என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Certificate"

    • வெல்வது மற்றும் தோல்வி அடைவது எப்படி என்று குறித்து கற்றுக்கொள்வது.
    • மாணவ-மாணவிகள் அனைவரையும் ஊக்கப்படுத்தும் விதமாக சான்றிதழ் வழங்கல்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்கம் விளையாட்டு போட்டி நடைபெற்றது. கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    சதுரங்கம் விளையாடும் போட்டியானது பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளைச் சார்ந்த மாணவ மாணவி்களை ஒன்றிணைப்பதுடன் வெல்வது மற்றும் தோல்வி அடைவது எப்படி என்று கற்றுக் கொள்வது கற்றுக் கொடுக்கிறது குழந்தைகள் தங்கள் செயல்களின் விளைவுகளை உணர உதவுகிறது.

    கவனத் திறமையை அதிகரிக்க உதவுகிறது. இவ்வாறான போட்டியை ஏற்பாடு செய்திருந்த பள்ளி தாளாளர் கார்த்திகேயனுக்கு மாணவர்களின் பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.

    போட்டியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் அனைவரையும் ஊக்கப்படுத்தும் விதமாக சான்றிதழ்கள் பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் வழங்கினார். சிறப்பாக செயல்பட்ட மாணவ-மாணவி்களுக்கு பதக்கங்களை வழங்கி கலந்து கொண்டு அனைத்து குழந்தைகளும் வெற்றியாளர்களே என்று தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் பள்ளி முதல்வர் அம்பிகாபதி வரவேற்றார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பான் கார்டு கிரெடிட் கார்டு, அவற்றின் பின் நம்பர் போன்ற விவரங்களை தாருங்கள்.
    • வெளிநாட்டில் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் நான் கூறும் வங்கி எண்ணில் பணம் செலுத்துங்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி சேர்ந்த ஒருவர் தனியார் கல்லூரியில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.

    அதில் உங்களது பான் கார்டு செயல் இழந்துவிட்டது.

    எனவே பான் கார்டு கிரெடிட் கார்டு , அவற்றின் பின் நம்பர் போன்ற விவரங்களை தாருங்கள். நாங்கள் சரி செய்து கொடுக்கிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனை உண்மை என்று நம்பிய கல்லூரி அதிகாரி, குறிப்பிட்ட எண்ணில் மர்ம நபர் கேட்ட விவரங்களை பதிவிட்டார்.

    இதனைத் தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் கல்லூரி அதிகாரியின் கிரடிட் கார்டில் இருந்து ரூ.2.63 லட்சம் எடுக்கப்பட்டதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    அந்த நம்பரை தொடர்பு கொண்டும் பலன் இல்லை. அப்போதுதான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்தார்.

    மற்றொரு சம்பவம்

    இதேபோல் பட்டுக்கோட்டை மணிபட்டினம் பகுதியை சேர்ந்த 39 வயது வாலிபர் ஒருவர் வெளிநாட்டில் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். இது தொடர்பாக பலரிடம் சொல்லி வைத்திருந்தார்.

    இந்த நிலையில் இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், நீங்கள் வெளிநாட்டில் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் நான் கூறும் வங்கி எண்ணில் பணம் செலுத்துங்கள்.

    உங்களுக்கு விசா வாங்கித் தருகிறேன். மருத்துவ சான்றிதழும் தயார் செய்து கொடுக்கிறேன் என பேசி இணைப்பை துண்டித்தார்.

    இதை உண்மை என்று நம்பிய அந்த வாலிபர் குறிப்பிட்ட வங்கி கணக்கில் ரூ.72 ஆயிரம் செலுத்தினார். ஆனால் பல நாட்களாகியும் அந்த நபரிடம் இருந்து எந்த ஒரு அழைப்பும் வரவில்லை .

    விசாவும் வந்து சேரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்த வாலிபர் குறிப்பிட்ட நம்பரை தொடர்பு கொண்டு பயனில்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்தார்.

