என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Certificate"

    • தற்போது வரை 9 பேர் கைது செய்யப்பட்டு 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    • கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் சோதனை தொடர்ந்து நடைபெறும்.

    சீர்காழி:

    சீர்காழியில் காரில் கஞ்சா கடத்திவருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி இன்ஸ்பெக்டர் புயல்.பாலச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் புறவழிச்சாலையில் வாகனதணிக்கை ஈடுப்பட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்த போது காரில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து காரை ஓட்டிவந்த கஞ்சா மொத்தவியாபாரி சிதம்பரம் பகுதியை சேர்ந்த ராஜா (எ) மனோஜ் (25) என்ற நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி, இது தொடர்பாக 9பேரை கைது செய்து, ரூ.2 ½ லட்சம் மதிப்புடைய 5 கிலோ கஞ்சா மற்றும் 9 லட்சம் மதிப்பிலான சொகுசு காரினை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதனைத்தொடர்ந்து சீர்காழி காவல்நிலையம் வருகைபுரிந்த மயிலாடுதுறை எஸ்.பி. நிஷா, கஞ்சாவிற்பனையில் ஈடுப்பட்ட 9பேரை கைது செய்த போலீசாரை பாராட்டியதோடு, இன்ஸ்பெக்டர் புயல்.பாலசந்திரனுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு நிஷா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்து வதற்காக நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் தற்போது வரை 9 பேர் கைது செய்யப்பட்டு 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் சோதனை தொடர்ந்து நடைபெறும்.

    கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை குறித்து தகவல் தெரிவிப்பதற்காக பிரத்தியேக வாட்ஸ்அப் எண் (9442626792) அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தொலைபேசி எண் 04364 211600 என்கிற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவரின் பற்றிய விபரம் பாதுகாக்கப்படும்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் தொடர்புடைய 72 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ரூ.8 லட்சம் மதிப்புள்ள 39 கிலோ கஞ்சா இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    அப்போது ஏடிஎஸ்பி. தங்கவேல், டிஎஸ்பிகள் லாமேக், கணேசன், ஜெயபாலன், சுகுமார், ராஜ்குமார் காவல்ஆய்வாளர் தனிப்பிரிவு சதீஷ், புயல் பாலச்சந்திரன் ஆகியோர் உள்ளனர்.

    • ஆதரவற்றவர்கள் மற்றும் சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • உதவும் கரங்கள் அமைப்பின் நிறுவனங்களுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உதவும் கரங்கள் அமைப்பு சார்பில் வாழ்வாதாரம் இழந்த ஆதரவற்றவர்கள் மற்றும் சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

    கொரோனா ஊரடங்கு காலத்தில் தொடங்கப்பட்ட உணவு வழங்கும் பணியின் 1000வது நாள் நிகழ்ச்சி வேளாங்கண்ணியில் உள்ள ஆயர் சுந்தரம் மஹாலில் பேராலய பங்குத்தந்தை தலைமையில் நடைபெற்றது.

    கடந்த 1000 நாட்களாக உணவு வழங்கி வரும் உதவும் கரங்கள் அமைப்பின் நிறுவனர் பிராங்க்ளின் ஜெயராஜ் மற்றும் தன்னார்வலர்களுக்கும், சேவை அமைப்பினருக்கும் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    சிறப்பாக பணியாற்றிய 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர், சேவை அமைப்பு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் தொடங்க உபகரணங்களை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் அரிமா சங்கத் தலைவர் கண்ணையன், ரோட்டரி சங்கத் தலைவர் அனுஷா முன்னாள் அரிமா சங்க மாவட்ட ஆளுநர்.

    வேதநாயகம், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜூலியட் அற்புதராஜ், அரிமா சங்கமாவட்டத் தலைவர் ரூசோ பாட்ஷா, வரவேற்புரைகிறிஸ்துராஜ் ஆசிரியர், நன்றியுரை லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் டேவிட், நிகழ்ச்சி தொகுப்பு ஜெ.லியோ அந்துவான் விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • போட்டியில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்றவர்களுக்கும், கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வினாடி-வினா போட்டியின் இறுதிச்சுற்று நாகை இலக்கியா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட தலைவர் எஸ்.எம்.ஆரிப் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு நாகை வருவாய் வட்டாட்சியர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.நாகை அஸ்பெயர் அகாடமி நிர்வாக இயக்குனர் பரணிதரன் முன்னிலை வகித்தார்.

    இதில் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ராஜு, இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரி பேராசிரியர் டாக்டர் அசோக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். போட்டியில்15 பள்ளிகளில் இருந்து 147 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் நாகை அமிர்தா வித்யாலயா பள்ளி மாணவி ஹர்னிதா முதலிடம், தேவூர் குழந்தை இயேசு உயர்நிலைப்பள்ளி மாணவி வர்ஷினி 2-ம் இடம், நாகை அமிர்தா வித்யாலயா பள்ளி மாணவி சௌசிதா 3-ம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கும், கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சி யானது திருமருகல் ஒன்றிய கிளை ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடைபெற்றது.

