என் மலர்
நீங்கள் தேடியது "Children"
- டைப்-2 சர்க்கரை நோயை உருவாக்கும் என்று தெரியவந்துள்ளது.
- மூளையின் செயல்பாடு பாதிக்கப்பட்டு அறிவாற்றல் வளர்ச்சி குறைகிறது.
அமெரிக்காவில் நடத்திய ஒரு ஆய்வில் குழந்தைகளுக்கு இளம் வயதில் அதிக அளவில் இனிப்பு கலந்த உணவுகளை உண்ண தருவது அவர்கள் வாழ்நாள் முழுவதும் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக, குழந்தைகளுக்கும் சிறுவர் சிறுமியர்களுக்கும் இனிப்புகளை தொடர்ந்து தரும்போது அதிக உடல் பருமன், இளம் வயதிலேயே ரத்த அழுத்தம் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயை உருவாக்கும் என்று தெரியவந்துள்ளது.
அமெரிக்க குழந்தைகள் சராசரியாக 17 தேக்கரண்டி சர்க்கரையை தினமும் உட்கொள்வதாக அந்த நாட்டின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது எதிர்காலத்தில் மிக மோசமான உடல் பாதிப்புகளை கொண்ட சமுதாயத்தை உருவாக்கும் என்று உணவு துறை நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
அதிகப்படியான சர்க்கரை உணவில் தொடரும்போது சிறுமிகள் முந்தைய பருவம் அடைதல் மற்றும் டைப்-2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது. சிறுவயதில் அதிக அளவில் இனிப்புகளை உட்கொள்வதால் கல்லீரல் செயல்பாடு கடுமையாக பாதிக்கப்படுவதுடன், மூளையின் செயல்பாட்டையும் பாதித்து அறிவாற்றல் வளர்ச்சி குறைகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
பொதுவாக, இனிப்பு என்பது சீனி, சர்க்கரை மட்டுமின்றி பதப்படுத்தப்பட்ட தானியங்கள் முதல் பழச்சாறுகள் வரை அனைத்திலும் கலந்திருப்பதால் பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களை குறைத்துக்கொள்வது உடல் நலனுக்கு நல்லது என்று அமெரிக்கா மட்டுமின்றி உலகின் பல்வேறு ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
- 2 நாட்களுக்கு நிலவேம்பு கசாயம் எடுத்துக் கொள்வது நல்லது.
- குழந்தைகளுக்கு 30 மில்லியும், பெரியவர்களுக்கு 50 மில்லியும் பருக வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக மழைக்காலத்தில் காய்ச்சல் வருவதை தடுக்க முன்னெச்சரிக்கையாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை முதன்மை மாவட்ட நீதிபதி மதுசூதனன் தொடங்கி வைத்து, அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கினார்.
இதில் நீதிமன்றத்திற்கு வரும் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கூடுதல் சார்பு நீதிபதி முருகன், வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சசிகுமார், மனித உரிமைகள் ஆணையம் அரசு குற்றவியல் சிறப்பு வழக்கறிஞர் விவியன் அசோக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது கல்லுக்குளம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கூறும்போது, மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு காய்ச்சல் வருவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 நாட்களுக்கு நிலவேம்பு கசாயம் எடுத்துக் கொள்வது நல்லது.
குழந்தைகளுக்கு 30 மில்லியும், பெரியவர்களுக்கு 50 மில்லியும் பருக வேண்டும். காய்ச்சல் உள்ளவர்கள் தொடர்ந்து 5 நாட்களுக்கு நிலவேம்பு கசாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
- பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட குழந்தைகள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.
- உணவு சாப்பிட்ட 7 குழந்தைகள் உள்பட 9 பேரும் கீழக்கரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள தில்லையேந்தல் ஊராட்சி பனையங்கால் பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு நேற்று குழந்தைகள் தர்ஷன் (வயது 4), காவ்யா (4), ரெனீஸ் வருண் (3), பெத்ரு பாண்டியன் (2), ஜான்சன் (2), தன்சிகா (2), மிகாயான் (2) ஆகியோர் தக்காளி சாதம் சாப்பிட்டுள்ளனர். மேலும் அங்கு சென்றிருந்த பெற்றோர் தேவிகா (30), ஜென்சியா (27) ஆகியோரும் உணவை ருசித்துள்ளனர்.