    இந்த 2 சம்பவங்கள் குறித்தும் தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன் பேரில் ஏ.டி.எஸ்.பி. சுவாமிநாதன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் அந்தோணியம்மாள் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • வெற்றிபெற்ற பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், சேந்தமங்கலத்தில் இயங்கி வரும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக், மற்றும் மகரிஷி சிபிஎஸ்இ பள்ளி மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இணைந்து தேசிய கணிதம் மற்றும் அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக கல்பாக்கத்தின் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் சார்பாக மாபெரும் கண்காட்சி கடந்த 31 மற்றும் 01-ம் தேதி நடைபெற்றது.

    இவ்வாராய்ச்சி மையமானது தங்களுடைய அணு சக்தியின் மூலம் பல விதமான பயணிக்கிகளைக் கொண்டு இயங்கி வருவதன் பலனை விவரித்தார்கள்.

    மேலும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ/மாணவிகள் கண்காட்சிகளும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளும் இடம்பெற்று இருந்தது, மேலும் அறிவியல் மற்றும் கணிதத்தின் முக்கியத்துவத்தை கணினி திரை மூலமாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளித்தார்கள், முன்னதாக இக்கண்காட்சியினை வலியுறுத்தி திருவாரூர் நகராட்சி அலுவலகத்திலிருந்து இருந்து சேந்தமங்கலம் வரை மாணவ மாணவிகளின் விழிப்புணர் பேரணி நடைபெற்றது, மேலும் அறிவியல் மற்றும் கணிதம் துறை சார்ந்த போட்டிகளும் நடைபெற்றது,

    இ்வ் விழாவினை, மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், கல்லூரியின் தாளாளர். வெங்கடராஜலு, தொடங்கி வைத்தார்.

    விழாவின் முக்கிய விருந்தினர்களாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் செயலர் ஸ்ரீனிவாசன், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் வெங்கட்ராமன் மற்றும் ஜலஜாமதன்மோகன் (IGCAR) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    இந்நிகழ்ச்சியின் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், பள்ளி, மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 6000 மாணவ, மாணவிகள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    கண்காட்சி பொருட்களையும் அதன் செயற்பாட்டையும் மிக துள்ளிமாக அதன் உறுப்பினர்கள் பார்த்திபன், ராமன் ஆகியோர் விவரித்தனர்.

    திருவாரூர் மாவட்டத்திலுள்ள மாணவ, மாணவிகள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் இதன் பயன்பாட்டை நன்கு அறிந்து இவ்விதமான செயல்களை ஊக்குவிக்கும் வண்ணம் இருந்ததாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கல்வி குழுமத்தை பாராட்டினார்கள்.

    இவ்விழாவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது,

    இவ் விழாவிற்கு கல்லூரியின் செயலாளர் சுந்தர்ராஜ், முதன்மை செயல் அதிகாரி முனைவர் நிர்மலா ஆனந்த், ஆகியோர் தமது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்கள், இவ் நிகழ்வில் கல்லூரியின் இயக்குநர், விஜயசு ந்தரம், நிர்வாக அலுவலர் சீதா கோபாலன், கல்லூரி மற்றும் பள்ளியின் முதல்வர் சிவ குருநாதன், கலைமகள், சுமித்திரா, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள், ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் கணேசன், முனைவர் தமிழன்பன், நிர்மல், பாக்கியலட்சுமி ஆனந்தி, நெ ல்லிவனம், அருள் மேரி, முருகானந்தம், விஜயராகவன், நாகராஜன், ஜெகதீஷ், சுனில், மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் சிறப்பாக செய்திருந்தனர்.

    • மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும்போது ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி ஊர்வலம்.
    • ஊர்வலத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் வட்ட சட்ட பணிகள் குழு மற்றும் கும்பகோணம் போலீஸ்துறை சார்பில் பொதுமக்களிடம் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும்போது ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்பு ணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    கும்பகோணம் கோர்ட்டு வளாகத்தில் தொடங்கிய ஊர்வலத்தை கும்பகோணம் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவர்- மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சண்முகப்பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் முன்னிலை வகித்தார்.

