என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Controversy speech"

    • ஊடுருவல்காரர்களுக்கு உங்கள் செல்வத்தை கொடுக்கப் போகிறீர்களா ?
    • இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்காக தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

    ராஜஸ்தானில் நேற்று பரப்புரை செய்த பிரதமர் மோடி, இஸ்லாமியர்களை குறிவைத்து வெறுப்புக் கருத்துகளை பேசிய நிலையில், இன்று உ.பி. அலிகாரில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய சகோதரிகளின் ஆசீர்வாதம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    ராஜஸ்தானில் நேற்று பேசிய பிரதமர் மோடி," அதிக பிள்ளைகள் பெறுபவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் உங்கள் செல்வத்தை கொடுக்கப் போகிறீர்களா ? என கேட்டிருந்தார்.

    நேற்று சர்ச்சையாக பேசிய நிலையில் இன்று இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

    மேலும், பிரதமர் மோடி பேசியதாவது:-

    இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்காக தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

    முன்பு குறைவான ஹஜ் ஒதுக்கீட்டால், லஞ்சம் கொடுத்த அங்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.

    எனது இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்காக சவுதி இளவரசியிடம் நான் பேசி இஸ்லாமியர்கள் ஹன் பயணம் மேற்கொள்வதற்கான கோட்டாவை அதிகரித்து கொடுத்தேன். விசாவும் எளிதாக்கப்பட்டது.

    ஆண்கள் துணையின்றி பெண்கள் தனியே ஹஜ் செல்ல முடியும் என்பதால், இஸ்லாமிய சகோதரிகள் ஆசீர்வாதம் எனக்கு கிடைத்தது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆணவத்துடன் பேசிய பேச்சுக்களும் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளது.
    • தான்தோன்றித்தனமாக தமிழ்த்தாய் வாழ்த்தை கேவலமாக பேசி இருக்கிறார்.

    திருச்சி:

    தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தி.மு.க.விற்கு எதிராக பேசியிருந்தார். இதற்கு தி.மு.க. தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த அரசு வக்கீல் முரளி கிருஷ்ணன் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரிடம் ஒரு புகார் மனு அளித்தார்.

    எக்ஸ் வலைதள பக்கத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள 2 வரிகளை தூக்கியதற்காக கொந்தளிப்பதா? என்ற தலைப்பில் நான் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது என்று மிகவும் கண்ணியக் குறைவாகவும், தமிழ்த்தாய் வாழ்த்தை அவமரியாதை செய்கிற நோக்கத்தோடும் ஆணவத்துடன் பேசிய பேச்சுக்களும் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளது.

    இது சமூக வலைதளத்தில் பரவி வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இதனால் எனக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு மனச்சோர்வு அடைந்து, மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.

    தமிழ்த்தாய் வாழ்த்தை சீமான் மிகவும் கொச்சைப்படுத்தி அரசின் உத்தரவின்றி தான்தோன்றித்தனமாக தமிழ்த்தாய் வாழ்த்தை மிகவும் கேவலமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் தொடர்ந்து பேசி வருவதால் மாணவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் தமிழ்த்தாய் வாழ்த்து பற்றியும் அதன் மீது உள்ள நற்பெயருக்கும் களங்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.

    ஆகவே சீமான் மீது குற்றவியல் சட்டம் மற்றும் தேச துரோக வழக்கினை பதிவு செய்து அவருக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    மனுவை பெற்றுக் கொண்ட போலீஸ் சூப்பிரண்டு சீமான் மீது வழக்கு பதிவு செய்ய ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

    • கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பி நேரில் விசாரிக்க போலீசார் முடிவு.
    • கஸ்தூரி தனது கருத்துக்கள் அனைத்தையும் திரும்ப பெறுவதாக கூறியிருக்கிறார்.

