search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Book"

    • சேலம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் புத்தகத் திருவிழாவினை நடத்தி வருகிறது.
    • இம்மாபெரும் புத்தகத் திருவிழாவில் புத்தக விற்பனை ரூ.2.60 கோடியாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் படைப்பாளர்களின் புத்தகங்கள் ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    சேலம்:

    சேலம் மாவட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் சேலம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் புத்தகத் திருவிழாவினை நடத்தி வருகிறது. இந்த விழா கடந்த நவம்பர் 20-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து 11 நாள்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. புத்தக வாசிப்பாளர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று புத்தகத் திருவிழா வருகிற 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்புத்தகக் கண்காட்சி தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இதில் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பதிப்பாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டார்கள் கலந்துகொள்ளும் வகையில் 210 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சேலம் புத்தகத் திருவிழாவினை இதுவரை சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தக ஆர்வலர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர். இம்மாபெரும் புத்தகத் திருவிழாவில் புத்தக விற்பனை ரூ.2.60 கோடியாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் படைப்பாளர்களின் புத்தகங்கள் ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    விழாவில் நாள்தோறும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பல்வேறு போட்டிகள் மற்றும் பொதுமக்களைக் கவரும் வகையிலான கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், புத்தகத் திருவிழா நடைபெறும் நாள்களில் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. மேலும், பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. 

    • அரியூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில், இந்திய பள்ளி உளவியல் சங்கம் மற்றும் மொரிஷியஸ் ஆறுமுகம் பரசுராமன் நிறுவனம் கல்லூரியுடன் இணைந்து நம் முன்னோர்கள் பற்றிய ஆய்வு என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா கல்லூரியில் உள்ள சாய் அரங்கில் நடைபெற்றது.
    • குழுமத்தின் மேலாண் இயக்குனர் ராஜூவ்கிருஷ்ணா,மவுஷ்மி ராஜுவ்கிருஷ்ணா ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

    புதுச்சேரி:

    அரியூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில், இந்திய பள்ளி உளவியல் சங்கம் மற்றும் மொரிஷியஸ் ஆறுமுகம் பரசுராமன் நிறுவனம் கல்லூரியுடன் இணைந்து நம் முன்னோர்கள் பற்றிய ஆய்வு என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா கல்லூரியில் உள்ள சாய் அரங்கில் நடைபெற்றது.

    ராமச்சந்திரா கல்வி குழுமத்தின் தலைவர் ராமச்சந்திரன் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்வி குழுமத்தின் மேலாண் இயக்குனர் ராஜூவ்கிருஷ்ணா,மவுஷ்மி ராஜுவ்கிருஷ்ணா ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

    கல்விக்குழுமத்தின் முதன்மை இயக்க அதிகாரி டாக்டர் வித்யா, பொது மேலாளர் சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங் ஆராய்ச்சி புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

    இப்புத்தகத்தின் ஆசிரியரான மொரிஷியஸ் முன்னாள் அமைச்சர் மற்றும் யுனெஸ்கோ முன்னாள் இயக்குனர் ஆறுமுகம் பரசுராமன், மற்றும் இணை ஆசிரியரான வரலாற்றாசிரியர் மற்றும் ஆய்வாளர் பேராசிரியர் சத்யேந்திர பீர்தம் ஆகியோர் வெளியிட்ட புத்தகங்களை விழா நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.

    உளவியலாளர்களும், பேராசிரியர்களுமான விஜயகுமார் மற்றும் சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டு இந்த புத்தகத்தின் நினைவக நுட்பகங்கள் பற்றியும் கல்வி சாதனைகளை மேம்படுத்துதல் குறித்தும் விளக்கவுரை வழங்கினார்கள்.