    இதில் திரளானோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் கலந்துகொண்ட அனைவ ருக்கும் கும்பகோணம் உட்கோட்ட போலீஸ்துறை சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    • சங்கரன்கோவில் நகராட்சியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின்படி குப்பைகளை தரம் பிரித்து வழங்கியதில் சிறப்பாக செயல்பட்ட துப்புரவு பணியாளர்கள், மாணவ- மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • சான்றிதழ்களை நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சியில் தூய்மை நகரங்க ளுக்கான மக்கள் இயக்கத்தின்படி குப்பைகளை தரம் பிரித்து வழங்கியதில் சிறப்பாக செயல்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கும், வீடுகளில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து வழங்கிய கோமதி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    சான்றிதழ்களை நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் வழங்கினார். இதில் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) அரிகரன், சுகாதார அலுவலர் பாலச்சந்தர், கவுன்சிலர்கள் அலமேலு, செல்வராஜ், விஜயகுமார் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அத்தியாவசிய பொருள்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
    • 16 மகளிர் குழுவினருக்கு ரூ.15.60 லட்சத்துக்கான கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம் இரும்புதலை அருகே தென்னஞ்சோலை கிராமத்தில் பகுதிநேர பொதுவிநியோக அங்காடி தொடக்கவிழா நடைபெற்றது.

    அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன் தலைமை வகித்தார்.

    ஒன்றியக்குழு துணை தலைவர் தங்கமணி சுரேஷ்குமார், ஒன்றியகவுன்சிலர் வள்ளிவிவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இரும்புதலை ஊராட்சிமன்ற தலைவர் பாலாஜி அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் எஸ்.கல்யாணசுந்தரம் எம்.பி. கலந்து கொண்டு பகுதிநேர அங்காடியை திறந்து வைத்து அத்தியாவசிய பொருள்களை பொதுமக்களுக்கு வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து இரும்புதலை தொடக்க வேளாண் வங்கி சார்பில் 16 மகளிர் குழுவினர்க்கு ரூ.15.60 லட்சத்துக்கான கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் கூட்டுறவு சார்பதிவாளர் (பொதுவிநியோக திட்டம்) ஆனந்தகுமார், வட்ட வழங்கு அலுவலர் சிவக்குமார், இரும்புதலை தொடக்க வேளாண் வங்கி செயலர் சாமிநாதன், மாவட்ட கவுன்சிலர் ராதிகா, ஊராட்சி மன்ற தலைவர்கள் கிருஷ்ணவேணி கருப்பையன், கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் அமானுல்லா, ஊராட்சி மன்ற துணைதலைவர் மங்கையர்கரசி, ஊராட்சி செயலாளர் ஜெகத்குரு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு வங்கி பணியாளர்கள். கிராமமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஜாதி சான்றிதழ், வருமானம் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு வகையான சான்றிதழ்கள் பெற்று தரப்படும்.
    • கணினி செயலில் உள்ளீடு செய்தால் மாநகராட்சியால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதனை முன்னிட்டு தஞ்சாவூர் மாநக ராட்சி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று இ -சேவை மையம் தொடங்கப்பட்டது.

    இதனை ஆணையர் சரவணக்குமார் முன்னிலையில் மேயர் சண். ராமநாதன் திறந்து வைத்தார்.

    அப்போது அவர் கூறியதாவது :-

    இ சேவை மையத்தில் ஆதாரில் பெயர் மாற்றம், பிறந்த தேதி மாற்றம், முகவரி மாற்றம், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், குடும்ப தலைவர் மாற்றம், புதிய ரேஷன் கார்டு, அட்டை நகல், சிறுபான்மையினருக்கான உதவித்தொகை, முன்னாள் ராணுவத்திற்கான உதவித்தொகை, தேசிய கல்வி உதவித்தொகை பெறுதல், வேலைவாய்ப்பு பதிவு மற்றும் வேலை வாய்ப்பு பதிவை புதுப்பித்தல், ஜாதி சான்றிதழ், வருமானம் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு வகையான சான்றிதழ்கள் பெற்று தரப்படும்.