    • உலக சுற்றுலா தின போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது
    • கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பள்ளி மாணவர்களிடையே போட்டிகள் நடத்தப்பட்டது

    அரியலூர்:

    உலக சுற்றுலா தினத்தையொட்டி அரியலூரில் அண்மையில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பள்ளி மாணவர்களிடையே சுற்றுலா சார்ந்த பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றிப் பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் ரமணசரஸ்வதி சான்றிதழ்களை வழங்கி, பாராட்டு தெரிவித்தார். இதில் மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், உதவி சுற்றுலா அலுவலர் சரவணன், இளநிலை பயிற்சி அலுவலர் ரவி மற்றும் பயிற்றுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


    • சேலம் மேற்கு அஞ்–சல் கோட்டத்தில ஓய்–வூ–தி–ய–தா–ரர்–கள் வீட்–டில் இருந்–த–ப–டியே பயோ–மெட்–ரிக் முறையை பயன்–ப–டுத்தி டிஜிட்–டல் ஆயுள் சான்–றி–தழ் சமர்ப்–பிக்க ஏற்–பாடு செய்–துள்–ளது.
    • இதற்கு சேவை கட்–ட–ண–மாக ரூ.70 தபால்–கா–ர–ரி–டம் செலுத்த வேண்–டும்.

    சேலம்:

    சேலம் மேற்கு அஞ்–சல் கோட்ட கண்–கா–ணிப்–பா–ளர் அலு–வ–ல–கம் வெளி–யிட்–டுள்ள செய்–திக்–கு–றிப்–பில் கூறி–யி–ருப்–ப–தா–வது:-

    நேரில் சென்று ஆயுள் சான்–றி–தழ் சமர்ப்–பிக்க ஓய்–வூ–தி–ய–தா–ரர்–கள் படும் சிர–மங்–களை தவிர்க்–கும் வகை–யில் அஞ்–சல் துறை–யின் கீழ் செயல்–படும் இந்–தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஓய்–வூ–தி–ய–தா–ரர்–கள் வீட்–டில் இருந்–த–ப–டியே பயோ–மெட்–ரிக் முறையை பயன்–ப–டுத்தி டிஜிட்–டல் ஆயுள் சான்–றி–தழ் சமர்ப்–பிக்க ஏற்–பாடு செய்–துள்–ளது. இதற்கு சேவை கட்–ட–ண–மாக ரூ.70 தபால்–கா–ர–ரி–டம் செலுத்த வேண்–டும்.

    ஓய்–வூ–தி–ய–தா–ரர்–கள் தங்–கள் பகுதி தபால்–கா–ர–ரி–டம் ஆதார் எண், செல்–போன் எண், பி.பி.ஓ. எண் மற்–றும் ஓய்–வூ–திய கணக்கு விவ–ரங்–களை தெரி–வித்து, கைவி–ரல் ரேகை பதிவு செய்–தால், ஒரு சில நிமி–டங்–களில் டிஜிட்–டல் ஆயுள் சான்–றி–தழை சமர்–பிக்க முடி–யும்.

    இந்த டிஜிட்–டல் ஆயுள் சான்–றி–தழ் சேவையை பெற விரும்–பும் ஓய்–வூ–தி–ய–தா–ரர்–கள் அரு–கில் உள்ள அஞ்–ச–ல–கம் அல்–லது தங்–க–ளது பகுதி தபால்–கா–ரரை தொடர்பு கொள்–ள–லாம். மத்–திய அரசு ஓய்–வூ–தி–ய–தா–ரர்–கள் மட்–டு–மின்றி தொழி–லா–ளர் வருங்–கால வைப்பு நிதி நிறு–வ–னம் மூலம் ஓய்–வூ–தி–யம் பெறு–ப–வர்–களும், இந்த வச–தியை பயன்–ப–டுத்தி வீட்–டில் இருந்–த–ப–டியே தங்–கள் பகுதி தபால்–கா–ர–ரி–டம் ஆயுள் சான்–றி–தழை சமர்ப்–பித்து பயன்–பெ–ற–லாம்.

    இவ்–வாறு அதில் கூறப்–பட்–டுள்–ளது.

    • நாகை மாவட்டத்தில் பாரம்பரிய வில்வித்தை சங்க பயிற்சி முகாம் நடை பெற்றது.
    • 50-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு வில்வித்தையில் உள்ள 5 கலைகளில் பயிற்சி பெற்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினத்தில் நாகை மாவட்ட பாரம்பரிய வில்வித்தை சங்க பயிற்சி முகாம் நிறுவனர் முத்துக்குமரன் தலைமையில் நடந்தது.

