என் மலர்
நீங்கள் தேடியது "camera"
- ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் எளிய, குறைந்த விலை கிளிப்பை அமெரிக்காவின் கலிபோர்னியா சான்டியாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
- கிளிப் 3டி அச்சிடப்பட்ட பிளாஸ்டிக் இணைப்பு ஆகும். இது ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷ் மீது பொருத்தலாம்.
ரத்த அழுத்தத்தை கண்காணிக்க குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட் போன்களை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷை பயன்படுத்தி பயனரின் விரல் நுனியில் ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் எளிய, குறைந்த விலை கிளிப்பை அமெரிக்காவின் கலிபோர்னியா சான்டியாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கிளிப் 3டி அச்சிடப்பட்ட பிளாஸ்டிக் இணைப்பு ஆகும். இது ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷ் மீது பொருத்தலாம். ரத்த அழுத்தத்தை அளவிட பயனர், கிளிப்பை அழுத்தும்போது ஸ்மார்ட் போனின் பிளாஷ் விரல் நுனியில் ஒளிரும். பின்னர் ரத்த அழுத்த அளவீட்டை காட்டும்.
இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, இந்த தொழில்நுட்பம் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மிகவும் பயனளிக்கும். ரத்த அழுத்த கண்காணிப்புக்கான தடையை குறைக்க மலிவான தீர்வை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இந்த சாதனம் மற்ற ரத்த அழுத்த கண்காணிப்பில் இருந்து வேறுபடுகிறது. ரத்த அழுத்தத்தை அளவிட பயனர் விரல் நுனியில் கிளிப்பை அழுத்தினால் போதும் என்றனர்.
- கேமரா பொருத்தப்பட்டு இருந்தது.
- விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ரங்கப்பனூர் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும் மற்றும் கண்காணிக்கவும் ஊராட்சி நிர்வாகம் மற்றும் வடபொன்பரப்பி போலீஸ் நிலையம் சார்பில் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது.
இந்த கண்காணிப்பு கேமராவை யாரோ மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவை உடைத்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கேமராவை சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் யாரோ உடைத்து சேதப்படுத்திச் சென்றனர்.
- வட பொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த ரங்கப்பனூர் பஸ் நிறுத்தத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் யாரோ உடைத்து சேதப்படுத்திச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் வட பொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசார ணையில், ரங்கப்பனூர் வடக்கு தெருவை சேர்ந்த கணபதி (வயது 25) என்பவர் கண்கா ணிப்பு கேமராவை உடைத்து சேதப்ப டுத்தியது தெ ரிய வந்தது. இதனை யடுத்து கணபதியை போலீசார் கைது செய்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டலில் ஒவ்வொரு அறையாக சோதித்தனர்.
- இருவரும் வீடியோ பதிவான ஹார்டிஸ்க்கை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது
அழகான கடற்கரையை கொண்ட புதுச்சேரி சுற்றுலாவுக்கு பெயர் போனது. வார இறுதி நாட்களில் சென்னை, பெங்களூர் உள்பட தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் சுற்றுலாவுக்கு வருவது வழக்கம்.
அவர்கள் ஓட்டலில் அறை எடுத்து தங்கி பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று வருவார்கள்.
புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள தங்கும் விடுதிக்கு அதே ஊரை சேர்ந்த இளம் ஜோடி ஒன்று சென்றுள்ளது. கடந்த வாரம் காலை 11 மணிக்கு அறை எடுத்து தங்கி உள்ளனர்.
அப்போது ஓட்டல் அறையில் சிவப்பு நிற விளக்கு ஒன்று மின்னி மறைவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
படுக்கைக்கு எதிரில் இருந்த டி.வி.க்கு அருகில் கேபிள் இணைப்புக்கான பிளக் பாயிண்டில் இருந்து இந்த சிவப்பு லைட் எரிவதை கண்டு பிடித்தனர்.
இதையடுத்து வெளியில் சென்று ஸ்குரூடிரைவர் வாங்கி வந்து அந்த பிளக் போர்டை கழட்டி பார்த்தனர். அப்போது அதன் உள்ளே சிறிய அளவிலான ரகசிய கேமிரா மறைத்து வைக்கப்பட்டிருந்த தெரியவந்தது.
அது இயங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜோடி இதனை வீடியோவாக பதிவு செய்து ஓட்டல் நிர்வாகத்திடம் கூறினர்.
ஆனால் அவர்கள் இதனை கண்டு கொள்ளாததால் தங்கள் வீடுகளுக்கு சென்று நடந்ததை உறவினர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் உருளையன் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டலில் ஒவ்வொரு அறையாக சோதித்தனர். அப்போது மேலும் 3 அறைகளில் இது போன்று கேமிரா வைக்கப்பட்டி ருந்தது தெரியவந்தது.
