search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhavanisagar Dam"

    • ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பவானிசாகர் அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    • இதையொட்டி பாது காப்பு கருதி அணையை காண பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    சத்தியமங்கலம்:

    ஆடி பெருக்கு விழாவை யொட்டி சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை பூங்காவுக்கு இன்று காலை முதலே ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கனைள சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பூங்காவுக்கு சென்றனர்.

    தொடர்ந்து அவர்கள் பூங்காவில் ஊஞ்சல் விளையாடி மகிழ்ந்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் சறுக்கு விளையாடி குதுகளித்தனர்.

    ஆடி 18 அன்று மட்டும் பவானிசாகர் அணையின் மேல் பகுதியை காண பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படும். இதற்காகவே சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அணையை காண வரு வார்கள்.

    இந்த நிலையில் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை 102 அடியை எட்டும் நிலையில் உள்ளது. இதனால் அணை கடல் போல் காட்சி அளிக்கிறது.

    இதையொட்டி பாது காப்பு கருதி அணையை காண பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அணை யின் மேல் பகுதிக்கு செல்லும் நுழைவுவாயில் அடைக்கப்பட்டு தடை என அறிவிப்பு பலகை வைக்கப் பட்டுள்ளது. இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணி க்கப் பட்டு வருகிறது.

    இதே போல் ஆடிப்பெ ருக்கு விழாவையொட்டி பண்ணாரியம்மன் கோவி லில் இன்று அதிகாலை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த னர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர் களின் கூட்டமாக காண ப்பட்டது.

    சென்னிமலை முருகன் கோவிலில் இன்று காலை முருகப் பெருமானுக்கு பால், தயிர், இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையொட்டி பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.

    இதே போல் திண்டல் முருகன், கோபிசெட்டி பாளையம் சாரதா மாரி யம்மன், பாரியூர் கொண்ட த்து காளியம்மன், பச்சை மலை, பவளமலை முருகன், கொளப்பலூர் அஞ்சநேயர், அளுக்குழி செல்லாண்டி யம்மன், பவானி கூடுதுறை சங்க மேஸ்வரர், செல்லா ண்டியம்மன் உள்பட அனைத்து கோவில்களில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 101.15 அடியாக உள்ளது.
    • நாளை ஆடிப்பெருக்கையொட்டி பவானிசாகர் அணையின் மேல் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதுபோல் பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து கடந்த 3 நாட்கள் முன்பு 100 அடியை கட்டியது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வந்ததால் நீர்மட்டம் உயர்ந்து வந்தது.

    இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 101.15 அடியாக உள்ளது. அணைக்கு வினாடி 1,634 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் காளிங்கராயன் பாசனத்திற்காக 500 கன அடியும்,

    பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாக்காலுக்கு 5 கன அடியும் என மொத்தம் 605 கன அடி தண்ணீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து 5-வது ஆண்டாக பவானிசாகர் அணை 101 அடியை எட்டி உள்ளது.

    பவானிசாகர் அணையில் தண்ணீர் தேக்குவது குறித்த பொதுப்பணி துறையால் வகுக்கப்பட்ட விதியின் அடிப்படையில் ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை 102 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும். தற்போது பவானிசாகர் அணையின் அடி 101 அடியை தாண்டி உள்ளதால் இன்னும் சில நாட்களில் 102 அடியை எட்டி விடும்.

    இதன் காரணமாக பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை பவானி ஆற்றின் இரு புறங்களிலும் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நாளை ஆடிப்பெருக்கையொட்டி பவானிசாகர் அணையின் மேல் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையின் நிலவரத்தை தொடர்ந்து பொதுப்பணித்துறை, வருவாய் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    • இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 100.92 அடியாக உள்ளது.
    • அணை 101 அடியை நெருங்கி உள்ளதால் கடல் போல் காட்சியளிக்கிறது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதுபோல் பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து அணை 28-வது முறையாக 100 அடியை தாண்டி உள்ளது. அனைத்து தொடர்ந்து 2000 கன அடிக்கு மேல் நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 100.92 அடியாக உள்ளது. அணைக்கு வினாடி 2,953 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் காளிங்கராயன் பாசனத்திற்காக 600 கன அடி நீர் திறந்து விட்டபட்ட நிலையில் இன்று 100 கன அடி நீர் குறைத்து 500 கன அடி விதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதே போல் பவானி ஆற்றுக்கு 100 கன அடி, கீழ்பவானி வாக்காலுக்கு 5 கன அடியும் என மொத்தம் 605 கன அடி தண்ணீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை 101 அடியை நெருங்கி உள்ளதால் கடல் போல் காட்சியளிக்கிறது.

    இதைப்போல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் மற்ற அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 17.78 அடியாக உள்ளது.