    புதுவை பல்கலைக்கழக பேராசிரியர் பாஞ். ராமலிங்கம் நோக்க உரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் டாக்டர். பிரதீப் தேவநேயன் அனைவரையும் வரவேற்று பேசினார். பொறியியல் கல்லூரியின் டீன் டாக்டர். ஜெயராமன் நன்றி கூறினார்.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு தலைவர் ஆனந்தராஜ் மற்றும் பேராசிரியர்கள் குழுவினர் ஒருங்கிணைத்திருந்தனர்

    • குத்தகை காலங்கள் தொடர்பான ஆவணங்களை மாநகராட்சி நிர்வாகம் பரிசீலனை.
    • 5 ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய தமிழ் நூலகமும், டென்னிஸ் கிளப்பும் இயங்கியன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் 1872-ம் ஆண்டு வாசகசாலை மற்றும் நூலகம், நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தொடங்கப்பட்டது.

    பின்னர் பழைய பேருந்து நிலையம் அருகே கோட்டை மதில் சுவர் இடிக்கப்பட்டு, அதிலிருந்த செம்புரான் கற்களை கொண்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு 1874-ம் ஆண்டு அப்போதைய மாவட்ட நீதிபதி பர்னர் ஆர்தர் கோக் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது.

    இதையடுத்து 1892-ம் ஆண்டு இந்தக் கட்டிடத்துக்கு தஞ்சாவூர் யூனியன் கிளப் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

    இந்த கிளப்பில் ஹாவ்லேக் என்ற பெயரில் ஆங்கில நூலகமும், பாவேந்தர் பெயரில் 5 ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய தமிழ் நூலகமும், டென்னிஸ் கிளப்பும் இயங்கியன.

    1919-ம் ஆண்டு பிப்.12-ம் தேதி தஞ்சாவூருக்கு வருகை தந்த ரவீந்திரநாத் தாகூர், இந்த யூனியன் கிளப்புக்கு வருகை தந்து உரையாற்றியுள்ளார். அதேபோல் அண்ணா, பாரதிதாசன் உள்ளிட்ட தலைவர்களும் வந்து சென்றுள்ளனர்.

    இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டிடங்களை நேரில் ஆய்வு செய்து, குத்தகை காலங்கள் தொடர்பான ஆவணங்களை மாநகராட்சி நிர்வாகம் பரிசீலனை செய்தது.

    இதில் 99 ஆண்டுகள் குத்தகை காலம் முடிவடைந்ததாக கூறி யூனியன் கிளப் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் தண்டாரோ மூலம் அறிவித்து இடங்களை கையகப்படுத்துவதாக நோட்டீஸ் ஒட்டியது.

    இதனால் தஞ்சாவூர் மாநகராட்சியை எதிர்த்து மதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதன் தீர்ப்பு வந்தது.

    அதில் மாநகராட்சிக்கு சாதகமான தீர்ப்பு வெளியிடப்பட்டது.

    இதையடுத்து இன்று மதியம் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் யூனியன் கிளப்புக்கு சென்று கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என எழுதப்பட்டது.

    இது தொடர்பான அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.

    இதுகுறித்து மேயர் சண். ராமநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

    தஞ்சை நகரின் மையப் பகுதியில் யூனியன் கிளப் இயங்கி வந்தது.

    150 ஆண்டுகால பழமையான கட்டிடம் ஆகும். இங்கு நூலகம் இயங்கி வந்தது.

    இந்த இடத்திற்கு பல்வேறு தலைவர்கள் வந்துள்ளனர்.

    ஒரு கட்டத்தில் இந்த யூனியன் கிளப் தனியார் வசமானது.

    தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் யூனியன் கிளப் கையகப்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து மதுரை நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கின் தீர்ப்பு மாநகராட்சிக்கு சாதகமாக வந்துள்ளது.

    தற்போது மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    இதன் மொத்த பரப்பளவு 35 ஆயிரம் சதுர அடி ஆகும். இவற்றின் மதிப்பு 60 முதல் 75 கோடி வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மீட்கப்பட்ட யூனியன் கிளப் கட்டிடத்தில் அடுத்து என்ன செய்யலாம் என ஆணையர், கவுன்சிலர்கள் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.

