search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "birthday"

    • ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பூர் மாநகராட்சி முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பொது மக்களுக்கு இணிப்புகள் வழங்கினர்.

    இதில் மாவட்ட அவைதலைவர் பழனிச்சாமி, மாவட்ட அம்மா பேரவை தலைவர் அட்லஸ் லோகநாதன், மாவட்ட துணை செயலாளர் பூலுவபட்டி பாலு, இணைச் செயலாளர் சங்கீதா சந்திரசேகர், மாவட்ட எம் .ஜி .ஆர். மன்ற செயலாளர் சிட்டி பழனிச்சாமி, தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி. என். பழனிச்சாமி உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன் உள்பட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெய லலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதா பரமசிவன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரெட்டி யார்பட்டி நாராயணன், முருகையாபாண்டியன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, முன்னாள் துணை மேயர் ஜெகநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் பெரிய பெருமாள், மாநில எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் கல்லூர் வேலாயுதம்,

    ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குட்டி பாண்டியன், மருதூர் ராமசுப்பி ரமணியன், டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால்கண்ணன், கவுன்சிலர் சந்திரசேகர், நிர்வாகிகள் சீனிமுகம்மது சேட், வெள்ளப்பாண்டி, ஜெய்சன் புஷ்பராஜ், பழையபேட்டை கணேஷ், பாறையடி மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பதி நகரம் தனது 893-வது பிறந்தநாளை இம்மாதம் 24-ந் தேதி கொண்டாடத் தயாராகி வருகிறது.
    • திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 4 மாட வீதிகளில் பிரமாண்டமான நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள செய்யப்பட்டு வருகிறது.

    திருப்பதி:

    கலியுகத்தின் வெளிப்பாடாக திருமலை மலையில் அவதரித்த ஏழுமலையான் சாமியின் பாத பீடம் என அழைக்கப்படும் திருப்பதிக்கு பல நூற்றாண்டுகளின் வரலாறு உண்டு.

    திருமலையின் ஆகமத்தின் பணிகளை இயக்கிய ராமானுஜாச்சாரியார் கிட்டத்தட்ட 8 நூற்றாண்டுகளுக்கு முன்பு திருப்பதி நகரத்தை தோற்றுவித்தார் என்று வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. கிடைத்துள்ள ஆதாரங்களின்படி, திருப்பதி நகரம் தனது 893-வது பிறந்தநாளை இம்மாதம் 24-ந் தேதி கொண்டாடத் தயாராகி வருகிறது.

    ஸ்ரீ லக்ஷ்மி தேவியைத் தேடி வைகுண்டத்தை விட்டு பூமியை அடைந்த ஸ்ரீ மஹாவிஷ்ணு, ஸ்ரீநிவாஸர் என்ற பெயரில் ஆதிவராஹ ஸ்தலமான திருமலை மலைக்குச் சென்று ஸ்ரீ ஏழுமலையானை வழிபட்டார் என்பது அனைவரும் அறிந்த புராணங்கள். கலியுகத்தின் ஆரம்பம் முதல் இன்று வரை அனைத்து நித்ய சேவை கைங்கர்யங்களும் பரம்பரை வைகானச ஆகமத்தின்படி நடந்து வருகின்றன.

    ஆனால் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை, திருமலையில் பல்வேறு வகையான திருவிழாக்கள் தெளிவற்ற நடைமுறைகளுடன் நடந்தது.

