என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Driver"

    • தனியார் பஸ் டிரைவர்கள் மோதியதால் பயணிகள் அவதியடைந்தனர்.
    • பஸ்சை முந்தி சென்று தனது பஸ்சை நிறுத்தியதால் தகராறு ஏற்பட்டது.

    திருமங்கலம்

    திருமங்கலத்தில் வெளியூர் பஸ் நிலையம் மதுரை மெயின் ரோட்டில் இயங்கி வருகிறது. பஸ் நிலையம் எதிரே டவுன் மற்றும் தாலுகா போலீஸ் நிலையங்கள் அமைந்துள்ளன. மேலும் 3 வங்கிகளும் இயங்கி வருகிறது.

    வெளியூர் பஸ் நிலையத்தில் பஸ்களை நிறுத்தி முந்திச் செல்வதில் தனியார் பஸ் டிரைவர்களுக்க அடிக்கடி தகராறு இருந்து வருகிறது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    நேற்று மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து சிவகாசிக்கு செல்லும் தனியார் பஸ் திருமங்கலம் வெளியூர் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றியது. இந்த பஸ்சை கள்ளிக்குடிடய அடுத்துள்ள குராயூரை சேர்ந்த பிச்சை ஓட்டி வந்தார். இந்த பஸ்சுக்கு அடுத்து மற்றொரு தனியார் பஸ் சிவகாசிக்கு மதுரையில் இருந்து வந்தது. இதை சோளங்குருணியை சேர்ந்த டிரைவர் செல்வராஜ்(32) ஓட்டிவந்தார்.

    ஏற்கனவே முன்னால் சென்ற பஸ், திருமங்கலம் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிகொண்டிருந்ததை கண்ட பின்னால் வந்த பஸ்சின் டிரைவர் ஆத்திரமடைந்தார். அவர் வேகமாக சென்று ஏற்கனவே நின்று கொண்டிருந்த பஸ்சை முந்தி சென்று தனது பஸ்சை நிறுத்தினார்.

    இதில் பிச்சை ஓட்டி வந்து நிறுத்திய பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இது தொடர்பாக பிச்சை மற்றும் 2-வதாக வந்த பஸ் டிரைவர் செல்வராஜ், கண்டக்டர் சிவரக்கோட்டையை சேர்ந்த ஜெயராஜ்(41) ஆகியோர் ஏன் பஸ்சை எடுக்கவில்லை என்று கூறி பிச்சையுடன் தகராறு செய்தனர். 3 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வெளியூர் பஸ் நிலையத்தில் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.

    இதுகுறித்து பஸ் டிரைவர் பிச்சை, தன்னை மற்றொரு பஸ் டிரைவர் செல்வராஜ், கண்டக்டர் ஜெயராஜ் ஆகியோர் இரும்பு ராடு கொண்டு தாக்க முயன்றதாக திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீஸ் நிலையம் எதிரேயே தனியார் பஸ் டிரைவர்கள் அடிக்கடி தகராறில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க திருமங்கலம் போலீசார், தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பஸ்ஊழியர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்க வேண்டும் என்று தன்னார்வ அமைப்பினர், பயணிகள் வலியுறுத்தினர்.

    • செல்லதுரை (வயது 23).இவர் நெல் அறுவடை எந்திர டிரைவர். இவர் இவர் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலையில் யோகஆஞ்சநேயர் கோவில் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • திருவெண்ணைநல்லூர் போலீசார் உடலை கைப்ப ற்றி, முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.


    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே காந்தலவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை (வயது 23). நெல் அறுவடை எந்திர டிரைவர். இவர் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் அரசூர் அருகே யோக ஆஞ்சநேயர் கோவில் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற திருவெண்ணைநல்லூர் போலீசார் உடலை கைப்ப ற்றி, முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், பிரபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது பிரேத பரிசோதனை முடித்து செல்லதுரையின் உடலை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் நேற்று வழங்கப்பட்டது. இதனை வாங்க மறுத்த உறவினர்கள், திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். 

    • பயணிகளும், கண்டெக்டரும் அவரை ஆசுவாசப்படுத்தி உலுப்பக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • நெஞ்சுவலி ஏற்பட்டதுடன் டிரைவர் உடனே பஸ்சை பொறுமையாக இயக்கி சாலையோரம் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

    நத்தம்:

    திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து காரைக்குடிக்கு 52 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை மதுரை கடச்சநேந்தலை சேர்ந்த கிருபாகரன் (36) ஒட்டி வந்தார். பஸ் உலுப்பகுடி அருகே வந்தபோது டிரைவருக்கு திடீரென நெஞ்சி வலி ஏற்பட்டது. உடனே சுதாரித்துக்கொண்ட டிரைவர் கிருபாகரன் பஸ்சை சாலையோரமாக நிறுத்தினார்.

