என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dog"

    • சென்னையில் மட்டும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் தெருநாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டு இருக்கிறது.
    • இந்தியாவில் பாதிக்கப்படுபவர்களில் 4-ல் ஒரு பங்கு சிறுவர்களாக இருப்பது தெரியவருகிறது.

    2024-ம் ஆண்டில் 21 லட்சத்து 95 ஆயிரத்து 122 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு இருப்பதும், அவர்களில் 4-ல் ஒரு பங்கு 15 வயதுக்குட்பட்ட சிறுவர்-சிறுமிகள் ஆவார்கள் என்பதும் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

    நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. தெருநாய்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. சென்னையில் மட்டும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் தெருநாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டு இருக்கிறது.

    நாய்க்கடி பாதிப்புக்கு மருந்து இருக்கிறது என்றாலும், வெறிநாய்க் கடியால் தீவிரமாக பாதிக்கப்படுபவர்கள் பிழைப்பது கேள்விக்குறியாகிவிடுகிறது. அதாவது, நாய்க்கடியால் பாதிக்கப்படும் ஒருவர் ஆஸ்பத்திரிகளில் தொடர் சிகிச்சைகள் எடுத்துக்கொள்வதன் மூலம் அதில் இருந்து மீண்டு விடுகிறார்.

    ஆனால் அதுவே நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் கிருமிகள் (வெறிநோய்) நேரடியாக மூளையை தாக்கும்போதுதான் அந்த நபர் மரணத்தை தழுவும் சூழல் ஏற்படுகிறது. இதனை வெறிநாய்க்கடி பாதிப்பு என்றும் சொல்கிறார்கள்.

    இப்படியாக உலகளவில் ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெறிநாய்க்கடி பாதிப்பால் மரணம் அடைவதாக உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

    உலகளவில் இந்தியாவை எடுத்துக்கொண்டால், நாய்க்கடி பாதிப்பு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே வருவதை புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

    அதன்படி, இந்தியாவில் கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் 21 லட்சத்து 95 ஆயிரத்து 122 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்-சிறுமிகள் 5 லட்சத்து 19 ஆயிரத்து 704 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது, இந்தியாவில் பாதிக்கப்படுபவர்களில் 4-ல் ஒரு பங்கு சிறுவர்களாக இருப்பது தெரியவருகிறது.

    நாய்க்கடி பாதிப்பில் மராட்டியத்துக்கு அடுத்தபடியாக தமிழகம்தான் இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில், கடந்த 2024-ம் ஆண்டில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 80 ஆயிரமாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டு 4 லட்சத்து 41 ஆயிரத்து 804 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது, இந்தியாவில் 2024-ம் ஆண்டில் 54 ஆக இருக்கிறது. இறப்பு எண்ணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. இதற்கு முன்பு 2023-ம் ஆண்டில் 50 ஆகவும், 2022-ம் ஆண்டில் 21 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெயானந்த் என்பவர் வீட்டிற்கு வெளியே கட்டிலில் படுத்துக்கொண்டு போன் பயன்படுத்தி கொண்டுள்ளார்.
    • அப்போது கட்டிலுக்கு கீழே அவரது வளர்ப்பு நாய் தூங்கி கொண்டிருந்தது.

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் குடியிருப்பு பகுதியில் தூங்கி கொண்டிருந்த நாயை சிறுத்தை வேட்டையாடிய அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தேகான் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜெயானந்த் என்பவர் வீட்டிற்கு வெளியே கட்டிலில் படுத்துக்கொண்டு போன் பயன்படுத்தி கொண்டுள்ளார். அப்போது கட்டிலுக்கு கீழே அவரது வளர்ப்பு நாய் தூங்கி கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் சத்தமில்லாமல் நுழைந்த சிறுத்தை தூங்கி கொண்டிருந்த நாயை வேட்டையாடியது. அப்போது சிறுத்தையை கண்டு ஜெயானந்த் அதிர்ச்சியடைந்த

    இதனையடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறையினரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். 

