search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "daughter suicide"

    தருமபுரியில் மின்வாரிய அதிகாரியின் மகள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையை அடுத்த சித்தேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன். இவர் மின்வாரிய துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் சிபிதா (வயது 15). இவர் தருமபுரியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் பாத்ரூமுக்கு சென்றார். நீண்டநேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த வீட்டில் இருந்த உறவினர்கள் பாத்ரூமின் கதவை தட்டினர். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. உடனே சந்தேகம் அடைந்த அவர்கள் பாத்ரூமின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சிபிதா பாத்ரூமில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். உடனே உறவினர்கள் சிபிதாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இந்த சம்பவம் குறித்து தருமபுரி டவுன் போலீசார் உடனே அங்கு விரைந்து சென்று சிபிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    சிபிதாவை பெற்றோர்கள் திட்டியதால் தூக்குபோட்டு தற்கொலை கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடவாசல் அருகே மகள் தீக்குளித்து இறந்ததால் சீர்வரிசை பொருட்களை திருப்பி கேட்ட மாமனார், மாமியாரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    குடவாசல்:

    திருவாரூர் மாவட்டம் குடவாசலை அடுத்து கண்டர மாணிக்கத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 32) விவசாயி. இவருக்கும் பிரேமா என்ற பெண்ணும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த பிரேமா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து பிரபு 2-வதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த பிரேமாவின் தந்தை சந்திரன், தாய் அமுதா ஆகியோர் கண்டரமாணிக்கம் சென்று தங்களது மகளுக்கு திருமணத்தின் போது கொடுத்த சீர்வரிசை பொருட்களை திருப்பி தரும்படி கேட்டு உள்ளனர். அப்பேது பிரபு அவர்களுடன் தகராறு செய்து இருவரையும் தாக்கி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி சந்திரன் குடவாசல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தார். #tamilnews
    ×