என் மலர்
நீங்கள் தேடியது "disaster"
- படுகாயமடைந்த வினீத் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
- போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் அட்டிங்கல் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அம்பிகா. இவரது மகன் வினீத் (வயது34). சி.பி.எம். உள்ளூர் கமிட்டி உறுப்பினராக இருக்கும் இவர், எடகோடு கூட்டுறவு சேவை சங்கத்தில் பணியாற்றி வந்தார். வினித் இன்று அதிகாலை தனது நண்பர் அக்ஷய் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
பள்ளிபுரம் பகுதியில் வந்த போது, அவர்களது மோட்டார் சைக்கிள் மீது வர்க்கலாவில் இருந்து வேகமாக வந்த கார் மோதியது. இதில் வினீத் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த வினீத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் அக்ஷய் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆம்புலன்ஸ் மூலம் குமாரவடிவேல் உடல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டது.
- உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த குமார வடிவேலின் குடும்பத்தினரை பொது மக்கள், டாக்டர்கள் பாராட்டினர்.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள மூத்தாம் பாளையத்தை சேர்ந்தவர் குமார வடிவேல் (வயது 56).
இவர் கேரள மாநிலம் தலைச்சேரியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.
சில தினங்களுக்கு முன்பு தலைச்சேரி பகுதியில் பணம் வசூல் செய்ய சென்ற போது, வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார்.
இந்தநிலையில் அவரது குடும்பத்தினர் குமார வடிவேல் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர்.
இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் குமாரவடிவேல் உடல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு கண், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் ஆபரேசன் மூலம் எடுக்கப்பட்டு, உறுப்புகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.
இன்று காலை குமார வடிவேலின் உடல் அரசு மரியாதையுடன் சொந்த ஊரான மூத்தாம்பாளையம் கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது.
தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா, காங்கயம் தாசில்தார் மோகனன் மற்றும் நில வருவாய் அலுவலர் சுந்தரி, கிராம நிர்வாக அலுவலர்கள் மோகன் பிரபு, கவுசல்யா ஆகியோர் அரசின் சார்பில் அஞ்சலி செலுத்தினர்.
குமாரவடிவேலுக்கு சித்ரா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த குமாரவடிவேலின் குடும்பத்தினரை பொது மக்கள், டாக்டர்கள் பாராட்டினர்.
- வயநாடு நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் அதிகமானோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு மாநில அரசுகள் நிதியுதவிகளை அளித்தன.
கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் ஜூலை 30-ம் தேதி பெய்த கனமழை காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் அதிகமானோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
முண்டகை, சூரல்மலை, மேம்பாடி, அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை உள்ளிட்ட இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்தப் பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்தன.
இந்த நிலச்சரிவால் கேரள மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாடும் கடும் துயரத்திற்கு உள்ளானது.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு மாநில அரசுகள் நிதியுதவிகளை அளித்தன. தமிழ்நாடு அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்தது.
இதற்கிடையே, வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க கேரள அரசு வலியுறுத்தி வந்தது. அதனை ஏற்க மத்திய அரசு மறுத்து வந்தது.
இந்நிலையில், வயநாடு நிலச்சரிவை அதி தீவிர பேரிடராக அறிவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பாக கேரள அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
இருப்பினும், பேரிடராக அறிவித்த மத்திய அரசு கேரள மாநிலத்திற்கான சிறப்பு நிதியுதவி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
- ஆசனூரில் தீயணைப்பு மீட்பு மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பது மற்றும் தீத்தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
- ஆசனூர் நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் ஆசனூர் குளத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நபரை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
தாளவாடி, ஜூன்.16-
ஆசனூரில் தீயணைப்பு மீட்பு மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பது மற்றும் தீத்தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆசனூர் நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் ஆசனூர் குளத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நபரை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
வீட்டில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை தண்ணீரால் நனைந்த சாக்குப்பையை போட்டு அணைப்பது குறித்தும் விளக்கம் அளிக்க ப்பட்டது. இதில் கிராம மக்கள் பங்கேற்று தீத்தடுப்பு நடவடிக்கை குறித்து செயல்விளக்கத்தை பார்வையிட்டனர்.
மேலும் பேரிடர் காலங்களில் வெள்ளம் வரும்போது பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது குறித்து அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- நாகை மாவட்டம் பேரிடர்களால் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகிறது.
- முதல்-அமைச்சரிடம் கலந்து பேசி கண்டிப்பாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
நாகப்பட்டினம்:
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 18--ந்தேதி நாகப்பட்டினம் எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில் பின்வருமாறு:-
எம்.எல்.ஏ கேள்வி:
திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தை தனி வட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இதற்கான வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நிறைவேற்றுவதற்காக கொடுக்கப்பட்டுள்ள 10 கோரிக்கைகளில் 2வது கோரிக்கையாக இதை கொடுத்துள்ளோம்.விவசாயிகள் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி திருமருகல்.