    சென்னை:

    சென்னை எழும்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களை பாது காப்பதற்காக வன்கொடுைம தடுப்பு சட்டத்தை போல புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்டு பேசிய நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் பெண்கள் பற்றி அவதூறான கருத்துக்களை கூறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து தெலுங்கு சங்கம் சார்பில் எழும்பூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    இதன்படி கஸ்தூரி மீது கலவரத்தை தூண்டுதல், 2 பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து எழும்பூர் போலீசார் கஸ்தூரியிடம் விசாரணை நடத்த முடிவு செய்திருப்ப தாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருக்கு சம்மன் அனுப்புவது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பி குறிப்பிட்ட நாளில் நேரில் வரவழைக்க போலீசார் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

    இதற்கிடையே கஸ்தூரி தனது கருத்துக்கள் அனைத்தையும் திரும்ப பெறுவதாகவும், மன்னிப்பு கேட்பதாகவும் கூறியிருக்கிறார். இது பற்றியும் ஆலோசித்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • நடிகை கஸ்தூரி மீது திருச்சி குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் அவர் மீது நேற்று 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தெலுங்கு பேசும் மக்கள் குறித்த அவதூறு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நடிகை கஸ்தூரி மீது தொடர்ந்து வழக்குகள் பதியப்பட்டு வருகிறது.

    தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில், நடிகை கஸ்தூரி மீது மதுரையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கம் சார்பில் அளித்த புகாரில், 6 பிரிவுகளில் திருநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல், நடிகை கஸ்தூரி மீது திருச்சி குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் அவர் மீது நேற்று 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னை, மதுரை, திருச்சியை தொடர்ந்து தேனி மாவட்டத்திலும் நடிகை கஸ்தூரி மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல், ஆண்டிப்பட்டியில் நடிகை கஸ்தூரி மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    பிரபல நடிகை ஸ்ரீ ரெட்டி. இவர் அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, அவரது குடும்பத்தினர், துணை முதல் மந்திரி பவன் கல்யாண் மற்றும் உள்துறை மந்திரி வாங்கலபுடி அனிதா ஆகியோரது படங்களை சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சியினர் நடிகை ஸ்ரீ ரெட்டி மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் செய்து வருகின்றனர்.

    கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமகேந்திராபுரம் மோரம்புடியை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் மாநில மகளிரணி செயலாளர் பத்மாவதி நடிகை ஸ்ரீ ரெட்டி மீது பொம்மூர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் நடிகை ஸ்ரீ ரெட்டி மீது வழக்கு பதிவு செய்தனர். விரைவில் அவரை விசாரணைக்கு அழைக்க உள்ளதாக தெரிவித்தனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு.
    • முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து தலைமறைவானார்.

    பிராமணர் சமூகத்தினர் சார்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசிய உரை, மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    அந்த நிகழ்ச்சியில் அவர் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது பலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இதனால் தனது கருத்துக்கு கஸ்தூரி வருத்தம் தெரிவித்தார்.


    எனினும், நடிகை கஸ்தூரிக்கு எதிராக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து அவர் முன்ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தலைமறைவானார். இதையடுத்து ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குடா பகுதியில் சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களா வீட்டில் பதுங்கி இந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    அதன்பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் நடிகை கஸ்தூரி ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். அதில் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் என்பதை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

    இதையடுத்து இந்த மனுவை விசாரிக்கும் காவல்துறை சார்பில் ஆட்சேபனை இல்லை என தெரிவித்ததால் கஸ்தூரிக்கு ஜாமின் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • எந்த நேரத்திலும் இந்தியா கூட்டணி உடைந்து சிதறும் என்று கருதுகிறார்கள்.
    • இந்தியா கூட்டணியை வழி நடத்தும் தலைவராக ராகுலை ஏற்க இயலாது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடந்தபோது பா.ஜ.க.வை தோற்கடிக்கும் நோக்கத்துடன் காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, ராஷ்டிரிய ஜனதா தளம், தேசிய மாநாட்டு கட்சி, சமாஜ்வாடி, கம்யூனிஸ்டுகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின.

    இந்த கூட்டணியில் தொடக்கத்தில் இருந்தே கட்சிகளிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

    இந்த நிலையில் மராட்டியம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சிறப்பாக செயல்படவில்லை என்ற அதிருப்தி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களிடையே ஏற்பட்டுள்ளது.


    மராட்டியத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் செய்தபோது கையில் ஒரு சிறிய சட்டப் புத்தகத்தை வைத்துக் கொண்டு, 'மோடி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அழிக்க திட்ட மிடுகிறார்' என்று பிரசாரம் செய்தார்.

