என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Champai Soren"
- அமலாக்கத்துறை காவலில் இருப்பதாக தகவல்.
- அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் ராஜினாமா கடிதம் கொடுக்க ஆளுநர் மாளிகை சென்றதாக தகவல்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டிற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பலமணி நேரம் விசாரணை மேற்கொண்ட நிலையில், இன்று இரவு ஹேமந்த் சோரன் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார். இதனால் புதிய முதல்வராக சம்பாய் தேர்வாக உள்ளார்.
இந்த நிலையில் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்.பி. மஹுவா மஜி "ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையின் காவலில் (Custody) உள்ளார். அமலாக்கத்துறை அதிகாரிகளுடன்தான் ஹேமந்த் சோர்ன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய சென்றார். சாம்பாய் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட இருக்கிறார். எங்களுக்கு போதுமான எண்ணிக்கை உறுப்பினர்கள் உள்ளனர்" என்றார்.
அமலாக்கத்துறை காவலில் உள்ள ஹேமந்த் சோரன் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையால் ஹேமந்த் சோரனுக்கு நெருக்கடி.
- இதனால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் இருந்து வந்தார். இவருக்கு அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பி வந்தது. 10-வது முறையாக சம்மன் அனுப்பி இன்று அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் அவரது மனைவியை முதல்வராக்கலாம் என்ற செய்தி வெளியானது. இந்த நிலையில் ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார்.
அதன்படி இன்று இரவு ஹேமந்த் சோரன் ஆளுநர் மாளிகை சென்றார். அவருடன் கூட்டணியில் உள்ள கட்சிகளின் எம்.எல்.ஏ.-க்களும் ஆளுநர் மாளிகை சென்றனர். அப்போது ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்.
இதற்கிடையே ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை காங்கிரஸ் கட்சியும் உறுதி செய்துள்ளது. இந்தநிலையில் சம்பாய் சோரன், தன்னை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக் கோரி ஆளுநரிடம் உரிமைக்கோரியுள்ளார். தனக்கு 43 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பதற்கான கடிதத்தையும் வழங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஆளுநர் அழைப்புவிடுக்கும் நிலையில் புதிய முதல்வராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்