search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai"

    • திடீர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 35 விமான சேவைகள் பாதிப்பு.
    • பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    சென்னை புறநகர் பகுதிகளில் திடீர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 35 விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக திடீரென மேகங்கள் திரண்டு வந்து, மேகமூட்டத்துடன் இருளான சூழ்நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கடும் சூறைக்காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் தொடர் மழை காரணமாக 35 விமான சேவையில் தாமதம் ஏற்பட்டது. இதில் சென்னை வரும் 17 விமானங்களும், சென்னையில் இருந்து புறப்படும் 18 விமானங்களும் அடங்கும்.

    • தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
    • பலத்த காற்றுடன் மிதமான மழை இன்று பெய்யக் கூடும்.

    சென்னை:

    தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தென் னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் ஒரு சில இடங் களில் லேசான மழை பெய்யும்.

    புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை இன்று பெய்யக் கூடும்.

    கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மலை பகுதிகளில், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிதமான மழை செய்யக்கூடும். இடி, மின்னலுடன் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று பெய்த மழையால் வெப்பம் தணிந்தது. குளிர்ந்த காற்று வீசி வருகிறது. 5 மாதத்திற்கு பிறகு சென்னையில் 2 நாட்களாக மாலையில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • நாய் வளர்ப்பவர்கள் ரேபிஸ் தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.
    • நாய்களுக்கு குடற்புழு நீக்கத்துக்கான ஊசியும் போடப்பட்டது.

    சென்னை:

    சென்னையில் சிறுவர்-சிறுமிகளை தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் விரட்டி கடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. சமீபத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவனை 2 நாய்கள் கடித்து குதறின.

    கடந்த 1-ந்தேதி புழலில் 12 வயது சிறுவன் மற்றும் கே.கே.நகரில் 16 வயது சிறுவன் ஆகியோரை நாய்கள் கடித்தன. இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தன.

    இதையடுத்து தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள் மற்றும் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் நடவடிக்கையை சென்னை மாநகராட்சியும், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியமும் இணைந்து மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர். இதற்காக மெரினா கடற்கரையில் சுற்றித் திரிந்த நாய்களை பிடிக்கும் பணியில் நாய் பிடிப்பவர்கள் 15 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். 2 வண்டிகளில் அந்த நாய்கள் பிடிக்கப்பட்டன.

    இதில் 26 செல்லப் பிராணிகள் உள்பட 132 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது. மேலும் நாய்களுக்கு குடற்புழு நீக்கத்துக்கான ஊசியும் போடப்பட்டது. இதற்காக செல்லப் பிராணிகளை வளர்ப்ப வர்கள் தங்கள் செல்லப் பிராணிகளை அங்கு கொண்டு வந்திருந்தனர்.

    வளர்ப்பு நாய்களை பொது இடங்களுக்கு அழைத்து செல்வதற்கும், அதை வளர்ப்பதற்கான அனுமதியை பெறுவதற்கும் ரேபிஸ் தடுப்பூசி கட்டாயம் என்பதால் நாய் வளர்ப்பவர்கள் ரேபிஸ் தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.

    கடந்த மே மாதம் முதல் இதுவரை நாய் வளர்ப்பதற்காக 4,345 உரிமங்களை சென்னை மாநகராட்சி ஆன்லைன் மூலம் வழங்கியுள்ளது. மேலும் 2,196 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. 9,700 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

    • மேம்பாலம் அமைய உள்ள இடங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு.
    • இறுதிகட்ட அனுமதி கிடைத்தவுடன் மேம்பாலப்பணிகள் நடைபெறும்

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மக்கள் தொகை பெருக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வாகனங்களின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்து உள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வாகன நெரிசலை தடுக்கும் வகையில் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் கோயம்பே ட்டில் செயல்பட்டு வந்த பஸ்நிலையமும் தற்போது கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. இதனால் தற்போது தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் கூடுதலாக வாகன நெரிசல் ஏற்பட்டு வருகின்றன.

    இதனை தடுக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஜி.எஸ்.டி. சாலையில் வண்டலூர் சந்திப்பில் இருந்து காட்டாங்கொளத்தூர் வரை முதல் கட்டமாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கான கட்டுமான பணிகள் இந்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    இந்த நிலையில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 6 வழிச்சாலையாக சுமார் 27 கி.மீட்டர் தூரத்திற்கு உயர் மட்டமேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ரூ.3523 கோடி செலவில் இந்த மேம்பாலம் பெருங்களத்தூரில் இருந்து தொடங்கி பரனூர் சுங்கச்சாவடிக்கு முன்பு முடிக்க திட்டமிட்டு இருந்தனர். இதனால் அதிகப்படியான செலவு மற்றும் கூடுதல் சுங்ககட்டணம் வசூலிக்கும் நிலை இருந்தது.