    குண்டேரி ப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 27.41 அடியாக உள்ளது. வரட்டுபள்ளம் அணை பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் அணை முழு கொள்ளளவு எட்டி உள்ளது.

    இன்று இன்று காலை வரட்டுபள்ளம் அணை 33.46 அடியாக உள்ளது. 

    • பவானிசாகர் அணை 100 அடியை தாண்டியதால் கடல் போல் காட்சியளிக்கிறது.
    • அணையின் மேல் பகுதியை கண்டு ரசிப்பதற்காக தினமும் சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர்.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதுபோல் பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து அணை 28-வது முறையாக 100 அடியை தாண்டியது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.44 அடியாக உள்ளது. அணைக்கு வினாடி 2,435 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு 200 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடியும் என மொத்தம் 205 கன அடி தண்ணீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணை 100 அடியை தாண்டியதால் கடல் போல் காட்சியளிக்கிறது. இதனால் அணையின் மேல் பகுதியை கண்டு ரசிப்பதற்காக தினமும் சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர்.

    இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 3-ந்தேதி ஆடி 18 கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அன்றைய தினம் பவானிசாகர் அணையை சுற்றி பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் வரக்கூடும். தற்போது அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டி உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வெள்ள கால பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி வரும் ஆடி 18 அன்று பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு அணையின் மேல் பகுதி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பவானிசாகர் பூங்கா எப்பொழுதும் போல் முழுமையாக செயல்படும். பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பூங்காவுக்கு செல்ல தடை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 100 அடியை தாண்டியதால் பவானிசாகர் அணை பார்ப்பதற்கு கடல் போல் ரம்மியமாக காட்சியளிக்கிறது.
    • சுற்றுலா பயணிகள் பவானிசாகர் அணைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது.

    இதையடுத்து பவானிசாகர் அணை 28-வது முறையாக 100 அடியை எட்டியது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.20 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,318 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடியும் என மொத்தம் 105 கன அடி தண்ணீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பவானி ஆற்றங்கரை பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படவில்லை. தொடர்ந்து அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது.

    100 அடியை தாண்டியதால் பவானிசாகர் அணை பார்ப்பதற்கு கடல் போல் ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பவானிசாகர் அணைக்கு வரத் தொடங்கியுள்ளனர். அவர்கள் பவானிசாகர் அணை மேல் பகுதிக்கு சென்று கண்டுகளித்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பவானிசாகர் அணை கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ந் தேதி மாலை 4 மணிக்கும், 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி காலை 6 மணிக்கும், 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரவு 10 மணிக்கும், கடந்த ஆண்டு ஜூலை 26 -ந் தேதி மாலை 4 மணிக்கும் 100 அடியை எட்டி இருந்தது.

    அதனைத் தொடர்ந்து 5-வது ஆண்டாக பவானிசாகர் அணை தற்போது 100 அடியை தொட்டுள்ளது. பவானிசாகர் அணை தொடர்ந்து 5-வது ஆண்டாக 100 அடியை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை அடிவாரப் பகுதியில் உள்ள வரட்டுப்பள்ளம் அணை இன்று காலை 6 மணி அளவில் தனது முழுக் கொள்ளளவான 33.5 அடியை எட்டியது. அணைக்கு வரும் தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த அணை கடந்த 20 வருடங்களுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் ஏப்ரல் மாதம் முதல் இன்று வரை 3 முறை நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதனால் இந்த அணையை நம்பி உள்ள பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.96 அடியாக உள்ளது.
    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் சென்றாலும் உபரிநீர் வெளியேற்றப்படாமல் சேமித்து வைக்கப்படும்.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பரவலாக மழை பெய்தது.

    இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.96 அடியாக உள்ளது. வினாடிக்கு 2,498 கனஅடி வீதம் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    இதுவரை அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. பவானி ஆற்றுக்கு தொடர்ந்து 100 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி என மொத்தம் 105 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணையில் சேமிப்பு

    இந்நிலையில் இந்த மாதம் இறுதி வரை பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடி வரை மட்டுமே தேக்கி கொள்ள முடியும் என்ற விதி உள்ள போதிலும் தற்பொழுது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் குறைந்த மழை அளவு பெய்த காரணத்தினாலும், அதனால் நீர்வரத்து குறைந்து காணப்படுவதாலும், இந்த மாதத்தில் இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள காரணத்தினாலும், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் வெளியேற்றப்படும் நீரினை அணையிலேயே சேமிப்பு செய்து பவானிசாகர் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தி அதன்மூலம் குடிநீர் பாசனம் மற்றும் இதர பயன்பாட்டுக்களுக்கு வருங்காலத்தில் பயன்ப டுத்தலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் சென்றாலும் உபரிநீர் வெளியேற்றப்படாமல் சேமித்து வைக்கப்படும்.