    இதில், வேதாரண்யம் தாலுக்காவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு வில்வித்தையில் உள்ள 5 கலைகளில் பயிற்சி பெற்றனர்.

    நிகழ்ச்சியில் நாகை மாவட்ட பாரம்பரிய வில்வித்தை சங்க தலைவர் அருள்ராஜ், பொதுச்செயலாளர் மதன்குமார் ஆகியோர் பயிற்சி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கினார்.

    திருவாரூர் மாவட்ட வில்வித்தை பயிற்சியாளர்கள் கார்த்தி மற்றும் வெற்றிவேல், நாகை மாவட்ட வில்வித்தை சங்க துணைத்தலைவர் குமரகுருபரன், பொரு ளாளர் ஸ்ரீராம், பயிற்சியாளர்கள் வீர ராகுல், லட்சுமி நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

    முடிவில் நாகை மாவட்ட பாரம்பரிய வில்வித்தை சங்க செயலாளர் ஹரிஹரன் நன்றி கூறினார்.

    • போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 40-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
    • தஞ்சை டாக்டர்கள் 2 மற்றும் 3-ம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.

    தஞ்சாவூர்:

    கோவையில் அவசர சிகிச்சை பிரிவு முதுநிலை பட்ட மேற்படிப்பு மருத்துவர்களுக்கான மாநில அளவிலான வினாடி- வினா போட்டி இந்திய மருத்துவ சங்கத்தால் நடத்தப்பட்டது.

    போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 20-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளிலிருந்து 40-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையை சேர்ந்த அவசர சிகிச்சை பட்ட மேற்படிப்பு உறைவிட மருத்துவர்கள் டாக்டர்.

    சேகர், டாக்டர். குமரேசன், டாக்டர். மீனா மற்றும் டாக்டர். ரூபிக்கா ஆகியோர் கலந்து கொண்டு 2 மற்றும் 3-ம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.

    அவர்களுக்கு இந்திய அவசர சிகிச்சை மருத்துவ சங்க நிர்வாகிகள் பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

    • கூட்டுறவுத் துறையின் இணை பதிவாளர் எஸ்.சீனிவாசன் வரவேற்று பேசினார்,
    • கூட்டுறவு துறையினர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் முத்தூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்ற கடனுக்கான தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் அ.லட்சுமணன் தலைமையில் திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டல குழு தலைவர் இல.பத்மநாபன் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறையின் இணை பதிவாளர் எஸ்.சீனிவாசன் வரவேற்று பேசினார், தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் காங்கேயம், வெள்ளகோவில் பகுதிகளை சேர்ந்த 103 மகளிர் சுய குழுக்களை சேர்ந்த ஆயிரத்து 31 நபர்களுக்கு ரூ.1 கோடியே 87 லட்சத்திற்கான கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை வழங்கினார்.மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மொத்தம் ரூ. 5 லட்சத்து 42 ஆயிரத்து 541 மதிப்பிலான 3 நபர்களுக்கு பேட்டரி வீல் சேர், 9 நபர்களுக்கு செல்போன், 15 நபர்களுக்கு தையல் எந்திரம் என மொத்தம் 27 நபர்களுக்கு வழங்கினார்.

    முன்னதாக வெள்ளகோவில் ஒன்றியம், வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சியில் சடையப்பா நகர் மற்றும் கொங்கு நகர் ஆகிய பகுதிகளில் பகுதி நேர நியாய விலை கடையை திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் வெள்ளகோவில் நகர் மன்ற தலைவர் மு.கனியரசிமுத்துக்குமார். திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் ராசி கே. ஆர்.முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் மோளகவுண்டன்வலசு கே.சந்திரசேகரன், நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்,வருவாய்த்துறையினர், கூட்டுறவு துறையினர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • இல்லம் தேடி கல்வி 2-ஆம் ஆண்டு தொடக்க விழா திருத்துறைப்பூண்டி தாலுக்கா தேசிங்குராஜபுரம் கிராமத்தில் நடைபெற்றது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பரிசுப்பொருட்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    இல்லம் தேடி கல்வி இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் விழா திருத்துறைப்பூண்டி தாலுக்கா தேசிங்குராஜபுரம் கிராமத்தில் நடைபெற்றது.

    இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் ரேவதி வேதகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.

    ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் முனைவர் துரை ராயப்பன் தலைமை வகித்தார்.

    ராமதேவர் சித்தர் அறக்கட்டளை மாநில தலைவர் முனைவர் ரவிச்சந்திரன் மற்றும் அன்பு உள்ளங்கள் சமூக அறக்கட்டளை நிறுவனர் ராஜாமணி இருவரும் முன்னிலை வகித்தனர்.

