search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhavanisagar Dam"

    • தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் ஒரு சில நாட்களில் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி விடும்.
    • இதனால் பவானிசாகர் அணை பார்ப்பதற்கு கடல் போல் ரம்மியமாக காட்சியளிக்கிறது.

    ஈரோடு:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக பரவலாக மழை பெய்து வருவதால் பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 98.33 அடியாக உள்ளது. அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும் என மொத்தம் அணையில் இருந்து 905 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதும் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே பவானி ஆற்றில் வெளியேற்றப்படும்.

    தற்போது தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் ஒரு சில நாட்களில் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி விடும். இதனால் பவானிசாகர் அணை பார்ப்பதற்கு கடல் போல் ரம்மியமாக காட்சியளிக்கிறது.

    இதனால் அணைப்பகுதியை பார்த்து ரசிப்பதற்காக சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவியத் தொடங்கியுள்ளனர். சிலர் அணையை சுற்றி பார்த்து ரசிப்பதுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.

    • கர்நாடகாவில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணை நிரம்பியது.
    • காவிரி கரையோரம் உள்ள ஈரோடு உள்பட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    ஈரோடு:

    கர்நாடகாவில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணை நிரம்பியது. இதையடுத்து உபரி நீர் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 33 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதையடுத்து காவிரி கரையோரம் உள்ள ஈரோடு உள்பட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, கருங்கல்பாளையம், பவானி, பவானி கூடுதுறை, கொடுமுடி ஆகிய பகுதிகளை ஒட்டி காவிரி ஆறு பாய்கிறது. தற்போது ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் இந்த பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த வீடுகளில் வசித்த பொதுமக்கள் பாதுகாப்பாக அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, உடை மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

    காவிரி ஆற்றில் வழக்கமாக ஏராளமான வாலிபர்கள் குளித்து மகிழ்வார்கள். தற்போது அதிக அளவில் தண்ணீர் வருவதால் யாரையும் காவிரி ஆற்றில் இறங்க விடாமல் தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணி மேற்க்கொண்டு வருகின்றனர்.

    தினந்தோறும் பல்வேறு இடங்களில் இருந்து பவானி கூடுதுறைக்கு ஏராளமான பொதுமக்கள் வருகை தருவார்கள். அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து சங்கமேஸ்வரரை வழிபட்டு செல்வார்கள். குறிப்பாக ஆடி மாதம் முழுவதும் புது மண தம்பதிகள் புனித நீராட வருவார்கள். இந்த நிலையில் ஆற்றில் தண்ணீர் வருவதால் படித்துறை அனைத்தும் மூழ்கி விட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி கூடுதுறையில் பொதுமக்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டு அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் படித்துறைக்கு செல்லும் நுழைவு வாயிலும் அடைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டம் முழுவதும் காவிரி கரையோரத்தை பொதுப்பணித்துறையினர் மற்றும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடியாகும்.
    • அணையின் பாதுகாப்பு கருதி 102 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும்.

    சத்தியமங்கலம்:

    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பில்லூர் அணை நிரம்பி உபரி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதனால் பவானிசாகர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான தெங்குமரஹடா, அல்லிமாயார் பகுதிகளில் பெய்யும் மழை காரணமாகவும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடியாகும். இதில் அணையின் பாதுகாப்பு கருதி 102 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும். தற்போது நீர்வரத்து அதிகரித்து வருவதன் காரணமாக இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 97.58 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 294 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் இன்னும் 2 நாட்களில் 100 அடியை எட்டி விடும்.

    இதனால் அணையில் இருந்து எந்த நேரத்திலும் பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து பவானி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், ஆற்றில் இறங்கி துணி துவைக்கவும், குளிக்கவும் கூடாது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

    தொடர்ந்து அணையை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். ஆடிமாத தொடக்கத்திலேயே பவானிசாகர் அணை நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.89 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 388 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    • ஈரோடு மாநகரில் நேற்று மாலை வானில் கருமேகங்கள் சூழ்ந்து பரவலான மழை பெய்தது. இதேபோல் மாவட்டத்தின் ஒரு சில இடங்களிலும் லேசான மழை பெய்தது.

    ஈரோடு:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் கோவை பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு மேலும் நீர் வாத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.89 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 388 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கன அடி, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 905 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை இன்னும் ஒரு சில தினங்களில் எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் 102 அடியை எட்டியதும் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே பவானி ஆற்றுக்கு வெளியேற்றப்படும்.

    ஈரோடு மாநகரில் நேற்று மாலை வானில் கருமேகங்கள் சூழ்ந்து பரவலான மழை பெய்தது. இதேபோல் மாவட்டத்தின் ஒரு சில இடங்களிலும் லேசான மழை பெய்தது.

