search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CCTV camera"

    • சி.சிடி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார்.
    • ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் வாலிபர் என்பது தெரியவந்தது.

    நெல்லை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சென்னையில் இருந்து தினந்தோறும் நெல்லைக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி படுக்கை வசதி கொண்ட அரசு விரைவு சொகுசு பஸ் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு நேற்று மதியம் நெல்லைக்கு வந்தது.

    நெல்லை புதிய பஸ்நிலை யத்தில் பயணிகளை இறக்கிவிட்டு வண்ணார்பேட்டையில் உள்ள பணிமனைக்கு பஸ் வந்தது. அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து வழக்கம் போல் பஸ்சை ஊழியர்கள் சுத்தம் செய்தனர். அப்போது அந்த பஸ்சில் 9-வது எண் படுக்கைக்கு கீழ் ஒரு துப்பாக்கியும், சுமார் 2½ அடி நீளம் கொண்ட ஒரு அரிவாளும் கிடந்தது.

    இதுகுறித்து பணிமனை மேலாளர் கண்ணன் பாளை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜூலியட், சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் பணிமனைக்கு விரைந்து வந்து அரிவாள் மற்றும் துப்பாக்கியை கைப்பற்றினர்.

    மேலும் அந்த பஸ்சில் வேறு ஏதும் ஆயுதங்கள் இருக்கிறதா? என்று பஸ் முழுவதையும் சோதனை செய்தனர். பின்னர் அவர்கள் அரிவாள், துப்பாக்கியை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து பணிமனை மேலாளர் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் இந்திய தண்டனை சட்டம் 102 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து பஸ்சில் வந்தவர்கள், அந்த இருக்கையில் பயணித்த நபர் யார் என்பது குறித்த விபரங்களை போலீசார் சேகரித்தனர்.

    அப்போது அந்த இருக்கையில் பயணித்தவர் கோவில்பட்டியில் இறங்கி இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த நபர் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ததால் பெயர் மட்டுமே இருந்தது. அவரது முகவரி இல்லை.

    இதையடுத்து தனிப்படை போலீசார் கோவில்பட்டிக்கு விரைந்தனர். அங்கு வழக்கமாக அரசு விரைவு பஸ்கள் நின்று செல்லும் பகுதியில் பொருத்தப் பட்டுள்ள சி.சிடி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் அந்த நபர் கோவில்பட்டியை சேர்ந்தவர் என்பதை கண்டுபிடித்தனர்.

    தொடர்ந்து அந்த நபரை பிடித்து விசாரித்தபோது, அவர் சென்னையில் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் வாலிபர் என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது, தனது பாட்டியின் இறப்பு நிகழ்விற்கு சென்னையில் இருந்து விடுப்பு எடுத்து வந்ததாகவும், படுக்கைக்கு கீழ் ஆயுதங்கள் இருந்த விஷயமே போலீசார் தன்னை விசாரிக்கும்போது தான் தெரியும் என்று கூறியுள்ளார்.

    இதையடுத்து அவரை இன்று பாளை போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க போலீசார் உத்தர விட்டுள்ளனர். அங்கு வைத்து துணை கமிஷனர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    அந்த வாலிபர் கூறுவது உண்மையெனில், இந்த ஆயுதங்களை வேறு யார் பதுக்கி வைத்திருந்தார்கள்? என்பதை அறியும் கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • 11-வது வார்டு சருகு மாரியம்மன் கோவில் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் இந்த காட்சி பதிவாகியுள்ளது.
    • சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ள சுமார் 6 அடிக்கு மேல் இருக்கும்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட தங்க சாலை வீதி மற்றும் சருகு மாரியம்மன் கோவில் வீதி, அம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

    இந்த குடியிருப்பு பகுதிகளில் சில தினங்களாக இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுற்றி திரிவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் பு.புளியம்பட்டி பகுதியில் ஒரு பெண் வந்து செல்லும் காட்சி கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. 11-வது வார்டு சருகு மாரியம்மன் கோவில் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் இந்த காட்சி பதிவாகியுள்ளது.

    இதே போல் நகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு தங்கசாலை வீதியில் உள்ள வீடுகளிலும் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் டார்ச் லைட் அடித்து பார்ப்பதாகவும் வந்து பார்த்தால் அவர்கள் ஓடி விடுவதாகவும், மர்ம நபர்கள் பகல் நேரங்களில் நோட்டம் விடுவதாகவும் மக்கள் புகார் கூறுகின்றனர்.