    அந்தந்த வம்சங்கள் ராமானுஜச்சாரியார் 11-ம் நூற்றாண்டில் தனது வாழ்நாளில் 3 முறை திருமலைக்கு வந்து கருவறையில் காணப்படும் அசல் தன்மை குறித்த சந்தேகங்களைப் போக்கினார். அந்தச் சந்தர்ப்பத்தில் தான் திருமலை மூலமூர்த்திக்கு சங்குச்சக்கரங்களைக் காணிக்கையாகக் கொடுத்து, ஸ்தல லட்சுமியை பிரதிஷ்டை செய்து, ஸ்ரீ மஹாவிஷ்ணு தசாவதார ரூபம் என்று அறிவித்தார். திருமலை கோவிலின் நித்ய பூஜைகள், கைங்கர்ய நடைமுறைகளை பரம்பரையாக ஆகம விதிகளின்படி மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். அந்த வழக்கமான பூஜைகளின் பொறுப்புகளை கண்காணிக்க பஞ்சராத்ர துணை ஜீயர் அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த நேரத்தில், ஏழுமலையான் கோவில் பகுதி வனப்பகுதியாக இருந்தது, அங்கு வழக்கமான சேவைகள் மற்றும் திருவிழாக்கள் நடைபெற்றன. கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெற்றது.

    அதன்பின், கோவிலின் நான்கு புறமும் மாடவீதிகள், அர்ச்சகர்கள் குடியிருப்புகள், ஜீயரைக் கொண்டு கட்டப்பட்டது. கோவிந்தப்பட்டினம் என்ற பெயரில் மடங்கள் மற்றும் மக்கள்தொகை விரிவாக்கம் தொடங்கியது.

    அவ்வாறு உருவான கோவிந்தப்பட்டினம், திருமலை அடிவாரத்தில் உள்ள கபிலதீர்த்தம் அருகே ஏற்கனவே மறைந்துவிட்ட கோத்தூர் என்ற கிராமப் பகுதி வரை நீண்டு, தற்போதைய திருப்பதி நகரம் உருவாகக் காரணமாக இருந்தது.

    கோவிந்தராஜர் கோவில் வளாகத்தில் காணப்படும் பல கல்வெட்டுகள் மூலம் இந்த வரலாறு வெளிப்படுகிறது. தற்போதைய திருப்பதி நகரத்தை ராமானுஜாச்சாரியார் 1130-ம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று நிறுவினார் என்பதை அந்த ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.

    இதற்கு சாட்சியாக கோவிந்தராஜசுவாமி கோவிலில் பரம்பரை பரம்பரையாக நடைபெறும் நித்ய பூஜை நடவடிக்கைகளில் அன்றைய தேதி தொடர்பான வருட, திதி, வார, நட்சத்திரங்களை வைத்து அர்ச்சகர்கள் தீர்மானம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    உலகப் புகழ் பெற்ற திருப்பதி நகரம் திருமலையின் பாத பீடமாகத் திகழ்கிறது. அதன் தோற்றத்தின் விழாவின் ஒரு பகுதியாக, நகர மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 4 மாட வீதிகளில் பிரமாண்டமான நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் திருப்பதி மாநகராட்சி சார்பில் வண்ண மின் விளக்குகள் மற்றும் தோரணங்கள் மூலம் அழகுபடுத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    • மன்னர் திருமலை நாயக்கர் பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • மேலும் அரசு சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    மதுரை

    மன்னர் திருமலைநாயக்கரின் 440-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மகாலில் உள்ள அவரது உருவசிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர்கள் முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன், முருகேசன் ஆகியோர் தலைமையில் இளைஞரணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ்மோகன் முன்னிலையில் ஊர்வலமாக வந்து திருமலை நாயக்கரின் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்தநிகழ்ச்சியில் நிர்வாகிகள் வி.கே.எஸ்.மாரிச்சாமி, பி.எஸ்.கண்ணன், மாணவரணி மாநில இணைச்செயலாளர் ஒத்தக்கடை பாண்டியன், அம்மா பேரவை மாநில இனை செயலாளர் குணசேகரன், மாணவரணி மாவட்ட செயலாளர்கள் பிரபாகர், சோலை இளவரசன், ரகுதேவன், மீனவரணி ராமநாதன் அமைப்புசாரா ஓட்டுனர் அணி உசிலை பிரபு, நகரச் செயலாளர் சசிகுமார்.

    இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் சரவணன், ராஜமாணிக்கம், ஒன்றிய செயலாளர்கள் சிவா, கொடிவைரன், யோகராஜ், துதி திருநாவுகரசு, பாண்டி கோவில் பூசாரி கார்த்திகேயன், சிதம்பரம், ஆட்டோ கருப்பையா, கண்ணன், மகாலிங்கம், அர்ஜுனன், நாச்சியப்பன், புல்லட் ராமமூர்த்தி, கிரி சாத்தன உடையார், பத்ரி முருகன், முருகவேல், இன்பம், ஆரைக்குடி முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாரதி மேற்கோள்காட்டிய புலவர்களிலேயே முதலிடத்தை பெறுபவர் கம்பர்.
    • கம்பர் சிலையின் முன்பு தமிழர்கள் அவருக்கு புகழாரம் சூட்டி பேசினார்.

    குத்தாலம்:

    யாமறிந்த புலவர்களிலே கம்பனைப் போல், வள்ளுவனை போல், இளங்கோவை போல் பூமி தன்னில் யாங்கெனுமே பிறந்ததில்லை என பாரதி மேற்கோள்காட்டிய புலவர்களிலேயே முதலிடத்தை பெறுபவர் கம்பர்.

    கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்பார்கள்.

    இத்தகைய சிறப்புகள் பல பெற்ற கம்பர் பிறந்தது மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தேரழுந்தூர்.

    இவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வரும் நிலையில், ஆண்டுதோறும் அவரது பிறந்த நாள் விழா தேரழுந்தூர் கம்பர் கழகம் மற்றும் புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அவ்வகையில் 93-ஆம் ஆண்டு கம்பர் விழா நேற்றுமுன்தினம் தொடங்கியது.

    தேரழுந்தூர் கம்பர் கோட்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயிலில் கம்பர் வழிபாடு நடைபெற்றது.

    தொடர்ந்து கம்பர் இயற்றிய கம்பராமாயண புத்தகங்களையும், சீர் வரிசைகளையும் தமிழ் அறிஞர்கள் தங்கள் தலைகளில் சுமந்து வீதி உலாவாக கம்பர் கோட்டத்தை அடைந்தனர்.

    அங்கு அமைந்துள்ள கம்பர் சிலையின் முன்பு தமிழர்கள் அவருக்கு புகழாரம் சூட்டி பேசினார்.

    தொடர்ந்து நடைபெற்ற விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த தமிழறிஞர்கள் வழக்காடு மன்றம், சொற்பொழிவு, உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு கம்பரின் புகழ்பாடினர்.

    இதில், எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன், புதுச்சேரி கம்பன் கழக செயலாளர் சிவக்கொழுந்து, உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், புதுக்கோட்டை கம்பன் கழகம் ராமசாமி, ராமச்சந்திரன், ராமேஸ்வரம் கம்பன் கழக தலைவர் முரளிதரன், தேரழுந்தூர் முத்துசானகிராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • மாநிலத் துணை தலைவர் இ.எஸ்.எஸ் ராமன் கபடி விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இரவு நேரங்களிலும் விளையாட மின்விளக்குகள் வழங்கினார்.
    • பிறந்தநாள் விழாவில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனின் பிறந்தநாள் விழா காஞ்சிபுரம் சங்கரமடம் அருகில் கட்சியின் மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தம்மன் தலைமையில் நடந்தது.

    காஞ்சிபுரம் மாநகர தலைவர் சுகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாநிலத் துணை தலைவர் இ.எஸ்.எஸ் ராமன் கலந்து கொண்டு பள்ளி மாணவனுக்கு மிதிவண்டி, மாற்று திறனாளிகள் 3 பேருக்கு வண்டி, கபடி விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் இரவு நேரங்களிலும் விளையாட மின்விளக்குகள்,தொழில் செய்ய முனைவோருக்கு அவர்கள் விரும்பிய தொழில் செய்ய உதவும் உபகரணங்கள், சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டி, ஏழை பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது. இதில் மாநில இளைஞரணி செயலாளர் சங்கர், நகர தலைவர் சுகுமார், வட்டார தலைவர் முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    • அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு நாளை பிறந்த நாளாகும்.
    • அவரது பிறந்த நாளை கொண்டாடுவது குறித்து புதுவை வடக்கு மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வில்லியனூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது.

