என் மலர்
நீங்கள் தேடியது "CCTV Camera"
+2
- நெல்லை மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி அலுவலக ராஜாஜி மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
- ஓரிரு மாதங்களில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு சந்திப்பு பஸ் நிலையம் திறக்கப்படும்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி அலுவலக ராஜாஜி மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
முதல்-அமைச்சருக்கு நன்றி
மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் சரவணன் பேசியதாவது:-
சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் சிறப்பு நிதியில் இருந்து சாலை புனரமைப்பு, பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.2,200 கோடி ஒதுக்கீடு செய்ததற்கும், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல், கணித திறனை ஊக்குவிக்கும் வகையில் வானவில் மன்றம் அமைத்ததற்கும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
அரசு பள்ளிகளில் சி.சி.டி.வி. காமிரா
பொது மக்களின் நலன் கருதி நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் பணி நடைபெறும் இடத்தில் இருந்த மணல்கள் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு சந்திப்பு பஸ் நிலையம் திறக்கப்படும்.
மாநகராட்சி பகுதியில் உள்ள 32 அரசு பள்ளிகளின் வகுப்பறைகள் மற்றும் வளாகங்களில் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற கூட்டங்களில் தொடர்ச்சி யாக 3 கூட்டங்களில் கலந்து கொள்ளாத அ.தி.மு.க. கவுன்சிலர்கள் முத்து லட்சுமி, ஜெகநாதன் என்ற கணேசன், அமுதா ஆகிய 3 பேர் தகுதி நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் இது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் கோர்ட்டு உத்தரவுக்கு பின்னர் இதுதொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
குடிநீர் பற்றாக்குறை
தொடர்ந்து கவுன் சிலர்கள் தங்களது பகுதிகளில் உள்ள கோரிக்கைகள் தொட ர்பாக பேசினர். மேலப்பா ளையம் மண்டல சேர்மன் கதீஜா இக்லாம் பாசிலா பேசும்போது, தங்கள் வார்டுக்குட்பட்ட பகுதி களில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.
இதுதொடர்பாக கவுன்சிலர்களை சந்தித்து பொது மக்கள் புகார் அளித்து வருகிறார்கள். மேலும் பாதாள சாக்கடைக்கு மூடிகள் அமைக்கப்படாமல் உள்ளது என தெரிவித்தார்.
அப்போது பேசிய கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, மாநகராட்சி ஊழியர்கள் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகிறார்கள். இதனால் கடந்த ஒரு மாதமாக சாக்கடை அடைப்புகள் ஏற்படவில்லை. நீண்ட நாட்களாக உள்ள பிரச்சினைகள் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது என்றார்.
28-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சந்திரசேகர் பேசும்போது, சுந்தரர் தெரு கழிவு நீர் அடைப்புகளை உடனடியாக சரி செய்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எங்கள் பகுதியில் ரூ.4.60 லட்சத்தில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அது குறித்து விளக்கங்கள் வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் முழங்கால் அளவுக்கு கழிவு நீர் தேங்கி உள்ளது. அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றார்.
30-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் ஜெகநாதன் என்ற கணேசன் பேசும்போது, எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சந்திப்பு பஸ் நிலையம், மாநகராட்சி மெயின் கட்டிடம், சந்திப்பு ரெயில் நிலையம் உள்ளிட்டவைகள் உள்ளது. தைக்கா தெருவில் 5 வருட மாக குடிநீர் மாநகராட்சி லாரிகள் மூலம் வினியோ கிக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீபுரத்தில் கடந்த 5 வருடமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே உடனடியாக சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்றார்.
50-வது வார்டு த.ம.மு.க. கவுன்சிலர் ரசூல் மைதீன் பேசும்போது, சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனை தவிர்க்க மாநகராட்சி புதிய நடைமுறையை கையாண்டதற்கு நன்றி தெரிவித்தார்.
