என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drainage"

    • சோலைப்பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் 448 குடியிருப்புகள் உள்ளன.
    • குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது.

    அவினாசி :

    அவினாசி சேவூர் ரோட்டில் உள்ள சோலைப்பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் 448 குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த குடியிருப்பு பகுதிகளுக்கு போதிய சாக்கடை வசதிகள் இல்லை என்று உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் அந்த பகுதி மக்கள் புகார் மனு அளித்துள்ளனர். ஆனால் உரிய நடவடிக்கை இல்லை என்று கூறி இன்று காலை 9 மணியளவில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறுகையில்; குடியிருப்பு பகுதியில் சாக்கடை நீர் வெளியேற முடியாமல் குட்டை போல் தேங்கியுள்ளது. இதனால் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது. இது குறித்து அதிகாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுப்பட்ட வர்களிடம் அவினாசி தாசில்தார், பேரூராட்சித் தலைவர், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் தாசில்தார் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் இன்னும் 4 நாட்களில் முழுமையாக உங்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.

    ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தொகுதி எம். எல். ஏ, மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் வர வேண்டும் அதுவரை போராட்டத்தை கை விட மாட்டம் என்று சாலையில் படுத்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அவினாசி -சேவூர் சாலைகளின் இரண்டு புறங்களிலும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒரு மணி நேரத்துக்கு மேல் காத்திருக்கின்றன.

    • டவுன் பாரதியார் தெரு அம்மன் சன்னதி சந்திப்பில் மூடப்படாத சாக்கடை வாறுகால் உள்ளது.
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் முதியவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் பாரதியார் தெரு அம்மன் சன்னதி சந்திப்பில் மூடப்படாத சாக்கடை வாறுகால் உள்ளது. இந்த வழியாக இன்று காலை சென்ற 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் எதிர்பாராத விதமாக அந்தக் குழிக்குள் உள்ளே விழுந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அவரை மீட்டனர்.

    இதில் அவருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே அவர்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்து முதியவரை அதில் ஏற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும் போது, சாலை மற்றும் சாக்கடை பராமரிப்புக்காக குழி திறக்கப்பட்டதாகவும், அதன்பின்னர் அது மூடப்படாமல் உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

    இதனால் உயிரிழப்புகள் ஏற்படு வதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை சரி செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

    இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் பணியா ளர்கள் அங்கு சென்று நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 4 ஆயிரத்து 773 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரப்பட உள்ளது.
    • கல்லணை கால்வாயில் தரைத்தளம் சிமெண்டால் அமைக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவது.

    பூதலூர்:

    தஞ்சை உள்ளிட்ட 11காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்திற்கு ரூ 80 கோடிக்கு 4004 கிமீ நீரை 636 பணிகள் செய்ய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.இதில் தஞ்சை மாவட்டத்தில் ரூ 20.46 கோடி மதிப்பீட்டில் 1068.45 கிமீ தொலைவிற்கு நீர் பாசன ஆதாரங்களை தூர்வாரிட ஒப்புதல் வழங்கப்பட்டது.

    தஞ்சை மாவட்டத்தில் ரூ 20.46 கோடியில் 6 கோட்டங்களில் 189 பணிகள் மேற்கொள்ளப்படும். பூதலூர் ஆனந்த காவேரி வாய்க்கால் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன பணிக்கான மொத்த மதிப்பீட்டுத் தொகை ரூ.27.50 லட்சம் ஆகும். ஆனந்த காவேரி வாய்க்காலில் உள்ளே பொக்ளின் இயந்திரங்கள் நிறுத்தப்பட்டு பணிகளை நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    அமைச்சர் தூர்வாரும் பணிகளை தொடங்கி வைப்பதற்கு ஏதுவாக ஆனந்த காவேரி வாய்க்காலில் 100மீட்டர் தொலைவிற்கு இரண்டு புறமும் மணல் முட்டைகள் அடுக்கப்பட்டு ஜல்லிகள் கொட்டப்பட்டு சாலை அமைக்கப்பட்டு இருந்தது.

    பூதலூரில் ஆனந்த காவேரி வாய்க்காலில் தூர்வாரும் பணிகளை கொடியசைத்து தொடக்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளிடம் கூறியதாவது. காவிரி டெல்டா 12 மாவட்டங்களுக்கு தூர் வாரும் பணிகளுக்காக ரூ90 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    எல்லா வேலைகளையும் ரூ90 கோடியில் செய்ய இயலாது .எது அத்தியாவசியமோ? முக்கியத்துவம் வாய்ந்ததோ அதை எடுத்து செயல்படுத்தப்படும். இங்கே தொடக்கி வைக்கப்பட்டுள்ள ஆனந்த காவேரி வாய்க்கால் தூர் வாரரூ 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் இன்று துவங்கப்பட்டுள்ளது.

    டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளுக்காக 834 மண்வாரும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. 4773 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர் வாரப்படஉள்ளது. தூர்வாரம்பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் தலைமை பொறியாளர், கலெக்டர் வரை ஆய்வு செய்வார்கள், இதற்கு மேலாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு அவரும் ஆய்வு செய்வார்.

    தூர்வாரும் பணிகளுக்காக இந்த முறை நிதிநிலை அறிக்கையிலேயே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது .அதனால் தாமதம் இன்றி விரைவாகவே பணிகள் நடைபெறும் .முன்னதாகவே பணிகள் தொடங்கப்பட்டதால் கடைமடை வரை தண்ணீர் சென்றடைவதற்கு வாய்ப்பு ஏற்படும். கல்லணை கால்வாயில் தரைத்தளம் சிமெண்டால் அமைக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவது என்று கூறுவது நியாயமானது.

    அதை சரி செய்வதற்கு என்ன வகையில் நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல தூர்வாரும் பணிகள் நடைபெறும் பொழுது கால்வாய் தாழ்வாகவும் பாசன வயல்கள் மேடாகி விடுவதால் தண்ணீர் பாய்வதில் சிரமமுள்ளதாக விவசாயி ஒருவர் கேட்ட பொழுது இது குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

    மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு நல்ல நிலையில் இருப்பதால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறித்த நாளில் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரியில் நமக்குள்ள உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுப்பார் என்றும் நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன்தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சந்தீப் சக்சேனா,தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ்ஆலிவர் , தலைமை கொறடா கோவி செழியன், எம் எல் ஏக்கள் துரை சந்திரசேகரன், டி கே ஜி நீலமேகம், பூண்டி கலைவாணன் , அண்ணாதுரை,தஞ்சை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சை மேயர்சண் ராமநாதன், தலைமை பொறியாளர் ராமமூர்த்தி ,கண்காணிப்பு பொறியாளர் முருகேசன்.

    பூதலூர் ஒன்றிய குழு தலைவர் அரங்கநாதன்,மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள்,உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள் பொதுப்பணித்துறை வருவாய்த்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். தூர் வாரும் பணிகளை உடனுக்குடன் கண்காணிக்க கண்காணிப்பு செயலியின் செயல் முறையை கண்காணிப்பு அதிகாரி சந்தீப் சக்சேனா அமைச்சரிடம் விளக்கி கூறினார்.

    • தண்டாளம் வடிகால் வாய்க்கால் 3 ஆயிரம் மீட்டர் வரை உள்ளது.
    • இந்த வாய்க்காலின் படுக்கை தளம் 3 மீட்டர் ஆகும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சி தென்பிடாகை வடிகால் வாய்க்கால் மற்றும் தண்டாளம் வடிகால் வாய்க்கால் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளை நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    நீர்வளத்துறை காவிரி வடிநில உட்கோட்டம் நன்னிலம் கட்டுப்பாட்டில் உள்ள பாசன பிரிவு எண் 1 திருமருகல் பராமரிப்பில் இருந்து வரும் திருமலைராஜன் ஆறு, முடிகொண்டன் ஆறு,நரிமணியாறு,ஆறுகள் மற்றும் ஆறுகளில் கலக்கும் வடிகால்கள் பாசன பிரிவு எண்-1 திருமருகல் பராமரிப்பில் இருந்து வருகிறது. தென்பிடாகை வடிகால் வாய்க்கால் 3000 மீட்டர் வரை மற்றும் தண்டாளம் வடிகால் வாய்க்கால் 3000 மீட்டர் வரை உள்ளது. கிராமத்தில் இவ்வடிகால் வாய்க்காலின் மூலம் தென்பி டாகை,தண்டா ளம் கிராமத்தில் 471 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன பெறுகின்றது.

    இவ்வாய்கா லின் படுக்கை தளம் 3 மீட்டர் ஆகும். தற்போது வடிகால் வாய்க்காலில் வண்டல் படிந்து காட்டாமணக்கு செடிகள் மண்டி,நீர் போக்கினை வெகுவாக தடுத்து விடுவதால் வெள்ள காலங்களில் வாய்க்காலில் வெள்ள நீர் வடியாமல் தேங்குவதால் கரைகள் பாதிக்கப்பட்டு கரை உடைப்பு மற்றும் கரைப்பொழிவுகள் ஏற்பட்டு, பெரும் சேதத்தை விளைவிக்கிறது.

