search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "birthday"

    காமராஜர் பிறந்தநாளை தஞ்சையில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இலவச இ-சேவை மையமும் தொடங்கப்பட்டது.
    தஞ்சாவூர்:

    பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த காமராஜர் படத்துக்கு மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சி.கி.வரதராஜன், பொதுக்குழு உறுப்பினர் ஜோசப்ராஜ், பொருளாளர் பழனியப்பன், பொதுச்செயலாளர் குணசேகரன், கோட்ட தலைவர் கதர்வெங்கடேசன், துணைத்தலைவர்கள் முருகன், வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் முருகேசன், நிர்வாகிகள் கோவிந்தராஜ், டி.பி.எம்.ராஜூ, பாரத்மோகன், பூக்கடை குணசேகரன், சாந்தாராமதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் மற்றும் மாநகர காங்கிரஸ் சார்பில் காமராஜரின் பிறந்த நாளையொட்டி தஞ்சை கீழவாசலில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகர துணைத்தலைவர் செந்தில்நா.பழனிவேல் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் அலாவுதீன் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் அன்பரசன், முன்னாள் கவுன்சிலர் குலோத்துங்கன், ஐ.என்.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் ஆரோக் கிய சாமி, மாவட்ட பிரதிநிதி செல்வம், மாநகர பிரதிநிதி செல்வராஜ், வட்டார தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் அபிஷேக்மோசஸ் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் இனிப்புகளையும் வழங்கினர். பின்னர் காங்கிரஸ் கட்சி சார்பில் இலவச இ-சேவை மையமும் தொடங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் வயலூர் ராமநாதன், வர்த்தக பிரிவு தலைவர் சீனிவாசன், நிர்வாகிகள் பூபதி, மணிவண்ணன், ராம்பிரசாத், திருஞானம், தர்மராஜன், அய்யாறு, சேட்டு, அருண், சதா.வெங்கட் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொதுச்செயலாளர் யாதவ்கிருஷ்ணன் நன்றி கூறினார்.

    தஞ்சையை அடுத்த மேலவெளி ஊராட்சியில் உள்ள மாருதிநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாள்விழா அடைக்கலசாமி தலைமையில் முருகரெத்தினவேல், ராஜேந்திரன், பாலகிருஷ்ணன், சாகுல்அமீது, சுலோச்சனா, மனோகரி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இதில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நாஞ்சி.கி.வரதராஜன் கலந்து கொண்டு கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.தஞ்சை கீழவாசலில் உள்ள காமராஜர் சிலைக்கு அகில இந்திய சிவாஜி மன்றம் சார்பில் செயற்குழு உறுப்பினர் ராஜசேகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் போட்டோவிஜயன், நிர்வாகிகள் பாஸ்கரன், கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
    காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூரில் காமராஜர் சிலைக்கு நாடார் சங்கத்தினர், காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    பெரம்பலூர்:

    காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூரில் காமராஜர் சிலைக்கு நாடார் சங்கத்தினர், காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

    பெருந்தலைவர் காமராஜரின் 116-வது பிறந்த நாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு பெரம்பலூர் மாவட்ட நாடார் உறவினர் முறை சங்கத்தின் தலைவர் நடராஜன் தலைமையில் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதில் செயலாளர் தினகர், பொருளாளர் பால்ராஜ் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், வக்கீலுமான தமிழ்ச்செல்வன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் சிவாஜி மூக்கன், தங்கவேல், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் இந்திராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயலாளர் குணசேகரன் தலைமையில், அக்கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று விடுமுறை நாளாக இருந்தாலும் பள்ளிகளில் காமராஜர் பிறந்த தினத்தை, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்று அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், தமிழக கல்வித்துறை சார்பில் ஏற்கனவே சுற்றறிக்கை விடப்பட்டிருந்தது. அதன்படி நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

    அதன்படி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த கல்வி வளர்ச்சி நாள் விழாவிற்கு தலைமை ஆசிரியர் சுந்தரராசு தலைமை தாங்கினார். ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். அப்போது பள்ளி வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த காமராஜர் உருவப்படத்திற்கு மாணவ-மாணவிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. பின்னர் காமராஜர் பிறந்த நாளையொட்டி காமராஜர் பற்றிய பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, பாட்டு போட்டி உள்ளிட்டவைகள் மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்ற முதல் மூன்று மாணவ-மாணவிகளுக்கு பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

    இதை போல் கல்வி வளர்ச்சி நாள் விழாவையொட்டி பெரம்பலூர் தனியார் தொடக்கப்பள்ளியில் அலங்கரிக்கப்பட்டிருந்த காமராஜர் உருவப்படத்திற்கு மாணவ- மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி மரியாதை செலுத்தினர். துறைமங்கலம் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தனியார் சிறப்பு பள்ளியிலும் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது மாற்றுத்திறனாளி மாணவர்கள் காமராஜர் உருவப்படத்திற்கு மலர் தூவியும், இரு கரங்களையும் கூப்பியும் மரியாதை செலுத்தினர்.

    காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று சமூக வலைத்தளங்களான பேஸ்புக் (முகநூல்), வாட்ஸ்-அப் களில் நிறைய பேர் காமராஜர் படத்தினை பகிர்ந்தனர். நிறைய பேர் வாட்ஸ்-அப்களில் ஸ்டேட்டஸ்களில் காமராஜர் படங்களையும், அவரை பற்றின வீடியோ காட்சிகளையும் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று விடுமுறை தினம் என்பதால் பெரம்பலூரில் உள்ள நிறைய தனியார் பள்ளிகளில் நேற்று முன்தினமே காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடினர். காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்படாத பள்ளிகளில் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. 
    என்றும் இந்த மண்ணில் நம் பெருந்தலைவர் வாழ்ந்த காலம்தான் தமிழர் வாழ்வில் ஒரு பொற்காலம்.
    உயரிய அறம் சார்ந்த காந்திய அரசியலில் அழுத்தமான நம்பிக்கை கொண்ட கடைசி அரசியல்வாதி காமராஜர். அதனால் தான், “காலத்தின் கடைசிக் கருணை காமராஜர்” என்றார் கண்ணதாசன்.

    காமராஜர் வாழ்ந்த விதத்தை, இப்பொழுது நினைத்தால் நம்ப முடியாத ஓர் அதிசயக் கனவு போல் கண் சிமிட்டுகிறது. காந்தியத்தைக் காதலித்து, காந்தியத்தையே கைப்பிடித்து, காந்தியத்திற்காகவே வாழ்ந்து, காந்தி பிறந்த நாளில் கண்மூடிய ‘அத்வைதி’ காமராஜர்.

    காமராஜரை நம் மக்கள் ஏன் வணக்கத்திற்குரிய தலைவராக வழிபடுகிறார்கள்? அவருடைய வரலாறு படைத்த ஒன்பதாண்டு ஆட்சிச் சாதனைகளுக்காகவா? ஊழலின் நிழல்படாத உயரிய நிர்வாகத்தை அவர் உருவாக்கித் தந்ததற்காகவா?

    அறியாமை இருட்டில் அழுந்திக் கிடந்த பாமரர்களின் இதயத்தில் கல்வி வெளிச்சத்தைப் பாய்ச்சியதற்காகவா? ஆறுகள் ஓடும் இடங்களில் எல்லாம் அணைகளை எழுப்பி விவசாயத்தை வளர்த்ததற்காகவா? தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை இந்திய மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தலைநிமிரச் செய்ததற்காகவா?

    இவையெல்லாம் அவருடைய தனிப்பெரும் ஆட்சி சாதனைகள்தான். ஆனால் எளிமையும், உண்மையும், நேர்மையும் நிறைந்த அவருடைய தன்னலமற்ற வாழ்க்கைதான் என்றும் வணக்கத்திற்குரியது.

    காமராஜர் தமிழகத்தின் முதல்-அமைச்சராக 1954-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் பொறுப்பேற்ற பின்பும் சென்னை திருமலைப்பிள்ளை வீதியில் இருந்த வாடகை வீட்டிலேயே தொடர்ந்து வசித்தார்.

    அவருடைய அன்னையார், “நீ இருக்கும் வீட்டில் ஒரு மூலையில் உனக்கு எந்தச் சிரமமும் தராமல் உன் முகத்தைப் பார்த்தபடி எஞ்சிய காலத்தைக் கழித்து விடுகிறேன்” என்று கண்ணீர் ததும்பச் சொன்ன போதும் அவருடைய கோரிக்கையை மறுதலித்துவிட்டவர் காமராஜர்.

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இரா.கிருஷ்ணசாமி நாயுடுவிடம், “தந்தையில்லாப் பிள்ளையாய் என் தாயார் எவ்வளவு சிரமப்பட்டு என்னை வளர்த்தார்கள் என்பதை நானறிவேன். பாசத்தில் அவரை நான் பக்கத்தில் வைத்துக் கொண்டால் அவரைப் பார்க்க அடிக்கடி பத்து பேர் வருவார்கள். அத்தையைப் பார்க்க வந்தேன், ஆத்தாவைப் பார்க்க வந்தேன் என்பார்கள். ஏதாவது ஒரு காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள, முதல்-அமைச்சர் வீட்டிலிருந்து பேசுகிறேன் என்று அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்வார்கள். அதனால்தான், அம்மா ஊரிலேயே இருக்கட்டும் என்கிறேன். அவர்கள் தேவைக்குத்தான் மாதம் ரூ.130 அனுப்பி வைக்கிறேனே” என்று சொன்னவர் காமராஜர்.

    முற்றும் துறந்த ஆதி சங்கரரும், பட்டினத்தாரும் கூடத் துறக்க விரும்பாத உறவு, தாயின் உறவு. அந்தத் தாயின் உறவையும் பொது வாழ்க்கைத் தூய்மைக்காகத் தள்ளி வைத்த அதிசயமான தலைவர் காமராஜர்.

    காமராஜர் தன் அமைச்சரவையில் ஏழு பேரை மட்டும் சேர்த்துக் கொண்டார். தலித்துகளின் தலைவர் இரட்டைமலை சீனிவாசனின் பேரன் பரமேஸ்வரன் என்பவர் அந்த ஏழு அமைச்சர்களில் ஒருவர். சமூக நீதியைச் செயற்படுத்துவதற்காக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த காமராஜர், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த அமைச்சரிடம் அறநிலைத்துறையை அளித்தார்.

    “ஒரு தாழ்த்தப்பட்ட சாதிக்காரரை அமைச்சராக்கிவிட்டால் எந்த நாலாஞ் சாதியை உள்ளே விடமாட்டோம்னு சொன்னார்களோ, அதே நாலாஞ் சாதிக்காரருக்குப் பரிவட்டம் கட்டிப் பூரண கும்ப மரியாதையுடன் அவர்கள் பணிவோடு கோவிலுக்குள் அழைத்துப் போவார்கள் என்றுதான் பரமேஸ்வரனை நான் இந்து அறநிலைத்துறைக்கு அமைச்சராக்கினேன்” என்று காமராஜர் வாய்வேதம் பேசாமல் சமூக நீதிக்குச் செயல் வடிவம் தந்த தலைவர்.

    ஒரு நாள் கவிஞர் எஸ்.டி.சுந்தரம் காமராஜரைச் சந்தித்த போது, ‘உங்கள் ஆட்சிச் சாதனைகளை என்றும் மக்கள் நினைவில் நிறுத்துவதற்காக ஒரு நியூஸ் ரீல் எடுத்தால் நல்லது’ என்றார்.

    ‘நாம் ரோடு போட்டோம். அதன் மேல்தான் மக்கள் நடக்கிறார்கள். பள்ளிக்கூடம் கட்டினோம். அதில்தான் அவர்களுடைய பிள்ளைகள் படிக்கிறார்கள். அணைகளைக் கட்டினோம். அந்தத் தண்ணீரில்தான் விவசாயம் செய்கிறார்கள். இதில் வேறு, விளம்பரப் படம் எதற்கு வீண் செலவு?” என்று கவிஞரின் கருத்தை மறுத்தார் கர்மவீரர்.

    “மூன்று லட்சம் ரூபாய் இருந்தால் போதுமய்யா! தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க உதவுகிறார் போல் நல்ல செய்திப் படம் எடுத்து விடலாம்” என்று கவிஞர் சொன்னதும், “அடப்பாவி படமெடுக்கும் மூன்று லட்சத்தில் இன்னும் பத்து ஊர்களில் நான் பள்ளிக்கூடம் கட்டுவேன். பிள்ளைகள் படிக்க வழி சொல்லாமல் ‘நியூஸ் ரீல்’ எடுக்கச் சொல்கிறாயா? முதலில் இங்கிருந்து நடையைக் கட்டு” என்று கொதித்தார் அந்தக் கருப்புக் காந்தி. அப்படி ஒரு தலைவரை இப்பொழுது பார்க்க முடியுமா?

    விருதுநகரில் சுலோச்சன நாடார் தெருவில் உள்ள சாதாரண வீட்டில் தான் காமராஜரின் தாயும் தங்கையும் வாழ்ந்து வந்தனர். அந்த வீட்டில் குடிநீர்க் குழாய் இல்லை. அடுத்த தெருவில் இருந்த ‘முனிசிபாலிடி’ குழாயில் வரிசையில் நின்று தான் காமராஜரின் தங்கை நாகம்மை தண்ணீர் பிடிப்பது வழக்கம்.

    உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மஜீத் இந்த நிலையை அறிந்து காமராஜர் வீட்டில் குழாய் இணைப்புக்கு வழிசெய்துவிட்டுக் கோட்டைக்குத் திரும்பினார்.

    இதைக் கேள்வியுற்ற காமராஜர் அமைச்சர் மஜீத்தை அழைத்து, “என் வீட்டுக் குழாய் இணைப்புக்கு முறைப்படி நான் முனிசிபாலிடியிடம் விண்ணப்பம் கொடுத்தேனா? அதற்கு 18 ரூபாய் கட்டணம் கட்டினேனா? எப்படி வந்தது குழாய் இணைப்பு? உங்களை நான் நாட்டைப் பார்க்கச் சொன்னேனா, என் வீட்டைப் பார்க்கச் சொன்னேனா? 24 மணி நேரத்திற்குள் அந்தக் குழாய் இணைப்பு துண்டிக்கப்படவேண்டும். பதவியைப் பயன்படுத்தி அவரவர் வீட்டு வேலையைப் பார்த்தால் நாடு உருப்பட்ட மாதிரிதான்” என்று கடும் கோபத்துடன் கண்டித்தார்.

    உடனே குழாய் இணைப்பு அறுபட்டது. மீண்டும் முதல்வரின் தங்கை குடத்துடன் அடுத்த தெருவில் தண்ணீருக்காக வரிசையில் நின்றார். பெருந்தலைவரின் வாழ்க்கை முறை இன்று பொய்யாய், கனவாய், பழங்கதையாய் போய்விட்டது.

    நாட்டு விடுதலைப் போரில் ஒன்பது ஆண்டுகள் கடுங்காவல் சிறைவாசம்; பன்னிரண்டு ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரசின் தலைவர்; ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினர்; நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினர்; ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வர்; ஐந்து ஆண்டுகள் அகில இந்திய காங்கிரசின் தலைவர்; இரண்டு முறை இந்தியப் பிரதமர்களை உருவாக்கிய ஒரே தமிழர். இத்தனை பெருமைகளுக்குப் பின்பும் தனிவாழ்வில் அந்த பெருந்தலைவனுக்கு மிஞ்சியது 60 ரூபாய்; பத்து கதர் வேட்டி சட்டை.

    காமராஜர் கண் மூடினார். அவர் வாழ்ந்த வீட்டை அதன் உரிமையாளர் எடுத்துக்கொண்டார். அவர் பயன்படுத்திய காரை கட்சி எடுத்துக்கொண்டது. அவரது உடலை நெருப்பு எடுத்துக்கொண்டது. அவரது பெயரை வரலாறு எடுத்துக் கொண்டது. என்றும் இந்த மண்ணில் நம் பெருந்தலைவர் வாழ்ந்த காலம்தான் தமிழர் வாழ்வில் ஒரு பொற்காலம்.

    இன்று (ஜூலை 15-ந் தேதி) காமராஜர் பிறந்த தினம். 
    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமாரின் பிறந்தநாளை “சமத்துவ ரத்ததான தினமாக” கொண்டாட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமாரின் பிறந்தநாளை “சமத்துவ ரத்ததான தினமாக” கொண்டாட இருக்கிறோம். எனவே கட்சி நிர்வாகிகள் வருகிற 14-ந் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக தங்கள் பகுதிகளிலுள்ள தன்னார்வலர்களுடனோ, என்.ஜி.ஓ. நிறுவனங்களுடனோ, தனியார் மற்றும் பொது நிறுவனங்களுடனோ இணைந்து ரத்ததான முகாம் நடத்த வேண்டும்.

    இதுவரை தமிழகத்தில் நடந்திடாத வகையில் மிகப்பெரிய அளவில் இந்த ரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதே தலைவர் ஆர்.சரத்குமாரின் எண்ணம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாச்சியின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #TNAssembly
    சென்னை:

    தமிழக சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தமிழ் சினிமாவில் நடிப்பின் களஞ்சியமாக போற்றப்பட்டு வரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளான அக்டோபர் 1-ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளார்.



    மேலும், பழம்பெரும் அரசியல்வாதியான ராமசாமி படையாச்சியின் பிறந்தநாளான செப்டம்பர் 16-ம் தேதியும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    ராமசாமி படையாச்சி, தமிழகத்தில் உள்துறை அமைச்சராக இருந்தவர் என்பதும், திண்டிவனம் மக்களவை தொகுதியில் வென்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. #TNAssembly
    காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 47-வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. #Congress #HappyBirthdayRahulGandhi
    காஞ்சீபுரம்:

    காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 47-வது பிறந்த நாள்விழா இன்று கொண்டாடப்பட்டது.

    இதை முன்னிட்டு காஞ்சீபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீ பெரும்புதூர், மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர் ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் கட்சிக்கொடி ஏற்றியும், பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கியும் கொண்டாடினர்.

    மாவட்டத்தில் உள்ள சர்வ மதக் கோயில்களிலும் ராகுல் காந்தி நீடுழி வாழவும் அடுத்த பாரதப் பிரதமராகப் பதவி ஏற்க வேண்டியும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டது. மேலும் பல்லாயிரக்கணக்கானோருக்கு அன்னதானமும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் எம்பி விஸ்வநாதன் காஞ்சிபுரம் நகரமன்ற அலுவலகத்திற்கு எதிரே காங்கிரஸ் கட்சிக் கொடியினை ஏற்றி வைத்து ராகுல் காந்தி நீடுழி வாழ வேண்டி பிரம்மாண்ட கேக் வெட்டி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    மேலும் ஆயிரம் பேருக்கு பிரியாணி விருந்தும் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு பழங்களும் பெட் ஷீட்டுகளும் வழங்கப்பட்டது.

    திருக்கச்சி நம்பி தெருவில் அமைந்துள்ள திருவள்ளுவர் குருகுலத்தில் தங்கி பயின்று வரும் மாணவர்களுக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.

    இதே போல் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருப்போரூர் பூஞ்சேரி கூட்டுச் சாலையிலும், மகாபலிபுரம் கூட்டுச்சாலை கானாத்தூரிலும், மதுராந்தகம், செங்கல்பட்டு, உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் முன்னாள் எம்பி பெ,விஸ்வநாதன் தலைமையில் காங்கிரஸ் கட்சிக் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிகளில் காஞ்சீபுரம் முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், நிர்வாகிகள் எஸ்.எல்.என்.எஸ்.விஜயகுமார், சாலபோகம் அருண், கோபால், வழக்கறிஞர்கள் சத்தியநாராயணன், மணிகண்டன், கிளார்குமார், விசு, முத்தியால்பேட்டை ராஜசேகர், சாதிக்பாட்சா, செந்தில, இசிஆர். அச்சுகன், ஓஎம்ஆர். சின்னராசா, டிராவல்ஸ் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட தலைவர் காஞ்சி. ஜீவீ. மதியழகன் தலைமையில் மேற்கு மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கொடியேற்றப்பட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் காஞ்சிபுரத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சிக்கொடி ஏற்றி பிரம்மாண்ட கேக் வெட்டி ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலைகள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கினர்.

    இதில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் காஞ்சி ஜீவீ. மதியழகன், நிர்வாகிகள் சேரன், வீரபத்ரன், பச்சையப்பன், இராம.நீராளன், தென்னேரி சுகுமார், சம்பத், நாதன், சுகுமாரன், லோகநாதன், சந்தானம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #Congress #HappyBirthdayRahulGandhi
    தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட தி.மு.க. மருத்துவர் அணி சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
    நாமக்கல்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட தி.மு.க. மருத்துவர் அணி சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. இந்த முகாமை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பார்.இளங்கோவன் தொடங்கி வைத்தார்.

    மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் கோகுல் கிருபா சங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் தி.மு.க.வினர் 95 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் ராஜேஸ்பாபு, துணை அமைப்பாளர்கள் மதிவேந்தன், பார்த்திபன், சுதா மற்றும் சிவக்குமார், நகர பொறுப்பாளர் மணிமாறன், நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியதற்காக முன்னாள் பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். #waqaryounis #Apologisetofans
    இஸ்லாமாபாத்:

    வங்கதேசம் - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது. இந்த போட்டியின்போது முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரமின் 52-வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக வக்கார் யூனிஸ் கேக் வெட்டி கொண்டாடினார்.

    புனித ரமலான் மாதத்தில் பொது இடத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்வு பாகிஸ்தான் ரசிகர்களிடையே அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வக்கார் யூனிஸ் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.



