என் மலர்
நீங்கள் தேடியது "car fire"
- தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
- கார் தீப்பற்றி எரிந்த தகவல் அறிந்ததும் நூற்றுக்கணக்கான மக்கள் அந்த இடத்தில் திரண்டனர்.
மணப்பாறை:
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த இடையபட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 45). இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது காரை மணப்பாறை எடத்தெரு பகுதியில் நிறுத்தி வைத்திருந்தார்.
இன்று காலை வேலைக்கு செல்வதற்காக காரை ஸ்டார்ட் செய்ய முயன்ற போது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காரில் இருந் இறங்கி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மண்ணை கொட்டி தீயை அணைக்க முயன்றார்.
ஆனாலும் சிறிது நேரத்தில் தீப்பற்றி எரிந்தது. சுட்டெரிக்கும் வெயிலில் நெருக்கு கொழுந்து விட்டு எரியவே அக்கம் பக்கத்தினர் இதுபற்றி மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் கார் முழுவதுமாக எரிந்து நாசமானது. பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கார் தீப்பற்றி எரிந்த தகவல் அறிந்ததும் நூற்றுக்கணக்கான மக்கள் அந்த இடத்தில் திரண்டனர். சுட்டெரிக்கும் வெயில் காரணமாக கார் தீப்பற்றி எரிந்ததாக தெரிகிறது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.
- முன்னெச்சரிக்கையாக அனைவரும் காரில் இருந்து கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
- தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து கீழ் திருப்பதிக்கு கார் ஒன்று வந்தது. அப்போது காரில் திடீரென புகை வரவே, டிரைவர் காரை ஓரங்கட்டியதால் அனைவரும் கீழே இறங்கினர். கண்ணிமைக்கும் நேரத்தில் கார் முழுவதும் தீ பிடித்து எரிந்தது. முன்னெச்சரிக்கையாக அனைவரும் காரில் இருந்து கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- கார் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று காரில் இருந்து புகை வந்தது.
- காசிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராயபுரம்:
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தாண்டவராயன் தெருவை சேர்ந்தவர் காசி (வயது 55). லாரி டிரைவர். இவர் குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வதற்காக திருவொற்றியூர் டோல்கேட்டில் உள்ள பார்க்கிங்கில் காரை நிறுத்தி இருந்தார். அந்த காரை அவரது மகன் யோகராஜ் (22) அங்கிருந்து ஓட்டி வந்தார்.
தண்டையார்பேட்டை கும்பாளம்மன் கோவில் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று காரில் இருந்து புகை வந்தது. இதைப்பார்த்த யோகராஜ் காரை நிறுத்திவிட்டு உடனே வெளியே ஓடி வந்தார். சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கி மளமளவென்று தீ பரவியது. அப்போது அதே பகுதியில் உள்ள விநாயகபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த ஜெயராஜ் (41) என்பவர் ஏற்கனவே அங்கு சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த காரும் தீ பிடித்து எரிய தொடங்கியது.
இதையடுத்து தண்டையார்பேட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி முத்து வீரப்பன் தலைமையில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். ஆனால் தீயில் 2 கார்களும் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக யோகராஜ் புகை வந்தவுடன் காரை நிறுத்திவிட்டு வெளியே ஓடி வந்ததால் தப்பினார். இதுகுறித்து காசிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று கார்களில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
- கார்களில் தீப்பற்றியது எப்படி என்பது தெரியவில்லை.
திருப்பூர்:
திருப்பூர் கோல்டன் நகர் தொட்டி மண்ணரை பகுதியை சேர்ந்தவர் கோகுல கண்ணன் (வயது 28). இவர் அப்பகுதியில் கார் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இதற்காக கார்களை அவரது வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் நிறுத்தி வைத்தி ருந்தார். நேற்றிரவு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் தீப்பிடித்து எரிந்தன.
உடனே இதுகுறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று கார்களில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் 3 கார்கள் முற்றிலும் தீப்பிடித்து எரிந்து சேதமாகின. அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும்.
கார்களில் தீப்பற்றியது எப்படி என்பது தெரியவில்லை. தொழில் போட்டி காரணமாக யாராவது கார்களை தீ வைத்து எரித்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் பீர்முகமது(வயது 34). வாடகை கார் டிரைவர். இவர் நேற்று வாடகை காரில் பாலக்காடு சென்றுவிட்டு பயணியை இறக்கிவிட்டு மீண்டும் காயல்பட்டிணம் திரும்பிக் கொண்டிருந்தார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே வந்து கொண்டிருக்கும்போது தூக்கம் வந்ததால் மதுரை-தூத்துக்குடி 4 வழிச்சாலை கஞ்சநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே காரை ஓரமாக நிறுத்திவிட்டு பீர்முகமது காரில் தூங்கியுள்ளார். அப்போது திடீரென காரில் இருந்து புகை கிளம்பி தீ பிடித்தது.
இதில் சுதாரித்துக்கொண்ட பீர்முகமது உடனடியாக காரில் இருந்து வெளியேறி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்குள் கார் முழுவதும் தீ பரவியது.
அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலைமை யிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை போராடி அணைத்தனர்.
ஆனால் கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக காட்சி அளித்தது. இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை விழா கடந்த 25-ந் தேதி தொடங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இந்த கோடை விழாவிற்காக தமிழகத்தில் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் மகுடஞ்சாவடியை சேர்ந்த சத்யராஜ் என்பவர் நண்பர் நியாசுடன் ஏற்காடு கோடை விழாவிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திருவாகவுண்டனூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட்டுவிட்டு ஏற்காடு நோக்கிச் சென்றனர்.
