என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector Survey"

    • புதுஅத்திக்கோம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் பணிகளை கலெக்டர் பூங்கொடி ஆய்வு மேற்கொண்டார்.
    • காலை உணவு சுத்தமாகவும், சுகாதார மாகவும், குழந்தைகள் விரும்பி உண்ணும் வகையில் தயாரித்து வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே புதுஅத்திக்கோம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் பணிகளை கலெக்டர் பூங்கொடி ஆய்வு மேற்கொண்டு தெரிவித்த தாவது:-

    திண்டுக்கல் மாவட்ட த்தில் இத்திட்டத்தின் வாயிலாக ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த 1068 பள்ளிகளில் பயிலும் 54,666 மாணவ, மாணவிகளுக்கும், நகர்ப்புறங்களைச் சேர்ந்த 43 பள்ளிகளில் பயிலும் 3,664 மாணவ, மாணவி களுக்கும் என மொத்தம் 1111 பள்ளிகளில் பயிலும் 58,330 மாணவ-மாணவி கள் பயனடைந்து வருகின்ற னர்.

    பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் பணியினை ஆசிரியர்கள் முறையாக கண்காணிக்க வேண்டும். அறைகளில் அமர வைத்து உணவு வழங்க வேண்டும். உணவு வழங்குவதற்கு முன்னர் சாப்பாடு தட்டுகள் சுத்தமாக இருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். சாப்பிட்ட பின்னர் தட்டுகள் சுத்தமாக கழுவி வைக்க வேண்டும். அதேபோல் சமையல் பாத்திரங்கள் அனைத்தும் சுத்தமாக கழுவி பயன்படுத்திட வேண்டும். தண்ணீர் வசதி, சுற்றுப்புற தூய்மையை பராமரிக்க வேண்டும்.

    காலை உணவு தயாரிக்கு ம்போது, அரசு அறிவுறுத்தி யுள்ள வழிமுறைகளை பின்பற்றி சத்தான உணவுகளை தயாரித்து வழங்க வேண்டும். மாணவ-மாணவிகளின் வருகையை பதிவு செய்து, பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும். காலை உணவு சுத்தமாகவும், சுகாதார மாகவும், குழந்தைகள் விரும்பி உண்ணும் வகையில் தயாரித்து வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு ள்ளது என தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது பழனி வருவாய் கோட்டாட்சியர் சரவணன் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

    • சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ரூ.5.58 லட்சம் மதிப்பில் போடப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் ஆய்வு செய்தார். லட்சுமி நாராயண புரம் ஊராட்சி பாறைப் பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் ரூ.7.43 லட்சம் மதிப்பில் கட்டப் பட்டுள்ள சமை யலறை கூடம், கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.80.90 லட்சம் மதிப்பில் அமைக்கப் பட்டுள்ள சாலை, ரூ.8.44 லட்சம் மதிப்பில் மயானத்தில் காத்திருப்போர் கூடம் கட்டிடப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    மேலும் கிருஷ்ணாபுரம் ஊராட்சி யில் ரூ.29.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், ரூ.3.49 லட்சம் மதிப்பில் கிருஷ்ணாபுரம் ஊரணி தூர்வரப்பட்டு குளியல் தொட்டி அமைக்கும் பணி, ரங்க பாளையம் ஊராட்சியில் ரூ.29.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம், ரூ.33.24 லட்சம் மதிப்பில் நாகரத்தினம்மாள் நகர் தெருவில் அமைக்கப் பட்டுள்ள சிமெண்ட் தளம்,

    மங்கலம் ஊராட்சி கோபாலன்பட்டி கிரா மத்தில் ரூ.5.58 லட்சம் மதிப்பில் போடப்பட்டுள்ள சிமெண்ட் தளம் ஆகிய வற்றை கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவ லர்கள், உதவி பொறியா ளர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • பொன்னேரி அடுத்த வெள்ளி வாயல், விச்சூர் ஆற்றின் கரைப் பகுதியை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
    • பேரிடரை சந்திக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என்றார்.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டதில் வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதிகாரிகள் வெள்ள பாதிப்பை எதிர் கொள்ள தயார் நிலையில் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கடந்த ஆண்டில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பாதிப்புக்குள்ளான பொன்னேரி அடுத்த வெள்ளி வாயல், விச்சூர் ஆற்றின் கரைப் பகுதியை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    பின்னர் அவர் மீஞ்சூர் ஒன்றியம், லட்சுமிபுரம் அணைக் கட்டு, ஏ.ரெட்டி பாளையம், சோமஞ் சேரி, ஆண்டார் மடம், தத்தை மஞ்சி, ஆகிய இடங்களில் கடந்த ஆண்டு ஆரணி ஆற்றில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு கிராமங்களில் வெள்ளம் புகுந்த பகுதிகளில் ஆய்வு செய்தார்.