    மேலும் அதானிக்கும் மோடிக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாகவும், அதானிக்கு நாட்டை மோடி தாரைவார்த்து விட்டதாகவும் பிரசாரம் செய்தார். என்றாலும் மராட்டிய தேர்தலில் காங்கிரசுக்கு படு தோல்வியே மிஞ்சியது.

    என்றாலும் ராகுல் காந்தி சட்டப் புத்தகத்தையும், அதானி மீது குற்றம் சுமத்துவதையும் கைவிடவில்லை. கடந்த 25-ந்தேதி முதல் பாராளுமன்றம் கூடிய நாளில் இருந்து தினமும் அவர் பாராளுமன்றத்தில் அதானி பிரச்சனையை எழுப்பி சபையை நடத்த விடாமல் செய்கிறார்.

    அதோடு பாராளுமன்றத்துக்கு வெளியே வந்து தினமும் ஒவ்வொரு விதமான போராட்டத்தை நடத்துகிறார். இதனால் முக்கிய பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் பேச இயலவில்லை என்று இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களிடம் ராகுல் மீது மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

    தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் மழை சேதத்திற்கு கூடுதல் நிதி கேட்டு திட்டமிட்டு இருந்தனர். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மேற்கு வங்காள பிரச்சனையை எழுப்ப ஆர்வமாக இருந்தனர்.

    சமாஜ்வாடி எம்.பி.க்கள் சம்பல் கலவரத்தை பாராளுமன்றத்தில் எழுப்ப திட்டமிட்டு இருந்தனர்.

    ஆனால் ராகுல் தொடர்ந்து அதானி பிரச்சனையை மட்டும் பேசியதால் இந்த கட்சிகள் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் செயல்பாடுகளில் இருந்து சற்று ஒதுங்கத் தொடங்கி உள்ளன.

    இந்த நிலையில் மேற்கு வங்காள முதல்-மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இந்தியா கூட்ட ணிக்கு தலைமையேற்று வழி நடத்த தயார் என்று அறிவித்துள்ளார். இது இந்தியா கூட்டணியில் மிகப்பெரிய சலசலப்பை உருவாக்கி இருக்கிறது.

    மம்தா பானர்ஜிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டீரிய ஜனதா தளம் லல்லு பிரசாத் யாதவ் ஆகியோர் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.


    அதுபோல இந்தியா கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளும் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். சமாஜ்வாடி கட்சித் தலைவர்கள் நேரடியாகவே ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இந்தியா கூட்டணியை வழி நடத்தும் தலைவராக ராகுலை ஏற்க இயலாது என்று கூறி உள்ளனர்.

    பா.ஜ.க. கூட்டணி, இந்தியா கூட்டணி என இரண்டிலும் இடம் பெறாத ஆந்திர மாநில கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் மம்தா பானர்ஜிக்கு ஆதரவை தெரிவித்துள்ளது. அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மம்தா திறமையானவர். அவரால் நிச்சயமாக எதிர்க்கட்சிகள் அணியை திறம்பட வழிநடத்த முடியும்" என்று கூறியுள்ளது.

    இந்தியா கூட்டணியில் ஏற்பட்டுள்ள இந்த குழப்ப நிலை காரணமாக அந்த கூட்டணிக்கு தலைமை ஏற்பது யார் என்பதில் சர்ச்சை மேலும் விரிவடைந்துள்ளது. ராகுலின் தனிச்சசையான முடிவு காரணமாக இந்தியா கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருவதாக சரத்பவார், லல்லுபிரசாத் யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகியோர் கருதுகிறார்கள்.

    இது இந்தியா கூட்டணியில் ஏற்பட்டுள்ள சர்ச்சையை தொடர்ந்து அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த விஷயத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி என்ன முடிவு எடுக்கும் என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

    இந்த நிலையில் விரைவில் டெல்லி சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் ஆம்ஆத்மி கட்சி அதற்கு தயாராகி வருகிறது. வேட்பாளர்களையும் அந்த கட்சி அறிவித்து விட்டது. டெல்லி தேர்தலில் காங்கி ரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று ஆம்ஆத்மி கூறியுள்ளது.

    இதன் மூலம் இந்தியா கூட்டணியின் நோக்கம் சிதைந்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். எந்த நேரத்திலும் இந்தியா கூட்டணி மிகப்பெரிய உடைந்து சிதறும் என்று கருதுகிறார்கள்.