    இதற்கிடையே தாம்பரம்- செங்கல்பட்டு இடையேயான 27 கி.மீட்டர் உயர்த்தப்பட்ட மேம்பால திட்டத்தை கைவிட தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்து உள்ளது. இதற்கு பதிலாக ஜி.எஸ்.டி.சாலையில் முக்கியமான சாலை சந்திப்புகளில் கூடுதலாக மேம்பாலங்கள் கட்ட திட்டமிட்டு உள்ளது. ஏற்கனவே முக்கிய சந்திப்புகளான வண்டலூர் மற்றும் பெருங்களத்தூரில் மேம்பாலங்கள் உள்ளன.

    இதைத்தொடர்ந்து வண்டலூர் அருகே கிளாம்பாக்கம், அய்யஞ்சேர சந்திப்பு முதல் பொத்தேரி வரை சுமார் 7 கி.மீட்டர் தூரத்திற்கு உயர்த்தப்பட்ட மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் வாகனங்கள் ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மற்றும் காட்டாங்கொளத்தூ ருக்கு செல்லாமல் பயணம் செய்யமுடியும். இதற்கான திட்டமதிப்பீடு மற்றும் மேம்பாலம் அமைய உள்ள இடங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இறுதிகட்ட அனுமதி கிடைத்தவுடன் மேம்பாலப்பணிகள் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதேபோல் மறைமலைநகர், போர்டு தொழி ற்சாலை, சிங்கப்பெ ருமாள்கோவில், மற்றும் மகேந்திராசிட்டி பகுதியிலும் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்ட மிடப்பட்டு உள்ளது. இது 6 வழிப்பா தையாக அமைய உள்ளன. இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்களுக்கு விடிவு பிறக்கும்.

    • வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி மற்றும் மந்தமாக இருப்பதாக தகவல்.
    • முதல் சுற்று முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

    மத்திய சென்னையில் பல பகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி மற்றும் மந்தமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 10 நிமிட இடைவெளியில் 6 தொகுதியில் இருந்து பெட்டிகள் எடுக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

    முதல் சுற்றின் போது வில்லிவாக்கம் பகுதியில் உள்ள 12-வது தெருவில் வாக்கு எண்ணும் எந்திரம் பழுதானதால் வேறு எந்திரம் மாற்றப்பட்டதிலும் கால தாமதம் ஏற்பட்டது. இதனால் முதல் சுற்று முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

    அதேபோல ஆயிரம்விளக்கு தொகுதி 2-வது சுற்று பணி ஆரம்பிக்கும் போது 4-வது மேஜையில் உள்ள மின்னணு வாக்கு எந்திரம் பழுதானது. அதையும் சீர்செய்யும் பணி நடைபெற்றதால் அதேபோன்று காலதாமதம் ஏற்பட்டது.

    அதனைத்தொடர்ந்து 3-வது சுற்றில் துறைமுகம் தொகுதியில் 8-வது மேஜையில் உள்ள மின்னணு வாக்கு எந்த பழுதானது. சீர் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற மின்னணு பழுது காரணமாக சரியான ஒருங்கிணைப்பு இல்லாததாலும் வாக்கு எண்ணும் பணி மந்தமாக நடைபெற்றது.

    காலை 10 மணிவரை ஒரு சுற்று முடிவு மட்டுமே அறிவிக்க முடிந்தது. ஒவ்வொரு சுற்று முடிவும் அறிவிக்கப்படுவதற்கு முன்பு பெயர்பலகையில் வாக்காளர்களின் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்ட பின்னரே 2-வது சுற்று தொடங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

    • 50 மி.லி. அளவில் தாய்ப்பால் அடைத்து வைக்கப்பட்டிருந்த 180 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • 50 மி.லி. தாய்ப்பால் ரூ.900 முதல் ரூ.1239 வரை விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை அரும்பாக்கம் ஆர்.கே. பார்மா நிறுவனத்தில் தாய்ப்பால் பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்வதை அறிந்து உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையின்போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 50 மி.லி. அளவில் தாய்ப்பால் அடைத்து வைக்கப்பட்டிருந்த 180 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    தாய்ப்பாலை பவுடராக மாற்றி ஷேஷேயிலும் அடைத்து விற்பனை செய்வதும், 50 மி.லி. தாய்ப்பால் ரூ.900 முதல் ரூ.1239 வரை விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாதவரத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அரும்பாக்கத்தில் தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    • சுமார் 18 ஆண்டுகள் தமிழக முதல்வராகவும் இருந்துள்ளார்.
    • கலைஞரின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் 101-வது பிறந்த நாள் இன்று எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதையொட்டி அண்ணா அறிவாலயம், கோபாலபுரம் இல்லம், கருணாநிதியின் நினைவிடம் உள்ளிட்ட பகுதிகளில் மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் இல்லம் சென்று கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வணங்கினார். அவருடன் மு.க. தமிழரசு, அமிர்தம், செல்வி, கனிமொழி எம்.பி., அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன், மாவட்டச் செயலாளர், நே.சிற்றரசு மற்றும் அமைச் சர்களும் மரியாதை செலுத்தினார்கள்.