சேலம் மாவட்ட கலெக்டர் பங்களா அருகே மாருதி வேன் வரும்போது திடீரென கரும்புகை எழுந்தது. இதை அறிந்த டிரைவரான சத்யராஜ் மற்றும் அவரது நண்பர் மாருதி வேனை ஓரமாக நிறுத்தி விட்டு வெளியே வந்துவிட்டனர். இதனை அடுத்து மாருதி வேன் மளமளவென தீ பிடித்து தீப்பற்றி எரிந்தது.
இதனால் சாலையில் சென்றவர்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு மற்றும் அஸ்தம்பட்டி காவல் துறையினர் விரைந்து வந்து துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.
எனினும் மாருதி வேன் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக காட்சி அளித்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாருதி வேன் தீப்பிடித்து எரிந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருத்தணி:
திருத்தணி, சுப்பிரமணிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (45). இவரது மனைவி ஆஷா (40). இவர்கள் திருவள்ளூர் வந்து விட்டு மீண்டும் திருத்தணி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.
திருவள்ளூர்-திருத்தணி நெடுஞ்சாலையில் புதூர் கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது காரின் முன் பக்கத்தில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ்குமாரும், ஆஷாவும் உடனடியாக காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கினர்.
சிறிது நேரத்தில் கார் தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்ததும் கனகம்மா சத்திரம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் கார் முழுவதும் எரிந்து நாசமானது.
காரில் தீப்பற்றியதும் உடனடியாக இறங்கியதால் கணவன்-மனைவி இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்து கனகம்மா சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புதூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரில் இருந்து கரும்புகை வெளியேறியது.
- அதிர்ச்சி அடைந்த நிர்மல் குமார் உடனடியாக காரை நிறுத்தி விட்டு இறங்க முயன்றார். ஆனால் காரின் கதவுகளைத் திறக்க முடியவில்லை.
மதுரை:
மதுரை புதூரைச் சேர்ந்தவர் நிர்மல் குமார். இவர் மதுரை ஐகோர்ட்டில் அரசு சிறப்பு வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு பணி முடிந்து 11 மணி அளிவில் காரில் வீட்டுக்கு புறப்பட்டார்.
புதூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிர்மல் குமார் உடனடியாக காரை நிறுத்தி விட்டு இறங்க முயன்றார். ஆனால் காரின் கதவுகளைத் திறக்க முடியவில்லை. இதையடுத்து நிர்மல் குமார் சமயோஜிதமாக முன்பக்க கண்ணாடியை உடைத்து வெளியே குதித்து உயிர் தப்பினார்.
இதற்கிடையே சொகுசு கார் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. இது குறித்து தகவலறிந்து புதூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
ஆனாலும் கார் முற்றிலும் சேதமானது. நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பெரியார்மேல்வீதியை சேர்ந்தவர் அமிர்தராஜ் (வயது 42). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமிர்தராஜ் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு ஊருக்கு வந்திருந்தார். தனக்கு சொந்தமான காரை வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் நிறுத்தி வைத்திருந்தார்.
பொங்கல் பண்டிகை முடிந்ததும் அமிர்தராஜ் காரை ஊரில் நிறுத்தி விட்டு குடும்பத்துடன் சென்னை சென்று விட்டார். கடந்த 5 நாட்களாக அமிர்தராஜ் வீட்டின் அருகே கார் நின்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 3 மணியளவில் அந்த கார் திடீரென்று தீ பிடித்து எரிந்தது. கார் தீ பிடித்து எரிந்ததும் அக்கம் பக்கத்தினர் கூச்சல் போட்டு அலறினர்.
வீட்டில் இருந்த அமிர்தராஜின் தந்தை பாடலீஸ்வரரும் அங்கு வந்தார். பின்பு அவர்கள் அந்த கார் மீது தண்ணீர் ஊற்றினர். ஆனால் கார் கொழுந்து விட்டு எரிந்து கொண்டே இருந்தது.
இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் கொளஞ்சிநாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்து குறித்து காட்டுமன்னார்கோவில் போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சியாம்சுந்தர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று எரிந்த காரை பார்வையிட்டார்.
கார் எதனால் தீப்பிடித்தது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் கம்பெனி ஊழியரின் கார் திடீரென்று தீ பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தமபாளையம்:
தேனி அருகே போடி மேலசொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவர் தனது மனைவி ஜெயந்தி, மகன்கள் தினேஷ், ரித்திஷ் மற்றும் உறவினர் முத்துக்குமார் ஆகியோருடன் பெங்களூரில் இருந்து சொந்த ஊருக்கு காரில் வந்து கொண்டு இருந்தார்.
உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சின்னமனூர் வழியாக கம்பம் சென்றனர். அப்போது சீலையம்பட்டி அருகே திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் காரின் முன் பக்கம் நொறுங்கி சேதமடைந்தது.
அதில் இருந்து புகை வெளியானது. இதைபார்த்த அனைவரும் காரை விட்டு உடனடியாக வெளியேறினர். சிறு காயங்களுடன் அவர்கள் உயிர் தப்பினர்.
சிறிது நேரத்தில் கார் திடீரென தீ பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் உத்தமபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இருந்த போதும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. காயமடைந்த 5 பேரும் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளனர். இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாசிலாமணி புரத்தை சேர்ந்தவர் சக்தி. எலக்ட்ரீசியனாக உள்ளார். இன்று காலை பத்திரபதிவு அலுவலகத்திற்கு சென்றுவிட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். ஆர்த்திதியேட்டர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென காரின் என்ஜினில் இருந்து புகை வந்தது.
சிறிதுநேரத்தில் தீப்பற்றி மளமளவென எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே காரை நடுரோட்டில் நிறுத்தி இறங்கினார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயற்சி செய்தார். மேலும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
மேலும் எவ்வாறு தீப்பற்றியது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.