    • ஒரே தட்டில் சாப்பிடும் போது பூனைக்கு நாய் விட்டுக் கொடுக்கிறது.
    • பூனையும், நாயும் ஒற்றுமையாக திகழ்வதை பார்க்கும் போது அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

    பெருமாநல்லூர் :

    ஊத்துக்குளி அருகே உள்ள திம்மநாயக்கன்பாளையம் சிவசக்தி நகரில் ஒரு வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளான பூனையும், நாயும் ஒற்றுமையாக திகழ்வதை பார்க்கும் போது அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது .

    இந்த பூனையும் நாயும் ஒரே தட்டில் தான் உணவு அருந்துகிறது. வேறு ஒரு நாய் தட்டில் சாப்பிட வரும்போது இந்த நாய்க்கு பிடிப்பதில்லை. ஆனால் ஒரே தட்டில் சாப்பிடும் போது பூனைக்கு நாய் விட்டுக் கொடுக்கிறது. பொதுவாக பூனையை கண்டால் நாய்க்கு பிடிப்பதில்லை. ஆனால் இந்த வீட்டில் இந்த அதிசயம் நிகழ்வதை பார்க்கும்போது மெய்சிலிர்க்க வைக்கிறது.

    இது குறித்து அந்த வீட்டின் உரிமையாளர் கோனியா கூறும் போது, நாங்கள் சிறு வயது முதல் நாயையும் பூனையையும் ஒன்றாக தான் வளர்த்து வருகிறோம். நாய்க்குட்டியாக இருக்கும் போது பூனை அதன் மேல் படுத்து தூங்கும் .  அப்போதே அவர்கள் ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுப்பதில்லை. அது இன்றுவரை தொடர்கிறது. பொதுவாக எந்த நாயும் தான் உணவருந்தும் போது வேறொரு நாயோ மற்ற விலங்கோ நெருங்கும்போது அதை சும்மா விடுவதில்லை, துரத்தும். ஆனால் இந்த நாயின் குணம் பிரமிக்க வைக்கிறது.

    • தினமும் 100 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட உள்ளது
    • இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த

    திருச்சி

    திருச்சி மாநகரில் தெரு நாய்களின் இனப்பெருக்கம் மற்றும் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர், அரியமங்கலம் மற்றும் கொட்டப்பட்டு ஆகிய இடங்களில் தலா ரூ.51 லட்சம் செலவில் கருத்தடை மையங்களை கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    தற்போது இந்த புதிய கருத்தடை மையங்களின் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு மையமும் 2000 முதல் 3000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இதில் ஆபரேஷன் தியேட்டர் தனிமைப்படுத்தும் அறை, சிகிச்சை அறை, ஆப்ரேஷனுக்கு முன்பும் பின்பும் தங்க வைக்கும் அறைகள் என தனித்தனியாக கட்டப்பட்டுள்ளது.

    தற்போதைய நிலையில் நாள் ஒன்றுக்கு ஐந்து முதல் 15 நாய்களுக்கு மட்டுமே கருத்தடைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த புதிய மையங்கள் செயல்படும் பட்சத்தில் தினமும் 75 முதல் 100 தெரு நாய்களுக்கு கருத்தடைகள் செய்ய முடியும்.

    கடந்த 2017-ல் இருந்து 2021 வரை 4,883 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது. நடப்பாண்டில் இதுவரை 602 நாய்களுக்கு கருத்தடைகள் செய்யப்பட்டுள்ளது.

    ஒரு நாய்க்கு கருத்தடை செய்ய மாநகராட்சி சார்பில் ரூ.700 செலவு செய்யப்படுகிறது. இந்த தெரு நாய்களை பிடிப்பதற்கு இரண்டு சிறப்பு 

    • 100 நாட்டு இன நாய்களை வளர்ப்பதற்காக சதீசுக்கு இந்த ஆண்டுக்கான இனப்பாதுகாப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.
    • 45 நாட்களுக்கு குறைவான வயது கொண்ட ராஜபாளையம் நாய்க்குட்டி ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள புதூர் மலையின் அடி வாரத்தில் கே.பொத்தாம்பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஏ.சதீஷ். இவர் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிகிறார். அதே நேரத்தில் தனது சொந்த கிராமத்தில் நாய் பண்ணையில் 100 நாட்டு நாய்களை வைத்து வளர்த்து வருகிறார். இவரிடம் ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை, மண்டை உள்ளிட்ட இனங்களில் நாட்டு நாய்கள் உள்ளன. இதில் கன்னி, சிப்பிப் பாறை ஆகிய வகை நாய்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்தவை. கோம்பை இன நாய் தேனி மாவட்டத்தை சேர்ந்தது. மண்டை வகை நாய்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவை.