    இந்த பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ள சுமார் 6 அடிக்கு மேல் இருக்கும் பெண் முகத்தை முழுவதும் துணியால் மறைத்து மாஸ்க் அணிந்து புடவை கட்டி உள்ளார். இதை பார்த்தால் அவர் ஆணா, பெண்ணா என்று தெரியவில்லை. மர்ம நபர்கள் பெண்களைப் போல் வேடமிட்டு வருவதாகவும் அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    மேலும் புளியம்பட்டி நகர குடியிருப்பு பகுதிகளில் நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடமாடி வருவது அதிகரித்துள்ளதாக மக்கள் அச்சத்துடன் கூறுகின்றனர்.இதனால் மர்ம நபர்கள் நோட்டமிட்டு வீடுகளில் புகுந்து திருட்டு சம்பவங்களில் நடக்க வாய்ப்புள்ளது.

    எனவே எங்களுக்கு பாதுகாப்பு அளித்து பயமின்றி இருக்க புளியம்பட்டி நகர பகுதிகளில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். வீதிகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

    மேலும் நள்ளிரவில் மர்ம நபர்கள் நடமாடி வருவதையும் மற்றும் திருட்டுச் சம்பவங்கள் நடப்பதை சிசிடிவி கேமராவில் பார்ப்பதற்கு நகராட்சி குடியிருப்பு பகுதிகளில் வெளிச்சம் இல்லாத இடங்களில் தெரு விளக்குகளை அமைக்க வேண்டும். பல பகுதிகளில் எரியாத தெரு விளக்குகளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • நேற்று முத்துலட்சுமியின் உறவினருக்கு திருமணம் நடந்தது. ஆனால் அவர் வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டி பார்த்தனர்.
    • நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காததால் இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளம் பூந்தோட்ட காலனி பகுதியை சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி முத்துலட்சுமி (வயது65). இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குருசாமி இறந்துவிட்டதால் முத்துலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    கொலை

    இந்நிலையில் நேற்று முத்துலட்சுமியின் உறவினருக்கு திருமணம் நடந்தது. ஆனால் ஆனால் அவர் வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டி பார்த்தனர். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காததால் இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கதவை உடைத்து பார்த்தனர். அப்போது வீட்டின் பின்வாசலில் முத்துலட்சுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நகைகள் கொள்ளை

    முத்துலட்சுமி கழுத்தில் வெட்டப்பட்டும், 2 விரல்கள் வெட்டப்பட்டும் கொலை செய்யப்பட்டிருந்தார். அவரது கழுத்தில் அணிந்தி ருந்த 3 பவுன் நகை, அவர் விரலில் அணிந்திருந்த மோதிரம் திருடப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.

    எனவே நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக இந்த கொலை நடைபெற்றதா ? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பக்கத்து வீடுகளிலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கொண்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    • பெரிய ஜவுளிகடைகளில் புத்தா டைகள் வாங்குவதற்காக கார்களில் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.
    • சாலையின் இரு புறங்களிலும் அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவி வருகிறது.

    நெல்லை:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் ஜவுளிகள் வாங்குவதற்காக கடை வீதிகளில் கூட்டம் அலை மோதிய வண்ணம் உள்ளது.

    நெல்லை

    நெல்லை மாநகரை பொருத்தவரை டவுன் ரதவீதிகளில் தீபாவளி விற்பனை களைகட்டி உள்ளது. பெரிய ஜவுளிகடைகளில் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.

    மேலும் டவுன் வடக்கு ரதவீதியில் தள்ளுவண்டி கடைகளிலும் புத்தாடைகள் வாங்குவதற்கு நடுத்தர மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    மேலும் புதிதாகவும், ஏராளமான பிளாட்பாரம் ஜவுளிக்கடைகள் தோன்றி உள்ளன. அங்கு சலுகை விலைகளில் விற்கப்படும் ஆடைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    அங்குள்ள பெரிய ஜவுளிகடைகளில் புத்தா டைகள் வாங்குவதற்காக கார்களில் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து காணப்படுகிறது.

    போக்குவரத்து நெருக்கடி

    இதேபோல் வண்ணார்பேட்டையிலும் சாலையின் இரு புறங்களிலும் அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவி வருகிறது.