    இல்லம் தேடி கல்வி மேற்பார்வையாளர் அனு பிரியா, சமூக ஆர்வலர் துரை முருகன் ஆகியார் சிறப்புரையாற்றினர்.

    இந்திகழ்ச்சியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பரிசுப்பொருட்களும் வழங்கி கெளரவி க்கப்பட்டனர்.

    சேவா பாரதி - தமிழ்நாடு அமைப்பு சார்பாகவும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

    அனைவருக்கும் கவிதா ரவிச்சந்திரன் மற்றும் தீபக் ரவிச்சந்திரன் இருவரும் சிற்றுண்டி வழங்கினார். சமூக ஆர்வலர் முருகவேல் ரவி நன்றி கூறினார்.

    • ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சையில் மாநிலத்தில் நாகை மாவட்டம் முதல் இடத்தை பிடித்தது.
    • ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சையில் இலக்கை தாண்டி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டத்தில் மருத்துவம், மக்கள் நலவாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நடைபெற்ற ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சையில் மாநிலத்தில் நாகை மாவட்டம் முதல் இடத்தை பிடித்தது.

    குடும்ப கட்டுப்பாடு திட்டத்தில் வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு வட்டாரத்தில் ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சையில் இலக்கை தாண்டி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    தலைஞாயிறு வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் தேவிஸ்ரீ, வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் நாகை செல்வன் மற்றும் மருத்துவமனை பணியாளர்களை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், துணை இயக்குனர் சுகாதார பணிகள் விஜயகுமார் இணை இயக்குனர் நலப்பணிகள் விஸ்வநாதன் மருத்துவ கல்லூரி முதல்வர் ஆகியோர் பாராட்டினர்.

    • மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் கொடுத்து அருளாசி வழங்கி பேசினார்.
    • பரிசு பொருள்களை ஆலவாய் அண்ணல் அறக்கட்டளையினர் வழங்கினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் திருநாவுக்கரசர் வார வழிபாட்டு மன்றத்தால் மார்கழி 30 நாட்கள் நடந்த திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி வழிபாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியும், பரிசளிப்பு விழாவும் முன்னாள் லயன்ஸ் கிளப் தலைவர் வைரம் ஜெயசந்திரன் தலைமையில் நடந்தது.

    நாள்தோறும் தனுர்மாத வழிபாட்டில் பங்கேற்ற 100- க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்களாக ஓதுவாமூர்த்திகள் திருவாரூர் சந்திரசேகர், கொடுமுடி வசந்தகுமார் தேசிகர் ஆகியோர் பரிசுகள் கொடுத்து அருளாசி வழங்கி பேசினர்.

    விழா மற்றும் வழிபாட்டில் வேதாரண்யம் மன்ற பொருப்பாளர்கள் சச்சிதானந்த தேசிகர், ஓதுவார் பரஞ்சோதி, ஓய்வு பெற்ற தொலைபேசித் துறை ராஜேந்திரன், போலீஸ் எஸ்ஐ வேதமூர்த்தி, சேகர், சத்யசாய் சேவா சமிதி சந்திரமௌலி உட்பட பிரமுகர்களும், பக்தர்களும் கலந்து கொண்டனர்.

    பரிசு பொருள்களை ஆலவாய் அண்ணல் அறக்கட்டளையினர் வழங்கினர்.

    • நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கருப்பு பட்டயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
    • முன்னாள் மாணவர்களும், பெற்றோர்களும் பாராட்டினர்.

    பேராவூரணி:

    பேராவூரணியில் கராத்தே மற்றும் சிலம்ப பயிற்சி மாணவர்களுக்கான தகுதி பட்டைய தேர்வு, திறனாய்வு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அகில இந்திய தலைமை பயிற்சியாளர் குப்பன் தலைமை தாங்கினார்.

    கராத்தே பள்ளியின் பெற்றோர்கள் சங்க தலைவர் முருகையன், செயலாளர் முருகானந்தம், பொருளாளர் ராஜசேகரன், ரென்சி எம். சிவசாமி, சிகான் பி.மணிசங்கர், பாரதிமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தாய் புடோகான் கராத்தே பயிற்சி பள்ளியின் தலைமை பயிற்சியாளர் ரென்சி கே.பாண்டியன் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் பெற்றோர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கருப்பு பட்டயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    30 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான கராத்தே மற்றும் சிலம்ப மாணவர்களை உருவாக்கி சேவைகளை செய்துவரும் ரென்சி கே.பாண்டியனை, முன்னாள் மாணவர்களும், பெற்றோர்களும் பொன்னாடை அணிவித்து பாராட்டினர். முடிவில் சென்சாய்

    ஆர்.அரவிந்த் நன்றி கூறினார்.

    ×