    பொது மக்களிடம் கருத்து கேட்கப்படும். தற்போது கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்து மேனிலைப்பள்ளியில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறந்து.
    • மாணவ, மாணவிகளுக்கு புத்தகம், நோட்டுகள், பள்ளி சீருடை அரசு வழங்கிய பொருட்களை வழங்கினார்.

    சீர்காழி:

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளியில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறந்து 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகம், நோட்டுகள், பள்ளி சீருடை ஆகிய விலையில்லா அரசு வழங்கிய பொருட்களை உதவி தலைமை ஆசிரியர்கள் எஸ்.முரளிதரன், என்.துளசி ரங்கன், ஏ.வரதராஜன் முன்னிலையில், பள்ளி தலைமையாசிரியர் எஸ்.அறிவுடைநம்பி வழங்கினார்.

    பொறுப்பாசிரியர் ஜே.கண்ணன், உடற்கல்வி ஆசிரியர்கள் டி.முரளி, பி.மார்க்கண்டன், ச.ஹரிஹரன், ரராகேஷ் ஆகியோர் விலையில்லா பொருட்களை வழங்கும் ஏற்பாட்டினை செய்தனர்.

    • மாணவர்களுக்கு எழுதுபொருட்கள், நோட்டுபுத்தகங்கள் நற்பணி மன்றம் சார்பாக வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மெலட்டூர்:

    அம்மாபேட்டை ஒன்றியம், வெண்ணப்புத்தூர் மற்றும் பள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு வெண்ணப்புத்தூர் சிகரம்தொடு இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக எழுதுபொருட்கள், நோட்டுபுத்தகங்கள் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

    நிகழ்ச்சிக்கு மன்ற நிறுவனர் சரவணபிரபு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ஒன்றியகுழு உறுப்பினர் மதுமதி மணிகண்டன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு எழுது பொருட்கள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார்.

    இதில் செயலாளர் விக்னேஷ், பொருளாளர் தியாகராஜன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், நற்பணி மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் இளைஞர் மன்ற தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    • புத்தகம் வாசிக்க வாசிக்க வாழ்க்கை வசப்படும். தலைகுனிந்து புத்தகம் படித்தால் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழ முடியும்.
    • ஒவ்வொரு வீட்டிலும் புத்தகங்கள், வீதி தோறும் நூலகங்கள் அமைய வேண்டும்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து மன்னார்குடியில் நடத்தும் புத்தக திருவிழாவில் 9- நாள் அரங்க நிகழ்ச்சிக்கு சன்முகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சண்முகராஜன் தலைமை தாங்கினார்.முன்னதாக கே.ஆர்.மதிவாணன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் குன்றக்குடி ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    புத்தகங்கள் தான் ஒரு மனிதனை முழு மனிதனாக்கும். நிறைவான வாழ்க்கை வாழ வழி கோலும்.

    ஒவ்வொரு வீட்டிலும் புத்தகங்கள், வீதி தோறும் நூலகங்கள் அமைய வேண்டும்.

    திருக்குறள் தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூட தன்னுடைய அனைத்து குறள்களையும் மிகவும் மென்மையாக தான் எடுத்துரைத்துள்ளார்.

    எங்குமே கடிந்து சொன்னதில்லை ஆனால் அவரே கூட ஒரு குறளில் மிக கடுமையாக கட்டளையாக வலிமையாக கூறுகிறார்.

    கற்க கசடற பின் நிற்க அதற்கு தக என கடுமை காட்டி மனிதர்களை நல்வழி படுத்துபவை புத்தகங்களை என்பதால் இக்குறளை இவ்வாறு எழுதியிருக்கிறார்.

    நூல்கள் கற்க கற்க அறிவு வளரும் ஞானம் பெருகும்.

