search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cinema theater guard"

    திருச்செந்தூர் அருகே சினிமா தியேட்டர் காவலாளியை தாக்கியது குறித்து 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே உள்ள மேல அரசூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 29). இவர் திருச்செந்தூரில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று மாலையில் தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த 5 பேர் தியேட்டரின் கேட்டை திறந்து உள்ளே வர முயன்றனர்.

    அவர்களை காவலாளி பார்த்திபன் தடுத்துள்ளார். அப்போது அவரை அந்த நபர்கள் குடி போதையில் அடித்து உதைத்துள்ளனர். இது குறித்து பார்த்திபன் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேர் கும்பலை தேடி வருகின்றனர். #tamilnews
    ×