    இதனை தொடர்ந்து பயணிகளும், கண்டெக்டரும் அவரை ஆசுவாசப்படுத்தி உலுப்பக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் டிரைவரை மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    நெஞ்சுவலி ஏற்பட்டதுடன் டிரைவர் உடனே பஸ்சை பொறுமையாக இயக்கி சாலையோரம் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • திருப்பூரை சேர்ந்த, ஒன்பது வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார்.
    • ராக்கியாபாளையத்தை சேர்ந்த மணிகண்டன், (36) என்பவர் கார் ஓட்டி வந்தார்.

    திருப்பூர்:

    திருப்பூரில், ஒன்பது வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் முயற்சியில் ஈடுபட்ட கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூரை சேர்ந்த, ஒன்பது வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமியின் உறவினர் திருமணம் நடக்கிறது. இதற்காக கார் ஒன்றை வாடகைக்கு எடுத்தனர். ராக்கியாபாளையத்தை சேர்ந்த மணிகண்டன், 36 என்பவர் கார் ஓட்டி வந்தார்.

    அப்போது அவர் வீட்டில் இருந்த, ஒன்பது வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் முயற்சியில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி நடந்த விபரத்தை பெற்றோரிடம் கூறினார்.அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

    • குருசாமி நேற்று முன்தினம் இரவு லாரியில் லோடு ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி சென்றார்.
    • இரவில் தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் அருகே வந்த போது அவ்வழியாகவந்த வாலிபர்கள் அவரை மறித்து பணம் கேட்டனர்.

    தூத்துக்குடி:

    தென்காசி மாவட்டம் செங்கோட் டையை சேர்ந்தவர் குருசாமி (வயது 50). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு லாரியில் லோடு ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி சென்றார்.

    இரவில் தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் அருகே வந்த ேபாத அவ்வழியாகவந்த வாலிபர்கள் அவ ரை மறித்து பணம் கேட்டனர். அவர் மறுக்கவே ஆத்திர மடைந்தவர்கள் அரிவாளால் அவரை வெட்டிவிட்டு அவரிடம் இருந்த ரூ. 35 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு தப்பியோடினர்.

    இதில் படுகாயமடைந்த குருசாமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் கொள்ளையில் ஈடுபட்டது தூத்துக்குடி திரு.வி.க.நகரை சேர்ந்த பரத்விக்னேஷ் (22), மகராஜா (22) மற்றும் 2 பேர் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பரத் மற்றும் மகராஜாவை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

    • காவலாளியை டிரைவர் தாக்கினார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரனை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை ஆரப்பாளையம் டி.டி.மெயின் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காவலாளியாக இருப்பவர் ஜோசப் (வயது 68). இவர் பணியில் இருந்த போது ஆரப்பாளையம் புட்டு தோப்பு செக்கடி தெருவை சேர்ந்த கார்த்திக் என்பவர் தான் ஓட்டி வந்த ஆட்டோவை திருமண மண்டபத்தின் முன்பு நிறுத்தி உள்ளார். அவரிடம் வாகனத்தை சற்று தள்ளி நிறுத்தும்படி ஜோசப் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் அவரை ஆபாசமாக பேசி தாக்கினார். இது குறித்து கரிமேடு போலீசில் ஜோசப் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.

    மதுரை நடராஜ் நகர் ஜான்சன் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் மகள் சோபிதா அபிதா (வயது 22). இவர் மணப்பெண் அலங்காரம் செய்து வருகிறார். இதனால் பலரிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். ஆண் நண்பர்களுடனும் அடிக்கடி பேசியுள்ளார். இதனை பாஸ்கரன் கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று சோபிதா அபிதாவையும், சகோதரி மற்றும் தாயையும் ஆபாசமாக பேசியள்ளார். அதனை சோபிதா அபிதா தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்கரன் சோபி ஆபிதாவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கரிமேடு போலீசில் சோபிதாஅபிதா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரனை கைது செய்தனர்.

    • எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது பிரகாசின் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.
    • எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வெள்ளரிவெள்ளி ஊராட்சி, வேட்டுவப்பட்டி பகுதியைச் சேர்ந்த உத்தரசாமி மகன் பிரகாஷ் (வயது 25). வேன் டிரைவரான இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் எடப்பாடி நோக்கி வந்தார்.

    எடப்பாடி - கோனேரிப்பட்டி பிரதான சாலையில் நெசவாளர் காலனி பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது பிரகாசின் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.