அப்போது உணவில் பல்லி இறந்து கிடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து குழந்தைகள் அதனை சாப்பிட வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது. உணவு சாப்பிட்ட 7 குழந்தைகள் உள்பட 9 பேரும் கீழக்கரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு தலைமை டாக்டர் ஜவாஹிர் உசேன் தலைமையில் மருத்துவர்கள் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு வருகை தந்து குழந்தைகளின் பெற்றோர்களிடம் நலம் விசாரித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பனையங்கால் அங்க ன்வாடி மையத்தில் 10 குழந்தைகள் படித்து வருகின்றனர். இன்று 7 குழந்தைகள் வருகை புரிந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கும் வகையில் 4 குழந்தைகளுக்கு உணவு பரிமாறி 5-வது குழந்தைக்கு உணவு பரிமாற செல்லும் போது உணவில் பல்லி இருப்பது கண்டறியப்பட்டு உணவு பரிமாறுவது நிறுத்தப்பட்டது.
உணவு சாப்பிட்ட குழந்தைகளை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதுடன் அனைத்து குழந்தைகளும் நலமுடன் உள்ளார்கள். யாரும் எவ்வித அச்சமும் கொள்ளத்தேவையில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் ஜவாஹீர் உசேன் கூறுகையில், அங்கன்வாடியில் பல்லி விழுந்த உணவு சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 7 குழந்தைகள் உட்பட 9 பேர் நலமாக உள்ளனர் என்றார்.
- திருப்பூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்து வருகிறது.
- நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
திருப்பூர் :
உடுமலைப்பேட்டை அமராவதி அணை மற்றும் அதன் நீர் பிடிப்பு பகுதிகளில்வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள்எச்சரிக்கையாக இருக்குமாறு திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்து வருகிறது. அதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில், இம்மாவட்டங்களை ஒட்டியுள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் திருப்பூர் மாவட்டத்திலும் சில பகுதிகளில் பருவமழை பெய்து வருவதன் மூலம் மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் திருப்பூர், திருவள்ளூர், இராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி அணை மற்றும் அதன் நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகளவு இருந்து வருகிறது. அமராவதி அணையின் முழு கொள்ளவான 90 அடியினை எட்ட உள்ள நிலையில், உபரி நீர் அமராவதி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்னும் அதிகமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அமராவதி ஆற்றின் கரையோரம் மற்றும் இதர தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் பாதுகாப்பாக இருக்குமாறும், பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டு, ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு ஒலிபொருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் குழந்தைகளை நீர்நிலைகளில் குளிப்பதற்கோ, விளையாடுவதற்கோ அனுமதிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக நொய்யலாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகளவில் உள்ளதால், நல்லாற்றின் குறுக்கே அமைந்துள்ள சர்க்கார் பெரியபாளையம் குளத்திற்கும், நொய்யல் ஒரத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திற்கும் மற்றும் முத்தூர் கதவணைக்கும் எந்த நேரத்திலும் மேலும் வெள்ள நீர் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
நொய்யல் ஆற்றின் கரையோரம் மற்றும் இதர தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் பாதுகாப்பாக இருக்குமாறும், பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ, செல்போன் மூலம் செல்பி எடுக்கவோ முற்றிலும் தடை விதிக்கப்பட்டு, ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு ஒலிப்பொருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது
- மவுண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியில்
புதுக்கோட்டை,
மவுண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா பள்ளியின் தலைவர் டாக்டர் ஜோனத்தன் ஜெயபரதன், இணைத்தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன் தலைமையில், முதல்வர் ஜலஜாகுமாரி முன்னிலையில் நடைபெற்றது.
பள்ளியின் தலைவர் குழந்தைகளுக்கு வாழ்த்து கூறி அனைவரையும் வரவேற்று வரவேற்புரையும், வாழ்த்துரையும் வழங்கினார். அதனை தொடர்ந்து ஆசிரியர்கள் கலைநிகழ்ச்சிகள் மூலம் மாணவ, மாணவிகளை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தனர்.