    ஆனால் இந்தியா கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பை விட்டுக் கொடுப்பதற்கு காங்கிரஸ் தலைவர்கள் தயங்குகிறார்கள். தலைமை பதவியை விட்டுக் கொடுத்தால் சாதாரண கட்சி போன்ற நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம் என்று ராகுலும், கார்கேவும் கருதுவதாக தெரிய வருகிறது.

    இதற்கிடையே காங்கிரஸ் மூத்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சி தனித்து களம் இறங்குவதுதான் கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது என்று கூறி வருகிறார்கள்.

    மாநில சட்டசபை தேர்தல்களில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு வீழ்ச்சி அடைவதாக அவர்கள் கருதுகிறார்கள்.

    குறிப்பாக 200-க்கும் மேற்பட்ட தொகுதிகள் உள்ள மாநிலங்களில் வெறும் 30 அல்லது 40 இடங்களில் மட்டும் போட்டியிடுவதன் மூலம் காங்கிரஸ் நிர்வாகிகள் மனம் தளர்ந்து போகிறார்கள். பெரும்பாலானவர்களுக்கு எம்.எல்.ஏ. ஆக முடியாத நிலை நீடிக்கிறது.

    எனவேதான் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளில் பலரும் கட்சியை விட்டு விலகிச் செல்கிறார்கள். இதை தடுத்து காங்கிரசை வலுப்படுத்த வேண்டுமானால் இந்தியா கூட்டணியில் இடம் பெறாமல் தனித்து போட்டியிடுவதுதான் நல்லது என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்த தொடங்கி உள்ளனர்.

    இதன் காரணமாக இந்தியா கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறி வருகிறது.

    • அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    • சீமான் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதுச்சேரியில் பேட்டியளிக்கும் போது, தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

    இதற்கு திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் திராவிடர் கழகத்தினர் சென்னையில் உள்ள சீமானின் வீட்டை முற்றுகையிடப்போவதாக அறிவித்த நிலையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.


    இந்நிலையில் சர்ச்சை பேச்சு தொடர்பாக சீமான் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

    திண்டுக்கல்

    நிலக்கோட்டை திராவிட கழக ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையிலான நிர்வாகிகள் நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் பிரசாந்த்தை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசி வருகிறார். மக்கள் மத்தியில் தவறான கருத்தை பதிவு செய்து, அரசியல் லாப நோக்கத்திற்காக தரக்குறைவான அருவருக்கத்தக்க வகையில் பேட்டி அளித்துள்ளார்.

    அது எங்கள் கட்சியினர் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக சீமான் மீது வழக்குப் பதிவு செய்து, வலைதளங்களில் உள்ள பெரியார் குறித்து சீமான் பேசிய வீடியோவை அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல் திண்டுக்கல் பெரியார் சிலை அருகே பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஒன்று திரண்டு சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலமாக சென்று திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அங்கு கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர்.

    நெல்லை

    நெல்லை மாநகரில் தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் நேற்று திராவிடர் கழகத்தின் நெல்லை மாவட்ட செயலாளர் வேல்முருகன் புகார் அளித்தார். அதில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியிருந்தார்.

    அந்த புகாரின் அடிப்படையில், சீமான் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 192 (கலவரத்தை ஏற்படுத்தும் விதத்தில் செயல்படுதல்), புதிய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 352 (பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    கோவை

    சீமானை கண்டித்து தமிழகம் முழுவதும் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிட கழகம், திராவிடர் விடுதலை இயக்கத்தினர் உள்பட பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் புகாரும் அளிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி கோவையில் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிட கழகம், உள்ளிட்ட 7 அமைப்புகள் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தரிடம் புகார் அளித்தனர்.

    அந்த புகாரின் பேரில் நாம்தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சுந்தராபுரம், போத்தனூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல், திராவிடர் விடுதலை இயக்கத்தின் மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல்குமார் தலைமையில் நிர்வாகிகள் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனை சந்தித்து, பெரியார் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது உரிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு கொடுத்தனர்.