நாகை மாவட்டம் பேரிடர்களால் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகிறது.
எனவே அங்கு அரசு நிர்வாக அமைப்புகள் எளிதில் மக்கள் அணுகும் வகையில் இருக்க வேண்டும்.
எனவே திருமருகலை தனி வருவாய் வட்டமாக அறிவிக்க வேண்டும்.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், திருமருகல் வட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளீர்கள்.
மாவட்ட கலெக்டர் வாயிலாக இதற்கான முன்மொழிவை அனுப்பி உள்ளீர்கள்.
முதலமைச்சாடம் கலந்து பேசி நிச்சயமாக உங்கள் கோரிக்கை மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
- வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் வெள்ளம் மற்றும் பேரிடர் மீட்பு ஒத்திகை.
- பேரிடர் காலத்தில் ஏற்படும் அசம்பாவிதங்களில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, வாய்மேடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் வெள்ளம் மற்றும் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வாய்மேடு தீயணைப்பு நிலைய அலுவலர் பூபதி தலைமை தாங்கினார். வாய்மேடு ஊராட்சி மன்ற தலைவர் மலர் மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தார்.
வாய்மேடு கூட்டுறவு சங்கம் எதிரே உள்ள வாய்க்காலில் பேரிடர் காலத்தில் ஏற்படும் அசம்பாவிதங்களில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது என தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.
நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் அன்பரசன், கிராம நிர்வாக அலுவலர்கள், வாய்மேடு காவல் நிலைய உதவியாளர் மற்றும் வாய்மேடு இலக்குவனார் பள்ளி ஆசிரியர் மணிமொழி, பள்ளி மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பேரணி முக்கிய வீதிகள் வழியாக கபிஸ்தலம் பாலக்கரையில் வந்து நிறைவடைந்தது.
- பேரணிக்கு வருவாய் ஆய்வாளர் சுகுணா தலைமை வகித்தார்.
கபிஸ்தலம்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தல்படி கபிஸ்தலம் அருகே கோவிந்தநாட்டுச்சேரியிலும் மற்றும் கபிஸ்தலம் பாலக்கரையிலும் சர்வதேச பேரிடர் குறைப்பு மற்றும் விழிப்புணர்வு தின சிறப்பு பேரணி நடைபெற்றது.
கபிஸ்தலம் பாலக்கரையில் நடைபெற்ற பேரணிக்கு வருவாய் ஆய்வாளர் சுகுணா தலைமை வகித்தார்.
பேரணியை பாபநாசம் தாசில்தார் பூங்கொடி கொடி அசைத்து தொடக்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக கபிஸ்தலம் பாலக்கரையில் வந்து நிறைவடைந்தது.
இதில் மண்டல துணை வட்டாட்சியர் பிரியா, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெகநாதன், ஜெய்சங்கர், காமராஜ், யசோதா சரவணன் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
பேரணியில் தன்னார்வ தொண்டு நிறுவன முதல்நிலை பொறுப்பாளர்கள், வருவாய்துறை பணியாளர்கள், பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கடையநல்லூர் தாமரைகுளத்தின் அருகே மழைக்காலத்தின் போது நீர்நிலைகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை மீட்பது எப்படி என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது
- பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தனித்துணை கலெக்டர் குணசேகரன் தலைமையில் இந்த ஒத்திகை நடைபெற்றது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் தாமரைகுளத்தின் அருகே மழைக்காலத்தின் போது நீர்நிலைகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களையும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களையும் மீட்பது எப்படி என்பது குறித்தும், அவர்களுக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. தீயணைப்பு வீரர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், டி.என்.டி.ஜே .சேவை அமைப்பு ஆம்புலன்ஸ், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ,ரெட் கிராஸ் குழுவினர், லயன்ஸ் மகாத்மா காந்தி, செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக்கல்லூரி, வீராசாமி செட்டியார் என். எஸ். எஸ் . மாணவர்கள் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தனித்துணை கலெக்டர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் அரவிந்த், மோட்டார் வாகன ஆய்வாளர், கனகவல்லி, வட்டாரப் போக்குவரத்து சூப்பிரண்டு ஜீவானந்தம் ,பொதுப்பணித்துறை அலுவலர் சரவணகுமார், தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் , கடையநல்லூர் வட்டார நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் நஸ்ரின், இன்ஸ்பெக்டர் விஜயகுமார், நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கந்தசாமி, நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், ரெட் கிராஸ் மனோகரன், தவ்ஹீத் ஜமாத் நல்லூர் சுலைமான், கடையநல்லூர் வருவாய் ஆய்வாளர் சங்கரேஸ்வரி, நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவா, கிராம நிர்வாக அலுவலர்கள் ராமச்சந்திரன், நாராயணன், சங்கரநாராயணன், மாடசாமி, சாந்தி , கிராம நிர்வாக உதவியாளர்கள் பாலின்ரமேஷ், ஆரோக்கி யராஜ், மாரியம்மாள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- காவிரியில் ஏற்பட்டதால் குமாரபாளையத்தில் 150 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.