32-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் அனுராதா சங்கர பாண்டியன் பேசும்போது, எங்கள் வார்டில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து கேட்டால் மோட்டார் பழுது சரி செய்ய 4 நாட்கள் ஆகிறது என தெரிவிக்கின்றனர். எனவே மாற்று மோட்டார் வைக்க வேண்டும், புதுப்பேட்டை தெருவில் விரைவில் சாலைகள் அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து ம.தி.மு.க. கவுன்சிலர் சங்கீதா கூறும்போது, மாநகராட்சி விரிவாக்க பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
விரிவாக்க பகுதிகளுக்கு குடிநீர்
இதற்கு பதில் அளித்த கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, ரூ.35 கோடியில் விரிவாக்க பகுதிகளுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் தச்சை சுப்பிரமணியன், சுதா மூர்த்தி, உலகநாதன், கருப்ப சாமி கோட்டையப்பன், பவுல்ராஜ்,கிட்டு என்ற ராம கிருஷ்ணன், முத்துலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சேலம் சரக டி.ஐ.ஜி பிரவீன் குமார் அபினவ் இன்று காலை சேலம் ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
- ஏற்காட்டில் கூடுதலான சி.சி.டி.வி கேமிராக்களை நிறுவ வேண்டும்.
சேலம்:
சேலம் சரக டி.ஐ.ஜி பிரவீன் குமார் அபினவ் இன்று காலை சேலம் ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். ரூரல் டிஎஸ்பி தையல்நாயகி மற்றும் ஆட்டையாம்பட்டி இன்ஸ்பெக்டர் அம்சவல்லி, மல்லூர் இன்ஸ்பெக்டர் கலையரசி, ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ மோகன் மற்றும் சப் -இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது டி.ஐ.ஜி. பிரவீன் குமார் அபினவ், கடந்த ஆண்டை விட சேலம் ரூரலுக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் கொலை மற்றும் குற்ற வழக்குகள் குறைந்து உள்ளதை சுட்டிக்காட்டி அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார். மேலும் ரூரலுக்கு உட்பட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் போதை பொருட்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்றும், சுற்றுலாத்தலமான ஏற்காட்டில் கூடுதலான சி.சி.டி.வி கேமிராக்களை நிறுவ வேண்டும் என்றும்,பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களையும்,குற்றத் தடுப்பு நடவடிக்கைகளையும் சிறப்புடன் செயல்படுத்த அறிவுறுத்தினார்.
- கிணற்றில் தவறி விழும் சிசிடிவி காட்சி வெளியாகியது.
- உடனிருந்த சிறுவன் உதவி கேட்டு அலறியதால் அங்கு வந்த குடும்பத்தினர் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்டனர்.
தாமம்:
மத்திய பிரதேசத்தில் வீட்டின் முற்றத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் நாற்பது அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது
தாமோ மாவட்டத்தில் உள்ள வீட்டில் இரு சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு மூடி போடப்பட்டிருந்த தரைக்கிணறு சரியாக மூடப்படாததால் அதில் சிறுவன் தவறி விழுந்தான். உடனே உடனிருந்த மற்றொரு சிறுவன் உதவி கேட்டு அலறியதால் அங்கு வந்த குடும்பத்தினர் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்டனர்.
- மர்மநபர்கள் அவரது வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, பீரோவில் இருந்த 120 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
- சம்பவத்தன்று நள்ளிரவு நேரத்தில் 4 பேர் சேர்ந்து வீட்டின் பின்கதவை உடைப்பது தெரிய வந்தது.
நெல்லை:
பாளை பெருமாள்புரம் கனராபேங்க் காலனியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம்.
120 பவுன் நகை கொள்ளை
இவரது மனைவி தேவி (வயது 58) நெடுஞ் சாலைத் துறையில் உதவி பொறியா ளராக பணியாற்றி வருகி றார். தேவி கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார்.
இந்நிலையில் மர்மநபர் கள் அவரது வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளே நுைழந்து, பீரோவில் இருந்த 120 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
சி.சி.டி.வி. ஆய்வு
இதுகுறித்து தேவி அளித்த புகாரின்பேரில் பெருமாள்புரம் போலீசார் விரைந்து சென்று விசா ரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சம்பவத்தன்று நள்ளிரவு நேரத்தில் 4 பேர் சேர்ந்து வீட்டின் பின்கதவை உடைப்பது தெரிய வந்தது.
5 தனிப்படைகள் அமைப்பு
ஆனால் அந்த 4 பேரின் உருவங்களும் தெளிவாக தெரியவில்லை. எனினும் கிடைத்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கொள்ளையர்களை பிடிப்பதற்காக உதவி கமிஷனர் மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசார ணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- தமிழ்நாடு போலீசாருக்கு சமீப காலமாக சி.சி.டி.வி.-க்கள் கை கொடுக்கின்றன.
- குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள ஒரு கோவிலில், அங்கு பணி செய்த அர்ச்சகரே உண்டியல் பணத்தை திருடுவதை போலீசார் கண்டறிந்தனர்.
மந்தாரக்குப்பம்:
குற்றவாளிகளை பிடிக்க ஒவ்வொரு காலக்கட்டத்திலும். ஒவ்வொரு வழிமுறையை தமிழ்நாடு போலீஸ் துறையினர் பின்பற்றி வருகின்றனர். 1980-களில் குற்றவாளிகள் விட்டுச் செல்லும் பொருட்களை வைத்து துப்பு துலக்கினர். பின்னர் 1990-களில் மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். அதனைத் தொடர்ந்து 2000-ம் ஆண்டுகளில் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் மூலம் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
மொபைல் போன்களின் பயன்பாடு 2010-களில் அதிகரித்தது. குற்றச் சம்பவங்கள் நடந்த நேரத்தில் அந்த இடத்தில் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடித்தனர்.
ஆனால், சமீப காலங்களில் இந்த முறைகள் ஏதும் போலீசாருக்கு பயன்படவில்லை. இதனால் கொலை, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு போலீசாருக்கு சமீப காலமாக சி.சி.டி.வி.-க்கள் கை கொடுக்கின்றன. குறிப்பாக 2020-க்கு பின்னர் முக்கிய சாலைகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், கோவில்கள், திருமண மண்டபங்கள், வணிக நிறுவனங்கள், வீடுகளின் வாசல்கள் போன்ற இடங்களில் சி.சி.டி.வி. அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு நடந்த குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் எளிதில் அடையாளம் காண்கின்றனர்.
அதன்படி, குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள ஒரு கோவிலில், அங்கு பணி செய்த அர்ச்சகரே உண்டியல் பணத்தை திருடுவதை போலீசார் கண்டறிந்தனர். மேலும், சில தினங்களுக்கு முன்னர் ஸ்டூடியோ உரிமையாளர் குறிஞ்சிப்பாடியில் மர்மக் கும்பலால் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சி.சி.டி.வி. மூலமாகவே, கூலிப்படையை குறிஞ்சிப்பாடி போலீசார் கைது செய்தனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக குறிஞ்சிப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா, சி.சி.டி.வி.-க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும், அவர் கூறுகையில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவே நான் இவ்வாறு செய்கிறேன். அனைவரும் அவரவர் வீடுகளின் வாசல்களில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த வேண்டும். இதன் மூலம் குற்றச் சம்பவங்களை தடுக்க முடியும். குற்றவாளிகளையும் எளிதில் கண்டறிய முடியும் என்றார்.
குறிஞ்சிப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சி.சி.டி.வி.-க்கு மாலை அணிவித்ததை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடனும், ஆர்வமுடனும் பார்த்து சென்றனர்.
- டி.எஸ்.பி. மாயவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண் காணிப்பு காமிராக்களை தொடங்கி வைத்தார்.
- ஏற்பாடுகளை மகரபூஷணம், லெட்சுமி நாராயணன மற்றும் ராகவன் ஆகியோர் செய்திருந்தனர்.
தென்திருப்பேரை:
தென்திருப்பேரை பேரூராட்சிக்குட்பட்ட சன்னதி தெரு, கீழரத வீதி, வடக்கு ரத வீதி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு காமிராக்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
டி.எஸ்.பி. மாயவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண் காணிப்பு காமிராக்களை தொடங்கி வைத்தார். பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணி வண்ணன், சப்-இன்ஸ் பெக்டர்கள் செல்வன், இசக்கி பாண்டி, தனிப்பிரிவு காவலர் ஹரி ஹரபுத்திரன், ஊர்நலக்கமிட்டி நிர்வாகிகள் ரகு, ஸ்ரீனிவாசன், ஆழ்வான், நவநீத கிருஷ்ணன், ராமகிருஷ்ணன், கவுன்சிலர்கள் ஆனந்த், சீதாலெட்சுமி, முன்னாள் கவுன்சிலர்கள் தங்கம் மற்றும் கோவிந்தராஜன், ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை மகரபூஷணம், லெட்சுமி நாராயணன மற்றும் ராகவன் ஆகியோர் செய்திருந்தனர்.