    முதன்முதலாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக போராடி சுதேசி இயக்க முன்னோடியாக கப்பல் விட்டு

    போராட்டம் செய்து செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் தியாகம் அளப்பரியதல்லவா அதை நாம் உணர வேண்டும்.

    புத்தகம் வாசிக்க வாசிக்க வாழ்க்கை வசப்படும்.

    தலைகுனிந்து புத்தகம் படித்தால் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழ முடியும்.

    தொட்டுப்பார்த்தால் காகிதம்.

    தொடர்ந்து படித்தால் அதுவே ஆயுதம் என்கிற வகையில் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும்.

    இதுபோன்ற மன்னார்குடி போன்ற ஊர்களில் புத்தக கண்காட்சி நடத்துவது மிகவும் பாராட்டுக்கு ரியதாகும் என கூறினார்.

    முடிவில் எஸ்.டி.முருகேசன் நள்றி கூறினார்.

    • ஒவ்வொரு மாணவனுக்கும் ரூ.500 மதிப்புள்ள புத்தகம் மற்றும் எழுதுபொருட்கள் அடங்கிய ஸ்கூல்பேக் வழங்கினார்.
    • தனியார் பள்ளியில் படித்தாலும் அரசு பள்ளியில் படித்தாலும் முயற்சி செய்து படித்தால் தான் முதலிடத்தில் வரலாம்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே, கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள திட்டுகிராமம் ஆகும். இந்த கிராமத்தை வெள்ளம் சூழ்ந்து தற்போது வடிந்த நிலையில் இருந்து வருகிறது. இதனால் இங்கு இயங்கி வந்த அரசு உயர்நிலை பள்ளிக்கு கடந்த 10 நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.

    இன்று முதல் பள்ளி திறக்க உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை மயிலாடுதுறை எஸ்பி நிஷா முதலைமேடுதிட்டு அரசு உயர்நிலை பள்ளிக்கு வந்து பள்ளி மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் ஒவ்வொரு மாணவனுக்கும் ரூ.500 மதிப்புள்ள புத்தகம் மற்றும் எழுதுபொருட்கள் அடங்கிய ஸ்கூல்பேக் வழங்கினார்.

    தொடர்ந்து மாணவருக்கு எஸ் பி நிஷா வினாடி, வினா நடத்தி அதில் முதல் 2 இடத்தில் வெற்றி பெற்ற மாணவருக்கு செஸ்போர்டு பரிசாக வழங்கினார். அவர் மாணவர்களிடம் பேசுகையில் 50 வருடங்களுக்கு முன்பு பெண் அதிகாரிகள் கலெக்டராக எஸ் பி யாக இருக்க முடியுமா என்று நம்மால் யோசித்துக் கூட பார்த்திருக்க முடியாது. இன்று எல்லா இடங்களிலும் பெண் அதிகாரிகள் வந்துள்ளார்கள். நம் மாவட்டத்தில் பெண் கலெக்டர், பெண்எஸ்பி, ஆர்.டி.ஓ.வும் பெண் பெண்ணாக இருக்கிறார்.

    மாணவர்கள் எல்லோரும் சொந்தமாக முயற்சி செய்ய வேண்டும். யாரையும் சார்ந்து இருக்க கூடாது நான் வெற்றி பெறுவேன் என்ற முடிவெடுக்க வேண்டும். தனியார் பள்ளியில் படித்தாலும் அரசு பள்ளியில் படித்தாலும் முயற்சி செய்து படித்தால் முதல் இடத்தில் வரலாம்.

    அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள திறமையை வளர்த்துக் கொள்ள மாணவர்கள் அனைவரும் தினந்தோறும் செய்தித்தாள் படிக்க வேண்டும் என்றார். சீர்காழி டி.எஸ்.பி பழனிச்சாமி, பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பூவராகவன், விவசாய சங்கத் தலைவர் சத்தியமூர்த்தி, இன்ஸ்பெக்டர் மணிமாறன் கொள்ளிடம் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்ட கணேஷ் லோகநாதன் மற்றும் போலீசார் பெற்றோர் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புருஷோத்தமன், சேகர் ஆகியோர் மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்களை வழங்குகின்றனர்.
    • மேலும் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் வரவேற்புரையும், மூத்த சமூக ஆர்வலர் கண்ணன் என். ராமகிருஷ்ணன் நன்றியுரையும் ஆற்ற உள்ளனர்.

    திருச்சி

    75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, திருச்சி தூய்மை இந்தியா வண்ண மலர் பூங்கா மக்கள் பணிக்குழு சார்பில் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நாளை காலை 8.30 மணியளவில் நடைபெற உள்ளது.

    மக்கள் பணிக்குழு துணைத் தலைவர் திருப்பதி தேசியக்கொடி ஏற்றி வைத்து கொடி வணக்கம் செலுத்துகிறார். மூத்த சமூக சிந்தனையாளர் புலவர் காசி. விஸ்வநாதன், தேச நலம் மக்கள் சேவை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். புருஷோத்தமன், சேகர் ஆகியோர் மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்களை வழங்குகின்றனர்.

    நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக ரொட்டேரியன் மேஜர் டோனர் டாக்டர் கே.சீனிவாசன் கலந்து கொள்ள உள்ளார். மேலும் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் வரவேற்புரையும், மூத்த சமூக ஆர்வலர் கண்ணன் என். ராமகிருஷ்ணன் நன்றியுரையும் ஆற்ற உள்ளனர்.

    நிகழ்ச்சியில் ராஜரத்தினம், ராமலெஷ்மி, ராஜா, செபி முஹமது, வெங்கடேசன், அமீன், வாசுதேவன், புவனேஷன், பூஞ்சோலை, நடிகர் பாலகிருஷ்ணன், ஸ்ரீதர், குணசீலன், முஹமது இப்ராஹிம், தியாகராஜன், பிரதிவி, இளங்கோவன், சந்திரசேகர், மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க உள்ளனர்.

    • மாபெரும் புத்தக திருவிழா வருகிற 18-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது.
    • மாணவ-மாணவிகளின் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும் அறிவாற்றலை மேம்படுத்தவும் புத்தகங்கள் படிக்க வேண்டும்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் 2-வது மாபெரும் புத்தக திருவிழா வருகிற 18-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக திருவிழா நடைபெறும். இது தொடர்பாக மன்னார்குடியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் டி.ரெங்கையன் தலைமை தாங்கினார். மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் புத்தக திருவிழா தொடர்பாக பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- 2-வது முறையாக புத்தக திருவிழா நடைபெற உள்ளது. மாணவ-மாணவிகளின் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும் அறிவு ஆற்றலை மேம்படுத்தவும் புத்தகங்கள் படிக்க வேண்டும். அதற்காக தான் புத்தக திருவிழா நடத்துகிறோம். மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் வாங்கும் புத்தகங்களுக்கு 15 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும். பொதுமக்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு புத்தகங்கள் வாங்கி பயன் பெற வேண்டும்.

    மேலும் மாணவர்கள் தங்கள் வீட்டில் உள்ள புத்தகங்களை தானமாக அளிக்கலாம். இதற்காக புத்தக தானம் அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது.