    இந்த நிலையில் கோவையில் உள்ள தடாகம், பெரியநாய க்கன்பாளையம், பொள்ளாச்சி கிழக்கு, ஆனைமலை, மகாலிங்கபுரம், மேட்டுப்பாளையம் ஆகிய 6 போலீஸ் நிலையங்களில் சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கோவையில் சீமான் மீது மொத்தம் 8 போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சீமான் மீது இதுவரை கோவை, கடலூர், சேலம், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் சீமான் மீது 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    சீமான் மீது போலீசில் புகார்கள் குவிந்து வருவதால், அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    • சர்ச்சையான கருத்துக்களை பெரியார் எழுதியதும் இல்லை, பேசியதும் இல்லை.
    • தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க திட்டம்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் கூறியதாக சில சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியது போல், எந்த ஒரு சர்ச்சையான கருத்துக்களையும் பெரியார் எழுதியதும் இல்லை, பேசியதும் இல்லை.

    இந்த நிலையில் பெரியாரின் நன்மதிப்பையும், அவரது புகழையும் குறைக்கும் வகையில் எந்த ஒரு ஆதாரமும் இன்றி, தரவுகளும் இன்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.

    சீமானின் இந்த பேச்சு பெரியாரின் புகழை சீர்குலைப்பது மட்டுமின்றி, தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கவும் திட்டமிட்டு பேசியதாக தெரிகிறது.

    எனவே, சீமான் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த புகாரின் பேரில், ஆதாரமற்ற தரவுகளை கொண்டு அவதூறாக பேசியது மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக 2 பிரிவுகளின் கீழ் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    இதேபோல், திராவிடர் விடுதலை கழக நிர்வாகி செந்தில், திருவாரூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், பெரியார் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன் பேரில் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • பெரியார் மண் என்று சொல்பவர்கள் மத்தியில் பெரியாரே ஒரு மண்ணு தான்.
    • எந்த சமூகத்திற்கு பெரியார் தொண்டு ஆற்றினார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து சூரம்பட்டி நால்ரோட்டில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-

    தமிழ் மொழி தோன்றி 2 லட்சம் ஆண்டுகள் ஆகிறது. தமிழ் மொழியின் தொன்மை குறித்து அறிந்தவர்கள் இன்று வரை யாரும் இல்லை. மொழி ஆய்வு அறிஞர்கள் தமிழை கண்டு வியந்து பார்க்கிறார்கள். திருக்குறளை கண்டு உலக மொழி ஆய்வு அறிஞர்கள் வியக்கிறார்கள்.

    திருக்குறளை ஆங்கிலத்தில், இந்தியில் படித்து காந்தி வியந்தார். உலகு எங்கும் தமிழை நோக்கி ஓடிவந்து கொண்டு இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் 50-க்கும் மேற்பட்ட சொற்களை கடனாக கொடுத்தது தமிழ்மொழி. ஏசு இறைமகன் பிறந்து 500 ஆண்டுகளுக்கு பின்னர் தான் ஆங்கில மொழி பிறக்கிறது.

    ஆனால் ஏசு பிறப்பதற்கு 500 ஆண்டுகள் முன்பு இருந்து தமிழ் மொழி இருந்து வருகிறது. ஆட்சியாளர்கள் தமிழர்கள் பெருமையை இப்போது சொல்லி வருகிறார்கள். தமிழ் காட்டுமிராண்டி மொழி, முட்டாளின் பாஷை, தமிழ் படித்தால் பிழைக்க முடியாது என்று சொன்னவர்களை ஒழிக்கமால் எப்படி தமிழை வளர்ப்பது.

    தமிழ் எங்களுக்கு பேச்சு மொழி அல்ல. மூச்சு மொழி, மற்றவர்களுக்கு மொழி, எங்களுக்கு உயிர். 800-க்கும் குறையாதவர்கள் தமிழ் மொழிக்காக உயிர் தியாகம் செய்து இருக்கிறார்கள். வாயை திறந்தால் இது பெரியார் மண் என்று சொல்பவர்கள் மத்தியில் பெரியாரே ஒரு மண்ணு தான்.

    பெரியாரை அடக்கம் செய்து இருப்பது தமிழ் தாய் மண் தான். பெரியார் இல்லை என்றால் உங்களுக்கு ஒன்றும் இல்லை என்று சொல்லும் நிலையில் பெரியாரால் எங்களுங்கு ஒன்றும் இல்லை.