    100 நாட்டு இன நாய்களை வளர்ப்பதற்காக சதீசுக்கு இந்த ஆண்டுக்கான இனப்பாதுகாப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவரிடம் உள்ள 45 நாட்களுக்கு குறைவான வயது கொண்ட ராஜபாளையம் நாய்க்குட்டி ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. கோம்பை, மண்டை நாய் குட்டிகள் 6 ஆயிரத்துக்கும், கன்னி, சிப்பிப் பாறை நாய்க்குட்டிகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும் விற்கப்படுகிறது.

    இந்த அனைத்து நாய்களுக்கும் யுனைடெட் கென்னட் கிளப் ஆப் இந்தியா மற்றும் கென்னட் கிளப் ஆப் இந்தியா ஆகியவற்றால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழில் நாய்களின் பெற்றோரின் வம்சாவளி மற்றும் பிறந்த தேதி போன்ற விபரங்கள் இடம்பெற்றுள்ளன.

    இங்கு வளர்க்கப்பட்ட 2 சிப்பிப் பாறை நாய்க்குட்டிகள் பயிற்சி அளிக்கப்பட்டு தமிழ்நாடு வனத்துறையில் சேர்க்கப்பட்டுள்ளன. தஞ்சாவூரில் உள்ள விமான தளத்தில் ஓடு பாதைகளை பறவைகள் இல்லாமல் வைத்திருக்க ராஜபாளையம் நாய் பயன்படுத்தப்படுகிறது.

    மேலும் இங்கிருந்து ஏற்கனவே 1000-க்கும் மேற்பட்ட நாய்க்குட்டிகளை பலர் வாங்கி சென்றுள்ளனர்.

    • நாய் 'பேட்டன்ட் டக்டஸ் ஆர்டெரியோசஸ்' எனப்படும் பிறவி இருதய குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
    • இருதய பெருநாடி மற்றும் நுரையீரல் தமனியின் 2 முக்கிய நாளங்களுக்கு இடையில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    மும்பை:

    மராட்டியம் மாநிலம் மும்பை ஜூஹூ பகுதியை சேர்ந்த ராணி ராஜ் வான்காவாலா என்பவர் நாய் ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார்.

    4 வயதான அந்த செல்லப்பிராணி சமீப காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தது. சரியாக நடக்க முடியாமல் சோர்வுடன் காணப்பட்டது. அந்த செல்லப் பிராணியை கால்நடை மருத்துவர்களிடம் அழைத்து சென்று காட்டினர்.

    அப்போது அந்த நாய்க்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அந்த நாய் 'பேட்டன்ட் டக்டஸ் ஆர்டெரியோசஸ்' எனப்படும் பிறவி இருதய குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதனால் அந்த நாய்க்கு இருதய பெருநாடி மற்றும் நுரையீரல் தமனியின் 2 முக்கிய நாளங்களுக்கு இடையில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. எனவே அந்த நாய்க்கு திறந்த இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கால்நடை டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.

    செல்லப்பிராணிகளுக்கு இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் கடினமானது எனவும், நாய்க்கு மயக்க மருந்து வழங்குவது சவாலானது எனவும் டாக்டர்கள் கருதினர்.

    இந்தியாவில் இதுபோன்று செல்லப்பிராணிகளுக்கு திறந்த இருதய சிகிச்சை என்பது அரிதானது என கூறிய கால்நடை டாக்டர்கள் வெளிநாடுகளில் இதுபோன்ற சிகிச்சைகள் வழக்கமாக நடைபெறும் என்பதையும், ராணிராஜ் குடும்பத்தினரிடம் கூறினர்.

