என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "derail"

    • ஒடிசாவில் சரக்கு ரெயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.
    • அங்கு விரைந்த அதிகாரிகள் ரெயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.

    புவனேஷ்வர்:

    ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த ஜூன் 2-ம் தேதி பஹானாகா பஜார் நிலையத்தில் அடுத்தடுத்து 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இதுவரை 291 பேர் பலியாகினர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்நிலையில், ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் உள்ள அம்படோலாவில் இருந்து லஞ்சிகரில் உள்ள வேதாந்தா லிமிடெட் ஆலைக்கு சரக்கு ரெயில் சிறப்பு வழித்தடத்தில் சென்று கொண்டிருந்தபோது தடம் புரண்டது.

    இந்த விபத்தில் உயிர் சேதம் அல்லது யாருக்கும் காயம் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை என்றும், சிறப்பு வழித்தடத்தில் தடம் புரண்டதால் ரெயில் சேவைகள் பாதிக்கப்படவில்லை என்று ரெயில்வே அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

    தகவலறிந்து அங்கு விரைந்த ரெயில்வே அதிகாரிகள் ரெயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.

    • 9 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டது.
    • விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தகவல்.

    ரஷியாவின் வடகிழக்கு பகுதியான கோமியில் உள்ள வோர்குடா நகரில் இருந்து கருங்கடல் துறைமுக பகுதியான நோவோரோசிஸ்க் நகருக்கு பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது.

    அதில் 500-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இன்டா நகர் அருகே சென்றபோது ரெயில் தடம் புரண்டது.

    9 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டது. இந்த விபத்தில் 70 பேர் காயம் அடைந்தனர். விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    கனமழை காரணமாக விபத்து ஏற்பட்டதாக ரஷிய ரெயில்வே துறை தெரிவித்துள்ளது. விபத்து நடந்த பகுதிக்கு இரண்டு மீட்பு ரெயில்களுடன் மீட்புப் படையினர் சென்றுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அவசர சேவை மற்றும் மருத்துவ குழுக்கள் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். கனமழையே விபத்துக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    500-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ரெயில் ஆர்க்டிக் வட்டத்திற்கு அருகிலுள்ள சுரங்க நகரமான வோர்குடாவிலிருந்து நோவோரோசிஸ்க் கருங்கடல் துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உ.பி.யில் பயணிகள் ரெயில் இன்று திடீரென தடம் புரண்டது.
    • இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரெயில் இன்று மதியம் 2.35 மணிக்கு திடீரென தடம் புரண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.

    சண்டிகரில் இருந்து திப்ரூகர் செல்லும் விரைவு ரெயில் கோண்டா பகுதியில் சென்றபோது தடம் புரண்டது. இந்த விபத்தில் ரெயிலின் 4 பெட்டிகள் கவிழ்ந்துள்ளன என்றும், இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர் எனவும் முதல் கட்ட தகவல் வெளியானது.

    விபத்து குறித்து தகவல் அறிந்து மீட்புக்குழு விரைந்து சென்றுள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், பயணிகள் ரெயில் தடம் புரண்ட விபத்தில் 4 பயணிகள் பலியாகினர் என்றும், 20க்கும் மேற்பட்டோ படுகாயம் அடைந்தனர் எனறும் துணை முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.

    விபத்து நடந்த பகுதிக்கு 40-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் சென்றுள்ளனர். அங்கு 15-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சிஆர்எஸ் விசாரணையுடன் உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
    • விபத்து நடந்த பகுதிக்கு 40-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் சென்றுள்ளனர்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரெயில் இன்று மதியம் 2.35 மணிக்கு திடீரென தடம் புரண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.

    சண்டிகரில் இருந்து திப்ரூகர் செல்லும் விரைவு ரெயில் கோண்டா பகுதியில் சென்றபோது தடம் புரண்டது. இந்த விபத்தில் ரெயிலின் 4 பெட்டிகள் கவிழ்ந்துள்ளன என்றும், இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர் எனவும் முதல் கட்ட தகவல் வெளியானது.

    விபத்து குறித்து தகவல் அறிந்து மீட்புக்குழு விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    பயணிகள் ரெயில் தடம் புரண்ட விபத்தில் 4 பயணிகள் பலியாகினர் என்றும், 20க்கும் மேற்பட்டோ படுகாயம் அடைந்தனர் எனறும் துணை முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.

    விபத்து நடந்த பகுதிக்கு 40-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் சென்றுள்ளனர். அங்கு 15-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், பயணிகள் ரெயில் தடம்புரண்டு ஏற்பட்ட விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சம் மற்றும் சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடாக வழங்கப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மேலும், தற்போதைய சிஆர்எஸ் விசாரணையுடன் உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. உதவிக்காக அரசாங்கம் ஹெல்ப்லைன் எண்களை அறிவித்துள்ளது. கோண்டா (8957400965) மற்றும் லக்னோ (8957409292).