- தேசிய பேரிடர் மீட்பு படையினர் 22 பேர் குமாரபாளையம் வந்தனர்.
குமாரபாளையம்:
காவிரியில் ஏற்பட்டதால் குமாரபாளையத்தில் 150 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. தொடர்ந்து அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாக்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் 22 பேர் குமாரபாளையம் வந்தனர்.
மணிமேகலை தெரு, கலைமகள் தெரு, அண்ணா நகர், இந்திரா நகர் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளை ஆய்வு செய்த திருச்செங்கோடு வருவாய் பிரிவு அதிகாரி இளவரசி, மீட்பு படையினரிடம் ஆலோசனை வழங்கினார்.
இவர்களுடன் வட்டாட்சியர் தமிழரசி, தி.மு.க. நகர செயலர் செல்வம், வருவாய் ஆய்வாளர் விஜய், கிராம நிர்வாக அலுவலர் முருகன், தியாகராஜன், செந்தில்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- அவசரகால தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணிகளை மேற்கொள்வது குறித்து செய்முறை விளக்கம் அளித்தனர்.
- தீயணைப்போர்கள் விபத்து மற்றும் தீயணைப்பது எவ்வாறு என்பது குறித்து விளக்கம் அளித்தனர்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா பாடைகட்டி மாரியம்மன் கோவிலில் வலங்கைமான் தீயணைப்பு துறையினர் அவசரகால தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்று செய்முறை விளக்கம் அளித்தனர்.
இதில் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மணிகண்டன் கலந்து கொண்டு மீட்பு பணிகள் குறித்து விளக்கம் அளித்தார். மேலும் நிலைய அலுவலர்(போக்குவரத்து) மார்த்தாண்ட பூபதி, சிறப்பு நிலைய அலுவலர் ராஜசேகரன், சிறப்பு அலுவலர் (போக்குவரத்து) பாலு, தீயணைப்போர்கள் இளங்கோவன், மாரியப்பன், வெக்காளிஸ்வரன், சந்தன குமார் ஆகியோர் விபத்து மற்றும் தீயணைப்பது பற்றி விளக்கம் அளித்தனர்.
இந்நிகழ்வில் பாடைகட்டி மாரியம்மன் கோவில் நிர்வாக அதிகாரி ரமேஷ், தக்கார் ரமணி, எழுத்தர் சீனிவாசன் மற்றும் பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- எனது எண்ணங்கள் அன்புக்குரியர்களை இழந்தவர்களின் குடும்பத்தோடு உள்ளது.
- காயம் அடைந்துள்ளவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்
புதுடெல்லி:
சென்னை கோயம்பேட்டில் இருந்து சிதம்பரம் நோக்கி இன்று காலை அரசு பஸ் (எண் 14) புறப்பட்டு சென்றது. சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.காலை 8.10 மணியளவில் அச்சரப்பாக்கம் அடுத்த தொழப்பேடு அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டு இருந்தது.
அப்போது முன்னால் இரும்பு கம்பியை ஏற்றிக் கொண்டு திருச்சி நோக்கி லாரி ஒன்று சென்றது. அந்த லாரியை அரசு பஸ் டிரைவர் முந்தி செல்ல முயன்றார்.
இதில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் இடது புறத்தில் இருந்த லாரியின் பின்பக்கத்தில் அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் பஸ்சின் இடதுபுறம் முழுவதும் நொறுங்கியது.
இடதுபுற இருக்கைகளில் ஜன்னல் ஓரம் இருந்த 3 ஆண்கள், 2 பெண்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் அச்சரப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் பலியான 5 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், மேல் மருவத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மற்றொரு ஆண் பயணியும் பரிதாபமாக இறந்தார்.
இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. மேலும் சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில், விபத்து குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "செங்கல்பட்டு அருகே நடந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது.
எனது எண்ணங்கள் அன்புக்குரியர்களை இழந்தவர்களின் குடும்பத்தோடு உள்ளது. காயம் அடைந்துள்ளவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பாபநாசம்:
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் வத்திகுடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாபுராவ் மகன் வேமண்டு சீனு (வயது 38). இவர் தஞ்சாவூர்- விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை பணிக்காக பாபநாசம் அருகே மேல செம்மங்குடி கிராமத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
நேற்று வேமண்டுசீனு பாபநாசத்திற்கு வந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் தங்கி வேலை பார்க்க கூடிய இடத்திற்கு அரயபுரம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் ஒன்பத்துவேலி மாதா கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் (35) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக வேமண்டு சீனு மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட வேமண்டுசீனு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.படுகாயம் அடைந்த சுரேசை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.