search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "blast explosive"

    • வெடிபொருள் தொழிற்சாலையில் இன்று மதியம் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
    • இதில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அருகே உள்ள தாம்னா என்ற கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான வெடிபொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு குவாரிகளில் பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள், ரசாயன பவுடர்கள், வெடி மருந்துகள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், இந்த வெடிபொருள் தொழிற்சாலையில் இன்று மதியம் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    வெடிவிபத்து குறித்து தகவலறிந்த துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி நிதின் கட்கரி ஆகியோர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தனர்.

    இதையடுத்து தொழிற்சாலை மூடப்பட்டதாகவும், இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் நாக்பூர் போலீஸ் கமிஷனர் ரவீந்திர சிங்கல் தெரிவித்துள்ளார்.

    ×