    ெமாத்தம் 40 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த முறை ரூ.40 லட்சம் அளவுக்கு புத்தகங்கள் விற்பனையாகியது. இம்முறை ரூ.1 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. புத்தக திருவிழா நடைபெறும் 11 நாட்களுக்கு பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அனைவரும் கலந்து கொண்டு புத்தக திருவிழாவை வெற்றியடைய செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் மிட்டவுன் ரோட்டரி சங்க செயலாளர் வி.கோபாலகிருஷ்ணன், முன்னாள் தலைவர் சி.குருசாமி, யேசுதாஸ், அன்பரசு, சேதுராமன், பி.ரமேஷ், கோபால், கல்லூரி பேராசிரியர் இளங்கோவன் மற்றும் பொதுநல அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ‘தனித்தமிழ் இயக்க வேரும் விழுதுகளும்’ நூல் வெளியீட்டு விழா, தமிழியக்கம் நிறுவனர் வி.ஐ.டி வேந்தர் விசுவநாதன் தலைமையில், சென்னை வடபழனியில் நடைபெற்றது.
    • நாகையில் அவரது நினைவாக நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டுமென சட்டமன்றத்தில் குரல் எழுப்பி உள்ளேன்.

    நாகப்பட்டினம்:

    தனித்தமிழ் இயக்கத் தந்தை பன்மொழி அறிஞர் மறைமலை அடிகளார் பிறந்தநாள் விழா, மறை.தாயுமானவன் எழுதிய 'தனித்தமிழ் இயக்க வேரும் விழுதுகளும்' நூல் வெளியீட்டு விழா, தமிழியக்கம் நிறுவனர் வி.ஐ.டி வேந்தர் விசுவநாதன் தலைமையில், சென்னை வடபழனியில் நடைபெற்றது.

    அதில் பங்கேற்று ஷாநவாஸ் எம்.எல்.ஏ பேசும்போது, மறைமலை அடிகள் பிறந்த நாகையில் அவரது நினைவாக நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டுமென சட்டமன்றத்தில் குரல் எழுப்பி உள்ளேன். அந்தக் கோரிக்கை நிறைவேறுவதற்கு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன் என்றார். விழாவில், பெரும்புலவர் பதுமனார், முனைவர் மறைமலை இலக்குவனார், மறைமலை அடிகளார் பேரன் தாயுமானவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • புத்தக திருவிழாவின் பயனாக மாணவர்களுக்கு கதை புத்தகங்கள் வழங்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.
    • மாணவர்களுக்கு பத்தாயிரம் குடைகள், பாட புத்தகங்கள், உணவு, உடைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை தனது சொந்த செலவில் செய்து வருகிறார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் வசந்தாஇல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றும்த ன்னார்வலர்கள் மைய ங்களுக்கு, வரும் மாணவர்களுக்கு கதை சொல்லிக் கொடுப்பதற்கான கதைப் புத்தகங்களை தனது சொந்த செலவில் வாங்கி பரிசளித்திருக்கிறார் .

    நாகப்பட்டினத்தில் ஜூன் 24-ம்தேதி முதலாவது புத்தக கண்காட்சி தொடங்கியது. அதில் ஒவ்வொரு நாளும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு புத்தக கண்காட்சியைச் சிறப்பித்தனர். முதல் முதலாக நடத்தப்பட்ட இந்த புத்தகத் திருவிழாவை இந்த பகுதி மக்கள் வெகுவாக ரசித்து பெருமளவில் புத்தகங்களை வாங்கி சென்றனர். அந்த புத்தகத் திருவிழாவின் நிறைவு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிலையில் புத்தகக் கண்காட்சியில் புத்தகமும் வாங்க வேண்டும், அது மாணவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்று சிந்தித்த அண்டர்காடு பள்ளி ஆசிரியை வசந்தா, தன்னுடைய சொந்த செலவில் ரூ 30,000த்துக்கு 2500 கதை புத்தகங்கள் வாங்கினார். ஆசிரியை வசந்தா மாணவர்களுக்கு பத்தாயிரம் குடைகள், பாட புத்தகங்கள், உணவு, உடைகள் கொரோனா பரவலை கட்டுபடுத்த சுமார் 5 லட்சம்மாஸ்க்உள்ளிட்ட பல்வேறு தேவைகளைத் தொடர்ந்து தனது சொந்த செலவில் செய்து வருகிறார். இந்த புத்தகத் திருவிழாவின் பயனாக மாணவர்களுக்கு கதைப் புத்தகங்கள் வழங்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