    இதுதவிர பலகாரங்கள் வாங்கும் கடைகள், பட்டாசு கடைகள் உள்ளிட்டவற்றி லும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    மாவட்டத்தில் வள்ளியூர், அம்பை, களக்காடு, திசையன்விளை உள்ளிட்ட பகுதிகளில் பஜார்களில் ஜவுளிகடைகள், நகை கடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    இதனால் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், திருட்டை தடுக்கவும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மாநகரில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். டவுனில் 4 ரதவீதிகளிலும் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள காமிராக்கள் தவிர கூடுதலாக நவீன காமிராக்கள் பொருத்தப் பட்டுள்ளது.

    இதுதவிர வடக்கு ரதவீதியில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து மாநகர போலீசார் கூட்ட நெரிசலை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இதற்கான பணிகளை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்வரி உத்தரவின்பேரில் துணை கமிஷனர்கள் ஆதர்ஸ் பசேரா, அனிதா, சரவண குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளத்தில் ஜவுளி கடைகளை நோக்கி பொதுமக்கள் படை யெடுத்து வருகின்றனர்.

    சங்கரன்கோவில், தென்காசி, பாவூர்சத்திரம், கடையம் உள்ளிட்ட பகுதி களிலும் தீபாவளி விற்பனை சூடுபிடித்துள்ளது. தென்காசி பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி நகர பகுதிகள் மற்றும் கோவில்பட்டி, திருச் செந்தூர், ஸ்ரீவை குண்டம், ஆத்தூர், ஏரல் உள்ளிட்ட பெரிய நகரங்களில் ஜவுளி கடைகள் முன்பு திரளான மக்கள் கூட்டத்தை காணமுடிந்தது.

    இன்று விடுமுறையை யொட்டி காலை முதலே பொதுமக்கள் குடும்பத்தி னருடன் சென்று தங்களுக்கு பிடித்த புத்தாடைகளை வாங்கி வருகின்றனர்.

    • தில்லைநாயகம் சந்திப்பு பஸ் நிலையப் பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
    • கைதான பூமிஜாவின் சொந்த ஊர் மூவிருந்தாளி கிராமம் ஆகும்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் பெருமாள் சன்னதி தெருவை சேர்ந்தவர் தில்லைநாயகம் (வயது 71). இவர் நேற்று மாலை நெல்லை சந்திப்பு பகுதிக்கு வந்திருந்தார்.

    அங்குள்ள ஒரு வங்கியில் ரூ.30 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு கையில் வைத்திருந்த கட்டைப் பையில் வைத்துவிட்டு வங்கியில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றார். பின்னர் சந்திப்பு பஸ் நிலையப் பகுதியில் ஒரு பேக்கரி கடை முன்பு பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அவர் கையில் வைத்திருந்த பையை பார்த்தபோது அதன் கீழ் பகுதி கிழிக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருட்டு போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தில்லை நாயகம் சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    உடனடியாக இன்ஸ்பெ க்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் அங்கு சென்று கடைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது தில்லை நாயகத்தை பின்தொடர்ந்து ஒரு இளம் பெண் வந்த காட்சிகள் பதிவாகி இருந்தது. மற்றும் சில காமிராக்களில் ஆய்வு செய்தபோது அந்த இளம் பெண், தில்லைநாயகம் கையில் வைத்திருந்த கைப்பையை பிளேடால் கிழித்து அதில் இருந்த ரூ.30 ஆயிரம் பணம், வங்கி புத்தகம் உள்ளிட்டவற்றை திருடிவிட்டு யாருக்கும் தெரியாமல் நைசாக நழுவி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.

    இதையடுத்து அந்த காட்சிகளை வைத்து அந்த பெண் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த இளம் பெண் தச்சநல்லூர் தேனீர் குளத்தைச் சேர்ந்த பிளம்பரான ரஞ்சித் குமார் என்பவரது மனைவி பூமிஜா (வயது 28)என்பதும், அவர் நர்சிங் முடித்திருப்பதும் தெரியவந்தது.