    புதுச்சேரி:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு நாளை பிறந்த நாளாகும். அவரது பிறந்த நாளை கொண்டாடுவது குறித்து புதுவை வடக்கு மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வில்லியனூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் அவைத்தலைவர் சுப்ரமணி யன், இணைச்செயலாளர் லாவண்யா, மகளிரணி தலைவி காமாட்சி ரகுபதி, துணைச்செயலாளர் சிலம்பரசன், ஜெ.பேரவை செயலாளர் காண்டீபன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நந்தகோபால், இளைஞர் பாசறை செயலாளர் இளம்வழுதி, இலக்கிய அணி பாலு, மாணவர் அணி ஜெகதீஷ், வர்த்தக அணி கணேசன், தொகுதி செயலாளர்கள், செந்தில், ரத்தினவேல், தனவேலு, செல்லா என்ற தமிழ்செல்வன், ராமசந்திரன், மணவாளன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திருச்சியில் சில இடங்களில் மருத்துவ முகாம், ரத்ததான முகாம்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • சில ஆண்டுகளாகத் தனது போயஸ் தோட்ட வீட்டுக்கு வரும் ரசிகர்களைச் சந்தித்து வருவதை ரஜினி வழக்கமாக வைத்திருக்கிறார்.

    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் நாளை தனது 73-வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். வழக்கம் போல நாடு முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்கள் பிரமாண்டமான கொண்டாட்டத்திற்குத் தயாராகி வருகிறார்கள்.

    திருச்சியில் சில இடங்களில் மருத்துவ முகாம், ரத்ததான முகாம்களை நடத்த ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாகத் தனது போயஸ் தோட்ட வீட்டுக்கு வரும் ரசிகர்களைச் சந்தித்து வருவதை ரஜினி வழக்கமாக வைத்திருக்கிறார்.

    தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில் அவரை வீட்டில் காண ரசிகர்கள் எப்போதும்போல் கூடுவார்கள். காலையில் போயஸ்கார்டன் பகுதியே ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். காலை 9 மணி அளவில் வீட்டிற்குள் இருந்து ரஜினி வெளியே வந்து ரசிகர்களைப் பார்த்துக் கையசைப்பார். இது வழக்கமான காட்சி.

    இந்தாண்டு அவரது பிறந்த நாள் ரசிகர்களால் உற்சாகமாக கொண்டாடப் படுவதற்கு முக்கிய காரணம் பாபா திரைப்படம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியாகி இருப்பதுதான், ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் பாபா திரைப்படம் மிகப் பெரிய தோல்விப்படமாக அமைந்து விட்டதாகப் பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது.

    இன்றைய சூழலில் ரசிகர்களிடம் வெளிப்பட்டிருக்கும் ஆன்மீக சிந்தனையால் கன்னடத்தில் வெளிவந்த காந்தாரா திரைப்படம் இந்தியா முழுவதும் வெளியாகி ரூ.100 கோடி வசூல் செய்திருக்கிறது.

    இதற்கு இளம் தலைமுறையினரிடம் எழுந்திருக்கும் ஆன்மீகத் தேடல்தான் காரணம் என்று ரஜினியின் மனதில் தோன்றி இருக்கிறது. இந்த சிந்தனையால் பாபா படத்தை நவீனப்படுத்தி வெளியிட்டால் அது கண்டிப்பாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் என்று நினைத்தார்.

    அதனால் படத்தை நவீனப்படுத்த சுரேஷ் கிருஷ்ணா, எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோருடன் ஆலோசித்து அதற்கான வேலைகளில் இறங்கி இரு தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பாபா திரைப்படம் வெளியானது. படத்தில் பல காட்சிகள் வெட்டப்பட்டு கிளைமேக்ஸ் காட்சிகள் மாற்றப்பட்டு வெளியாயின.