    அதன்பிறகு மெரீனா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத் துக்கு சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி வணங்கினார்.

    • சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் முகமது அலி (வயது 30). சினிமா தயாரிப்பாளரான இவர், சென்னை கீழ் அயனம்பாக்கத்தில் அலுவலகம் நடத்தி வருகிறார்.
    • மகளிர் போலீஸ் நிலையத்தில் சினிமா தயாரிப்பாளர் முகமது அலி மீது அந்த இளம்பெண் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்.

    சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் முகமது அலி (வயது 30). சினிமா தயாரிப்பாளரான இவர், சென்னை கீழ் அயனம்பாக்கத்தில் அலுவலகம் நடத்தி வருகிறார். இந்த அலுவலகத்தில் கொரட்டூர் பகுதியை சேர்ந்த 28 வயது இளம்பெண், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வேலைக்கு சேர்ந்தார்.

    இந்தநிலையில் அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சினிமா தயாரிப்பாளர் முகமது அலி மீது அந்த இளம்பெண் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்.

    அதில், "முகமது அலி தனக்கு திருமணம் ஆனதை மறைத்து, என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறினார். எனக்கு குளிர்பானத்தில் மயக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார். அதனை வீடியோவாக பதிவு செய்து கொண்டார்.

    இதில் கர்ப்பமான எனக்கு, சத்து மாத்திரைகள் எனக்கூறி கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி கொடுத்து கருவை கலைத்தார். கருக்கலைப்பு குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் எனவும், என்னை பாலியல் பலாத்காரம் செய்தபோது எடுத்த வீடியோவை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.5 லட்சம் கேட்டும் மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த புகாரில் அந்த பெண் கூறி இருந்தார்.

    அதன்பேரில் அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் இளம்பெண்ணின் குற்றச்சாட்டுகள் உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து சினிமா தயாரிப்பாளர் முகமது அலி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • 'இந்தியன் 2' திரைப்படம் அடுத்த மாதம் 12-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பல தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

    இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை 28 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் சங்கர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் கமல் ஹாசன், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. 'இந்தியன் 2' திரைப்படம் அடுத்த மாதம் 12-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பல தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலிப்குமார், சிம்பு மற்றும் பலர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டனர்.

    இசைவெளியீட்டு விழாவில் சிம்பு "கமல்ஹாசன் சார் தான் என்னோட ஸ்கிரீன் குரு, அவரோட தக் லைஃப் படத்துல் வேலை செய்றது ரொம்ப அதிர்ஷடமா நான் பாக்குறேன், நான் இந்தியன் 1 ஓட மிகப் பெரிய ரசிகன், இந்திய 2, இந்தியன் 3 அப்பறம் கேம் சேஞ்சர் படம் பன்ற ஷங்கர் சாருக்கு ஹாட்ஸ் ஆஃப்" என்று கூறினார்.

    பின் ரசிகர்களிடம் "மக்கள் எல்லாரும் என்னைய வெயிட் குறச்சிட்டாரு , டிரான்ஸ்ஃபார்ம் ஆயிட்டாரு எல்லாம் சொல்றாங்க ஆனா அதுக்கும் மேல இது ஆன்மிகம் சார்ந்த விஷயம், நம்ம கூட இருக்கறவங்க எல்லாரும் ஒரு நாள் நம்மல விட்டுட்டு போயிடுவாங்க, நம்ம முடி கூட கொஞ்ச நாளுல கொட்டிடும், ஆனா எப்பொழுதும் நம்ம கூட இருக்க ஒரே விஷயம் நம்ம உடம்புதான் அத நம்ம நல்லா பாத்துகணும்" என்று கூறினார்.

    பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் சிம்பு பேசியதாது, 'தக் லைப்' படப்பிடிப்பை முடித்துவிட்டுதான் இங்கு வந்திருக்கிறேன். அடுத்து, 'எஸ்.டி.ஆர்.48' படமும் தொடங்கும். உலகிலேயே அதிக கஷ்டப்படும் ஆள் யார்னா அது உண்மையை வெளிப்படையாக பேசுகிறவர்கள்தான்.