    மேலும் அந்த பெண் மீது டவுன் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் இருந்த விபரமும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இன்று அதிகாலை பூமிஜா வை சந்திப்பு போலீ சார் கைது செய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர் போலீஸ் நிலையத்தில் முகவரியை மாற்றி கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கைதான பூமிஜாவின் சொந்த ஊர் தேவர்குளம் அருகே உள்ள மூவிருந்தாளி கிராமம் ஆகும். இவர் கடந்த 10 நாட்களாக அங்கிருந்து பஸ்சில் நெல்லை நகர பகுதிக்குள் வந்து கூட்ட நெரிசல் உள்ள பஸ்களில் ஏறி பயணிகளிடம் பிக்பாக்கெட் அடிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 10 பர்ஸ்கள், ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • சொந்தமான வாகனத்தில் மூலம் பொருட்களை ஏற்றிச் சென்று மற்றவர்களுக்கு வழங்குவது வழக்கம்.
    • நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குட்டியானை வாகனத்தை கடத்த முயன்றதும் தெரியவந்தது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி - கோழியூர் சாலையில் தனியார் நிறுவனம் உள்ளது. இதற்கு சொந்தமான வாகனத்தில் மூலம் பொருட்களை ஏற்றிச் சென்று மற்றவர்களுக்கு வழங்குவது வழக்கம். இந்த வாகனத்தை நிறுவனத்தின் உள்ளே நிறுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில் நிறுவனத்தின் உள்ளே நிறுத்தப்பட்டிருந்த குட்டியானை வாகனம் இரும்பு வேலியின் மோதி நகர முடியாமல் நின்றி ருந்தது. இதனை பார்த்த நிறுவன உரிமையாளர் கார்த்திக் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து நிறுவனத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அதில் மர்மநபர் ஒருவர் குட்டியானை வாகனத்தில் அமர்ந்து அதனை இயக்குகிறார். இந்த வாகனம் அருகில் இருந்த இரும்பு வேலியில் மோதி நிற்கிறது. இதனை வெளியில் எடுக்க முயற்சிக்கும் மர்ம நபர், குட்டியானை வாகனத்தை இயக்க முடியாததால், அங்கேயே விட்டு செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதனைக் கண்ட உரிமையாளர் கார்த்திக், இது தொடர்பாக திட்டக்குடி போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை அழைத்து விசாரித்தனர். இதில் கருவேப்பிலங்குறிச்சியை அடுத்துள்ள கிளிமங்கலம் கிராமத்தை சேர்ந்த தங்கமுத்து மகன் விக்னேஷ் (வயது 24) என்பதும், இவர் தனியார் நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குட்டியானை வாகனத்தை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து திட்டக்குடி போலீசார் விக்னேஷை கைது செய்தனர். திட்டக்குடி பகுதியில் சைக்கிள், மோட்டார் சைக்கிள் போன்றவைகள் அடிக்கடி திருடி போயின. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பஸ், குட்டியானை போன்ற வாகனங்களும் திருடப்படுகின்றன. இந்த சம்பவம் திட்டக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மேலும் குற்றவாளிகள் எளிதில் போலீசாரிடம் சிக்குவதற்கு, இவைகள் உதவிகரமாக இருக்கின்றன.
    • கண்காணிப்புக் கேமராக்கள் முறையாக இயங்குகிறதா என்பதை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும்.

    பல்லடம்:

    பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா கூறியதாவது:- பல்லடம் உட்கோட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் வீடுகளில்,கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துவதன் மூலம்,குற்றங்களை தடுக்க முடியும். முக்கிய சாலைகள், பொது இடங்கள், வணிக நிறுவனங்களில், கண்காணிப்புக் கேமராக்கள், பொருத்தப்படுகின்றன.

    இதன் மூலம், குற்றச்செயல்கள் தடுக்கப்படுகின்றன. மேலும் குற்றவாளிகள் எளிதில் போலீசாரிடம் சிக்குவதற்கு, இவைகள் உதவிகரமாக இருக்கின்றன.வீடுகளில், ஆட்கள் இல்லாத சமயத்தைப் பயன்படுத்தி, குற்றவாளிகள் கைவரிசை காட்டுகின்றனர். காவல் நிலையங்களுக்கு தகவல் கொடுத்து, வெளியூர் செல்லுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டாலும், இதை, பொதுமக்கள் பெரும்பாலான நேரங்களில், அலட்சியப்படுத்திவிடுகின்றனர்.

    வீடுகளின் வெளிப்புறம் மற்றும் உட்புறங்களில், கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவதன் மூலம், வீடுகளில், திருட்டு, உள்ளிட்ட குற்றச்செயல்களை எளிதாகத் தடுக்க முடியும்.

    சமீபத்தில் நடந்த சில, கொலை மற்றும் கொள்ளை வழக்குகளை,வீடுகளின் வெளிப்புறங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் பதிவைக் கொண்டு, குற்றவாளிகளைக் கண்டறிவதற்கு மிகவும் உதவியாக இருந்தது.எனவே வீடுகளில் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்துவதோடு நில்லாமல், அவை முறையாக இயங்குகிறதா என்பதையும் அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கோவில் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ காணாமல் போனது.
    • கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை சேர்ந்தங்குடி ஆனதாண்டவபுரம் சாலை திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் சரவணன் (வயது 39).