இணைத்தலைவர் பேசும் போது, மாணவர்கள் தெளிந்த சிந்தனையோடு , கற்பதை ஆழமாக கற்று , சாதனை ஒன்றை நோக்கமாக கொண்டு, இலக்கு நோக்கி நேர்கொண்ட பாதையில் பயணிக்க வேண்டும். நன்மை தீமை என்ற இரண்டு பக்கங்கள் கொண்ட வாழ்க்கையில் நன்மையை பற்றிக் கொண்டு , தீமையில் இருந்து விலகி நடக்க வேண்டும் என்றார்.
ஆசிரிய ஆசிரியைகளின் தனித்திறமைகள் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு நிகழ்வாக இருந்தது என்று கூறி, பள்ளியின் முதல்வர் நன்றியுரை கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
- ஆரம்ப கட்டத்திலேயே மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிதல்.
- குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் வேண்டும்.
சுவாமிமலை:
மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி சுவாமிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
பேரணியில் 6 முதல் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு ஆரம்ப கட்டத்திலேயே மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிதல், அக்குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் ஆகியவைகளை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி, முழக்கங்கள் எழுப்பினர்.
இதில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர், சிற்றுண்டி வழங்கப்பட்டது.
- மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சமூகத்தில் சமவாய்ப்பு வழங்க வேண்டும் என்றனர்
- விழிப்புணர்வு பேரணியில் முழக்கம்
பெரம்பலூர்:
மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவும், சமூகத்தில் சமவாய்ப்பு வழங்கவும் விழிப்புணர்வு பேரணி"
பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உள்ளடக்கிய திட்டக்கூறின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவர்களை பள்ளியில் சேர்க்கவும், சமூகத்தில் சமவாய்ப்பு வழங்கும் பொருட்டு விழிப்புணர்வு பேரணி சத்திரமனை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
விழிப்புணர்வு பேரணிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தலைமை வகித்து கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன், பள்ளி தலைமை ஆசிரியர் தமயந்தி, பள்ளி மேலாண்மை குழு தலைவி வீரமணி, மாவட்ட உள்ளடக்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் பாரதிதாசன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி, வட்டார கல்வி அலுவலர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்பேரணி போஸ்ட் ஆபீஸ் தெரு, சிவன்கோவில் தெரு மற்றும் பஸ்ஸ்டாண்ட் வழியாக விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி சென்று மாற்றுத்திறன் மாணவர்களை பள்ளியில் சேர்த்தல், சமூகத்தில் சமவாய்ப்பு வழங்குதல், மாற்றுத்திறனாளி மாண வர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள், திட்டங்கள் குறித்தும், ஊனம் ஒரு தடையல்ல,ஊன்றுகோலாய் நாமிருந்தால், சிந்தனையில் மாற்றம் சமூகத்தின் ஏற்றம், இணைவோம் மகிழ்வோம் போன்ற வாசகங்களை கோஷமிட்டு மாணவர்கள் சென்றனர். இதில் 150 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் சுப்ரமணியன், குணசேகரன், கலைவாணன், ரமேஷ், ரமேசு, ஜனனி, சிறப்பு பயிற்சியாளர்கள் மரகதவல்லி, துர்கா, ராணி பரிமளா, ரூபி, தனவேல், இயன்முறை மருத்துவர் குமரேசன் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியர் செல்வராஜ் மற்றும் சிறப்பு பயிற்சியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர். முடிவில் வட்டார உள்ளடக்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.
- சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சிறார் நிதி-குழந்தைகள் உரிமைகள் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- கேந்திர வித்யாலயா பள்ளி மாணவ-மாணவிகள் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சிவகங்கை கேந்திர வித்யாலயா பள்ளியில் சிறார் நிதி மற்றும் குழந்தைகள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் சார்பு நீதிபதி பரமேசுவரி தலைமையில் நடந்தது.
முகாமில் அவர் பேசியதாவது:-
மாணவர்கள் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இன்றைய மாணவர்கள் தன்னைவிட வேறு ஆள் இல்லை என்பது போன்ற தவறான புரிதல் மூலம் தங்களை வீணாக்கி கொள்வதுடன், பெற்றோர்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி விடுகிறார்கள்.