    இதுபோல் மாவட்டத்தில் மற்ற பிரதான அணைகளான குண்டேரி பள்ளம், பெரும்பள்ளம், வரட்டு பள்ளம் அணை நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. 41.75 அடி உள்ள குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 27.08 அடியாக உள்ளது. நேற்று பெய்த கன மழையால் ஒரே நாளில் குண்டேரிபள்ளம் அணை 3 அடி உயர்ந்துள்ளது.

    இதேபோல் 33.50 அடி உள்ள வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.43 அடியாக உள்ளது. 30.84 அடியாக உள்ள பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 18.04 அடியாக உள்ளது.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.85 அடியாக உள்ளது.
    • இதேபோல் 33.50 அடி உள்ள வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.37 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பரவலாக பெய்தது.

    இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.85 அடியாக உள்ளது. வினாடிக்கு 974 கனஅடி வீதம் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கன அடி திறந்து விட்ட நிலையில் இன்று 700 கன அடியாக குறைக்கப்ப ட்டுள்ளது. பவானி ஆற்றுக்கு 100 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி என மொத்தம் 805 கன அடி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    எந்த நேரத்திலும் 100 அடியை பவானிசாகர் அணை எட்டி விடும் என்பதால் அதன் பிறகு பவானிசாகருக்கு வரும் நீர் முழுவதும் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்படும். இதனால் பவானி ஆற்றங்கரை பகுதி மக்களுக்கு ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    பவானிசாகர் அணையின் மேல் பகுதியில் பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் முகாம் அமைத்து அணை நிலவரத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    குண்டேரிபள்ளம், பெரும்பள்ளம், வரட்டுபள்ளம் அணைகள்

    இதுபோல் மாவட்டத்தில் மற்ற பிரதான அணைகளான குண்டேரிபள்ளம், பெரும்பள்ளம், வரட்டுபள்ளம் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. 41.75 அடி உள்ள குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.79 அடியாக உள்ளது.

    இதேபோல் 33.50 அடி உள்ள வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.37 அடியாக உள்ளது. 30.84 அடியாக உள்ள பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 18.4 அடியாக உள்ளது.

    • பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பரவலாக மழை பெய்தது.
    • 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.64 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.64 அடியாக உள்ளது. நேற்று 2,300 கன அடியாக வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 953 கனஅடியாக குறைந்துள்ளது.

    அணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கன அடியும், பவானி ஆற்றுக்கு 100 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி என மொத்தம் 905 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் 100 அடியை பவானிசாகர் அணை எட்டி விடும் என்பதால் அதன் பிறகு பவானிசாகருக்கு வரும் நீர் முழுவதும் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்படும்.

    இதனால் பவானி ஆற்றங்கரை பகுதி மக்களுக்கு ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. எப்போது வேண்டுமானாலும் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதால் பவானிசாகர் அணையின் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாலாஜி தலைமையில் பொதுப்பணித்துறையினர் அணையின் மேல் பகுதியில் முகாமிட்டு நீர்வரத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இதுபோல் மாவட்டத்தில் மற்ற பிரதான அணைகளான குண்டேரி பள்ளம், பெரும்பள்ளம், வரட்டு பள்ளம் அணை நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. 41.75 அடி உள்ள குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.99 அடியாக உள்ளது. இதேபோல் 33.50 அடி உள்ள வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.30 அடியாக உள்ளது. 30.84 அடியாக உள்ள பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 18.24 அடியாக உள்ளது.

    • 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.49 அடியாக உள்ளது.
    • நாளைக்குள் பவானிசாகர் அணை 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது.

    கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.49 அடியாக உள்ளது. நாளைக்குள் பவானிசாகர் அணை 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 800 கன அடியும், பவானி ஆற்றுக்கு 100 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 905 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்த மாதம் அணையில் அதிகபட்சமாக 100அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கக் கூடாது என்பது பொதுப்பணித்துறையின் விதி ஆகும். இன்னும் ஒரு நாளில் 100 அடியை பவானிசாகர் அணை எட்டி விடும் என்பதால் அதன் பிறகு பவானிசாகருக்கு வரும் நீர் முழுவதும் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்படும்.

    இதனால் பவானி ஆற்றங்கரை பகுதி மக்களுக்கு ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை உள்ள பவானி ஆற்றின் கரையில் வசிக்கும் மக்களுக்கு ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அன்னை வரலாற்றில் 67 ஆண்டுகளில் இதுவரை 27 முறை 100 அடியை எட்டி உள்ளது. தற்போது 28-வது முறையாக அணை 100 அடியை எட்ட உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதால் பவானிசாகர் அணையின் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாலாஜி தலைமையில் பொதுப்பணித்துறையினர் அணையின் மேல் பகுதியில் முகாமிட்டு நீர்வரத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • பவானிசாகர் அணை வரலாற்றில் 67 ஆண்டுகளில் இதுவரை 27 முறை 100 அடியை தொட்டு உள்ளது.
    • தற்போது 28-வது முறையாக அணை 100 அடியை எட்ட உள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பரவலாக மழை பெய்தது.

    இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.27 அடியாக உள்ளது. நாளை மாலைக்குள் பவானிசாகர் அணை 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கன அடியும், பவானி ஆற்றுக்கு 100 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி என மொத்தம் 905 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்த மாதம் அணையில் அதிகபட்சமாக 100 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கக் கூடாது என்பது பொதுப்பணித்துறையின் விதி ஆகும். இன்னும் ஒரு நாளில் 100 அடியை பவானிசாகர் அணை எட்டி விடும் என்பதால் அதன் பிறகு பவானிசாகருக்கு வரும் நீர் முழுவதும் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்படும்.

    இதனால் பவானி ஆற்றங்கரை பகுதி மக்களுக்கு ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அணை வரலாற்றில் 67 ஆண்டுகளில் இதுவரை 27 முறை 100 அடியை தொட்டு உள்ளது.

    தற்போது 28- வது முறையாக அணை 100 அடியை எட்ட உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதால் பவானிசாகர் அணையின் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாலாஜி தலைமையில் பொதுப்பணித்துறையினர் அணையின் மேல் பகுதியில் முகாமிட்டு நீர்வரத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இதுபோல் மாவட்டத்தில் மற்ற பிரதான அணைகளான குண்டேரி பள்ளம், பெரும்பள்ளம், வரட்டு பள்ளம் அணை நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. 41.75 அடி உள்ள குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.79 அடியாக உள்ளது.

    இதேபோல் 33.50 அடி உள்ள வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.33 அடியாக உள்ளது. 30.84 அடியாக உள்ள பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 18.44 அடியாக உள்ளது.

    • 2 லட்சத்து 47 ஆயிரம் விலை நிலங்கள் பாசன வசதி பெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • இந்த ஆண்டு 100 அடியை எட்டுவதால் முன்கூட்டியே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படலாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக வந்தது.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் அணைக்கு வரும் தண்ணீன் அளவும் குறைந்தது. இருந்த போதிலும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.14 அடியாக உள்ளது. இன்று இரவு அல்லது நாளை மாலைக்குள் பவானிசாகர் அணை 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அணைக்கு நீர்வரத்து ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. இன்று வினாடிக்கு 1,072 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கன அடி, பவானி ஆற்றுக்கு 100 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி என மொத்தம் 905 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பவானிசாகர் அணையில் அதிகபட்சமாக 100அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கக் கூடாது என்பது பொதுப்பணித்துறையின் விதி ஆகும். இன்னும் ஒரு நாளில் 100 அடியை பவானிசாகர் அணை எட்டி விடும் என்பதால் அதன் பிறகு பவானிசாகருக்கு வரும் நீர் முழுவதும் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்படும். இதனால் பவானி ஆற்றங்கரை பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    வரலாற்றில் 67 ஆண்டுகளில் இதுவரை 27 முறை 100 அடியை அணை எட்டி உள்ளது. தற்போது 28-வது முறையாக அணை 100 அடியை எட்ட உள்ளது. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 47 ஆயிரம் விலை நிலங்கள் பாசன வசதி பெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வழக்கமாக ஆகஸ்ட் 15-ந் தேதி கீழ் பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு 100 அடியை எட்டுவதால் முன்கூட்டியே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படலாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 98.96 அடியாக உள்ளது.
    • இன்னும் ஒரு நாளில் 100 அடியை பவானிசாகர் அணை எட்டி விடும் என்பதால் அதன் பிறகு பவானிசாகருக்கு வரும் நீர் முழுவதும் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்படும்.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக வந்தது.

    இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் அணைக்கு வரும் தண்ணீரை அளவும் குறைந்துள்ளது இருந்த போதிலும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 98.96 அடியாக உள்ளது. இன்று இரவு அல்லது நாளை மாலைக்குள் பவானிசாகர் அணை 100 அடியை எட்டிவிடும்.அணைக்கு வினாடிக்கு 5251 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கன அடியும், பவானி ஆற்றுக்கு 100 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி என மொத்தம் 905 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்த மாதம் அணையில் அதிகபட்சமாக 100அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கக் கூடாது என்பது பொதுப்பணித்துறையின் விதி ஆகும்.

    இன்னும் ஒரு நாளில் 100 அடியை பவானிசாகர் அணை எட்டி விடும் என்பதால் அதன் பிறகு பவானிசாகருக்கு வரும் நீர் முழுவதும் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்படும்.

    இதனால் பவானி ஆற்றங்கரை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் துறையினர் பொதுப்பணி துறையினர் உஷார் படுத்தப்பட்டு பவானி கரையோர பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    ×