    நேற்று முன்தினம்இரவு நடைபெற்ற நிறைவு விழாவில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம், தலைஞாயிறு, கீழையூர், கீழ்வேளூர், திருமருகல் மற்றும் நாகப்பட்டினம் வட்டாரங்களில் செயல்பட்டு வரும் 2365 இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கும் தலா ஒரு கதை புத்தகம் வீதம் வழங்கிடுமாறு நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்விடம் வழங்கினர்

    அவற்றை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளர்களிடம் அந்த புத்தகங்களை வழங்கினார்.

    இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்க நாகை மாவட்ட தலைவர் ஆரிப், செயலாளர் பால இரணியன், வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கதைப் புத்தகங்களை வழங்கிய ஆசிரியர் வசந்தாவுக்கு அனைவரும் பாராட்டுத் தெரிவித்தனர்.

    • முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
    • முககவசம் அணிந்து வந்தவர்களுக்கு காவல்துறையினர் இனிப்புகளையும் திருக்குறள் புத்தகத்தையும் வழங்கியதை பொதுமக்கள் பாராட்டினர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரண்டாயி ரத்தை தாண்டி விட்ட தால் அனைத்து மாவட்ட ங்களிலும் தகுந்த முன்னெ ச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக சுகாதாரதுறை அனைவரும் கட்டாய முககவசம் அணிய உத்தர விட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்திலும் சில தினங்களாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று தஞ்சை மாநகரில் மட்டும் 16 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் முககவசம் அணிவதன் அவசியத்தை பொதுமக்களுக்கு ஏற்படுத்த தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா , தஞ்சை நகர துணை காவல் கண்காணிப்பாளர் கபிலன் ஆகியோரது அறிவுரையின் பேரில் தஞ்சை மாவட்ட காவல்துறை மற்றும் தஞ்சை ஜோதி அறக்க ட்டளை சார்பில் அரசு உத்தரவை பின்பற்றி முககவசம் அணிந்து வந்த பொதுமக்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு இனிப்பு மற்றும் திருக்குறள் புத்தகத்தை வழங்கி நூதனமுறையில் விழிப்புணர்வை ஏற்படு த்தும் நிகழ்ச்சி தஞ்சை பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே நடைபெற்றது.

    இதில் தஞ்சை போக்கு வரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் , தஞ்சை மேற்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா , தஞ்சை கிழக்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கருணாகரன் , ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அரசு உத்தரவை பின்பற்றி முககவசம் அணிந்து வந்த பொதுமக்கள் , வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளையும் திருக்குறள் புத்தகத்தையும் வழங்கி முககவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு நோய் பெருந்தொற்று பற்றியும் நோய் பரவலை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க அறிவுரை கூறியும் இலவசமாய் முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    முககவசம் அணியாமல் அல்லது தனிநபர் இடைவெளியை கடைபிடி க்காமல் வருபவர்களுக்கு தற்போது எச்சரிக்கை விடுத்து முககவசம் வழங்கி வருவதாகவும் அடுத்த கட்டமாக கடும் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

    முககவசம் அணிந்து வந்தவர்களுக்கு காவல்து றையினர் இனிப்புகளையும் திருக்குறள் புத்தகத்தையும் வழங்கியதை பார்த்த பொதுமக்கள் இந்த நூதன முயற்சியை பாராட்டினர்.

    ஏற்பாடுகளைஜோதி அறக்கட்டளை மேலா ளர் ஞானசுந்தரி மேற்பா ர்வையில் அறக்கட்டளை களப்பணி யாளர்கள் சிவரஞ்சனி, அபர்ணா மற்றும் தன்னா ர்வலரான தஞ்சை புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவி ஆர்த்தி உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர் . 

    ×