    இதில், மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:

    ஈரோடு-2, தாளவாடி-1.2, பவானி-6, எலந்த குட்டை மேடு-3.2, அம்மா பேட்டை-2, கொடிவேரி-1, குண்டேரிப்பள்ளம்-4.4 என மாவட்டத்தில் 19.8 மில்லி மீட்டர் மழை பொழிந்தது.

    • தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்னும் ஒரு வாரத்திற்குள் 100 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • 105 அடி உயரமுள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதும் அணைக்கு வரும் உபரி நீர் முழுவதுமாக பவானி ஆற்றில் திறந்து விடப்படும்.

    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான தெங்குமரஹடா, அல்லிமாயார், ஊட்டி, குந்தா, பில்லூர் அணைப்பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது.

    இந்நிலையில் நீலகிரி மலைப்பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையில் தற்போது 98 அடிக்கு நீர் நிரம்பி உள்ளது. இதனால் பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நேற்று மாலை முதல் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    இதனால் பவானி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கரையோர மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.

    பவானிசாகர் அணைக்கு இன்று காலை 8 மணி அளவில் 16 ஆயிரத்து 891 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90.58 அடியாக இருந்தது. அரக்கன்கோட்டை -தடப்பள்ளி வாய்க்கால் பாசனத்திற்காக 900 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 5 கன அடியும் என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 1005 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்னும் ஒரு வாரத்திற்குள் 100 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 105 அடி உயரமுள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதும் அணைக்கு வரும் உபரி நீர் முழுவதுமாக பவானி ஆற்றில் திறந்து விடப்படும்.

    பவானிசாகர் அணை வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து உள்ளது.
    • கடந்த 6 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89.41 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணை ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான தெங்குமரஹடா, அல்லிமாயார், ஊட்டி, குந்தா, பில்லூர் அணைப்பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்றும் பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து உள்ளது.

    இதன் காரணமாக கடந்த 6 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89.41 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,561 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 900 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1005 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணையின் நீர்மட்டம் இன்று மாலைக்குள் 90 அடியை கடந்து விடும். இதே போல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மற்ற பிரதான அணைகளான வரட்டுபள்ளம் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

    வரட்டுபள்ளம் அணையின் முழு கொள்ளளவு 33.50 அடியாகும். கடந்த 2 நாட்களாக வரட்டு பள்ளம் அணை நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வரட்டுபள்ளம் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 33.43 அடியாக உள்ளது. இந்த அணை மூலம் 3000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    இதேபோல் 30.84 அடி கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 19.03 அடியாக உள்ளது. இதேபோல் மற்றொரு அணையான 41.75 அடி கொண்ட குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.79 அடியாக உள்ளது. தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து உள்ளது.
    • இன்று காலை 8 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 87.70 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணை ஈரோடு,கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான தெங்குமரஹடா, அல்லிமாயார், ஊட்டி, குந்தா, பில்லூர் அணைப்பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்றும் பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து உள்ளது.

    இதன் காரணமாக கடந்த 4 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 5 அடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை 8 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 87.70 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,736 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 900 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1005 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று மாலைக்குள் அணையின் நீர்மட்டம் 88 அடியை கடந்து விடும்.

    • பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்தது.
    • இதனால் நேற்று விட இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து உள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணை ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான தெங்குமரஹடா, அல்லிமாயார், ஊட்டி, குந்தா, பில்லூர் அணைப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்றும் பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் நேற்று விட இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 4 அடியாக உயர்ந்துள்ளது.

    இன்று காலை மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 86.86 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 7,724 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 900 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1005 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று மாலைக்குள் 87 அடியை கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கடந்த 3 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 4 அடியாக உயர்ந்துள்ளது.
    • இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 86.10 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணை ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான தெங்குமரஹடா, அல்லிமாயார், ஊட்டி, குந்தா, பில்லூர் அணைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இதன் காரணமாக கடந்த 3 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 4 அடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 86.10 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,088 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 900 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1005 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • இன்று காலை 8 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 85.27 அடியாக உள்ளது.
    • கடந்த 2 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 3 அடியாக உயர்ந்துள்ளது.

    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணை ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.

    பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான தெங்குமரஹடா, அல்லிமாயார், ஊட்டி, குந்தா, பில்லூர் அணைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 3 அடியாக உயர்ந்துள்ளது.

    இன்று காலை 8 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 85.27 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 7,750 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 900 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1005 கன அடி நீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது.

    • கடந்த 3 நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
    • இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.06 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,889 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 900 கன அடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 1,005 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கடந்த 2 நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
    • நேற்று 1,600 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தை காட்டிலும் தொடர்ந்து அதிக அளவில் பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும், நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று 1,600 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.64 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,293 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 800 கன அடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 905 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ×