search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "birthday"

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மேலூரில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • முகமது யாசின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் நகர் தெற்குப் பட்டியில் அமைச்சர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, மேலூர் நகர் தி.மு.க. 25-வது வட்டக் கழகத்தின் சார்பாக மாட்டு வண்டி பந்தயம் திருவாதவூர் ரோட்டில் இன்று காலை நடைபெற்றது. பெரிய மாடு மற்றும் சிறிய 2 பிரிவுகளாக நடைபெற்றது.

    இதில் பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 10 மாடுகளும், சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 26 மாடுகளும் என மொத்தம் 36 மாட்டு வண்டிகள் பந்தயத்தில் பங்கேற்றது. இந்த மாட்டு வண்டி போட்டியினை மேலூர் நகர் மன்ற தலைவர் முகமது யாசின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் மேலூர் தெற்குப்பட்டி மதன் வண்டி முதல்பரிசும், ராமநாதபுரம் கடுகுசந்தை தவம் 2-ம் பரிசும், மதுரை மாவட்டம் சத்திரபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாலகிருஷ்ணன் 3-ம் பரிசும், சிவகங்கை மாவட் டம், காளக்கண்மாய் வீர பாலா, சாந்தமடை சுந்தரம் ஆகியோரது மாட்டு வண்டி 4-ம் பரிசும் பெற்றனர்.

    சிறிய மாட்டுவண்டியில் 26 ஜோடிகள் கலந்து கொண்டன. 2 பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. முதல் சுற்றில் 13 ஜோடி மாட்டு வண்டியில் முதல் பரிசு சத்திரப் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாலகிருஷ்ணன், முத்துகிருஷ்ணன் வண்டியும், 2-ம் பரிசு மதுரை மாவட்டம் பாண்டி கோவில் பாண்டிச்சாமி மாட்டு வண்டியும், 3-ம் பரிசு மதுரை மாவட்டம் மேலூர் சித்திக் மற்றும் சோனைமுத்து சேர்வை மாட்டு வண்டியும், 4-ம் பரிசு தேனி மாவட்டம், தேவராம் முத்துபெருமாள் வெற்றி பெற்றது.

    நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் அழகு பாண்டி, வட்ட செயலாளர் குமார், துணை வட்டச் செயலாளர் மணிமாறன், நகர் மன்ற உறுப்பினர் மனோகரன், அவைத் தலைவர் மகேந்திரன், தி.மு.க. இளைஞரணி வசந்த ராஜன் மற்றும் ஏராளமான கலந்து கொண்டனர். தலைவர் முகமது யாசின் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

    • மனைவி தனது பிறந்தநாளை துபாயில் கொண்டாட வேண்டும் என கோரினார்.
    • ஆனால் மனைவி கோரிக்கையை கணவர் ஏற்கவில்லை.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள வனாடி பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகா. இவரது கணவர் நிகில் கண்ணா. இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது.

    இந்நிலையில், நிகில் கண்ணாவை ரேணுகா தாக்கி கொன்றதாக டெல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் போலீசார் கூறியது வருமாறு:

    தனது பிறந்தநாளுக்கு துபாய் அழைத்துச் செல்ல வேண்டும், விலை உயர்ந்த பரிசுப் பொருள்களை வாங்கித்தர வேண்டும் என ரேணுகா கணவரிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்காத நிகில் கண்ணா, டெல்லியில் உறவினர் வீட்டில் பிறந்தநாள் கொண்டாடலாம் என்றார். இதனால் அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த ரேணுகா, கணவர் மூக்கின் மேல் ஓங்கி ஒரு குத்து விட்டார். இதில் அவரது சில பற்கள் உடைந்தன. நிலைதடுமாறி கீழே விழுந்த நிகில் கண்ணா சுய நினைவை இழந்து உயிரிழந்தார் என தெரிவித்தனர்.

    இதையடுத்து, டெல்லி போலீசார் ரேணுகா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனது பிறந்தநாளை துபாயில் கொண்டாட மறுத்த கணவரை கையால் அடித்துக்கொன்ற மனைவியின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • முன்னாள் சபாநாயகரும் கம்பன் கழகச் செயலருமான சிவக்கொழுந்து, தமிழ்ச்சங்கத் தலைவர் முத்து முன்னிலை வகித்தனர்.
    • உசேன், அசோகா சுப்பிரமணியன், நெய்தல் நாடன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மன்னர்மன்னன் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    புதுச்சேரி, நவ.5-

    பாரதிதாசனின் மகனும் முதுபெரும் தமிழறிஞருமான மறைந்த மன்னர் மன்னன் 96-வது பிறந்த நாளையொட்டி புரட்சிக் கவிஞர் போற்றிய மன்னர்மன்னன் என்ற தலைப்பில் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாரதிதாசன் அறக்கட்டளை தலைவர் ேகா.பாரதி தலைமை தாங்கினார்.

    முன்னாள் சபாநாயகரும் கம்பன் கழகச் செயலருமான சிவக்கொழுந்து, தமிழ்ச்சங்கத் தலைவர் முத்து முன்னிலை வகித்தனர். அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மன்னர்மன்னன் உருவப் படத்திற்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மலர்தூவி மரியாதை செய்தார். வரைத் தொடர்ந்து அமைச்சர்கள் லட்சுமிநாராயணன்,அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் ,எதிர்க்கட்சித் தலைவர் சிவா , எம்.எல்.ஏ.க்கள் வி.பி. ராமலிங்கம், அனிபால்கென்னடி, நேரு, கே.எஸ்.பி. ரமேஷ், முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள்

    எம்.எல்.ஏ.க்கள் இளங்கோ , சோமசுந்தரம், கலை பண்பாட்டுத் துறை இயக்குனர் கலியபெருமாள், கலால் துறை உதவி ஆணையர் சண்முகசுந்தரம், உசேன், அசோகா சுப்பிரமணியன், நெய்தல் நாடன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மன்னர்மன்னன் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து நடைபெற்ற "கலைகள் வளர்த்திடுவோம் என்ற மன்னர் மன்னன் கவிதை வரியைத் தலைப்பாகக் கொண்ட ஓவியப்போட்டியில் 120 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    பங்கேற்ற அனைத்து மாணவருக்கும் பாராட்டிதழ் வழங்கப்பட்டது. 

    • எங்கள் நம்பிக்கையே, நேர்மையே, விசுவாசமே, எங்கள் காவலரே என குறிப்பிட்டு ஆள் உயரத்துக்கு நாயின் படம் இடம் பெற்றிருந்தது.
    • பேனர் வைக்கக்கூடாது என எச்சரித்து பேனரை எடுத்துச் செல்ல அறிவுறுத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை நகரின் அனைத்து பகுதிகளிலும் அரசின் அனுமதியின்றி அரசயில்கட்சியினரால் பேனர்கள் வைக்கப்படுகிறது.

    முக்கிய சிக்னல் சந்திப்புகளில் வைக்கப்படும் பேனர்களால் உயிர் பலி ஏற்படுகிறது. இந்த நிலையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ராஜீவ்காந்தி சதுக்கத்தில் நாய்க்கு பிறந்தநாள் வாழ்த்து பேனர் வைத்துள்ளனர்.

    அதில், எங்கள் நம்பிக்கையே, நேர்மையே, விசுவாசமே, எங்கள் காவலரே என குறிப்பிட்டு ஆள் உயரத்துக்கு நாயின் படம் இடம் பெற்றிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த கோரிமேடு போலீசார் விரைந்து வந்து அந்த பேனரை அகற்றினர்.

    மேலும் பேனர் வைத்த அமைப்பின் நிறுவனர் அசோக்ராஜ் உட்பட நிர்வாகிகளை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதுபோல் பேனர் வைக்கக்கூடாது என எச்சரித்து பேனரை எடுத்துச் செல்ல அறிவுறுத்தினர்.