    பெரியார் சமூகநீதி, சமத்துவம் சகோ தரத்துவம் ஜாதி ஒழிப்பு, பெண்ணியம் உரிமை எங்கே? எதற்கு எடுத்தாலும் திராவிடம், பெரியார்.

    தீரன் சின்னமலை, கொடிக்காத்த குமரன், பொன் சங்கர், காளிங்க ராயன் வாழ்ந்தவர்கள் மண் இது. அவர்களின் வாரிசுகள் நாங்கள்.

    அப்படி இருக்கும் நிலையில் பெரியார் பேசியது, எழுதியது எந்த மொழி என்பதற்கு பதில் இருக்கிறதா? மொழி, இனம் பாகுபாடு இல்லை என்று சொன்ன பெரியார். எந்த சமூகத்திற்கு பெரியார் தொண்டு ஆற்றினார். தேசமே இல்லை, தேசப்பற்று இல்லை, தேச அபிமானம் இல்லாத நிலையில் எப்படி திராவிட நாடு வரும்.

    தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் நாங்கள். தமிழ் இல்லாமல் தமிழர்கள் எப்படி வந்தார்கள். தமிழ் இல்லை என்று சொன்ன நிலையில் தமிழினத்தின் தலைவராக பெரியார் பட்டம் எப்படி வைத்து கொண்டீர்கள். இதுபோன்ற செயலுக்கு பெயர் தான் பிக்காளி தனம்.

    பிக்காளி என்றால் சுத்த பைத்தியக்காரன் என்று எங்கள் ஊரில் சொல்வா ர்கள். திடீர் கிளம்பும் பெரி யார் பக்தர்கள், இதே போல மேடை போட்டு பெரியார் பெற்று தந்த சமூக நீதி என்ன என்று பேசுங்கள் பார்க்கலாம். அப்படி மேடை போட்டு பேசுபவர்கள் பெரியாரை பேசு வார்கள்.

    பெரியார் பேசியதை பேச முடியுமா? பெரியார் புகழ் பாடுபவர்கள் பெரியார் படத்தை கொடுத்து ஓட்டு கேட்க வேண்டியது தானே. காந்தி படம் போட்ட நோட்டை கொடுத்து வாக்கு கேட்கிறார்கள்.

    காந்தி படம் இல்லையென்றால் மக்கள் உங்கள் மீது எடுத்து விடுவார்கள் வாந்தி. நீ அடைந்து விடுவாய் சாந்தி. நீ ஊசி பூ பூந்தி இப்படி என்னை டி.ராஜேந்திரன் ஆக்கி விடுவார்கள் போல இருக்கிறது.

    இதனால் காந்தி போட்ட பணம் கொடுத்து வாக்கு கேட்கும் உங்களுக்கு தலை வர் பெரியார் இல்லை, உங்கள் தலைவர் காந்தி தான். நாம் தமிழர் கட்சி மீது வீசப்படும் எறியப்படும் கற்களை கொண்டு கோட்டை கட்ட வந்த மக்கள் நாங்கள். 2026-ம் ஆண்டு தேர்தலில் சரியான ஆண் மகனாக இருந்தால் பெரியார் பெரும் தலைவர் செய்ததை சொல்லி வாக்கு கேளுங்கள் பார்க்கலாம்.

    நான் பிரபாகரனை தூக்கி கொண்டு வருகிறேன். பிரபாகரன் செய்ததை சொல்லி வாக்கு கேட்கிறேன். சீமான் பெரியார் பற்றி பேசுகிறான், திட்டுகிறான் ஓட்டுபோட வேண்டாம் என்று சொல்ல துணிவு இருக்கா? பெரியார் தன் தோட்டத்தில் இருந்த தென்னை மரத்தினை வெட்டினார்.

    இது அறிவார்ந்தவர்கள் செய்த செயலா? பெரியார் தாய்மொழி தமிழா? நீங்கள் இந்த நாட்டவரா? எதற்காக சொல்ல வந்த கருத்துக்களை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன தமிழ் மொழியில் எழுதினார். வேண்டுமெனில் ஆங்கிலத்தில் எழுதி வைத்து விட்டு சென்று இருந்தால் நாங்கள் படித்து இருக்க மாட்டோம்.