    எனவே தென்பிடாகை வடிகால் வாய்க்கால் மற்றும் தண்டாளம் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படு கிறது. இந்த பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன், உதவி செயற்பொறியாளர் செங்கல்வராயன்,திருமருகல் உதவி பொறியாளர்கள் சரவணன்,செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடி கன்னிகோவில் தெருவில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. நேற்று இரவு காற்றுடன் கூடிய மழை பெய்தது.
    • இதன் காரணமாக பள்ளம் தோண்டப்பட்ட இடத்தினருகே பெரிய அளவிலான மரம், 2 வீடுகளின் மீது விழுந்தது. இதில் மின் கம்பம் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்தது.

    கடலூர் :

    கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடி கன்னிகோவில் தெருவில் சாலை விரிவாக்க பணி, வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. நேற்று இரவு காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக பள்ளம் தோண்டப்பட்ட அருகே பெரிய அளவிலான மரம், 2 வீடுகளின் மீது விழுந்தது. இதில் மின் கம்பம் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.  இதில் வீட்டின் உரிமையாளர்களான சுப்பிரமணி, விமல் மற்றும் குடும்பத்தினர் அலறி அடித்து வெளியில் ஓடி வந்தனர். மின் கம்பிகள் அறுந்து விழுந்த நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் இல்லை. இதனை தொடர்ந்து இன்று காலை வீடுகள் மீது விழுந்த மரங்கள் அகற்றப்படாமல், அந்த பகுதியில் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை சரி செய்யாமலும் இருந்ததால் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது சம்பந்தமாக எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காததால் கடும் கோபம் அடைந்தனர்.  இதன் காரணமாக அதிகாரிகளை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக சாலையில் திரண்டனர். அப்போது தகவல் அறிந்த மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். பின்னர் அங்கிருந்த பொதுமக்களிடம் வீடுகள் மீது விழுந்த மரத்தை உடனடியாக அகற்றவும், மின்சார வசதி உடனடியாக தர வேண்டி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, தாசில்தார் விஜய் ஆனந்த் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வீடுகள் மீது விழுந்த மரத்தை அகற்றுவதற்கும், அந்த பகுதி முழுவதும் மின்சாரம் உடனடியாக வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டனர்  இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய முறையில் நஷ்ட ஈடு வழங்க நடடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • ரூ.90 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
    • ஆனந்தக்காவிரி வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் வண்ணாரப்பேட்டை ஊராட்சியில் உள்ள முதலைமுத்து வாரியில் தூர்வாரும் பணியை இன்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது :-

    2023-24-ம் ஆண்டு காவிரி டெல்டா மாவட்ட ங்களில் ஆறுகள், கால்வா ய்கள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களில் 691 பணிகள் 4773.13 கி.மீ நீளத்திற்கு ரூ.90.00 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள அரசாணை வழங்கப்பட்டு உள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், கால்வா ய்கள், வாய்க்கால்கள், வடிகால்கள் மற்றும் ஏரிகள் ஆகியவற்றில் 189 பணிகள்.

    1068.45 கி.மீ நீளத்திற்கு ரூ.2045.51 லட்சம் மதிப்பீட்டிற்கு ஒப்பளிக்க ப்பட்டதை தொடர்ந்து, ஏப்ரல் 27ஆம் தேதி அன்று நீர்வளத்துறை அமைச்சர் தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், ஆனந்தக்காவிரி வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடக்கி வைத்தார்.

    மேற்காணும் தூர்வாரும் பணிகள் கீழ்காவிரி வடிநில வட்டத்தைச் சார்ந்த கோட்டங்களான காவிரி வடிநிலக் கோட்டம். தஞ்சாவூர், காவிரி வடிநிலக் கோட்டம், (கிழக்கு) மயிலாடுதுறை, வெண்ணாறு வடிநிலக் கோட்டம், தஞ்சா வூர், கல்லணைக்கால்வாய் கோட்டம், தஞ்சாவூர் அக்னியாறு வடிநிலக் கோட்டம், பட்டுக்கோட்டை மற்றும் திருச்சி, நடுக்காவிரி வடிநில வட்டத்தை சார்ந்த திருச்சி, ஆற்றுப்பாதுகாப்பு கோட்டங்களின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் அ l பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணி 31.05.2023 மற்றும் "ஆ" பிரிவு வாய்க்கால்கள் 10.06.2023க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 189 தூர்வாரும் பணி பணிகளில் பணிகள் 3 முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

