search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devotees perform"

    • பெருமாளுக்கு இன்று அதிகாலை பால், தயிர், இளநீர் உள்பட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    • சென்னிமலை பகுதியில் உள்ள பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு அபிேஷகம் மற்றும் வழிபாடு, பஜனை கள் நடந்தது.

    ஈரோடு:

    புரட்டாசி கடைசி சனி க்கிழமையை யொட்டி இன்று பெருமாள் கோவி ல்களில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்த னர்.

    ஈரோடு கோட்டை பெருமாளுக்கு புரட்டாசி சனிக்கிழமையை யொட்டி இன்று அதிகாலை சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு இருந்தது. இதை யொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்தி ருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பவானி அருகே உள்ள பெருமாள் மலை பகுதியில் மலை மேல் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி மங்களகிரி பெருமாளுக்கு இன்று அதிகாலை பால், தயிர், இளநீர் உள்பட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மங்களகிரி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்ய ப்பட்டு மகா தீபாரதனை நடை பெற்றது.

    இதையொட்டி ஏராள மான பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து மங்களகிரி பெருமாள் கோவிலுக்கு வந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பக்தர்கள் பலர் மொட்டை அடித்து தங்கள் வேண்டுதல்களை நிறை வேற்றினர்.

    இதையொட்டி பக்தர்கள் நேற்று இரவு கோவில் அடிவார பகுதிகளில் கூடா ரம் அமைத்து தங்கினர். தொடர்ந்து அவர்கள் அங்கு பெருமாள் படம் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

    தொடர்ந்து பக்தர்கள் செம்மாலை (பெரிய அளவி லான காலணி) மேள தாளங்கள் முழங்க எடுத்து வந்தனர். இதை அவர்கள் மலை மீது கோவில் அருகே உள்ள மரத்தில் கட்டி சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதையொட்டி இன்று அதிகாலை முதலே பவானி, ஈரோடு, சித்தோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பெருமாள் மலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். மலை மீது பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரி சனம் செய்தனர்.

    சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஆதி கேசவப் பெருமாள் சன்னதியில் உள்ள உற்சவர் மற்றும் மூலவருக்கு இன்று சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமையை யொட்டி சென்னிமலை பகுதியில் உள்ள பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு அபிேஷகம் மற்றும் வழிபாடு, பஜனை கள் நடந்தது.

    சென்னிமலை அடுத்துள்ள மேலப்பாளை யம் ஆதிநாரய ணப்பெரு மாள் கோவிலில் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கா ரம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.

    ஈங்கூர் ரோட்டில் உள்ள செல்வ ஆஞ்சநேயர் மற்றும் விஸ்வ ரூப மகா விஷ்ணு ஆலயத்தில் காலை 7 மணிக்கு ஆஞ்சநேயர் மற்றும் மகாவிஷ்ணு விற்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. அதை தொடர்ந்து அலங்கார பூஜைகள் நடந்தது. முருங்கத்தொழுவு அணியரங்க பெருமாள் மலை கோவிலிலும் பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

    கோபி செட்டிபாளையம் சிவசண்முகம் வீதியில் உள்ள ஆதி அரங்கநாத பெருமாள் கோவிலில் நேற்று ஆற்றுக்குச் சென்று தீர்த்தம் கொண்டு வருதல் நிகழ்ச்சியும், திரு கோடி கம்பம் தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று காலை சுவாமி நீராடுதல் நிகழ்ச்சியும், கரகம் படைக்களம் அலங்க ரித்தல், கபால பூஜை, பெரும் பூஜை, அபிஷேக ஆரா தனைகள் பொங்கல் வைத்து பூஜைகள் ஸ்ரீவாரி கும்பிடுதல், சுவாமி மலையேறுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை மறு பூஜை விழா நடக்கிறது.

    மேலும் மூல வாய்க்கால் மலை ஸ்ரீதேவி பூதேவி கரி வரதராஜ பெருமாள், பாரியூர் ஆதிநாராயண பெருமாள், வரதராஜ பெருமாள், மொடச்சூர், கொளப்பலூர், அழுக்குளி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை வழிபட்டனர்.

    மேலும் அந்தியூர் பேட்டை பெருமாள் கோவி லில் இன்று பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்ய ப்பட்டு திருப்பதி அலங்கா ரம் செய்யப்பட்டு இருந்தது.

    இதே போல் அந்தியூர் அழகுராஜ பெருமாள், தவிட்டு பாளையம் வரத ராஜ பெருமாள், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள வீரநாராயண பெருமாள், பெருந்துறை பிரசன்ன வெங்கட ரமண பெருமாள், சத்தியமங்கலம் ேகாட்டு வீராம்பாளையம் ெபருமாள், ஈரோடு சத்தி ரோடு கொங்கு பெருமாள் கோவில் உள்பட மாவட்ட த்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் இன்று காலை ஏராளமான பகதர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    ×