தேங்காய்த்திட்டு மற்றும் அரியாங்குப்பத்தை சேர்ந்த 2 பேர் அங்கு வேலை பார்த்து வந்துள்ளனர். அவர்கள் 2 பேர்தான் இந்த விபரீத செயலில் ஈடுபட்ட தாக போலீசார் தெரிவித்தனர்.
அவர்கள் இருவரும் வீடியோ பதிவான ஹார்டிஸ்க்கை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது
இதையடுத்து விடுதியின் உரிமையாளர் இளைய ஆழ்வார், ஓட்டல் பொறுப்பாளர் இருதயராஜ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் புதுச்சேரி ஓட்டல்களில் தங்குகின்ற சுற்றுலா பயணிகளிடம் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நால்ரோட்டில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டன.
- கேமராக்களை பொதுமக்களே ரூ.40 ஆயிரம் நிதி திரட்டி பொருத்தினர்.
தஞ்சாவூர்:
தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் ராஜாகோரி சுடுகாடு உள்ளது.
இந்த மாநகரில் இறப்பவர்களின் பெரும்பாலான உடல்கள் இங்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் மற்றும் தகனம் செய்யப்படுகிறது.
மேலும் இந்த பகுதியில் கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள் உள்ளன.
இந்த பகுதியில் குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையிலும், யாராவது குற்றம் செய்தால் அவர்களை அடையாளம் காணும் வகையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நால்ரோட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இந்த கேமராக்கள் அந்த பகுதி பொதுமக்கள் ஏற்பாட்டில், மாநகாராட்சி மற்றும் போலீசார் ஒத்துழைப்புடன் பொருத்தப்பட்டது.
நான்கு முனைகளில் இருந்து வருபவர்களை அடையாளம் காணும் வகையில் நான்கு திசைகளை நோக்கி இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.
மேலும் இந்த கேமராக்களில் பதிவு செய்யப்படும் காட்சிகளை அருகில் உள்ள ஒரு அறையில் இருந்து பார்க்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த கேமராக்களை பொதுமக்களே ரூ.40 ஆயிரம் நிதி திரட்டி பொருத்தினர்.
சில மாதங்கள் மட்டும் பயன்பாட்டில் இருந்து வந்த இந்த கண்காணிப்பு கேமராக்கள் தற்போது பயன்பாட்டில் இல்லை. காரணம் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்த கம்பத்தில் தற்போது 4 கேமராக்கள் அந்தரத்தில் தொங்கியபடி காட்சி அளி்க்கிறது.
இதனை யாரும் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கேமராக்கள் பொருத்த ப்பட்டதன் நோக்கமே நிறைவேறாமல் உள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், தஞ்சை வடக்குவாசல் பகுதியில் 4 சாலைகள் சந்திக்கும் இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாடு இல்லாமல் அந்தரத்தில் தொங்கியபடி உள்ளது.
இந்த கேமராக்களை சரி செய்து பொருத்தி, மாநகராட்சி பொருத்தும் கேமராக்கள் இணைப்புடன் இணைக்கலாம்.
எனவே பயன்பாடு இல்லாமல் இருக்கும் இந்த கண்காணிப்பு கேமராக்களை சரி செய்து பொருத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்
- 20 இடங்களிலில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
- சி.சி.டி.வி. கேமராக்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் இயக்கி வைத்தார்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த ஆவூரில், பொதுமக்கள் நலன் கருதி காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, ஜமாத்தார்கள் மற்றும் இளைஞர்களின் உதவியால் 20 இடங்களிலில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
புதிதாக பொருத்தப்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் இயக்கி வைத்தார்.
தொடர்ந்து, கோவிந்தகுடி ஊராட்சியில் புறக்காவல் நிலையத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் திறந்து வைத்தார்.
விழாவில் நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தமிழ்மாறன், வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ராஜா, தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்பரசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், கணேசன் மற்றும் சிறப்பு காவலர் அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ஆசனூர் மலைப்பகுதியில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது
- இந்த கேமராக்கள் இணையதள இணைப்புகள் மூலம் ஆசனூர் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறை யுடன் இணைக்கப்பட்டு ள்ளன
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க மா வட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சத்தியமங்கலம் சப் டிவிஷனில் உள்ள ஆசனூர் காவல் நிலைய த்திற்கு உட்பட்ட பகுதிகளில் குற்றங்களை தடுப்பதற்காக முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொரு த்தப்பட்டு அதற்கான கட்டு ப்பாட்டு அறை ஆசனூர் காவல் நிலை யத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆசனூர் காபி டே பேக்கரி முன்பு 4 கேமரா க்களும், காவல் நிலையம் முன்பு 2 கேம ராக்களும், அரேப்பாளையம் மைராடா வேளாண் அறிவியல் நிலை யம் முன்பு 2 கேமராக்களும், திம்பம் பஸ் நிலையம் பகுதி யில் 4 கேமராக்கள் என மொத்தம் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டு ள்ளது.