    காயமடைந்த பயணிகளின் சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கவும், தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதி செய்யவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    • உ.பி.யின் கோண்டா பகுதியில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது.
    • இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.

    கொல்கத்தா:

    உத்தர பிரதேச மாநிலத்தின் கோண்டா பகுதியில் இன்று மதியம் 2.35 மணிக்கு சண்டிகரில் இருந்து திப்ரூகர் செல்லும் விரைவு ரெயில் திடீரென தடம் புரண்டது. இதில் ரெயிலின் 4 பெட்டிகள் கவிழ்ந்தன. இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், கோண்டா ரெயில் விபத்து தொடர்பாக மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    உத்தர பிரதேச மாநிலம் கோண்டாவில் இன்று நடந்த மற்றொரு சோகமான ரெயில் விபத்து குறித்து அறிந்து வருத்தமடைகிறேன்.

    மற்றொரு ரெயில் தடம் புரண்டது. இந்த முறை சண்டிகர்-திப்ருகர் எக்ஸ்பிரஸ். ரெயில்வே அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்? என்ன செய்கிறது இந்திய அரசு? பயணிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். அரசுக்கு எப்போது புத்தி வரும்?!"

    விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • மதுராவில் சரக்கு ரெயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டு விபத்தில் சிக்கின.
    • இதனால் டெல்லி நோக்கிச் செல்லும் ரெயில் சேவை பாதிப்பு அடைந்துள்ளது.

    லக்னோ:

    உத்தர பிரதேசம் மாநிலம் மதுராவில் உள்ள பிருந்தாவன் ரோடு என்ற இடத்தில் சரக்கு ரெயிலின் 15 பெட்டிகள் தடம் புரண்டு விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து, டெல்லி நோக்கிச் செல்லும் ரெயில் சேவை பாதிப்பு அடைந்துள்ளது. மேலும் அப்பகுதி வழியாக செல்லும் 15 ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    தகவல் அறிந்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல், நேற்று மாலை பீகாரின் நாராயண்பூரில் சரக்கு ரெயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டு விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.


    • விபத்தில் காயங்கள், உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
    • இரண்டு ரெயில்களின் மோட்டார்மேனும் காயமடைந்துள்ளனர்.

    உத்தரபிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தில் காகா பகுதியில் உள்ள பாம்பிபூர் அருகே 2 சரக்கு ரெயில்கள் மோதிக்கொண்டன.

    இந்த விபத்தில் கார்டு கம்பார்ட்மெண்டும், என்ஜினும் தடம் புரண்டன. அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    சிக்னல் கோளாறு காரணமாக முதல் சரக்கு ரெயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தபோது 2-வது சரக்கு ரெயில் அதன் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து காரணமாக அப்லைன் தடை செய்யப்பட்டுள்ளது. ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்து ரெயில்வே வழக்கமான போக்குவரத்து பாதையில் நிகழ்ந்துள்ளது. விபத்தில் காயங்கள், உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

    விபத்து காரணமாக, பல ரெயில்கள் இடையில் நிறுத்தப்பட்டதால் தாமதமாகின. இரண்டு ரெயில்களின் மோட்டார்மேனும் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ரெயில்வே நிர்வாகம் தண்டவாளத்தை சீர்படுத்தி, வழக்கமான போக்குவரத்தை வழங்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரெயில்வே நிர்வாகம் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்கு பிறகுதான் விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும்.

    • ரெயில் பெட்டிகள் தண்டவாளம் மாறும்போது திடீரென்று 18-வது டேங்கரில் இருந்த முன்புற 4 சக்கரங்கள் தடம் புரண்டன.
    • பெங்களூருவில் இருந்து ரெயில்வே மீட்பு ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

    கிருஷ்ணகிரி:

    ஓசூர் வழியாக சேலத்திற்கு செல்ல இருந்த சரக்கு ரெயிலின் டேங்கர் பெட்டி தடம்புரண்டது. இதனால் அந்த பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கர்நாடக மாநிலம் பெங்களூரு பனஸ்வாடி பகுதியில் இருந்து சேலத்திற்கு நேற்று மாலை 52 காலி டேங்கர்களுடன் சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரெயில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ரெயில் நிலையம் அருகில் தளி ஜங்ஷன் பக்கமாக நேற்று மாலை 4 மணி அளவில் வந்து கொண்டிருந்தது.

    அந்த நேரம் ரெயில் பெட்டிகள் தண்டவாளம் மாறும்போது திடீரென்று 18-வது டேங்கரில் இருந்த முன்புற 4 சக்கரங்கள் தடம் புரண்டன. இதனால் பயங்கர சத்தம் கேட்டது. உடனடியாக என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார்.