    ஆட்டோ டிரைவரான இவர் அந்த பகுதியில் உள்ள வள்ளலார் கோவிலில் இரவு காவலராகவும் இருந்து வருகிறார்.

    சம்பவத்தன்று ஆட்டோ சவாரிகளை முடித்துவிட்டு இரவு 10 மணிக்கு வள்ளலார் கோவில் வாசலில் ஆட்டோவை நிறுத்திவிட்டு கோவிலுக்குள் சென்றுள்ளார்.

    அதிகாலை 5 மணிக்கு வெளியே வந்து பார்த்தபோது ஆட்டோ காணாமல் போயிருந்தது. இது குறித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் சரவணன் புகார் அளித்திருந்தார்.

    புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் ஆட்டோவை திருடி சென்றவர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகா பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்த பாலாஜி மகன் கட்டக்கால் கலியமூர்த்தி என்கிற கலியமூர்த்தி (36) என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து கலியமூர்த்தியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த திருடி சென்ற ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் கைது செய்யப்பட்ட கலியமூர்த்தி மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்த கலியமூர்த்தி மீது தாம்பரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் ஏற்கனவே மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோக்கள் திருடியதாக வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடையின் எதிரே மற்றொரு கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவையும் உடைத்து சென்றுள்ளனர்.
    • அம்மா பேட்டையில் உள்ள ஒரு பத்திர எழுத்தர் கடையிலும் திருட்டு போனது குறிப்பிடத்தக்கது.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே அந்தியூர் ரோட்டில் உள்ள குறிச்சி பிரிவில் தனியார் பேக்கரி கடை உள்ளது. நள்ளிரவில் இந்தக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கல்லாவில் இருந்த ரூ.12 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் பேக்கரி திண்பொருள்களை மர்ம நபர்கள் அள்ளி சென்றுள்ளனர்.

    கடையின் எதிரே மற்றொரு கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவையும் உடைத்து சென்றுள்ளனர்.

    தொடர்ந்து அந்தியூர் ரோட்டில் மறவன் குட்டை மேட்டில் உள்ள ஒரு எலக்ட்ரிக் கடையில் பூட்டை உடைத்து அங்கிருந்து ரூ.3ஆயிரம் பணத்தையும் திருடி சென்றுள்ளனர்.

    இது குறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்திருந்த போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் இருந்த பதிவை பார்த்த பொழுது அதில் 3 மர்ம நபர்கள் முகமூடி அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் வந்து பூட்டை உடைத்து கடைக்குள் செல்வது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    இதேபோல் நேற்று முன்தினம் இரவு அம்மாபேட்டை கரிய காளியம்மன் கோவில் அருகில் உள்ள ஆதிபராசக்தி கோவிலின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் அங்கிருந்த உண்டியலை திருடிச் சென்று அதில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு உண்டியலை காட்டில் வீசி சென்றுள்ளனர்.

    இதேபோல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்தியூர் ரோட்டில் பட்டஞ்சாவடியில் உள்ள ஒரு கடையிலும், அம்மா பேட்டையில் உள்ள ஒரு பத்திர எழுத்தர் கடையிலும் திருட்டு போனது குறிப்பிடத்தக்கது.

    அம்மாபேட்டை பகுதியில் முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்து திருடும் கும்பலால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    • பயிற்சி வகுப்புகள் காலை 9 மணி முதல் மாலை 5.30 வரை நடைபெறும்
    • பயிற்சி காலத்தில் காலை, மாலை தேநீர், மதிய உணவு, மற்றும் சீருடை இலவசமாக வழங்கப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூர் அவினாசி சாலையில் அமைந்துள்ள கனரா வங்கி கிளையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கனரா வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் சிசிடிவி., கேமரா உபகரணங்கள் பற்றிய இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.

    இதில் கலந்து கொள்வோர் ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம், பான் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 4 உடன் 14ந்தேதி( திங்கள் கிழமை) வங்கி கிளையில் நடைபெறும் நேர்காணனில் கலந்து கொள்ள வேண்டும். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கு பெற முடியும். இந்த பயிற்சிக்கு எவ்வித கட்டணமும் கிடையாது. பயிற்சி நேரம் காலை 9 மணி முதல் மாலை 5.30 வரை.