    ஆறுகள், கால்வாய்கள். வாய்க்கால்கள், வடிகால்கள் மற்றும் எரிகள் ஆகியவற்றில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை வரை சென்றடையும். மேலும், மழை பெய்தால் தங்குதடையின்றி விரைவாக மற்றும் வெள்ளக்கா லங்களில் வயல்வெளிகளில் தேங்கும் நீரானது விரைவில் வடிந்து பயிர் சேதும் ஏற்படாமல் பாதுகாக்க ப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது பொதுப்பணி செயற்பொறியாளர் இளங்கோ காவேரி, மதன சுதாகர், (வெண்ணாறு) பவளக்கண்ணன், (கல்லணை கால்வாய் ) உதவி செயற்பொறியாளர் சிவகுமார், மலர்விழி, சபரிநாதன், ரேவதி சேந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • உதயமார்த்தாண்டபுரம் வாய்க்காலில் தூர்வாரும் பணி நடைபெறுவதை பார்வையிட்டார்.
    • மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை ஆய்வு செய்தார்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த நாச்சிக்குளம் மற்றும் ஜாம்புவனோடை பகுதி வாய்க்காலில் தூர்வாரும் பணி நடைபெற்று வருவ தையும், உதயமார்த்தாண்டபுரம் வாய்க்காலில் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதையும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையருமான நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், பணிகள் குறித்த விபரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    பின்னர், உதயமார்த்தா ண்டபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுப்பட்டு வருவதையும், அப்பகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதையும், இடும்பவனம் பகுதியில் மானவாரி வடிகால் வாய்க்கால் தூர்வாரப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வி ன்போது மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா, மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, செயற்பொறியளர் (ஊரக வளர்ச்சித்துறை) சடையப்பன், தாசில்தார்கள் திருத்துறைப்பூண்டி காரல்மார்க்ஸ், முத்து ப்பேட்டை மகேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், கலைச்செல்வன், செயற்பொ றியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் சிதம்பரநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர்.
    • பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் கோண்டூர் - மடப்பட்டு வரை சாலை விரிவாக்க பணி 230 கோடி செலவில் நடைபெற்று வருகின்றது. இதில் நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து கீழ்பட்டாம்பாக்கம் வரை சாலையின் இரு புற மும் நெடுஞ்சாலை த்துறையினர் சரியான முறையில் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்யாமலும், ஒரு சிலருக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதை கண்டித்து அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் வரை வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியினை தடுத்து நிறுத்தி பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வந்தனர்.

    மேலும் கடந்த 2 மாதமாக வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலை மையில் பேச்சுவார்த்தை நடத்தியும், சரியான முறையில் அளவீடு பணிகளில் சர்வேயர் ஈடுபடவில்லை என கூறி தொடர்ந்து அனைத்து பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளன. ஆனால் நேற்று திடீரென்று கீழ்ப்பட்டாம்பாக்கம் ஸ்டேட் வங்கி பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதனை பார்த்த ம.தி.மு.க.முன்னாள் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், விடுதலை சிறுத்கதைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திலகர், விடுதலை சிறுத்தைகள் நகர செயலாளர் திருமாறன், சமூக ஆர்வலர் குமரவேல் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்று சாலை விரிவாக்க பணிக்காக அளவீடு பணி நடைபெற்று முடியவில்லை. ஆனால் இந்த பணியை தொடங்குவதற்கு யார் அனுமதி கொடுத்தது என்று பணியில் ஈடுபட்ட வர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணியை தடுத்து நிறுத்தினர்.

    மேலும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தவில்லை என்றால் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையிடம் சட்டவிரோதமாக பணிகள் நடைபெற்று வருகிறது என புகார் தெரிவிப்போம் என தெரிவித்தனர். அப்போது அங்கு இருந்தவர்கள் முரண்பாடான பல்வேறு தகவல்கள் தெரிவித்ததால் கடும் எச்சரிக்கை செய்தனர். இதனை தொடர்ந்து பணிகளை நிறுத்தி அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • கோதண்டராஜபுரத்தில், ரூ.23 லட்சத்தில் 2 வகுப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
    • பில்லாளி வாய்க்கால் தூர்வாரும் பணியை எம்.எல்.ஏ, ஆய்வு செய்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணியை முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதனைத் தொடர்ந்து கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரத்தில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிட பணிகள், விற்குடி ஊராட்சியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழலகம் கட்டும் பணி, பில்லாளி வாய்க்கால் தூர்வாரும் பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுரு கன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர், திருமருகல் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், ஒன்றிய பொறி யாளர் செந்தில், ஊராட்சி தலைவர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள், பொது மக்கள் உடன் இருந்தனர்.