    இதுகுறித்து அசோக்ராஜ் கூறுகையில், ஆதரவற்ற, தெருவோர செல்ல பிராணிகளை மீட்டு வளர்த்து வருகிறோம். சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருநாய்களை காப்பாற்றியுள்ளோம். நோணாங்குப்பத்தில் 4 ஆண்டுக்கு முன் மிக மோசமான நிலையில் மீட்டெடுக்கப்பட்ட நாய்க்கு பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட முடிவு செய்தோம்.

    கலெக்டர், புதுவையில் பேனர் வைக்க தடையில்லை என கூறியுள்ளதால் ராஜீவ்காந்தி சிக்னலில் யாருக்கும் பாதிப்பின்றி பேனர் வைத்தோம். ஆனால் நாய்க்கு பேனர் வைக்கக் கூடாது என போலீசார் அகற்றிவிட்டனர் என்றார்.

    ராஜீவ்காந்தி சிக்னலில் பெரியளவில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதை போலீசாரும், அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆதரவற்றோர் இல்லம் சார்பில் கொண்டாடப்பட்டது
    • பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    அருவங்காடு,

    குன்னூர் அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளை ஆதரவற்றோர் இல்லம் சார்பில் பஸ் நிலையம் முன்பு கலாம் 92-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சியில் நீலகிரி சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பு, குன்னூர் வியாபாரிகள் சங்க தலைவர் பரமேஸ்வரன், செயலாளர் ரஹீம், மக்கள் நற்பணி மைய தலைவர் கன்டோன்மென்ட் வினோத்குமார், நீலகிரி சோசியல் மீடியா நிறுவனர் சிக்கு, ஹியூமன் ரைட்ஸ் பாபு, ஐஸ்வர்யா கன்ஸ்ட்ரக்சன், மேத்யூ டாக்ஸி நிறுத்தம் நண்பர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    • ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி துவக்க விழா மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணுசந்திரன் தலைமையில் நடைபெற்றது.
    • முதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2-வது பரிசு ரூ.25 ஆயிரம், 3-வது பரிசு 10 ஆயிரம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 92-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்யை இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 92-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் மூன்று பிரிவுகளாக மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதனைதொடர்ந்து, ராமேசுவரம் பேக்கரும்பு அப்துல்கலாம் நினைவிடத் தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி துவக்க விழா மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணுசந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் கலந்துகொள்வதற்காக இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் ராமேசுவரம் வருகை தந்தார். அவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் பூங்கொத்து மற்றும் புத்தகம் வழங்கி வரவேற்றனர். இதனைதொடர்ந்து, மாரத்தான் போட்டியை இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    முதல் போட்டி 21 கிலோ மீட்டர், இரண்டாவது போட்டி 5 கிலோ மீட்டர், மூன்றாவது மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டி 3 கிலோ மீட்டர் என நிர்ணயம் செய்யப்பட்டு போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2-வது பரிசு ரூ.25 ஆயிரம், 3-வது பரிசு 10 ஆயிரம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.5 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெ.தங்கதுரை, உதவி கலெக்டர் சிவானந்தம், கலாம் பேரன் சேக்சலீம், நகர்மன்ற தலைவர் நாசர் கான், மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா மற்றும் உள்ளாட்சி பிரநிதிகள் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.

    • பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடக்கிறது.
    • இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி வருகிற 14-ம் தேதி காலை 7 மணிக்கு தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் இருந்து தொடங்கி பாலாஜி நகர், ஈஸ்வரி நகர், மருத்துவ கல்லூரி சாலை வழியாக பிள்ளையார்பட்டி புறவழி சாலை சென்று மீண்டும் அதே வழியாக விளையாட்டு அரங்கத்திற்கு வந்தடையும்.

    சைக்கிள் போட்டிகள் 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், 13 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ., 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் நடைபெறும்.

    இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தலைமை ஆசிரியரிடம் இருந்து பெற்ற வயது சான்றிதழ் உடன் கலந்து கொள்ள வேண்டும்.

    முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகளுக்கு பரிசு தொகையாக தலா ரூ.5000, ரூ.3000, ரூ.2000 வீதமும் 4 முதல் 10-ம் இடம் வரை பிடிப்பவர்களுக்கு தலா ரூ.250 வீரமும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

    கலந்து கொள்பவர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் தங்கள் பதிவினை அன்னை சத்யா விளையாட்டு அரங்க அலுவலகத்தில் நேரிலோ அல்லது 04362-235633 என்ற தொலைபேசி நிலா தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என்று கலெக்டர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    • அப்துல் கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • அப்துல் கலாம் கண்டுபிடிப்புகளை நினைவு கூறும் வகையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் சாந்தி முருகானந்தம் தலைமையில் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்த தினத்தையொட்டி அப்துல்கலாம் வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இதில் மாணவ- மாணவிகளுக்கு வாசித்தல், மரம் வளர்த்தல், அறிவியல் மனப்பாங்கு வளர்த்தல் போன்ற அப்துல் கலாம் கண்டுபிடிப்புகளை நினைவு கூறும் வகையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

    • வேதபாரதி மற்றும் பாரதிய ஜனதா கட்சி இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தியது.
    • மாநிலத் தலைவர், செல்வகணபதி எம்.பி. தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடி பிறந்த நாள் சேவை நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக பாரத பண்பாட்டு அமைப்பான வேதபாரதி மற்றும் பாரதிய ஜனதா கட்சி இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தியது.

    லாஸ்பேட்டை சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடந்த மருத்துவ முகாமை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர், செல்வகணபதி எம்.பி. தொடங்கி வைத்தார். பா.ஜனதா மாநில முன்னாள் தலைவர் சாமிநாதன் முன்னிலை வகித்தார். முகாமில் லாஸ்பேட்டை ஈ.சி.ஆர் சாலையில் அமைந்துள்ள எம்.வி.ஆர் மருத்துவமைய மருத்துவ இயக்குனரும் முதுநிலை பொது மருத்துவம் மற்றும் நீரிழிவுநோய் சிறப்பு நிபுணருமான டாக்டர் எம்.ஆர்.வித்யா தலைமையி லான மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த முகாமில், பொது மற்றும் நீரிழிவுநோய் சிறப்பு மருத்துவம், இருதய நல சிறப்பு மருத்துவம், மகளிர் மற்றும் மகப்பேறு நல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவ ஆலோசனைகள், ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை, ரத்தசோக பரிசோதனை, இ. சி. ஜி., எலும்பு அடர்த்தி கண்டறியும் சிறப்பு ஸ்கேன் பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    முகாமில் பா.ஜ.க மாநில செயலாளர் லதாகோபு, உழவர் கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், மாவட்ட துணை தலைவர் முருகன்,தொகுதி தலைவர் சோமசுந்தரம், திருமால், நடராஜன், கனகவள்ளி,வேத பாரதியின் பொது செயலாளர் பட்டாபிராமன், வேதராமன்,ரவிச்சந்திரன், மெடிகல் கிருஷ்ண மூர்த்தி, கல்யாண் குமார்,வெங்க டேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது.
    • ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ.வுமான வசந்தம் கார்த்திகேயன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுகா பகண்டை கூட்ரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி தெற்கு தி.மு.க. மாவட்ட செயலாளரும், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ.வுமான வசந்தம் கார்த்திகேயன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இதில் தனியார் கார், ஆட்டோ, வேன் டிரைவர்கள் கலந்து கொண்டு அமைப்புச் சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டனர். முகாமில் ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், நிர்வாகிகள் கோவிந்தராஜ், சாமி சுப்பிரமணியன், கே.அண்ணாதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 113 வயது வரை காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட எந்த பாதிப்பிற்கும் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றதில்லை.
    • அனைவரிடமும் பாசமாக இருப்பார். யாரிடமும் கோபப்படமாட்டார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி தெற்கு தெருவை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மனைவி முப்பிடாதி என்ற ஏசம்மாள் (வயது113). இவர்களுக்கு 8 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    மேலும் மருமகள்கள், மருமன்கள், பேரப்பிள்ளைகள், கொள்ளுபேரன், பேத்திகள் என இவர்களின் மொத்த குடும்ப உறுப்பினர்கள் 68 பேர் ஆகும். இதில் பல்வேறு காரணங்களால் 8 பேர் உயிரிழந்தனர். தற்போது 60 பேர் உள்ளனர்.