    இதில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சிலுவம்பாளையம் தம்பாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த உத்தரசாமி, அவரது மகன் கவின் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

    அவர்களை, அருகில் இருந்தவர்கள் மீட்டு எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த எடப்பாடி போலீசார், பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வீட்டில் இருந்து கரும்புகை வெளியே வந்தது.
    • தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் திருமஞ்சன வீதி கீழ சந்தில் வசித்து வருபவர் கணேசன் (வயது 59).

    இவரது மனைவி சாவித்ரி.

    கணேசன் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.இன்று காலை இருவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டனர்.

    இந்நிலையில் வீட்டில் இருந்து கரும்புகை வெளியே வந்தது.

    பின்னர் சிறிது நேரத்தில் வீடு தீபிடித்து எரிந்தது.

    உடனே அக்கம் பக்கத்தினர் இது குறித்து கும்பகோணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    இதற்குள் வீடு முழுவதும் எரிந்து நாசம் ஆனது.

    இது குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    • சாலையின் குறுக்கே கழிவு நீர்கால்வாய்க்காக கட்டப்பட்டிருந்த தரைமட்ட பாலம் சேதம் அடைந்தது.
    • பாலத்தை புதுப்பித்து தருமாறு கோ ரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    உடுமலை :

    உடுமலை மத்திய பஸ் நிலையத்தின் அருகே பொள்ளாச்சி - பழனி- உடுமலை- பொள்ளாச்சி நெடுஞ்சாலையை இணைக்கும் இணைப்பு சாலை உள்ளது.இந்த சாலையின் குறுக்கே கழிவு நீர்கால்வாய்க்காக கட்டப்பட்டிருந்த தரைமட்ட பாலம் சேதம் அடைந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வந்ததுடன் கழிவுநீர் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து தரைமட்ட பாலத்தை புதுப்பித்து தருமாறு கோ ரிக்கை விடுக்கப்பட்டி ருந்தது. அதன் பேரில் பணி தொடங்க ப்பட்டது. ஆனால் அதன் பின்பு பணி தொ டர்ந்து நடைபெ றவில்லை. இதனால் கால்வாயை இணைக்கும் வகையில் சிலாப்கற்கள் வைத்து தற்காலிக பாதை அமைக்க ப்பட்டு உள்ளது. அதில் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்துடன் சென்ற வாகன ஓட்டி ஒருவர் தவறி உள்ளே கால்வாயில் விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் அவரை மீட்டனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:-

    நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு செல்வதற்கு இந்த சாலை பெரிதும் உதவிகரமாக இருந்து வருகிறது. இதில் கட்டப்பட்டிருந்த தரைமட்ட பாலம் சேதம் அடைந்த தையொட்டி புதுப்பிக்கும் பணி கடந்த 8 மாதத்துக்கு முன்பு தொடங்க ப்பட்டது.அதன் பின்பு இன்று வரையிலும் பணிகள் நடைபெறவில்லை.இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கால்வாயின் மீது தற்காலிகமாக சிமெண்ட் ஸ்லாப்புகள்மூலம் அமைக்கப்பட்ட பாதை வழியாக சென்று மறுப குதியை அடைந்து வருகி ன்றனர்.இதனால் அவ்வப்போது சிறு சிறு விபத்துகளும் ஏற்பட்டு வந்தது.அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை கால்வாயை கடக்க முற்பட்ட வாகன ஓட்டி நிலை தடுமாறி இருசக்கர வாகனத்துடன் எதிர்பாராத விதமாக கால்வாயில் விழுந்தார்.அவரது அலறல் சத்தம் கேட்டுஅங்கிருந்த பொதுமக்கள் அவரை பத்திரமாக மீட்டனர். பொதுமக்கள் வாகன ஓட்டிகள் தரப்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. தக்க தருணத்தில் பாலம் பராமரிப்பு பணி மேற்கொ ள்ளப்பட்டு இருந்தால் இதுபோன்ற சம்பவம் நடைபெற்று இருக்காது. கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தி அதி கரித்து பொதுமக்களுக்கு உடல் நல குறைபாடுகளை ஏற்படுத்தி வருகிறது.எனவே தரைமட்ட பாலம் கட்டுமான பணியை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்தி தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

    • உக்கடம் பஸ் நிலையம் வரும்போது 2 வாலிபர்கள் குடிபோதையில் பஸ்சில் ஏறினர்.
    • போத்தனூர் போலீஸ் நிலையத்தில் கண்டக்டர் துரைமுருகன் புகார் செய்தார்.

