துறையினர் உஷார் படுத்தப்பட்டு நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

    • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.20 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட அணையின் முக்கிய நீர்ப்பி டிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து 56 நாட்கள் 102 அடியில் பவானிசாகர் அணை நீடித்தது.

    மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மீண்டும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.20 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,822 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

    அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1,500 கன அடி என மொத்தம் 1,600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

    • நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    நேற்று 4, 169 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 6,521 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101 அடியாக உள்ளது.

    பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 2,100 கன அடி தண்ணீரும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் 2,200 கன அடி வீதம் தண்ணீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது. காலி ங்கராயன் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் இன்று முதல் நிறுத்தப்ப ட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் மற்ற அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. 41.75 அடி கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 37.75 அடியாக உள்ளது.

    இதேபோல் 33.50 அடி கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.46 அடியாக உள்ளது. 30 அடி கொண்ட பெரும் பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.10 அடியாக உள்ளது.

    • நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
    • இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 56 நாட்கள் 102 அடியில் நீடித்தது.

    இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது.

    இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மீண்டும் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு இன்று காலை முதல் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    அணைக்கு நேற்று வினாடிக்கு 558 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 4,169 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 100.85 அடியாக உள்ளது.

    அணையில் இருந்து பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 2,300 கன அடி தண்ணீரும், காளிங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீரும் என மொத்தம் 2,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.84 அடியாக உள்ளது.
    • அணைக்கு வினாடிக்கு 423 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 -ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது.

    இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.84 அடியாக உள்ளது.அணைக்கு வினாடிக்கு 423 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 2,300 கன அடி தண்ணீரும், காலிங்கராயன் பாசனத்தி–ற்கு 300 கன அடி தண்ணீரும் என மொத்தம் 2,600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.95 அடியாக உள்ளது.
    • அணைக்கு வினாடிக்கு 594 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்த–தால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.95 அடியாக உள்ளது.அணைக்கு வினாடிக்கு 594 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 2,300 கன அடி, காலிங்கராயன் பாசனத்திற்கு 300 கன அடி என மொத்தம் 2,600 கனஅடி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. 

    • ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும்.
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.40 அடியாக உள்ளது.அணைக்கு வினாடிக்கு 478 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 -ந் தேதி பவானி–சாகர் அணை 102 அடியை எட்டியது.

    இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் பவானி ஆற்றில் திறந்து–விடப்பட்டது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

    எனினும் அணைக்கு வரும் தண்ணீரும், பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரும் ஒரே அளவில் இருந்ததால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியில் நீடித்து வந்தது.

    இந்நிலையில் 56 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.92 அடியாக குறைந்தது. தொடர்ந்து நீட்டிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறைந்தது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.40 அடியாக உள்ளது.அணைக்கு வினாடிக்கு 478 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 2,300 கன அடி தண்ணீரும், காலிங்கராயன் பாசன–த்திற்கு 400 கன அடி தண்ணீரும் என மொத்தம் 2,700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது.
    • அணைக்கு வரும் தண்ணீரும், பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரும் ஒரே அளவில் இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியில் நீடித்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கடந்த மாதம் 5 -ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது.

    பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 2,300 கன அடி தண்ணீரும், பவானி ஆற்றில் 600 கன அடி தண்ணீரும் என மொத்தம் 2,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரும், பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரும் ஒரே அளவில் இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியில் நீடித்து வருகிறது.

    • பவானிசாகர் அணை 102 அடியில் தொடர்ந்து 50-வது நாளாக நீடித்து வருகிறது.
    • நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு 2,800 கன அடியாக நீர் வரத்து சரிந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கடந்த மாதம் 5 -ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு 2,800 கன அடியாக நீர் வரத்து சரிந்தது. பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 2,300 கன அடி தண்ணீரும், பவானி ஆற்றில் 500 கன அடி தண்ணீரும் என 2,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணை 102 அடியில் தொடர்ந்து 50-வது நாளாக நீடித்து வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரும், பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரும் ஒரே அளவில் இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியில் நீடித்து வருகிறது.

    இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது.
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,900 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன் காரணமாக 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 5-ந் தேதி 102 அடியை எட்டியது.

    அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்ப ட்டது. பின்னர் மழைப்பொ ழிவு இல்லாத போது நீர்வரத்து குறைவதும், மழை பொழிவின்போது நீர்வரத்து அதிகரிப்பதும் என மாறி மாறி வந்து கொண்டு இருக்கிறது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,900 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 2,800 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    இதேப்போல் மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளில் நீர்வரத்து சற்று அதிகரித்து ள்ளது. 41.75 அடி கொண்ட குண்டேரி பள்ளம் அணை யின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 36.04 அடியாக உள்ளது.

    30.84 அடி கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 21.26 அடியாக உள்ளது. இதேபோல் 33.50 அடி கொண்ட வரட்டுபள்ளம் அணியின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.46 அடியாக உள்ளது.

    ×