    ரஜினி நினைத்தது போலவே 1000 திரை அரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. புதிய வெளியீட்டுக்கு நடப்பது போலவே அதிகாலை 4 மணிக்காட்சிக்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

    ரஜினியே எதிர்பார்க்காத வகையில் மறு வெளியீட்டிற்கு ரசிகர்கள் பெரிய ஆதரவு கொடுத்திருப்பது அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தனது சொந்த படமான பாபா படத்தின் மீது இருந்த தோல்விப்படம் என்ற கறையை நீக்கியதில் தனது ரசிகர்களுக்குப் பெரிய பங்கு இருக்கிறது என்று நினைக்கும் ரஜினிகாந்த் இந்த ஆண்டு தன்னுடைய 73-வது பிறந்த நாளில் வீட்டில் ரசிகர்களை சந்திக்கத் திட்டமிட்டு இருக்கிறார்.

    இதற்காக போயஸ் தோட்ட வீட்டின் உள்ளேயே சிறிய அளவிலான மேடை தயார் செய்யப்பட்டு வருகிறது. அதிகாலையில் வீட்டின் முன்பாக வாழை மரங்கள் தோரணங்கள் கட்டப்பட உள்ளன. பாபா வெற்றி பெற்ற மகிழ்ச்சியோடு ரஜினியை நாளை சந்திக்கத் தயாராகி வருகிறார்கள் ரசிகர்கள்.

    • நீலகண்டபிரம்மச்சாரி வாழ்ந்த வீட்டில் நடைபெற்ற விழாவிற்கு மயிலாடுதுறை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் க.அகோரம் தலைமை வகித்தார்.
    • பா.ஜ.க மாநில செயலாளர் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் சிறப்புரையாற்றினார்.

    சீர்காழி:

    சீர்காழி வட்டம் எருக்கூர் அக்ரஹாரத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஸ்ரீ நீலகண்ட பிரம்மச்சாரியார் 134-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

    நீலகண்டபிரம்மச்சாரி வாழ்ந்த வீட்டில் நடைபெற்ற விழாவிற்கு மயிலாடுதுறை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் க.அகோரம் தலைமை வகித்தார்.

    சேவாபாரதி மாவட்டத் தலைவர் மும்மூர்த்தி, பாஜக அமைப்புசாரா தொழிலாளர் அணி செல்வம், கலை இலக்கிய அணி தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ நீலகண்ட பிரம்மச்சாரியார் பேரன் சுப்பிரமணியன் வரவேற்றார். பாஜக மாநில செயலாளர் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் சிறப்புரையாற்றினார்.

    இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமி நாதன், சுதந்திரபோராட்ட வீரர்களின் வாரிசுகளான கடலூர் அஞ்சலை அம்மாளின் பேரன் முத்துக்கு மரன், சாவடி அருணாச்சலம் பிள்ளையின் மருமகள் முத்தம்மாள் சொக்கலிங்கம், ஒட்டப்பிடாரம் மாடசாமியின் கொள்ளுப்பேரன் இசக்கி சங்கர் பாலாஜி, திண்டுக்கல் சிவாஜி பேரவை நிறுவனத் தலைவர் வைரவேல் உள்ளிட்டோர் பேசினர்.

    இதில் நிர்வாகிகள், கிராம முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • திருமங்கலத்தில் உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர்.
    • விழாவை முன்னிட்டு சிறுவர்- சிறுமியர் மற்றும் ஏழை- எளியவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    திருமங்கலம்