- குடிகாடு கிராமத்தில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது
- உடையார்பாளையம் காவல் ஆய்வாளர் வேலுச்சாமி திறந்துவைத்தார்
உடையார் பாளையம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தத்தனூர் குடிகாடு கிராமத்தில் வெளிநாடு வாழும் இளைஞர்கள் சார்பில் குடிகாடு கிராமத்தில் முக்கிய வீதிகளில் 16 சிசிடிவி கேமராவை அமைத்தனர். அதனை உடையார்பாளையம் காவல் ஆய்வாளர் வேலுச்சாமி திறந்துவைத்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், குடிகாடு கிராமத்தில் சிசிடிவி கேமரா மூலம் பல்வேறு குற்றங்களை தடுக்க முடியும். இதே போல் அனைத்து கிராமங்களிலும், சிசிடிவி கேமரா வைப்பதற்கு இளைஞர்களும், பொதுமக்களும், ஊர் முக்கியத்துவம் முன்வர வேண்டும் என்றார்.
- காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள 154 மருந்து கடைகளிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட வேண்டும்.
- பஞ்சாயத்து ஆணையர்கள் தங்கள் பகுதிகளில் பெட்டிகடை மற்றும் பல்வேறு கடைகளை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பது, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பல்வேறுபட்ட விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்படுத்துவது தொடர்பான, 3ம்கட்ட இறுதி ஆலோசனைக் கூட்டம், காரைக்கால் காமராஜர் அரசு வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, மாவட்ட துணை கலெக்ட ர்(வருவாய்) ஜான்சன் தலைமை தாங்கினார். துணை கலெக்டர்(பேரிடர் மேலாண்மை) பாஸ்கரன், போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சித் துறை, மீன்வளத்துறை, கடலோர காவல் படை, காரைக்கால் நகராட்சி, கல்வித்துறை, சமூக நலத்துறை மற்றும் அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அனைத்து துறை அதிகாரி களின் ஆலோ சனைகளை கேட்டறிந்த, துணை கலெக்டர் ஜான்சன் பேசியதாவது:-காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள 154 மருந்து கடைகளிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட வேண்டும். மருந்துகள் சரியான விலைக்கு விற்கப்ப டுகிறதா?, காலாவதியான மரு ந்துகள் விற்கப்படுகிறதா? என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும். காரைக்கால் கடலில் இயங்கும் அனைத்து படகு களில் அரசு அறிவுறுத்திய வண்ணம் பூசப்பட வேண்டும். தேசியக்கொடியை பறக்க விட வேண்டும். வரிசை எண்ணை எழுதி வைக்க வேண்டும். அதேபோல், அனைத்து படகுகளிலும் பையோமெட்ரிக் கருவி பொருத்த வேண்டும். மேலும் இரவு நேரத்தில் சந்தேகப்படும்படியாக படகுகள், கடலில் வலம் வந்தால் மீனவர்கள் சம்மந்தப்பட்ட துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
மேலும், போலீசார், கல்வித்துறையுடன் இணைந்து மாணவர்கள் மத்தியில் பல்வேறு விழிப்பு ணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகள் அருகில் 100 மீட்டருக்குள் பெட்டி கடைகளை அனுமதிக்க கூடாது. அப்படி இருக்கும் பட்சத்தில், அக்கடைகளை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். போதை, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும். பள்ளிகளில் ஒவ்வொரு வெள்ளி க்கிழமையும் மாலை நேரத்தில், கல்வித்துறையும் மற்றும் போலீசாரும் இணைந்து மாணவ ர்களிடையே போதைப் பழக்கத்தின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் தங்கள் பகுதிகளில் பெட்டிகடை மற்றும் பல்வேறு கடைகளை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். முக்கியமாக, காரைக்கால் மாவட்டத்தில், அனைத்து அரசுத் துறைகளும் ஒன்றிணைந்து செயல்ப ட்டால், அரசால் தடை செய்ய ப்பட்ட புகையிலை பொரு ட்களை முற்றிலும் ஒழிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.
- குழந்தைகள் விடுதிகள் உரிமம் பெறும் முறை மற்றும் அதற்கான நிபந்தனைகள் அரசால் வகுக்கப்பட்டுள்ளன.
- அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத்தில் விடுதிகளை நடத்த வேண்டும்.