    இதைத்தொடர்ந்து நாயை அறுவை சிகிச்சைக்காக இங்கிலாந்திற்கு அழைத்து செல்வதுதான் ஒரே வழி என்றும், அங்கு நாய்க்கு அறுவை சிகிச்சை செய்யலாம் என்றும் ராணிராஜ் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் கொரோனா தொற்று நோய் காரணமாக நாயை வெளிநாடு அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் நாயை எப்படியாவது குணப்படுத்த வேண்டும் என ராணிராஜ் குடும்பத்தினர் கூறினர். இதையடுத்து வெளிநாடுகளில் இதுபோன்று நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்த இருதய அறுவை சிகிச்சை நிபுணரான ஜெர்மனியை சேர்ந்த டாக்டர் மத்தியாஸ்பிரன்ங்குடன் மும்பை டாக்டர் தேஷ்பாண்டே தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது அவர் இந்தியா வந்து நாய்க்கு உயிர்காக்கும் அறுவை சிகிச்சை செய்ய சம்மதித்தார். அதன்படி அவர் விமானத்தில் மும்பை வந்து அந்தேரியில் உள்ள டாக்டர் மகரந்த் சவுசல்கரின் கிளினிக்கில் நாய்க்கு திறந்த இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. முதலில் அல்ட்ரா சவுண்ட் எந்திரத்தில் 2டி எக்கோ சோதனை நடந்தது.

    தொடர்ந்து நாய்க்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. 4 வராங்களுக்கு பிறகு அந்த நாய் தற்போது ஆரோக்கியமாக தனது வீட்டிற்கு திரும்பி உள்ளது.

    • இரவில் ஆடு, கோழிகள் மர்ம நபர்களால் திருடு போகிறது என மக்கள் கூறுகின்றனர்.
    • திருடும் முயற்சிக்கு நாய்கள், இடையூறாக இருப்பதால் தான் அவற்றை விஷம் வைத்து கொல்ல மர்ம நபர்கள் முற்பட்டுள்ளனர் .

    அவிநாசி :

    அவிநாசி ஊராட்சி ஒன்றியம் சேவூர் அருகேயுள்ள போத்தம்பாளையம் பகுதியில் ஆடு கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். சில மாதங்களாக இரவில் ஆடு, கோழிகள் மர்ம நபர்களால் திருடு போகிறது என மக்கள் கூறுகின்றனர்.

    சம்பவத்தன்று அங்கு நாய்க்கு கோழிக்கழிவில் சிலர் விஷம் வைத்து விட்டு சென்றதாகவும், அதை உண்ட 3 நாய்களில் 2 நாய்கள் இறந்துவிட்டது எனவும் அப்பகுதி மக்கள் கூறினர். ஆடு, கோழிகளை திருடுவதற்கு வரும் நபர்களை வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் துரத்துவதாலும், தங்களின் திருடும் முயற்சிக்கு நாய்கள், இடையூறாக இருப்பதால் தான் அவற்றை விஷம் வைத்து கொல்ல மர்ம நபர்கள் முற்பட்டுள்ளனர் எனவும் மக்கள் கூறினர். இதுதொடர்பாக கர்ணன், ராஜசேகர், ராஜேஷ்குமார் ஆகியோர் சேவூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு வழங்கினர். 

    • தேவையான மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நாயை வெளியில் கொண்டு வருவதற்கு அனுமதி கேட்டனர்.
    • நாயை வீட்டிற்குள் அடைத்து வைத்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை புலியகுளம் பெரியார் நகரை சேர்ந்தவர் பாபுகுமார்(வயது39). தொழில் அதிபர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு கோவையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வீட்டு கடன் பெற்றார்.

    வாங்கிய வீட்டுக்கடனை குறித்த காலத்தில் செலுத்தவில்லை என தெரிகிறது. இதனால் அவரது வீடு ஏலத்துக்கு வந்தது.

    அப்போது வங்கி அதிகாரிகளிடம் வீட்டினை தானே வாங்கி கொள்வதாக பாபுகுமார் கூறியிருந்தார். ஆனால் அதனை வங்கி அதிகாரிகள் ஏற்காமல் ஏலத்தில் விட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாபுகுமார் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், பாபு குமாரின் வீட்டுக்கு நேற்று வங்கி அதிகாரிகள் போலீசாருடன் வந்தனர்.

    பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த அனைவரையும் வெளியேற்றி விட்டு, திடீரென வீட்டுக்கு சீல் வைத்துள்ளனர். அப்போது வீட்டுக்குள் வளர்ப்பு நாய் ஒன்று இருந்துள்ளது.