மாணவர் சமுதாயம் சீரழிந்து வருவதை தடுக்கும் வகையில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறது. மாணவர்கள் சிறந்த முறையில், ஒழுக்கத்துடன் நல்ல முறையில் கல்வி கற்று சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைந்து, சமுதாயத்தில் ஒவ்வொருவரும் தனித்தன்மையில் சேவை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்த், யோகா மருத்துவர் தங்கம், உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணக்குமார், பள்ளி முதல்வர் ஜான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கேந்திர வித்யாலயா பள்ளி மாணவ-மாணவிகள் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகின்றன.
- முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது என ஆளுநர் தலைமையில் நடைபெற்ற மேலாண்மை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: -
சேலம் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் அறிவது, தொகுப்பு நிதியின் மாநில மேலாண்மை குழுக் கூட்டத்தில் தமிழக ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கு கல்வி மேம்பாட்டு நிதியுதவியாக (கல்வியுதவி தொகை) 1 முதல் 5-ம் வகுப்பு வரை ரூ.2,000-மும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு ரூ.4,000-மும், 9 முதல் 10-ம் வகுப்பு வரை ரூ.5,000-மும், 11 முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.6,000-மும் உயர்த்தி வழங்கிட முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கலை பன்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது
- ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது
புதுக்கோட்டை:
ஆலங்குடியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வளமையம் திருவரங்குளம் ஒன்றியம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கலை திறன்களை வெளிக்கொணரும் ஒருங்கிணைந்த கலை மற்றும் பன்பாடு நிகழ்ச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் தங்கமணி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர்கள். குளோரியாமேரி, வசந்த அருவி இய ன் முறை மருத்துவர் செந்தில்செல்வன், திருவரங்குளம் ஒன்றிய காளிமுத்து கோகிலேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- கைக்குழந்தைகளுடன் பெண்கள் பிச்சை எடுப்பதாக சைல்டு லைன் டிரஸ்ட் அமைப்பிற்கு புகார்கள் வந்ததன.
- பல்லடம் போலீசில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் நால்ரோடு, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கைக்குழந்தைகளுடன் பெண்கள் பிச்சை எடுப்பதாக, சைல்டு லைன் டிரஸ்ட் அமைப்பிற்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து பல்லடம் போலீசில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் மகளிர் போலீசார் நால்ரோடு பகுதியில் கைக்குழந்தைகளுடன் இருந்த கர்நாடகாவை சேர்ந்த லட்சுமி , ரோசன்பாய் ஆகிய 2 பெண்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோருக்கும் அபராதம் என மதுரை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- தொழிலாளர் துறை, சைல்டு லைன் (1098), பென்சில் போர்ட்டல் (www.pencil.gov.in) ஆகியவற்றில் தகவல் தெரிவிக்கலாம்.
மதுரை
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தொழிலாளர் துறை அரசு முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் உத்தரவிட்டார்.
அதன்படி மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் அறிவுரைப்படி மதுரை கூடுதல் தொழிலாளர் கமிஷனர் குமரன், இணை கமிஷனர் சுப்பிரமணியன் வழிகாட்டுதலின்படி மதுரை பள்ளிக் கல்வித்துறை உதவி யுடன் நவம்பர் 14-ந் தேதி குழந்தைகள் தினம் அன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தொடர்பாக மாணவ-மாணவிகள் இடையே பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடி- வினா போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் அனீஷ்சேகர் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் தொழிலாளர் துறை, அனை வருக்கும் கல்வி இயக்க அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி கூறுகையில், 14 வயது நிரம்பாத குழந்தைகளை வேலையிலும், 18 வயது நிரம்பாதவர்களை அபாய மான தொழிலிலும் ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டு உள்ளது. அதனை மீறுவோருக்கு ரூ.50 ஆயிரம் அல்லது 2 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்க சட்டத்தில் வழி உள்ளது.
மேலும் குழந்தைகளை வேலை செய்ய அனுமதிக்கும் பெற்றோருக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க இயலும். எனவே குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தப்படுவது பற்றி ஏதேனும் தெரியவந்தால் தொழிலாளர் துறை, சைல்டு லைன் (1098), பென்சில் போர்ட்டல் (www.pencil.gov.in) ஆகியவற்றில் தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.