கடலூர்:
தமிழ்நாடு சிறார் மற்றும் பெண்களுக்கான வீடுகள் மற்றும் விடுதிகள் முறைப்படுத்துதல் சட்டம் 2014-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இதுகுறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் செய்தி க்குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-
இச்சட்டத்தின்படி தனியாரால் நடத்தப்படும் குழந்தைகள் விடுதிகள் உரிமம் பெறும் முறை மற்றும் அதற்கான நிபந்தனைகள் அரசால் வகுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் அனைத்து தனியார் குழந்தைகள் விடுதிகள் பதிவு பெற உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 18 தனியார் குழந்தைகள் விடுதிகள் தவிர வேறு எவரும் உரிமம் பெற கடலூர் மாவட்ட கலெக்டரை அணுகவில்லை. தற்போது தனியார் குழந்தைகள் விடுதிகள் சுகாதாரமற்ற முறையில் இயங்குவதாகவும், விடுதியில் தங்கியுள்ள வர்களுக்கு தரமற்ற உணவு வழங்குவதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. மேலும் பல விடுதிகள் உரிமம் பெறாமல் இயங்கி வருவதும், விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களின் சேர்க்கை முறையாக பதிவு செய்யாமல் இருப்பதும் தெரியவந்தது. முறையாக உரிமம் பெறாமல் இயங்கிவரும் விடுதிகள் உடனடியாக உரிமம் பெறுவதற்கு துரிதநட வடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான வீடுகள் மற்றும் விடுதிகள் முறைபடுத்துதல், குழந்தைகள் விடுதிகளை நடத்திட விடுதி உரிமையாளர்கள் கீழ்கண்ட நிபந்தனைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். விடுதியின் உரிமம் பெற, தீயணைப்பு சான்றிதழ், சுகாதாரச் சான்றிதழ், கட்டிடம் உறுதித்தன்மை சான்று ஆகியவை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத்தில் விடுதிகளை நடத்த வேண்டும். விடுதியில் சி.சி.டிவி கேமரா பொருத்தப்பட வேண்டும். விடுதி மேலாளர் மற்றும் விடுதி பாதுகாவலர் காவல் துறையினரால் பெறப்பட்ட நன்னடத்தை சான்றிதழ் மற்றும் பதிவுபெற்ற மருத்துவர் மூலம் உடற்தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விடுதியில் சேர்க்கை பதிவேடு, நடமாடும் பதிவேடு, விடுமுறை பதிவேடு மற்றும் பார்வையாளர் பதிவேடு ஆகியவை கண்டிப்பாக பராமரிக்க வேண்டும். ஒருவர் விடுதியில் தங்குவதற்கு சராசரியாக 40 சதுர அடி இடத்தினை ஒதுக்கீடு செய்து தருவதை விடுதி மேலாளர் உறுதி செய்ய வேண்டும். மேலும் தனிக்குடும்பமாக வசிப்பதற்கென்று உள்ள தனி வீடுகளை வாடகைக்கு எடுத்து அதில் எந்த உரிமமும் பெறாமல் விடுதியாக உரிய உரிமம் மற்றும் போதிய வசதிகள் இல்லாமல் செயல்படுவது கண்டறிய ப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறினார்.
- மகாராஜன் கல்லாமொழி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.
- கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
உடன்குடி:
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மகாராஜன் (வயது 67). இவர் கல்லாமொழி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.
பட்டப்பகலில் கொள்ளை
நேற்று முன்தினம் காலை திருச்செந்தூரில் இருந்து 2 வாலிபர்கள் பெட்ரோல் நிரப்புவதற்காக பங்கிற்கு வந்தனர். அப்போது மகாராஜனிடம் ரூ. 200-க்கு பெட்ரோல் நிரப்ப கூறியுள்ளனர். அப்போது அவர்கள் திடீரென அவரது பணப்பையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். அதில் ரூ. 22 ஆயிரத்து 470 இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி யடைந்த மகாராஜன் இது தொடர்பாக குலசேக ரன்பட்டினம் போலீசில் புகார் செய்தார். பட்டப்பக லில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தனிப்படை தீவிரம்
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பெட்ரோல் பங்க் பகுதியில் பொருத்தப் பட்டுள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், மகாராஜனை தாக்கிய 2 வாலிபர்களின் உருவம் பதிவாகி இருந்தது. அதனை சேகரித்த போலீசார் கொள்ளையர்கள் யார்? என விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்ற னர்.