    அப்போது தேவையான மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நாயை வெளியில் கொண்டு வருவதற்கு அனுமதி கேட்டனர். ஆனால் அதிகாரிகள் அதற்கு மறுத்துவிட்டனர்.

    இதுகுறித்து பாபுகுமார் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். பின்னர் வீட்டில் இருந்த நாயை மட்டும் 3 மணி நேரத்திற்கு பிறகு வெளியில் கொண்டு வந்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

    நாயை வீட்டிற்குள் அடைத்து வைத்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஸ்நூசி நாய் மிகவும் புத்திசாலித்தனமானது. அனைவரிடமும் பாசமாக பழகும்.
    • பிறந்த மற்ற குட்டிகள் இறந்தபோதும் மரணத்தை வென்று உள்ளது.

    தாம்பரம்:

    மேற்கு தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் தெருநாய் ஒன்று சுற்றி வந்தது.

    கடந்த 7 மாதங்களுக்கு முன்பு 4 குட்டிகளை ஈன்ற அந்த நாய் இறந்துபோனது. இதனால் பரிதாபப் பட்ட அப்பகுதி மக்கள் பிறந்து சில நாட்களே ஆன 4 நாய்க்குட்டிகளுக்கும் உணவு கொடுத்து பராமரித்தனர். ஆனால் சில நாட்களிலேயே அதில் மேலும் 3 நாய்குட்டிகள் இறந்து போனது.

    இதைத்தொடர்ந்து மீதம் இருந்த ஒரு நாய்க்கு அப்பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஸ்நூசி என்று செல்லமாக பெயர் வைத்து வளர்த்தனர். அந்த நாயும் அக்கம்பக்கத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடம் பாசமாக பழகியது. இதனால் அப்பகுதியில் ஸ்நூசி நாய் பிரபலமாக வலம் வந்தது.

    இதற்கிடையே அந்த நாயை வளர்த்து வந்த குடும்பத்தினர் வீடு மாற்றலாகி வேறு இடத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டது. ஆனால் அவர்கள் செல்லும் புதிய வீட்டில் விலங்குகளை வளர்க்க அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் அந்த குடும்பத்தினர் கனத்த இதயத்துடன் ஸ்நூசியை அப்பகுதியில் வசிக்கும் ஷமீம் என்பவரிடம் ஒப்படைத்தனர். தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் அவர் வெளியில் செல்லும் போது நாயை வீட்டின் 2-வது மாடியில் விட்டு செல்வது வழக்கம்.

    அதே போல் வழக்கம் போல் ஷமீம் வேலைக்கு சென்று திரும்பி வந்தபோது வீட்டின் இரும்பு கேட்டில் உள்ள கம்பியில் குத்திய நிலையில் நாய் உயிருக்கு போராடியபடி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் நாயை மீட்க முயன்றபோது முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து அருகில் கட்டிட பணியில் இருந்த தொழிலாளர்களை வரவழைத்து இரும்பு கம்பியை துண்டாக அறுத்து நாயை மீட்டனர். பின்னர் அதனை அடையாறில் உள்ள தனியார் கால்நடை மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர் ஜோசிகா நாவுக்கரசு மற்றும் ஊழியர்கள் காயம் அடைந்த நாய்க்கு அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது நாய் நலமாக உள்ளது. வீட்டின் 2-வது மாடியில் இருந்து நாய் கீழே விழுந்து இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து ஷமீம் கூறும்போது, 'ஸ்நூசி நாய் மிகவும் புத்திசாலித்தனமானது. அனைவரிடமும் பாசமாக பழகும். அதன் தாயார் இறந்த போதும், அதனுடன் பிறந்த மற்ற குட்டிகள் இறந்தபோதும் மரணத்தை வென்று உள்ளது.

    தற்போது இரும்பி கம்பியில் விழுந்தும் உயிர் பிழைத்து இருக்கிறது. வெளியில் செல்லும் நேரத்தில் நாயை பராமரிப்பது கடினமாக உள்ளது. இதனை விருப்பப்பட்ட வர்கள் வாங்கி பராமரிக்கலாம்' என்றார்.