    ‘வாசிம் அக்ரமின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். புனிதமிக்க ரமலான் மாதத்தையும், நோன்பு கடைபிடிப்பவர்களையும் மதித்திருக்க வேண்டும். மன்னியுங்கள்’ என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் வக்கார் யூனிஸ். #waqaryounis #Apologisetofans
    95-வது பிறந்தநாள் கொண்டாடும் தி.மு.க தலைவர் மு.கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். #HBDKalaignar95
    சென்னை:

    தமிழ் சினிமா உலகின் தன்னிகரற்ற எழுத்தாளரும், தி.மு.க தலைவருமான கலைஞர் கருணாநிதி இன்று தனது 95-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க தொண்டர்கள் கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும், நலத்திட்ட உதவிகள் செய்தும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

    கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் இருக்கும் பகுதியில் தொண்டர்கள் காலையிலேயே ஒன்றுகூடி கேக் வெட்டி மகிழ்ந்தனர். இதையடுத்து செயல்தலைவர் மு.க ஸ்டாலின் கலைஞர் கருணாநிதியை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

    உடல்நலக்குறைவு காரணமாக இந்த வருட பிறந்தநாளை தொண்டர்களுடன் கொண்டாட மாட்டார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கருணாநிதி தனது தொண்டர்களை சந்தித்தார்.

    கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மாநில தேசிய கட்சித்தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.



    அவரது வாழ்த்து பதிவில், ‘கருணாநிதியின் நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியான வாழ்வுக்கு இறைவனை எப்போதும் வேண்டுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்தும், திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணியும் கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #HBDKalaignar95
    95-வது பிறந்த நாள் கொண்டாடும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். #HBDKalaignar95
    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதி உடல் நல குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி, கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய பிறந்தநாளை அவர் தொண்டர்களுடன் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். தற்போது அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு முக்கிய பிரமுகர்களை தவிர வேறு யாரும் சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை.

    இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மருத்துவ முகாம், ரத்ததான முகாம் மற்றும் கவியரங்கம், வாழ்த்தரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இன்று அதிகாலையிலேயே கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்கள் குவிந்து நின்று கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.



    இந்நிலையில், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், ‘இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்களது மகிழ்ச்சிக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் நான் கடவுளை வேண்டுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் மு.கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #HBDKalaignar95
    திமுக தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தனது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளாா்.
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்னும் நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்து அரசியலிலும், மக்கள் நலப் பணியிலும் சிறந்து விளங்க இயற்கையும், இறைவனும் என்றும் துணை நிற்க வேண்டும். கிராமப்புற முன்னேற்றத்திற்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கும், சமூக சீர்திருத்தத்திற்கும், மாநில மக்கள் குறிப்பாக ஏழை, எளிய மக்கள் நலன் காக்கவும் குரல் கொடுத்த பெருமைக்குரியவர்.



    உலக தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பாக தமிழ் மொழியை பெரிதும் நேசிக்கிற, விரும்புகிற தமிழ் நெஞ்சங்களின் உள்ளங்களில் இவருக்கு என்று ஓர் தனி இடம் என்றும் உண்டு. கருணாநிதி இன்னும் நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்து அரசியலிலும், மக்கள் நலப்பணியிலும் சிறந்து விளங்க இயற்கையும், இறைவனும் என்றும் துணை நிற்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வாழ்த்துகிறேன். இவ்வாறு வாழ்த்து செய்தியில் அவர் கூறியுள்ளார். 
    திமுக தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளாா். #Karunanidhi #Birthday #TamilisaiSoundararajan
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது 95-வது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார். தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.கருணாநிதி வயது முதிர்வு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி, கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார்.

    ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய பிறந்தநாளை அவர் தொண்டர்களுடன் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். தற்போது அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு முக்கிய பிரமுகர்களை தவிர வேறு யாரும் சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவா்கள் தங்களுடைய வாழ்த்துக்களை  தொிவித்து வருகின்றனா்.



    இதைத்தொடா்ந்து தமிழக பாஜக மாநில தலைவா் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில்

    ‘தமிழக அரசியலில் மூத்த தலைவர் கருணாநிதி பல்லாண்டு, பல்லாண்டு நீடூழி, உடல்நலத்துடன் வாழ்ந்து மக்கள் பணி செய்ய இறைவனை வணங்குகிறேன். தமிழக பா.ஜ.க. சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.  #Karunanidhi #Birthday #TamilisaiSoundararajan #Tamilnews 
    ×