- திடீரென வனப்பகுதியில் பதுங்கி இருந்த சிறுத்தை பாய்ந்து சிறுவன் கவுசிக்கை கவ்வி இழுத்துச் சென்றது.
- வனத்துறையினர் மற்றும் திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் விரைந்து வந்தனர்.
திருப்பதி:
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன், பஸ், பைக் மூலம் வந்து செல்கின்றனர்.
பக்தர்கள் நேர்த்திக்கடனாக மலைபாதையில் நடந்து சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு கர்னூலை சேர்ந்த குடும்பத்தினர் தங்களது 3 வயது மகன் கவுசிக்குடன் அலிப்பிரி நடைபாதையில் நடந்து சென்றனர்.
அப்போது-7வது மைலில் சென்றபோது திடீரென வனப்பகுதியில் பதுங்கி இருந்த சிறுத்தை பாய்ந்து சிறுவன் கவுசிக்கை கவ்வி இழுத்துச் சென்றது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் நடந்து சென்ற பக்தர்கள் கத்தி கூச்சலிட்டனர். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பக்தர்களுடன் சேர்ந்து சிறுத்தையை விரட்டிச் சென்றனர்.
பொதுமக்கள் விரட்டி வருவதை கண்ட சிறுத்தை சிறுவனை கீழே போட்டுவிட்டு வனப்பகுதிக்குள் தப்பி சென்றது. சிறுத்தை தாக்கியதில் கவுசிக் படுகாயம் அடைந்து ரத்தம் கொட்டியது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி ஸ்வின்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
வனத்துறையினர் மற்றும் திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் விரைந்து வந்தனர். சிறுத்தை தப்பி சென்ற பாதையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
மேலும் வனப்பகுதிக்குள் தப்பி சென்ற சிறுத்தையை பிடித்து வெங்கடேஸ்வரா வன உயிரியல் பூங்காவில் அடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறுத்தை நடமாடிய பகுதிகளில் கூண்டு வைக்க உள்ளதாக தெரிவித்தனர். பக்தர்கள் நடந்து செல்லும் அலிப்பிரி நடைபாதை அடர்ந்த வனப் பகுதியாக உள்ளது.
இதனால் வனப்பகுதியில் உள்ள சிறுத்தை,யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி பக்தர்கள் செல்லும் நடைபாதையில் வந்து பக்தர்களை தாக்கி விட்டு செல்கிறது.
அலிப்பிரி நடைபாதையில் வனவிலங்குகள் வராமல் தடுப்பது குறித்து மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பது என அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அலிப்பிரி நடைபாதையில் சிறுத்தைகள் அடிக்கடி புகுந்து பக்தர்களை தாக்கும் சம்பவத்தால் பக்தர்கள் பீதி அடைந்து உள்ளனர்.
- அவிநாசி நகரப்பகுதியில் அதிக அளவில் திருட்டு சம்பவங்கள் வணிக நிறுவனங்களில் நடைபெறுகிறது.
- சாலையோரங்களில் நடைபெறும் திருட்டை தடுக்கவும், குற்றச் சம்பவங்களில் தொடா்புடையவா்களை கண்டுபிடிக்கவும் உதவும்.
அவிநாசி
அவிநாசி காவல் துறை சாா்பில் குற்றச்சம்பவங்களைத் தடுப்பது தொடா்பான வணிக நிறுவனங்களுடனான விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, காவல் ஆய்வாளா் ராஜவேல் தலைமை வகித்தாா்.
அவிநாசி நகரப்பகுதியில் அதிக அளவில் திருட்டு சம்பவங்கள் வணிக நிறுவனங்களில் நடைபெறுகிறது. குறிப்பாக பெண்கள் இருக்கும் நிறுவனங்களைப் பாா்த்து, பொருள்களை வாங்குவது போலவும், முகவரி கேட்பது போலவும் அவா்களிடம் நூதன முறையில் நகைப் பறிப்பில் ஈடுபடுகின்றனா்.
மேலும் சாலையோரங்களில் நடைபெறும் திருட்டை தடுக்கவும், குற்றச் சம்பவங்களில் தொடா்புடையவா்களை அடையாளம் காணவும் வணிக நிறுவனத்தினா் சிசிடிவி/. கேமரா பொருத்தி காவல் துறைக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.