    சுமார் 300 மீட்டர் தூரம் சென்று ரெயில் நின்ற பிறகு டிரைவர் வந்து பார்த்தார். அப்போது 18-வது டேங்கரின் முன்புறமாக இருந்த சக்கரங்கள் தடம்புரண்டு இருந்தது. இதை பார்த்த என்ஜின் டிரைவர் ஓசூர் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். மேலும் பெங்களூருவில் உள்ள தென்மேற்கு ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து உடனடியாக பெங்களூருவில் இருந்து ரெயில்வே மீட்பு ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

    இதைத் தொடர்ந்து 18-வது டேங்கருக்கு பின்னால் இருந்த 34 டேங்கர்களும் மாற்று என்ஜின் மூலமாக கர்நாடக மாநிலம் ஆனேக்கல் ரெயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ரெயில் தடம் புரண்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் 18-வது டேங்கரில் இருந்த சக்கரங்கள் சரி செய்யப்பட்டு ரெயில் புறப்பட்டு சென்றது.

    இதனால் அந்த பாதையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    பெங்களூரு பனஸ்வாடியில் இருந்து சேலத்திற்கு இந்த சரக்கு ரெயில் சென்றுள்ளது. இந்த ரெயில் சேலம் ஐ.ஓ.சி.யில் இரந்து பெட்ரோல் நிரப்பி வருவதற்காக 52 காலி டேங்கர்களுடன் சென்றுள்ளது.

    அந்த நேரம் ரெயில் பெட்டிகள் தண்டவாளம் மாறும் போது திடீரென்று 18-வது டேங்கரில் இருந்த முன்புற பழுதான நிலையில் இருந்த 4 சக்கரங்கள் திடீரென்று தடம் புரண்டன.

    தற்போது மீட்பு பணிகள் முடிவடைந்து ரெயில்கள் சீராக செல்கின்றன என்றார்.

    இதனால் ஓசூர்-பெங்களூரு ரெயில்வே பாதையில் சென்ற பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில ரெயில்கள் சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.

    ரெயில் வலது புறமாக தடம்புரண்டது. இடது புறமாக தடம் புரண்டு இருந்தால், பெரும் விபத்தை இது ஏற்படுத்தி இருக்கும். ஏனெனில், இருப்புப் பாதை அருகே, இடது புறத்தில், ஏராளமான வணிக நிறுவனங்களும், குடியிருப்பு பகுதிகளும் அமைந்துள்ளன. எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்ட டிரைவர், தடம் புரண்டு சுமார் 150 மீட்டர் அளவில், ரெயிலை விரைவாக செயல்பட்டு நிறுத்தியுள்ளார். அவர், சரியான நேரத்தில், சரியான முடிவை, விரைவாக எடுத்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

    • சரக்கு ரெயில் தடம் புரண்டதால் அந்த வழியாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஜார்க்கண்ட் மாநிலம் சோடர்மா மற்றும் மன்பூர் ரெயில்வே நிலையங்களுக்கு இடையே இன்று காலை 6.45 மணிக்கு அந்த வழியாக நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரெயில் திடீரென தடம் புரண்டது.

    அந்த ரெயிலின் 53 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டது. இதனால் ரெயில் பெட்டிகளில் இருந்த நிலக்கரிகள் தண்டவாளத்தில் சிதறி கிடக்கிறது.

    இதுபற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சரக்கு ரெயில் தடம் புரண்டதால் அந்த வழியாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சில பயணிகள் ரெயில் ரத்து செய்யப்பட்டது. பல ரெயில்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டது. இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் ஹவுராவில் இருந்து டெல்லி செல்லும் பூர்வா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்ட விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். #PoorvaExpressderail
    லக்னோ:

    ஹவுராவில் இருந்து புதுடெல்லி நோக்கி செல்லும் விரைவு ரெயிலான பூர்வா எக்ஸ்பிரஸ் நேற்று புறப்பட்டது. இந்த  ரெயில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கான்பூரை இன்று அதிகாலை ஒரு மணிக்கு அடைந்தது.

    அப்போது ரெயிலின் 5 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. நள்ளிரவில் பயணிகள் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் அலறினர்.

    தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காயமடைந்த 5 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. #PoorvaExpressderail
    சீனாவில் அலுமினியம் ஏற்றிச்சென்ற சரக்கு ரெயில் தடம் புரண்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். #China #freighttrainderail
    பெய்ஜிங்:

    சீனாவின் மத்தியில் அமைந்துள்ள ஹெனான் மாகாணத்தில் அலுமினியம் ஏற்றிக் கொண்டு சரக்கு ரெயில் ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது.

    கோங்யி நகர் அருகே சரக்கு ரெயில் வந்தபோது திடீரென தடம் புரண்டது. இந்த விபத்தில் சிக்கி 6 பேர் மாயமாகினர்.

    தகவலறிந்து அங்கு வந்த ரெயில்வே துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அதில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. மேலும் மாயமான இருவரை தேடும் பணி நடந்து வருகிறது. 

    சரக்கு ரெயில் தடம் புரண்டதால அந்த வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது. இதையடுத்து அந்த வழியாக செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. #China #freighttrainderail
    ×