    குனியமுத்தூர்,

    கோவை கிணத்துக்கடவு அருகே நாலாட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் துரைமுருகன் (23) இவர் காந்திபுரம் -வெள்ளலூர் செல்லும் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று காந்திபுரத்தில் இருந்து வெள்ளலூருக்கு பஸ் புறப்பட்டது. அப்போது உக்கடம் பஸ் நிலையம் வரும்போது இரண்டு வாலிபர்கள் குடிபோதையில் பஸ்சில் ஏறினர்.

    பஸ்சில் ஏறியது முதல் இருவரும் ஒருவரை ஒருவர் ஆபாசமாக பேசிக்கொண்டு பிறருக்கு இடையூறு செய்து கொண்டிருந்தனர். துரைமுருகன் அதை கண்டிக்கும் போது, அவரை இருவரும் சேர்ந்து மிரட்டினர். பஸ் பயணம் செய்பவர்களிடமும் தகாத வார்த்தைகளால் இருவரும் பேசி வந்தனர். போத்தனூர் ஜி.டி.டேங்க் பஸ் ஸ்டாப் அருகே வரும்போது இருவரும் எல்லை மீறி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி டிரைவர் பஸ்சை திருப்பி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தார். போலீஸ் நிலையத்திற்குள் பஸ் செல்வதை கண்டதும் ,ஒரு வாலிபர் இறங்கி தப்பி ஓடிவிட்டார். இன்னொருவரும் இறங்க முயற்சிக்கும் போது பயணிகள் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் கண்டக்டர் துரைமுருகன் புகார் செய்தார்.

    போலீஸார் அந்த நபரிடம் விசாரணை செய்தபோது, அவர் சுந்தராபுரம் சில்வர் ஜூப்ளி விதியை சேர்ந்த ராகுல் (18)என்பது தெரியவந்தது. போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய பிரசாந்த் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பயணிகளுடன் பஸ் ஒன்று, போலீஸ் நிலையத்துக்குள் வந்து நின்ற சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திருவையாறு பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
    • இளம்பெண்ணின் குடும்பத்தினர் குறித்து ஆபாசமான முறையில் பதிவிட்டுள்ளார்.

    தஞ்சாவூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் அம்மாக்குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 34).

    இவர் நெல் அறுவடை எந்திர டிரைவர்.

    இவர் அம்மாக்குளத்தூரில் இருந்து நெல் அறுவடைக்காக தஞ்சை பகுதிக்கு வேலைக்கு வந்தார்.

    அப்போது அவருக்கும், திருவையாறு பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

    இந்நிலையில் அந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து அவரை தவறானவர் என்பது போல் சித்தரித்து சமூக வலைதளத்தில் காசிநாதன் பதிவிட்டுள்ளார்.

    மேலும் அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் குறித்து ஆபாசமான முறையில் பதிவிட்டுள்ளார்.

    இதனால் மனமுடைந்த அந்த இளம்பெண் தஞ்சை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காசிநாதனை தேடி வந்தனர்.

    காசிநாதனின் செல்போன் டவர் காட்டிய பகுதி உட்பட பல்வேறு இடங்களில் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை செய்தபோது காசிநாதன் அவரது சொந்த ஊரில் ஒரு தோப்பில் மறைந்து இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து தஞ்சை சைபர் கிரைம் போலீசார் அங்கு விரைந்து சென்று காசிநாதனை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    பின்னர் அவரை கைது செய்து தஞ்சைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து நீதிபதி முன்பு காசிநாதனை ஆஜர்படுத்தி 15 நாட்கள் காவலில் புதுக்கோட்டை கிளை சிறையில் அடைத்தனர்.

    • 108 ஆம்புலன்சு டிரைவர் மீது தாக்குதல் நடந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள சவ்வாஸ்புரத்தை சேர்ந்தவர் மருதுபாண்டி (வயது32). இவர் செங்கல்பட்டில் 108 ஆம்புலன்சு டிரைவராக பணிபுரிகிறார். இந்த நிலையில் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு வந்தார்.

    அப்போது கருப்பசாமி என்பவர் மருதுபாண்டியிடம், உனது மனைவிக்கும், உறவினரான விஜயகுமாருக்கும் பழக்கம் இருக்கிறது என்று கூறினார். பொது இடத்தில் கருப்பசாமி அருகில் இருந்தபோதே விஜயகுமாரிடம் மருதுபாண்டி இதுகுறித்து கேட்டார். ஆனால் விஜயகுமார் அதற்கு பதில் அளிக்காமல் அமைதியாக சென்று விட்டார். தான் கூறியதை விஜயகுமாரிடம் கேட்டதால் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி தனது நண்பர் ராமர் என்பவருடன் சேர்ந்து மருதுபாண்டியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் காயம் அடைந்த மருதுபாண்டி அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருச்சுழி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×