    • 54.8 கிலோமீட்டர் தூரம் உள்ள வாய்க்கால்கள் ரூ. 63 லட்சம் செலவில் தூர்வாரப்படுகின்றன.
    • 90 சதவீத தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு பகுதியில் பொதுப்ப ணித்துறை வென்னாற்று பிரிவு அலுவ லகத்தின் மூலம் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது.

    வேதா ரண்யம் தாலுக்கா தலை ஞாயிறு ஒன்றியம் பகுதியில் உள்ள பழவனாறுவெண் மணச்சேரி வடபாதி வடிகால் பொன்னேரி வாய்க்கால் மேட்டுப்பள்ள வாய்க்கால் ஈசனூர் வாய்க்கால் உள்ளிட்ட 54.8 கிலோமீட்டர் தூரம் உள்ள வாய்க்கால்கள் ரூ. 63 லட்சம் செலவில் தூர்வாரப்ப டுகின்றன.

    இந்த பணியினை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் மதியழகன் மற்றும் பொதுப்ப ணித்துறை பணியாளர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    தலைஞாயிறு பகுதியில் 90 சதவீத தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தூர்வாரும் பணியை ஊராட்சி தலைவர் ரத்தினகுமார் தொடங்கி வைத்தார்.
    • ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் 7 கி.மீ தொலைவுக்கு வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், தலைஞாயிறு அருகே பன்னத்தெரு ஊராட்சியில் வேலையடி வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்றது. பணியை ஊராட்சி தலைவர் ரத்தினகுமார் தொடங்கி வைத்தார்.

    விவசாய சங்க செயலாளர் பிரபு, இயற்கை விவசாய சங்க தலைவர் வேனு காளிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆஸ்திரேலியா தமிழர்கள் பொதுநல அமைப்பு மற்றும் விவசாயிகள் சங்கம் சார்பில் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் 7 கி.மீ தொலைவுக்கு வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெற்றது.

    இதில் ஆஸ்திரேலியா பொது நல அமைப்பை சேர்ந்த நிர்மல்குமார், வக்கீல் தனஞ்செயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வடிகால் வாய்க்கால் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது.
    • நோய் பரவும் அபாயம் நிலவி உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் ஈஸ்வரன் கோவில் தெரு வில் தனியார் மருத்துவ மனைகள், கல்வி நிறுவ னங்கள், மாநகராட்சி தொடக்கப்பள்ளி, வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இவ்வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் வாகனங்களிலும் நடந்தும் சென்று வருகின்ற னர். இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி சார்பில் மழைக்காலங்களில் அந்தந்த பகுதிகளில் தண்ணீர் தேங்காத வகையில் சுமார் 44 கோடி ரூபாய் செலவில் வடிகால் வாய்க்கால் கட்டும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.

    இந்த நிலையில் ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளி அருகே வடிகால் வாய்க்கால் கட்டுமான பணி யை பாதியில் நிறுத்திவிட்டு சென்றதால் தற்போது கழிவுநீர் முழுவதும் சாலை யில் பெருக்கெடுத்து ஓடி குட்டை போல் தேங்கி உள்ளது. பள்ளி வளாகம் எதிரில் குட்டை போல் தேங்கியுள்ள கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் வருகிற 14-ந்தேதி பள்ளி கள் திறக்க உள்ள நிலை யில் மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்படும். இது மட்டும் இன்றி சாலை வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள் அனைவரும் மிகுந்த அவதி அடைந்து வருவதோடு சாலையில் செல்லும் வாகனங்கள் கழிவுநீர் மீது செல்வதால் பொதுமக்கள் மீது கழிவுநீர் தெளித்து துர்நாற்றம் வீசுவதோடு உடல் அரிப்பு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் நிலவி உள்ளது.

    ஆகையால் கடலூர் மாந கராட்சி நிர்வாகம் பாதி யில் நிறுத்தப்பட்ட வடி கால் வாய்க்கால் பணி களை உடனடியாக கட்டி நடவடிக்கை எடுக்கா விட்டால் இப்பகுதி முழு வதும் தண்ணீர்சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத் தும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. ஆகை யால் இதனை உடனடியாக கண்காணித்து நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×