search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devotees of Salem"

    • திருவிழாவானது தீபாவளி பண்டிகைக்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம்.
    • கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிப்பு

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள கூனவேலம்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஆயா கோவில் என்று அழைக்கப்படும் அழியா இலங்கை அம்மன் கோவில் உள்ளது. 400 ஆண்டுகளுக்கு பழமையான இக்கோவில் திருவிழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் தீபாவளி பண்டிகைக்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி நேற்று இரவே தொடங்கிய திருவிழா இன்று விமரிசையாக கொண்டா டப்பட்டு வருகிறது. திரு விழாவை ஒட்டி கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்டு உள்ளது. உள்ளூர், வெளியூர்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் அதிகாலை யிலேயே பொங்கல் வைத்தும், ஆடுகளை பலியிட்டு விருந்து அளித்தும் வேண்தலை நிறைவேற்றினர்.

    திருவிழாவில் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தர்மபுரி, கரூர், ஈரோடு, அரியலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். ராட்டினம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும், விளையாட்டு சாமான்கள், பொம்மைகள் உள்பட பல்வேறு கடை களையும் வியா பாரிகள் வைத்திருந்தனர். தீய ணைப்பு படையினர் தயார் நிலையில் இருந்தனர். புதுச்சத்திரம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    ×