search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cement Damaged"

    • லாரியை நிறுத்திய அனில்குமார் முன் பகுதியில் சென்று பார்ப்பதற்குள் தீ வேகமாக பரவியது.
    • தீ விபத்தில் லாரியின் முன்பகுதி மற்றும் 720 சிமெண்ட் மூட்டைகள் முற்றிலும் சேதம் அடைந்தன.

    சாத்தூர்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலா பகுதியை சேர்ந்தவர் அனில்குமார். லாரி டிரைவரான இவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஆர்.ஆர். நகர் பகுதியில் உள்ள தனியார் சிமெண்ட் தொழிற்சாலையில் இருந்து நேற்று அதிகாலை 36 டன் எடை கொண்ட 720 சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருவனந்தபுரம் நோக்கி புறப்பட்டார்.

    இந்த நிலையில் அனில் குமார் ஓட்டி வந்த லாரி சாத்தூர் அருகே உள்ள எட்டூர் வட்டம் விலக்கு அருகே சென்றபோது மின் கசிவு காரணமாக திடீரென லாரியின் முன்பகுதியில் தீப்பற்றி கரும்புகை வெளியேறியது. உடனே லாரியை நிறுத்திய அனில்குமார் முன் பகுதியில் சென்று பார்ப்பதற்குள் தீ வேகமாக பரவியது. இதுகுறித்து அவர் சாத்தூர் தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் லாரியின் முன்பகுதி மற்றும் 720 சிமெண்ட் மூட்டைகள் முற்றிலும் சேதம் அடைந்தன.

    தீ விபத்து குறித்து வச்சகாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×