    நானும் அதில் ஒருவன். மக்களவை தேர்தல் சமயத்தில் நான் படப்பிடிப்பில் இருந்தேன். சூட்டிங் கேன்சல் செய்துவிட்டு வரும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது. ஆனால், ஓட்டுப் போட வராதது எனக்கு வருத்தம்தான். பின் தயாரிப்பாளர் சங்கம் எனக்கு ரெட் கார்டெல்லாம் தரவில்லை, அது எனக்கும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கும் ஒரு சிறிய பிரச்சனை அதை நாங்கள் இப்பொழுது சரி ஆக்கிவிட்டோம்', என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பத்து நாட்களுக்கு சுமார் 120 விமானங்கள் ரத்து.
    • பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் டெல்லி ஐதராபாத், சீரடி, கோவா, அந்தமான் உட்பட பல்வேறு நகரங்களுக்கு விமானம் இயங்கி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முதல் வருகிற 10-ந் தேதி வரை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அனைத்து நகரங்களுக்கும் செல்லும் விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது. இன்று காலை சீரடி, அந்தமான் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல ஏற்கனவே முன்புதிவு செய்து இருந்தவர்கள் பயணம் செய்ய வந்தனர். அவர்களை பாதுகாப்பு வீரர்கள் அனுமதிக்கவில்லை. 10-ந் தேதி வரை ஸ்பைஸ் ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து ஒரு நாளைக்கு அந்த நிறுவனத்தின் 12 விமானங்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகிறது.

    பத்து நாட்களுக்கு சுமார் 120 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட விமான நிர்வாகம், நிர்வாக சீர்திருத்தம் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

    • படிக்கும் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு.
    • பள்ளிக் கல்வித் துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

    சென்னை:

    படிக்கும் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்குகளை பள்ளிகளிலேயே தொடங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

    1-ம் வகுப்பு முதல் 12-ம் வப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக உதவி தொகைகள் மற்றும் ஊக்க தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த உதவித்தொகைகள் மாணவ-மாணவிகளுக்கு குறித்த நேரத்தில் நேரடியாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் மாணவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் செலுத்திடும் முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

    இதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வங்கி கணக்கு கட்டாயம் தேவைப்படுவதால் இந்த சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    அந்தந்த பகுதியில் உள்ள தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களின் மேற்பார்வையில் வங்கி கணக்குகள் தொடங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 922 கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப் பட்டு வருகிறது.
    • 29 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    சென்னை மாவட்டத்தில் உள்ள வடசென்னை பாராளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் ராணிமேரி கல்லூரியிலும், மத்திய சென்னையில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரியிலும், தென்சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக் கழகத்திலும் நாளை மறுநாள் (4-ந் தேதி) எண்ணப்பட உள்ளன.

    இந்த 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் வைக்கப் பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை 1,384 பாதுகாப்புப் படைவீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாத்து வருகின்றனர். மேலும், வட சென்னையில் 280, தென் சென்னையில் 342, மத்திய சென்னையில் 300 என மொத்தம் 922 கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப் பட்டு வருகிறது.

    வாக்கு எண்ணும் பணியில் வடசென்னையில் 357 பேர், தென் சென்னை யில் 374 பேர், மத்திய சென்னை யில் 380 பேர், 322 அலு வலக உதவியாளர்கள் என மொத்தம் 1,433 பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர்.

    வாக்கு எண்ணிக்கைக் காக 3 பாராளுமன்றத் தொகுதிகளிலும் சட்டப்பேரவை தொகுதி வாரியாக 14 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. சோழிங்கநல்லூர் தொகுதியில் மட்டும் 30 மேசைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    தபால் வாக்குகளை எண்ணுவதற்காக 29 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் வட சென்னை பாராளுமன்ற தொகுதி உள்ளிட்ட 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

    தேர்தல் ஆணைய விதிகளின்படி, வாக்கு எண்ணும் மையங்கள் தயார் நிலையில் உள்ளதா? என தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் கேட்டு அறிந்தார். தேர்தல் ஆணைய விதிகளின் படி முதலில் தபால் வாக்குகளை எண்ண வேண்டும் என்றும், எந்த கட்சியும், வேட்பாளரும் ஆட்சேபிக்காத வகையில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் அதிகாரி களுக்கு அறிவுறுத்தினார்.

    இதற்கிடையே தபால் வாக்குகள் இறுதியாக எண்ணப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாகக் கூறப்படும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆா.எஸ்.பாரதி, மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் கடந்த 31-ந் தேதி மனு அளித்திருந்தார்.

    இந்நிலையில் மாவட்ட தேர்தல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    தேர்தல் ஆணைய விதிகளின்படி, வாக்கு எண்ணும் பணி தொடங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரம் வரை தேர்தல் நடததும் அதிகாரியால் பெறப்பட்ட அனைத்து தபால் வாக்குகளும் எண்ணப்படும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். 30 நிமிடங்களுக்கு பிறகுதான் வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×