    முப்பிடாதி கடந்த 1910-ம் ஆண்டு பிறந்தவர். இந்நிலையில் தனது 113-வது வயதில் மரணம் அடைந்தார். இது குறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், முப்பிடாதி தனது வாழ்நாளான 113 வயது வரை காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட எந்த பாதிப்பிற்கும் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றதில்லை. நோய்களுக்கு வென்னீர் குடிப்பது நெற்றியில் பத்து போடுவது என இயற்கை வைத்தியம் பார்த்துக்கொள்வார். அளவான நவதானிய உணவுகளை மட்டும் சாப்பிட்டு வந்தார். இவருக்கு ஆங்கில மருத்துவ முறையான அலோபதி என்றாலே என்ன வென்று தெரியாது.

    அனைவரிடமும் பாசமாக இருப்பார். யாரிடமும் கோபப்பட மாட்டார். கணவரை இழந்தபிறகும் தனது குடும்பத்தினரால் மகிழ்ச்சியாக வாழ்ந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அவரது 113-வது பிறந்த நாளை நாங்கள் உற்சாகமாக கொண்டாடினோம். இந்த நிலையில் அவர் மரணம் அடைந்தது வேதனை அளிக்கிறது என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். 

    • கூகுள் கடந்த 1998-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது.
    • இதுவரைக்கும் 170-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை கூகுள் கையகப்படுத்தி இருக்கிறது.

    புதுடெல்லி:

    இணையத்தின் பிரபலமானதேடு பொறியான கூகுள் இன்று 25-வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. வழக்கமாக பிரபலங்களின் பிறந்தநாளை நமக்கு நினைவூட்டும் கூகுள் இன்று தனது பிறந்த நாளையே முகப்பாக வைத்துள்ளது.

    அமெரிக்காவின் ஸ்டான் போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்று கணினி அறிவியல் திட்டத்தில் முனைவர் பட்டம் பெற்ற மாணவர்கள் வைன் லாரி பேஜ் மற்றும் செர்கி பிரின் ஆகிய 2 நண்பர்கள் உருவாக்கியது தான் கூகுள். தங்களுடைய புராஜெக்ட்டாக அவர்கள் ஒரு தேடு தளத்தை ஆன்லைனில் உருவாக்க நினைத்தார்கள்.

    நூலகத்தில் இருக்கும் நூல்கள், ஆவணங்களை தேடுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த தேடுபொறிதான், இன்று இணையதள உலகில் பிரபலமான கூகுளாக வளர்ந்து நிற்கிறது. கூகுள் கடந்த 1998-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது. 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இதுவரைக்கும் 170-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை கூகுள் கையகப்படுத்தி இருக்கிறது. டேட்டா பாதுகாப்புக்காக உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் 9 லட்சம் சர்வர்களை வைத்திருக்கிறது கூகுள். மேலும் ஒரு நாளில் 100 கோடிக்கும் மேலான தேடல்களைக் கையாள்வதாகவும், உலகம் முழுவதும் 150 க்கும் மேற்பட்ட மொழிகளில் தேடல்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கூகுள் நிறுவனத்தில் 53 ஆயிரம் பணியாளர்களுக்கு மேல் பணிபுரிகிறார்கள்.

    ×