இந்த கேமராக்கள் இணையதள இணைப்புகள் மூலம் ஆசனூர் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறை யுடன் இணைக்கப்பட்டு ள்ளன. இதையடுத்து ஆச னூர் காவல் நிலை யத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் சத்தியமங்கலம் ஏ.எஸ்.பி. அய்மன் ஜமால் சி.சி.டி.வி. கேமரா இயக்கத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 24 மணி நேரமும் சி.சி.டி.வி. கேமரா க்கள் மூலம் கண்காணி க்கப்பட்டு குற்றங்கள் உட னடியாக தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவி த்தார். அப்போது தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வம் சிறப்பு இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- ரூ.36 லட்சம் செலவில் நகராட்சி பகுதிகளில் 120 கண்காணிப்பு கேமிரா
- கேமிரா அமைக்கும் பணிக்கான பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தனர்.
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி பகுதிகளில் குற்ற நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் 40 இடங்களில் 120 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இதற்கான பணி தொடக்க விழாவிற்கு புகழூர் நகராட்சி துணைத் தலைவர் பிரதாபன், புகழூர் நகராட்சி ஆணையாளர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி பொறியாளர் மலர்கொடி வரவேற்றார். புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமையில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, புகழூர் ஈஜடி பாரி சர்க்கரை ஆலையின் துணைப் பொது மேலாளர்(இயக்கம்) தர்மலிங்கம், மேலாளர் (மனித வளம் )தனபால், வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டு கேமிரா அமைக்கும் பணிக்கான பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் நகராட்சி மேற்பார்வையாளர் ரவி, நகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி நிர்வாக அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
- கைதிகள் தகராறு செய்வதை தடுக்க புதிய நடவடிக்கை
- கோவை மாநகர போலீசாருக்கு முதற்கட்டமாக, 24 காமிராக்கள் வழங்கப்பட்டு உள்ளன
கோவை,
நீதிமன்றங்களுக்கு அழைத்து செல்லும் போது, கைதிகளின் நடவடிக்கை கண்காணிக்க, போலீசாருக்கு பாடி-ஓன் காமி ராக்கள் வழங்கப்பட்டன.
குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பின் சிறையில் அடைக்கப்படுவர். தொடர்ந்து, இவர்கள் விசாரணைக்காக கஸ்டடியில் எடுக்கப்படுவர். இதன் பின் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர்.
இவ்வாறு கைதிகளை நீதிமன்றங்களுக்கும், சிறைக்கும் அழைத்து செல்லும் போது அவர்கள் போலீசாருடன் தகராறில் ஈடுபடுவதாக புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. அதேபோல், கைதிகளை துன்புறுத்துவதாக போலீசார் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதை தடுக்க, கைதிகளை அழைத்து செல்லும் போலீசாருக்கு, பாடி-ஓன் காமிரா என்னும் சீருடையில் பொருத்தக்கூடிய காமிரா வழங்கப்பட்டுள்ளது. கோவை மாநகர போலீசாருக்கு முதற்கட்டமாக, 24 காமிராக்கள் வழங்கப்பட்டு ள்ளன. இதுதவிர, கைதிகளை அழைத்து செல்லும் வாகனங்களிலும் இரு காமிரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், கைதிகளை அழைத்து செல்லும் ேபாது ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது. காமிராவில் பதிவாகும் காட்சிகளை சேமிக்கவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்ற சம்பவங்களை தடுக்க நகர் முழுவதும் 186 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன
- போலீஸ் கமிசனர் காமினி தகவல்
திருச்சி,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி தெப்பக்குளம் பகுதியில் மாநகர காவல் துறை சார்பில் காவல் உதவி மையத்தினை, மாநகர போலீஸ் கமிசனர் காமினி இன்று திறந்துவைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்சி மாநகர பகுதிகளில் இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் பகல் நேரங்களில் சரக்குகள் ஏற்றுவது மற்றும் இறக்குவதை தவிர்த்து, இரவு 11 மணிக்கு மேல் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படு உள்ளது. தற்காலிக சாலையோர கடைகளை மாநகராட்சி அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்து முறைப்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்களின் பாதுகாப்பை கருதி அவர்கள் தங்களது உடைமைகளையும், குழந்தைகளையும் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். சந்தேகப்படும் படியான நபர்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்கவும், அது சம்மந்தமாக புகார் கொடுக்கவும், என்.எஸ்.பி. ரோடு தெப்பக்குளம் அருகில் தற்காலிக காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையங்களில் பொது அறிவிப்பு மையம் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு காவல் ஆளினர்கள் மூலம் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தொடர்ந்து கண்காணித்து எவ்வித குற்றச் சம்பவம் நிகழாவண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