    பொது மக்களுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.

    தங்களது வார்டுகளில் ஏற்படும் அனைத்து விதமான கோரிக்கைகள் மீது தொடர்ந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுத்திடவும் சரி செய்திடவும் ஸ்மார்ட் தஞ்சை என்ற கணினி செயலில் உள்ளீடு செய்தால் மாநகராட்சியால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, கண்காணிப்பாளர் ஜெயக் குமார், செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன் மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • போட்டியில் 25-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
    • பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, பேராவூரணி வட்டார வள மையத்தில், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022-23 விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும்,சிகரம் தொட சிலேட்டை எடு என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது.

    போட்டியில் 25-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர்கள், அங்கயர்க்கண்ணி, கலாராணி ஆகியோர் தலைமை வகித்தனர்.

    வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகேசன் முன்னிலை வகித்தார்.

    ஒன்றியத்தில் உள்ள 15 வயதுக்கு மேற்பட்ட பள்ளி செல்லாதோருக்கான, கற்றல் கற்பித்தலை ஊக்குவிக்கும் வண்ணம், மேற்கண்ட தலைப்பிற்கு ஏற்றவாறு ஆசிரியர்கள் தங்களின் கருத்துக்களை கூறினர்.

    போட்டியில் சித்தாத்திக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கோவி. தாமரைச்செல்வன் முதலிடத்தை பெற்றார்.

    2-ம் இடத்தை பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சிவகாமியும், 3-ம் இடத்தை திருச்சிற்றம்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் மாரிமுத்து பெற்றனர்.

    3 ஆசிரியர்களுக்கும், பரிசு தொகையும், தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களால் வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியினை ஆசிரியர் பயிற்றுநர்கள் சரவணன் மற்றும் முனிராஜ் ஆகியோர் ஒருங்கிணைந்தனர்.

    முடிவில் ஆசிரியர் பயிற்றுநர் சிவமுருகன் நன்றி கூறினார். 

    • பரமக்குடியில் தென்னிந்திய கராத்தே போட்டி நடந்தது.
    • இதற்கான ஏற்பாட்டை தத்துக்குமார், முத்து கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் யூனிக் ஸ்போர்ட்ஸ் கராத்தே அகாடமி அண்ட் கிறிசின் கான் சித்தோரியோ கராத்தே பள்ளி சார்பில் தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. 8 வயது முதல் 21 வயது வரை பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. ஆயிரவைசிய சபைத் தலைவர் ராசி.என்.போஸ் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் எஸ்.கே.பி.லெனின்குமார், ஆயிர வைசிய மெட்ரிக் பள்ளி தாளாளர் முருகானந்தம், பொருளாளர் ராஜேஷ் கண்ணன் முன்னிலை வகித்தனர். கியோசி ரவி மற்றும் மாஸ்டர் கியோசி ராமமூர்த்தி, மாஸ்டர் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கோப்பைகள், சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி, தமிழ்நாடு உள்பட 1200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியினை ஆசிரியர் ஜெயபிரகாஷ் தொகுத்து வழங்கினார். இதற்கான ஏற்பாட்டை தத்துக்குமார், முத்து கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • போட்டியானது கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவிலில் இருந்து தொடங்கியது.
    • போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    சுவாமிமலை:

    உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கும்பகோணம் உட்கோட்ட காவல்துறை சார்பில் 10 முதல் 25 வயது வரை உள்ள பெண்களுக் கான மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.

    போட்டியை கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    போட்டியானது உச்சி பிள்ளையார் கோவில் அருகில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்து நிறைவடைந்தது.

    போட்டியில் முதல் 2 இடங்களை மயிலாடு துறையை சேர்ந்த பெண்களும், 3-ம் இடத்தை கும்பகோணத்தை சேர்ந்த பெண்ணும் பிடித்தனர்.

    அவர்களுக்கு கோப்பை, சான்றிதழ்களை கும்பகோணம் ரெட்கிராஸ் துணை சேர்மன் ரொசாரியோ முன்னிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் வழங்கினார்.