    இதுகுறித்து அறுவை சிகிச்சை செய்த டாக்டர் ஜோசிகா நாவுக்கரசு கூறும்போது, 'காயம் அடைந்த நாய்க்கு அறுவை சிகிச்சை மூலம் குத்தி இருந்த இரும்பு கம்பி அகற்றப்பட்டது. தற்போது சிகிச்சை முடிந்து நாய் நலமாக உள்ளது.

    எக்ஸ்ரே எடுக்கப்பட்டதில் கம்பி குத்தியதில் அதன் உள்உறுப்புகள் ஏதுவும் பாதிக்கப்பட வில்லை என்பது உறுதியானது' என்றார்.

    • அர்ஜுனன் தனது விவசாய தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார்.
    • காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் ஊராட்சி வலையபாளையத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன்(வயது 42). இவர், தனது விவசாய தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அங்கு வந்த நாய்கள் ஆடுகளை கடித்து குதறியதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு வந்த அவரது குடும்பத்தினர். நாய்களை விரட்டியுள்ளனர். ஆனால் நாய்கள் கடித்ததால் பலத்த காயம் அடைந்திருந்த ஆடுகள் ஒவ்வொன்றாக இறந்தன.மொத்தம் 6 ஆடுகள் இறந்ததாக கூறப்படுகிறது.

    இதன் மதிப்பு சுமார் ரூ.40 ஆயிரம். ஆடுகளை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அந்த பகுதியில் அடிக்கடி நடப்பதாகவும் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • நாயின் உரிமையாளர் மாணிக்கம் இது குறித்து அந்தியூர் போலீசில் புகார் செய்தார்.
    • நாயை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் அந்தியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கழுதை பாலி என்ற பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் தனது விவசாய தோட்டத்தில் கோழி வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் வளர்த்து வரும் கோழிகளை அடிக்கடி ஒரு நாய் பிடித்து சென்றது. இது குறித்து அண்ணாதுரை அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் மோகன்ராஜ் (28) என்பவரிடம் கூறியுள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு ஜி.எஸ்.காலனி பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான ஒரு நாய் அண்ணாதுரையின் விவசாய தோட்டம் அமைந்துள்ள பகுதிக்கு சென்றது. அப்போது அந்த நாய் தான் கோழிகளை பிடித்து சென்ற நாய் என்று கருதி அண்ணாதுரை இது குறித்து தனது நண்பர் மோகன்ராஜிக்கு தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து மோகன்ராஜ் தனது வீட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்து வந்து அந்த நாயை சுட்டார். இதில் பலத்த காயம் அடைந்த நாய் அங்கேயே இறந்துவிட்டது. இதுப்பற்றி தெரியவந்ததும் நாயின் உரிமையாளர் மாணிக்கம் இது குறித்து அந்தியூர் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது அங்கு காயத்துடன் இறந்து கிடந்த நாயை மீட்டனர். மேலும் அண்ணாதுரை மற்றும் அவரது நண்பர் மோகன்ராஜ் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

    இறந்த நாயின் உடல் இன்று கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். நாயை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் அந்தியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நாய்கள் யாரையும் தொந்தரவு செய்வதில்லை.
    • வீடுகளுக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தன.

    பல்லடம் :

    பல்லடம் மாணிக்காபுரம் ரோடு பகுதியில், சுற்றித்திரிந்த தெரு நாய்களை சம்பவத்தன்று மர்ம நபர்கள் விஷம் வைத்து கொன்றுள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- நன்றி என்ற சொல்லுக்கு உதாரணமாக விளங்கிவரும் நாய்களை பல்லடத்தில் விஷம் வைத்து கொன்றது அதிர்ச்சி அளிக்கிறது. அந்த நாய்கள் இந்த பகுதியில் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. அவைகள் இங்குள்ள வீடுகளுக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தன. புதியவர்களை கண்டால் மட்டுமே குரைக்கும். அவைகள் இதுவரை யாரையும் கடித்ததில்லை. இந்த நிலையில் கொடூரமனம் படைத்தவர்கள் இங்கு சுற்றிச் திரிந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்று ள்ளனர்.

    இது குறித்து விலங்குகள் நல வாரியம் மற்றும் போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளோம். விஷம் வைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×