    பயிற்சி காலத்தில் காலை, மாலை தேநீர், மதிய உணவு, பயிற்சி உபகரணங்கள் மற்றும் சீருடை இலவசமாக வழங்கப்படும். தொழில் தொடங்க கடன் ஆலோசனைகள் வழங்கப்படும். தொழில் பயிற்சி மட்டுமன்றி தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியும் கற்றுத்தரப்படும். மேலும் தொடர்புக்கு 9952518441, 8610533436, 9489043923 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புதிய வீட்டில் நடந்துவந்த தரை ஓடுகளை செப்பனிடும் பணியை பார்வையிடுவதற்காக சென்றார்.
    • தீவைப்பு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பெக்கல் அருகே உள்ள தச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் சுஜித்குமார் (வயது34). கூட்டுறவு நகர்ப்புற சங்கத்தின் எழுத்தராக பணிபுரிந்து வரும் அவர், இளைஞர் காங்கிரஸ் கட்சி பிரமுகரான இருந்து வருகிறார்.

    மேலும் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். சுஜித்குமார் தச்சங்காட்டில் புதிதாக வீடு கட்டி வருகிறார். அங்கு அனைத்து கட்டுமான பணிகளும் நிறைவைடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

    அந்த பணிகளும் சில நாட்களில் முடிவடைந்துவிடும் என்பதால், வருகிற ஓணம் விடுமுறையில் புதிய வீட்டுக்கு புதுமனை புகுவிழா நடத்த திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் புதிய வீட்டில் நடந்துவந்த தரை ஓடுகளை செப்பனிடும் பணியை பார்வையிடுவதற்காக சென்றார்.

    அப்போது அவரது வீட்டின் கதவுகள் தீவைத்து எரிக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டில் இருந்த சில பொருட்களும் எரிந்து கிடந்தன. வீட்டினுள் அலமாரி உள்ளிட்ட சில பொருட்கள் அடித்து உடைக்கப்பட்டிருந்தன.

    யாரோ மர்மநபர்கள், சுஜித்குமாரின் வீட்டு கதவுகளுக்கு தீவைத்தது மட்டுமின்றி, அலமாரி உள்ளிட்டவைகளை அடித்து உடைத்துள்ளனர். ஆனால் யார் இந்த செயலில் ஈடுபட்டார்கள்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்பு தீவைப்பு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுஜித்குமாரின் புதிய வீட்டுக்கு தீவைத்தது யார்? என்பதை கண்டறிய அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களில் பதிவாகியிருந்த வீடியோ பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதில் அதிகாலை 2 மணியளவில் சுஜித்குமாரின் வீட்டுக்கு அருகே இரு மோட்டார் சைக்கிள்களும், அதிகாலை 4 மணியளவில் ஒரு காரும் சென்றது பதிவாகியிருந்தது. அதில் சென்ற நபர்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

    ஆகவே அந்த வாகனங்க ளில் சென்றவர்கள் யார்? என்று அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இளைஞர் காங்கிரஸ் பிரமுகரின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ள சம்பவம் காசர்கோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அவிநாசி நகரப்பகுதியில் அதிக அளவில் திருட்டு சம்பவங்கள் வணிக நிறுவனங்களில் நடைபெறுகிறது.
    • சாலையோரங்களில் நடைபெறும் திருட்டை தடுக்கவும், குற்றச் சம்பவங்களில் தொடா்புடையவா்களை கண்டுபிடிக்கவும் உதவும்.

    அவிநாசி

    அவிநாசி காவல் துறை சாா்பில் குற்றச்சம்பவங்களைத் தடுப்பது தொடா்பான வணிக நிறுவனங்களுடனான விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, காவல் ஆய்வாளா் ராஜவேல் தலைமை வகித்தாா்.

    அவிநாசி நகரப்பகுதியில் அதிக அளவில் திருட்டு சம்பவங்கள் வணிக நிறுவனங்களில் நடைபெறுகிறது. குறிப்பாக பெண்கள் இருக்கும் நிறுவனங்களைப் பாா்த்து, பொருள்களை வாங்குவது போலவும், முகவரி கேட்பது போலவும் அவா்களிடம் நூதன முறையில் நகைப் பறிப்பில் ஈடுபடுகின்றனா்.

    மேலும் சாலையோரங்களில் நடைபெறும் திருட்டை தடுக்கவும், குற்றச் சம்பவங்களில் தொடா்புடையவா்களை அடையாளம் காணவும் வணிக நிறுவனத்தினா் சிசிடிவி/. கேமரா பொருத்தி காவல் துறைக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    ×