    மேலும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியை கும்பகோணம் போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் சரவணகுமார் ஒருங்கிணைத் ்தார்.

    இதில் ரெட்கிராஸ் நிர்வாகிகள் கணேசன், சிவக்குமார், ராமதாஸ், சபாபதி மற்றும் போலீசார், போக்குவரத்து போலீசார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு புடவை, பரிசுகளும் வழங்கப்பட்டன.
    • முடிவில் ஐ.டி. பிரிவு தலைவர் கார்த்திக் பாரத் நன்றி கூறினார்

    சுவாமிமலை:

    கும்பகோணம் கிழக்கு பா.ஜனதா சார்பில் கிழக்கு மாநகர தலைவர் பொன்ராஜ் தேவர் தலைமையில் மகளிர் தினவிழா நிகழ்ச்சி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு சான்றிதழ், கேடயங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.

    மேலும், 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு புடவை, பரிசுகளும் வழங்கப்பட்டன.

    விழாவில் சிறப்பு விருந்தினராக தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் சோழராஜன், மயிலை மாவட்ட பார்வையாளர் அண்ணாமலை, மாவட்ட செயலாளர் பசும்பொன் பாண்டியன், பட்டுக்கோட்டை மகளிர் நிர்வாகி குயிலி, ரோட்டரி கிளப் நிர்வாகிகள், மாவட்ட மகளிரணி தலைவர் சுனிதா, மாநகர மகளிரணி தலைவர் ரேவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கும்பகோணம் மாநகர பொதுச்செயலாளர் பொன்முடி செய்திருந்தார்.

    முடிவில் ஐ.டி. பிரிவு தலைவர் கார்த்திக் பாரத் நன்றி கூறினார்.

    இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • எதிர்காலத்தில் அரசு துறையின் உயர்பதவிகளுக்கு நீங்கள் உயர வேண்டும்.
    • உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோயிலில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்து பேசுகையில்:-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் 100 இடங்களில் தலா 1000 மாணவ- மாணவிகள்

    கலந்து கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சியை நடத்த ஆணையிட்டார். அதன்படி, இங்கு நடந்த நிகழ்ச்சியில் 14 கல்லூரிகளை சேர்ந்த 1000 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் தமிழ் மரபும் - நாகரிகமும், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூக பொருளாதார முன்னேற்றம், திசைதோறும் திராவிடம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தொழில் முனை–வுக்கான முன்னெடுப்புகள் ஊடகங்களின் தோற்றமும் வளர்ச்சியும், கணித தமிழ்வளர்ச்சி சவால்களும், சுற்றுலா வாய்ப்புகள், நூற்றாண்டு கண்ட கல்வி புரட்சி மற்றும் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தும் முறைகள் குறித்து சொற்பொழிவாளர்களை கொண்டு மாபெரும் தமிழ் கனவு சொற்பொழிவு நடைபெற்றது.

    மாணவ- மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் சொற்பொழிவாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார் மாபெரும் தமிழ் கனவு காணொளியை கண்டும் வரலாற்று சிறப்புகளை அறிந்து கொண்டு எதிர்காலத்தில் அரசு துறையின் உயர்பதவிகளுக்கு நீங்கள் உயர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக கல்லூரி வளாகத்தில் மாவட்ட நூலகத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த புத்தக கண்காட்சி, பள்ளி கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் திட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக சொற்பொழிவாளர்கள் அறிவுமதி, நந்தலாலா ஆகியோர் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினர்.

    அதனை தொடர்ந்து தமிழ் பெருமிதம் குறித்தும், கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளக்கம் தந்து மற்றும் வினாக்கள் கேட்ட 8 மாணவ- மாணவிகளுக்கு கலெக்டர் மகாபாரதி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், வருவாய் கோட்டாட்சியர்கள் யுரேகா, அர்ச்சனா, கல்லூரி நிர்வாக இயக்குனர் குடியரசு, பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×