    தி.மு.க. மாநில இளைஞ ரணி செயலாளரும், சென்னை சேப்பாக்கம் சட்ட மன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாள் நாள் தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர தி.மு.க. சார்பில் முன்சீப் கோர்ட்டு சாலையில் ராஜாஜி தெரு சந்திப்பில் 45 கிலோ கேக் வெட்டி உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை கொண்டாடினர். விழாவை முன்னிட்டு சிறுவர்- சிறுமியர் மற்றும் ஏழை- எளியவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் திருமங்க லம் நகர செயலாளர் ஸ்ரீதர், நகரசபை தலைவர் ரம்யா முத்துக்குமார், துணை சேர்மன் ஆதவன் அதியமான், இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார், மாவட்ட அவைத் தலை வர் நாகராஜன், நகர அவைதலைவர் சேட், துணைச் செயலாளர் செல்வம், வழக்கறிஞர்கள் தங்கச்சாமி, தங்கேஸ்வரன், கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், காசி பாண்டி, ரம்ஜான் பேகம், வினோத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தஞ்சையில் இன்று பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • ஏழைகளுக்கு நிவாரண உதவிகள் மற்றும் மாணவ- மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வின் 45-வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    தி.மு.க. சார்பில் தமிழக முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி தஞ்சையில் இன்று பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு கள் வழங்கப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ. வழங்கினார் . தொடர்ந்து கட்சி கொடியேற்றி ஒவ்வொரு வட்டத்திலும் ஏழைகளுக்கு நிவாரண உதவிகள் மற்றும் மாணவ- மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் சதாசிவம், மேத்தா, கார்த்திகேயன், ஆர்.கே. நீலகண்டன், மண்டல பொறுப்பாளர்கள் கலையரசன், நகர நிர்வாகிகள் சுப்பிரமணியன், எழில், மாவட்ட பிரதிநிதிகள் கண்ணன், ஆனந்த், வட்ட செயலாளர்கள் அண்ணா.பிரகாஷ், கார்த்திகேயன், ராஜகுமார், ராஜேந்திரன், ராஜா,

    மாமன்ற உறுப்பினர்கள் முகமது சுல்தான் இப்ராஹிம், சந்திரலேகா சசிகுமார் மற்றும் இளைஞர் அணி, மாணவர் அணி, முன்னோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • டி.டி.வி. தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
    • 2 ஆயிரம் பேருக்கு அறுசுவை விருந்து வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    திருப்பூர் :

    அ.ம.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் சி.சண்முகவேலு சிறப்புரையாற்றினார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் விசாலாட்சி சிறப்பித்து பேசினார். டி.டி.வி. தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

    டி.டி.வி. தினகரன் பிறந்தநாளான வருகிற 13-ந் தேதி காலை கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும். கொடிக்கம்பங்கள் அமைத்து கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்க வேண்டும் என்று நிர்வாகிகள் கருத்து தெரிவித்தார்கள். பிறந்தநாளன்று காலை பெரிபாளையம் சுக்ரீஸ்வரர் கோவிலில் காலையில் பூஜை நடத்தப்பட்டு 13 பகுதிகளிலும் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்க வேண்டும். மதியம் 2 ஆயிரம் பேருக்கு அறுசுவை விருந்து வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    மேலும் சுற்றுச்சூழல் பிரிவு சார்பில் 1,500 பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் வகையில் மராத்தான் போட்டிகள் நடத்தி பரிசு வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் என 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என மாபெரும் மக்கள் எழுச்சி நாளாக கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் பாலுசாமி, மருத்துவ அணி மாநில துணை செயலாளர் டாக்டர் கிங், துணை செயலாளர் கீதா, பொருளாளர் சேகர், நிர்வாகி புல்லட் ரவி, அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாலகிருஷ்ணன், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் இறைவெங்கடேஷ், அம்மா தொழிற்சங்க பேரவை தலைவர் கலியமூர்த்தி, பகுதி செயலாளர்கள் வீர.கந்தசாமி, ராஜாங்கம், ஜெகதீஷ், நூல்கடை சிவக்குமார், நெருப்பெரிச்சல் நிர்வாகி கந்தசாமி, பாண்டியன் நகர் பகுதி இணை செயலாளர் ஷீபா பாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

    ×