என்.எஸ்.பி.ரோடு பெரியகடைவீதி சந்திப்பு, மலைகோட்டை வாசல், மெயின்கார்டு கேட் நந்திகோவில் தெரு சந்திப்பு, சிங்காரதோப்பு பூம்புகார் ஜங்சன் அருகில், பெரியகடைவீதி கரீம்
ஸ்டோர் அருகில், பெரியகடை வீதி ஆகிய 7 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவப்பட்டு பைனாகுலர் மூலம் கண்காணிக்க காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தெப்பக்குளம் என்.எஸ்.பி. ரோடு புறக்ககாவல் நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்தில் அதிநவீன சுழலும் டோன் கேமராக்கள் இரண்டும், காந்திமார்க்கெட் ஆர்ச், பெரியகடை வீதி, சூப்பர் பஜார், ஜாபர்ஷா தெரு, மதுரை ரோடு, நந்திகோயில் தெரு, மேலப்புலி வார்டுரோடு, என்.எஸ்.பி. ரோடு, சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் என மொத்தம் 186 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுஉள்ளது .
இவற்றை என்.எஸ்.பி. ரோடு ரகுநாத் சந்திப்பில் மானிட்டர்கள் அமைக்கப்பட்டு அதை இயக்குவதற்கு தனித்தனியே காவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். மேலும் தீபாவளி பண்டிகையின்போது அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாவண்ணம் திருச்சி மாநகரில் உள்ள நவீன காவல் கட்டுப்பாட்டு அறை மூலமாக நாள் முழுவதும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கொட்டகையில் கட்டி இருந்த 4 செம்மறி ஆடுகள் மர்ம விலங்கு கடித்து இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பதிவான கால் தடத்தை வைத்து விசாரணை நடத்தியதில் அந்த கால் தடம் சிறுத்தை உடையது என்பதை உறுதி செய்தனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம் பாளையத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் தனது 3 ஏக்கர் தோட்டத்தில்
மல்லிகை சாகுபடி செய்து வருவதோடு, கால்நடைகளையும் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தோட்டத்து கொட்டகையில் 4 செம்மறி ஆடுகளை கட்டி தீவனம் போட்டு
விட்டு ஊருக்கு சென்றுவிட்டார். நேற்று காலை வந்து பார்த்தபோது கொட்டகையில் கட்டி இருந்த 4 செம்மறி ஆடுகள் மர்ம விலங்கு
கடித்து இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பதிவான கால்
தடத்தை வைத்து விசாரணை நடத்தியதில் அந்த கால் தடம் சிறுத்தை உடையது என்பதை உறுதி செய்தனர். இதனால் அப்பகுதி மக்கள்
கடும் பீதி அடைந்துள்ளனர்.
மீண்டும் ஆட்டை தேடி சிறுத்தை ஊருக்குள் எந்த நேரத்திலும் வரலாம் என்பதால் கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.
உடனடியாக கூண்டு வைத்து சிறுத்தை பிடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அந்த பகுதியில்
வனத்துறையினர் 4 கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
- அரசு அறிவித்துள்ள நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.
- பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா உத்தரவின்படி, சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக் அறிவுறுத்தலின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சீர்காழி நகரில் அனைத்து வர்த்தக, வணிக கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் அவசியம் குறித்து ஆட்டோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருட்டு, கொள்ளை சம்பவங்களை தடுத்திடவும், திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை எளிதாக அடையாளம் கண்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்திடவும் கண்காணிப்பு கேமரா பதிவுகள் இன்றியமையாததாக இருப்பதால் அனைத்து வர்த்தக வணிக கடைகளில் உள்புறம் வெளிப்புறம் சாலையை நோக்கியவாறு சிசிடிவி அமைத்திடவும் வீடுகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்திடவும் பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதேபோல் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பான முறையில் கொண்டாடிடவும் அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடித்து பின்பற்றவும் வலியுறுத்தப்பட்டது.