    பெரியார் வாரிசு இல்லை, எதற்காக சொத்து சேர்த்தீர்கள், இது ஒரு டிரைலர் தான். தொடர்ந்து, பெரியார் பற்றி பேசினால் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கிடைக்குமா என்று தெரியவில்லை. திராவிட அரசியல் சித்தாந்தத்தின் தொடக்கம் பெரியார் என்று சொன்னால் அதே இடத்தில் தமிழ் தேசியம் குறித்து மோதிக்கொள்ள நாம் தமிழர் கட்சி தயார்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க போட்டியிடுகிறதா என்று தெரியவி ல்லை. இருட்டில் திருட்டு கோழி பிடிப்பது போன்று தான் உள்ளது. நாடு கருணாநிதி நாடாக மாறிவிட்டதால் நோட்டில் காந்தி படத்திற்கு பதிலாக கருணாநிதி படத்தை போட்டு விடுங்கள், அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால் நாடு கருணாநிதி நாடாக பெயர் மாற்றி விடலாம்.

    பெரியார் சொல்லாமல் அரசியல் செய்ய முடியாது என்று சொன்னவர்கள் மத்தியில் தமிழர்கள் என்று சொல்லி இனம் மொழி முன் வைத்து இறக்கப்பட்ட புலிக் கொடியை தூக்கி தற்போது 8.50 லட்சம் வாக்குகள் மூலம் தனித்து நின்று அங்கீகாரம் பெற்று உள்ளோம்.

    1 கோடியே 72 லட்சம் வாக்குகளாக நாம் தமிழர் கட்சியால் மாற்ற முடியாதா. அதனால் மைக் சின்னத்திற்கு வாக்களித்து புதிய அரசியல் தொடக்கமாக ஈரோடு கிழக்கில் இருந்து தொடங்குகள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சீமான் பெரியார் குறித்து பேசிய இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் ரெனி பகுதியில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசிய பெண் மந்திரி, எனது சாதிக்கே முக்கியத்துவம் அளிப்பேன் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #MamtaBhupesh #congress

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அசோக் கெலாட் முதல்- மந்திரியாக பொறுப் பேற்றார்.

    கெலாட் மந்திரி சபையில் மம்தாபூபேஷ், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை மந்திரியாக உள்ளார். தனி பொறுப்புடன் அவர் இந்த இலாகாவை கவனித்து வருகிறார்.

    கெலாட் மந்திரி சபையில் இடம் பெற்றுள்ள ஒரே பழங்குடியின உறுப்பினர் மம்தாபூபேஷ் ஆவார். மேலும் அவர் மந்திரி சபையில் உள்ள ஒரே பெண் மந்திரி ஆவார்.

    இந்த நிலையில் எனது சாதிக்கே முக்கியத்துவம் அளிப்பேன் என்று பெண் மந்திரி மம்தா பூபேஷ் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் ரெனி பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் இது தொடர்பாக பேசியதாவது:-

    எனது சாதிமக்களுக்கு வேலை செய்வதே எனது முதல் பணி. அவர்களை மேம்பாடு அடைய செய்வதற்கே முக்கியத்துவம் அளிப்பேன். எனது சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் பலன் அடைய பாடுபடுவேன். இதுவே எனது நோக்கமாக இருக்கும். மற்ற சமூகத்திற்கு இணையாக எனது சாதியினரை கொண்டு வருவேன்.

    இவ்வாறு மம்தா பூபேஷ் பேசினார்.

    அவரது இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சியான பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக பா.ஜனதா செய்தி தொடர்பாளர் முகேஷ்பரீக் கூறும்போது, “கடந்த சில தினங்களுக்கு முன்புதான் நாட்டில் உள்ள அனைவரும் சமம் என்று கூறி மம்தா பூபேஷ் பதவி ஏற்றார்.

    தற்போது அவர் தனது சமூகத்துக்கு முன்னிரிமை அளிப்பேன் என்கிறார். இது தான் காங்கிரசின் நிலைப்பாடும். சாதி வாரியாக மக்களை துண்டாட நினைக்கிறது” என்றார்.

    இந்த நிலையில் பெண் மந்திரி மம்தா பூபேஷ் தான் அப்படி பேசவில்லை என்று மறுத்துள்ளார். நாட்டில் உள்ள அனைவரையும் மதிக்கிறேன். அனைவருக்காகவும் பாடுபடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.  #MamtaBhupesh #congress #bjp

    ×