    ஆரணி ஆற்றின் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதா? எனவும் முன்னெச்சரிக்கையாக அங்கு அடுக்கி வைக்கப்பட்ட மணல் மூட்டைகள், கயிறு, கம்புகளை பார்வையிட்டார், பின்னர் திருப்பாலைவனம் பேரிடர் மைய கால கட்டிடத்தை பார்வையிட்டு ஜன்னல், கதவுகள், கழிவறைகளை ஒரு வாரத்திற்குள் சீரமைக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்டம் முழுவதும் செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில் கொசஸ்தலை ஆறு, ஆரணி ஆறுகளில் ஏற்பட்ட உடைப்பு பகுதிகள் முழுமையாக சீரமைக்கப்பட்டு உள்ளது. பேரிடரை சந்திக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என்றார்.

    ஆய்வின் போது, சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, வட்டாட்சியர் மதிவாணன், ஆரணிஆறு செயற்பொறி யாளர் ராதா கிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் வெற்றிவேலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திர சேகர், குமார், ராம கிருஷ்ணன் ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் முத்துலட்சுமி, தலைவர் கவிதா மனோகரன் உடன் இருந்தனர்.

    முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.82.15 லட்சம் மதிப்பீட்டில் பழஞ்சநல்லூர் - தேவனாம்புத்தூர் சாலை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட பல்வேறு பகுதிக ளில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொ ள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதியின் கீழ் ரூபாய் 3.94 கோடி மதிப்பீட்டில் புதியதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், காட்டுமன்னார்கோவில் பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகள் கட்டுமான திட்டத்தின் கீழ் காட்டுமன்னார்கோவில் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் நல்வாழ்விற்காக 300 ச.அடிகொண்ட 4 வீடுகள் கொண்ட தொகுப்பு வீடுகளாக 18 தொகுப்புகளை கொண்டு தலா ரூ 5 லட்சம் வீதம் மொத்தம் 72 வீடுகள் ரூ. 3.60 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.

    மேலும் செட்டிதாங்கல், கீழக்கடம்பூர் மற்றும் தொரப்பு ஆகிய 3 ஊராட்சிகளில் 15-வது நிதிக்குழு மானிய திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.42.60 லட்சம் மதிப்பீட்டில் கிராம செயலகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும்,தொரப்பு ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அருண்மொழித்தேவன் ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், சண்டன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு குழந்தை நேய பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31.42 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் அவ்வளாகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சைக்கிள் ஸ்டாண்ட் மற்றும் ரூ.5.90 லட்சம் மதிப்பீட்டில் ஆண்கள் கழிவறை ஆகிய கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.82.15 லட்சம் மதிப்பீட்டில் பழஞ்சநல்லூர் - தேவனாம்புத்தூர் சாலை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இவ்வூராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்து திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் விரிவான ஆய்வு மேற்க்கொண்டு, அனைத்து பணிகளையும் குறிப்பிட்ட காலகெடுவிற்குள் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர கலெக்டர் அறிவுறுத்தினார்.அப்போது ஒன்றிய குழு தலைவர் சாதியா பர்வின் நிஜார் அகமது , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜசேகரன் , சுகுமார் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மதுரை வைகை ஆற்றங்கரை ஓரத்தில் வசிப்பவர்களுக்கு நிவாரண முகாம் வழங்கப்பட்டது.
    • இதனை கலெக்டர் அனீஷ்சேகர் இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. வைகை ஆற்றில் வினாடிக்கு 7000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆற்றங்கரை ஓரங்களில் வசிக்கும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அலுவலகம் தொடங்கப்பட்டு உள்ளது.

