search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "charred saplings"

    • பாக்குத்தோலை, சாலையோரங்கள், மயானம், ஆறு, ஓடை, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள், பொது இடங்களில் கொட்டுவது வாடிக்கையாகி விட்டது.
    • இதுமட்டுமின்றி, இந்த பாக்குத்தோலை சிலர் தீ வைத்து எரிக்கவும் செய்கின்றனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில்

    விளையும் பாக்குக்காய்க ளை பதப்படுத்தி உற்பத்தி செய்யப்படும் 'கொட்டைப்பாக்கு' தமிழ கத்தில் வாசனை பாக்கு தயாரிப்பு நிறு வனங்களுக்கு மட்டுமின்றி, மஹா ராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பீஹார், குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களில் பான்ப ராக், பான் மாசாலா, குட்கா போன்ற பாக்கு பொருட்கள்

    தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகிறது.

    வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம், கொட்ட வாடி, குறிச்சி, பொன்னா ரம்பட்டி பகுதியில், பாக்குக்காய்க ளின் இருந்து கொட்டைப்பாக்கு பிரித்தெடுத்த பிறகு, எஞ்சிய பாக்குத்தோலை, சாலையோரங்கள், மயானம், ஆறு, ஓடை, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள், பொது இடங்களில் கொட்டுவது வாடிக்கையாகி விட்டது. இதுமட்டுமின்றி, இந்த பாக்குத்தோலை சிலர் தீ வைத்து எரிக்கவும் செய்கின்றனர். இதனால், சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, மழை காலத்தில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

    எனவே, பொது இடங்களில் பாக்குத்தோல் கொட்டு

    வதை தடுத்து, இவற்றை

    பதப்படுத்தி, ஊதுபத்தி, சாம்பிராணி, கொசு விரட்டிகள், கலப்பு உரம் தயாரிக்கவும், நாரை பிரித்தெடுத்து இன்னும் பிற மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வதற்கும், தோட்டக்கலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணைந்து வழிவகை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    பாக்குத் தோலை, பொது

    இடங்களில் கொட்டுவதை தவிர்க்கவும், முதற்கட்ட மாக இதனை பதப்படுத்தி எரிபொருளாக பயன்படுத்து வதற்கும், வட்டார வளர்ச்சி அலுவலர்களும், ஊராட்சி மன்றமும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார். ஆனால், இத்திட்டம் இதுவரை செயல்வடிவம் பெறவில்லை.

    வாழப்பாடி–தம்மம்பட்டி சாலையில் சிங்கிபுரம் மயா

    னத்தில் இருந்து சோமம்பட்டி ஏரிக்கரை வரை, சாலையின் இருபுற

    மும் பாக்குத் தோல் கொட்டப்படுவது வாடிக்கை யாக தொடர்ந்து வருகிறது. இதுமட்டுமின்றி, தீயிட்டு எரிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, புகை மூட்டம் ஏற்படுவதால், சாலையில் வாகனங்கள் செல்வது தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயமும் நீடித்து வருகிறது.

    இந்நிலையில், சாலை யோரத்தில் கொட்டப்பட்ட பாக்குத்தோல்களுக்கு வைக்கப்பட்ட தீயில், சாலையோரத்தில் பாது காப்பு வேலியுடன் நடப்ப ட்டிருந்த ஏராளமான மரக்கன்றுகள் கருகி உயிரிழந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த பசுமை ஆர்வலர்கள், பாக்குத்தோல் கொட்டி மாசு ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி தீயிட்டு கொளுத்தி மரக்கன்றுகள் உயிரிழந்ததற்கு காரண

    மானவர்களை கண்டறிந்து, சிங்கிபுரம் மற்றும்

    சோமம்பட்டி ஊராட்சி நிர்வாகமும், வாழப்பாடி உட்கோட்ட நெடுஞ்சா லைத்துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×