    அங்கு இருந்தபடி கலெக்டர் அனீஷ்சேகர் வெள்ள பாதிப்புகளை கவனித்து வருகிறார். வெள்ள பாதிப்பில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கோசாகுளம் பள்ளிக்கூடத்தில் மாதிரி தற்காலிக நிவாரண மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை கலெக்டர் அனீஷ்சேகர் இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • கிளியனூர் ஊராட்சியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.
    • மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கிளியனூர் ஊராட்சியில், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட கலெக்டர் மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பணிக்கு சரியான நேரத்தில் வருகை புரிந்து வருகிறார்களா? என்பதை ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் உள்நோயாளிகள் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, சிகிச்சை வழங்கும் பிரிவு, மருந்துகள் இருக்கும் அறை, ஆய்வுக்கூடம், ஆகியவற்றை பார்வையிட்டு, ஆய்வு செய்ததுடன், அவ்வப்பொழுது மருந்து, மாத்திரைகள் போதிய அளவு உள்ளதா? என்பதை டாக்டர்கள் உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தியதுடன், மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தினார்.

    இதையடுத்து பிரசவ வார்டில் ஆய்வு மேற்கொண்டு குழந்தை பிறந்த தாய்மார்களிடம் தாயும், சேயும் நலமாக உள்ளீர்களா? என கேட்டறிந்து, தாயும், சேயும் நலமுடன் இருந்திடும் வகையில் ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்குவதுடன், தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கான மாதாந்திர பரிசோதனை சரியான காலகட்டத்தில் மேற்கொள்ள டாக்டர்கள் தக்க அறிவுரைகள் வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    அதனை தொடர்ந்து, வல்லம் ஊராட்சி ஒன்றியம், நாட்டார்மங்கலம் அங்கன்வாடி மையத்தை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு, அங்கன்வாடி மையத்தில் காலி இடத்தில் காய்கறித் தோட்டம் அமைத்திட அறிவுறுத்தியதுடன், தினமும் குழந்தைகளுக்கு சத்தான சுகாதாரத்துடன் கூடிய உணவினை வழங்கிட வேண்டும் என அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, துணை இயக்குநர் (சுகாதார நலப்பணிகள்) மரு.பொற்கொடி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    புலியடித்தம்பம் ஊராட்சியில் நடைபெற்ற தூய்மைப்பணிகளை கலெக்டர் ஜெயகாந்தன் ஆய்வு செய்தார்.
    காளையார்கோவில்:

    காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், புலியடித்தம்பம் ஊராட்சியில் தூய்மைப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஊராட்சியில் ஒவ்வொரு வீடாகச் சென்று வீட்டில் தூய்மை சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா, தண்ணீர் தேக்கி வைத்து உள்ள பாத்திரங்கள் மற்றும் நீர்த்தேக்க தொட்டிகளை பார்வையிட்டதுடன் சுத்தமில்லாத தண்ணீர் பாத்திரங்களை அப்புறப்படுத்தியதுடன் வீட்டில் உள்ள நபர்களிடம் சுற்றுப்புற தூய்மை குறித்து விளக்கமளித்தார்.

    மேலும் தூய்மை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் ஜெயகாந்தன் பேசியதாவது:- ஒவ்வொருவரும் தூய்மையை கடைப்பிடித்தால்தான் சுற்றுப்புறச் சுழல் தூய்மையாக இருக்கும். அதன்மூலம் நோய்கள் பரவாமல் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க முடியும். அதற்கு பொதுமக்களாகிய உங்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானதாகும். ஒவ்வொருவரும் தங்களது கடமையாக எண்ணி வீட்டின் உட்புறத்தையும், வெளிப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பயன்பாடற்ற பொருட்களை தேக்கி வைக்க கூடாது. காரணம் தற்போது மழைக்காலம் என்பதால் தேவையற்ற பொருட்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்களை உருவாக்கும் லார்வா புழுக்கள் எளிதாக உருவாகின்றன. அதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பரவ வழிவகை செய்கின்றது. அது 500 மீட்டர் தூரம் வரை பறந்து சென்று நோய்களை பரப்பும் சக்தி கொண்டதாகும். அதிலும் பகல் நேரத்தில்தான் டெங்கு கொசு அதிக அளவில் தாக்கும் சக்தி கொண்டதாக இருக்கின்றன.

    தினமும் கைகளை சோப் மூலம் நன்கு கழுவிட வேண்டும். இதன்மூலம் கைகளில் கிருமிகள் தொற்றுவதை எளிதாக தடுத்திடலாம். காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் ஆலோசனை பெற்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் ஒவ்வொரு வீதிகளிலும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று நீர்த்தேக்க தொட்டி சுத்தமாக உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது. வீடுகளில் கொசு புழு உற்பத்தியுடன் தண்ணீர் தேக்கி வைத்துள்ள 6 வீடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.100 வீதம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், வருங்காலங்களில் தவறுகள் செய்யும் வீட்டின் உரிமையாளர்கள் மீது கூடுதல் அபராத நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கப்பட்டது. ஆய்வின் போது காளையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோ தாயுமானவன், சந்திரா, காளையார்கோவில் தாசில்தார் பாலகுரு உள்பட சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்
    தேனி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தார்.
    தேனி:

    தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டி, போடி அருகே உள்ள அணைக்கரைப்பட்டி, போ.மீனாட்சிபுரம், குரங்கணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று திடீர் ஆய்வு செய்தார். பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். பழனிசெட்டிபட்டி சூர்யாநகரில் வீடு, வீடாக சென்று கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

    வீடுகளில் தண்ணீர் சேமித்து வைத்துள்ள பாத்திரங்கள், சிமெண்டு தொட்டிகள், குடங்கள், குளிர்சாதன பெட்டிகள், ஆட்டுக்கல், கழிவுநீர் வாய்க்கால் போன்றவற்றில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுப்புழுக்களின் உற்பத்தி உள்ளதா? என்பதை பார்வையிட்டார். தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள், தொட்டிகளை நன்கு மூடி வைக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுரைகள் வழங்கினார். புதிதாக கட்டுமான பணிகள் நடந்து வரும் கட்டிடங்களுக்கும் கலெக்டர் சென்று, அங்கு சேமித்து வைத்துள்ள தண்ணீரில் கொசுப் புழுக்கள் உற்பத்தியாகிறதா? என்பதை ஆய்வு செய்தார்.

    பின்னர் அணைக்கரைப்பட்டி கிராமத்தில் கொட்டக்குடி ஆற்றின் நீர்வரத்து, பொட்டல்களம் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகள், போ.மீனாட்சிபுரம் பேரூராட்சியில் பொது கழிப்பறை, அணைக்கட்டு வாய்க்காலில் பாலம் அமைப்பது தொடர்பாகவும் ஆய்வு பணிகள் மேற்கொண்டார். குரங்கணி மலைக்கிராமத்தில் பொது கழிப்பறை அமைக்கும் பணி, கொட்டக்குடி கிராமத்தில் அரசு பழங்குடியினர் உண்டுஉறைவிட பள்ளியின் செயல்பாடுகள், மாணவர்களின் கற்றல் திறன், அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர் போடிமெட்டு மலைப்பாதையில் பார்வையிட்டு, பாறைகள் சரிந்து விழும் அபாயம் உள்ள இடங் களை பார்வையிட்டார். ஒவ்வொரு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போதும், அந்தந்த பகுதி மக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள், டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து கலெக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    ஆய்வின்போது, ‘போ.மீனாட்சிபுரம் பேரூராட்சி செல்வராஜ் நகரில் பொது கழிப்பறை சேதம் அடைந்து உள்ளதால் அதனை உடனே சீரமைத்து ஒரு மாத காலத்துக்குள் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அணைக்கட்டு வாய்க்காலில் பாலம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். குரங்கணி கிராமத்தில் ஒரு மாத காலத்துக்குள் பொது கழிப்பறையை கட்டிக் கொடுக்க வேண்டும். மேலும், அங்கு பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம் அமைத்து பொதுமக்களுக்கு தங்குதடையின்றி தொலைதொடர்பு இணைப்பு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். போடிமெட்டு மலைப்பாதையில் பாறைகள் சரிந்து விழும் நிலையில் உள்ள பகுதிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்’ என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வில், உத்தமபாளையம் உதவி கலெக்டர் வைத்தியநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அபிதாஹனீப், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ஹரி, போடி தாசில்தார் ஆர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதமணி ஆகியோர் உடன் இருந்தனர்.
    விழுப்புரம் நகராட்சி பகுதியில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். #Dengue
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை சார்பில் டெங்கு கொசு ஒழிப்பிற்கென பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக நேற்று விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பானாம்பட்டு சாலை, ஊரல்கரைமேடு, குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு, வீடாக சென்று தண்ணீர் தொட்டிகளில் கொசுப்புழு உள்ளதா? எனவும் பழைய டயர்கள், மண்பாண்டங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள், ஆட்டு உரல்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்கியுள்ளதா? என்று மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும், மாணவ- மாணவிகளுக்கும் டெங்கு காய்ச்சல் குறித்தும் டெங்கு கொசு ஒழிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதோடு, பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியை சுத்தமாக பராமரித்தாலே டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் குமாரவேல், தாசில்தார் சையத்மெகமூத், நகராட்சி ஆணையர் லட்சுமி, நகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் ராஜா உள்பட பலர் உடனிருந்தனர்.
    எட்டயபுரம் அருகே உள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணிகளை உதவி கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
    எட்டயபுரம்:

    விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட எட்டயபுரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் புதிய பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் 2-ம் கட்டமாக நேற்று நடைபெற்றது. கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா எட்டயபுரத்தில் உள்ள 11 வாக்குச்சாவடிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

    இதேபோல் எட்டயபுரம் அருகே படர்ந்தபுளி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தாசில்தார் வதனாள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதில் வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். 
    வாக்காளர் பட்டியல் தொடர்பான சிறப்பு முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் கடந்த 1-ந்தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருகிற அக்டோபர் மாதம் 31-ந்தேதி வரை இந்த பணிகள் நடக்கிறது. இந்த காலத்தில் செப்டம்பர் மாதம் 9, 23-ந்தேதிகளிலும், அக்டோபர் மாதம் 7, 14-ந்தேதிகளிலும் அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன் பேரில் நேற்று கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரூர் கோட்டைமேடு அரசு உயர்நிலைப்பள்ளி, தாந்தோன்றிமலை அரசு கல்லூரி, கணபதிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி என மொத்தம் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 1,031 வாக்குசாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்ப்பு, நீக்கல், திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நடந்தது.

    இதில் கரூர் காந்திகிராமம் புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டமேடு உயர்நிலைப்பள்ளிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாமினை கலெக்டர் அன்பழகன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது வாக்காளரிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை எவ்வளவு? இளம் வயதினர் ஆர்வத்துடன் வருகை தருகிறார்களா? என்பது குறித்து கேட்டறிந்தார்.

    பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறுகையில், 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அன்று 18 வயது நிரம்பிய தகுதியுள்ள அனைவரும் தங்கள் பெயர்களை புதிய வாக்காளராக பட்டியலில் சேர்க்க படிவம் 6-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பங்களை அளிக்கலாம். இது போல் இறந்தவர்களின் பெயரை நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்வதற்கும் சில படிவங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் அக்டோபர் மாதத்தில் நடக்கும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என்று கூறினார். இந்த ஆய்வின்போது கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, கரூர் தாசில்தார் ஈஸ்வரன் உள்பட பலர் உடனிருந்தனர். 
    பரமக்குடி யூனியனில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் நடராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி யூனியனுக்கு உட்பட்ட கிராமங்களில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் நடராஜன் நேரில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். முன்னதாக அவர் கமுதக்குடி கிராமத்தில் பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை ஆய்வு செய்தார்.

    அதைத்தொடர்ந்து வெங்காளூர் மற்றும் சங்கன்கோட்டை கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்து அங்குள்ள குழந்தைகளின் வயதுக்கேற்ற வளர்்ச்சி மற்றும் சரியான எடை குறித்தும், சராசரி அளவை விட மிக குறைவான எடையளவு உள்ள குழந்தைகளை கண்டறியும்பட்சத்தில் உடனடியாக சிறப்பு கவனம் செலுத்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் அந்த கிராமங்களில் உள்ள ஊராட்சி சேவை மைய கட்டிடங்கள், சமுதாய கூட கட்டிடங்களை ஆய்வு செய்து அதிலுள்ள பழுதுகளை உடனடியாக சரிசெய்ய கேட்டுக்கொண்ட அவர், கிராம மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது கிராம பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு சாலை வசதி, பள்ளி குழந்தைகள் மழைக்காலங்களில் சென்றுவர வசதியாக ஒரு பாலம் கட்ட வேண்டும் எனவும் மற்றும் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கும் கோரிக்கை வைத்தனர்.

    அதை கேட்டறிந்த கலெக்டர் நடராஜன் சாலையைப் பொறுத்தவரை சங்கன்கோட்டையில் இருந்து நண்டுபட்டி சாலை அமைக்க ரூ.1.21 கோடி மதிப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மேற்கொண்டு 2 சாலைகளுக்கு ரூ.1.80 கோடி மதிப்பில் சாலை அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    அதேபோல குடிநீரை பொறுத்தவரை நிலத்தடிநீர் உப்பாக உள்ளபடியால் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பள்ளி குழந்தைகள் செல்வதற்கான பாலம் தொடர்பாக திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பி வைக்குமாறும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது பரமக்குடி சப்-கலெக்டர் விஷ்ணுசந்திரன் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். 
    ×