என் மலர்
நீங்கள் தேடியது "drug"
- போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
- இந்த சட்டம் நேற்று முதல் இலங்கையில் அமலுக்கு வந்துள்ளது.
கொழும்பு:
போதைப் பொருள் வைத்திருப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் நேற்று முதல் இலங்கையில் அமலுக்கு வந்துள்ளது.
5 கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருந்தாலோ அல்லது விற்பனையில் ஈடுபட்டாலோ மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
நேற்று முதல் இந்த புதிய சட்டத்தின் கீழ் குற்றம்புரிந்தவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 19-ம் தேதி நச்சுப்பொருள், அபின், அபாயகர மசோதா சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குறித்த மசோதாவில் கையொப்பமிட்டு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிமுகப்படுத்தினார்.
- ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு, போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அறுவுறுத்தல்படி ஒருங்கிணைந்த கல்வி துறை, சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் அலுவலகம், சுகாதாரத்துறை, காவல்துறை உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து போதை பொருள் தடுப்பு மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், குழந்தை திருமணம் தடை சட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு, போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் அம்சேந்திரன், திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி, சமூக நல விரிவாக்க அலுவலர் தையல் நாயகி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக புறதொடர்பு பணியாளர் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- வேதாளை பகுதியில் போதைப்பொருள் விற்பனை களைகட்டுகிறது.
- நடவடிக்கை எடுக்க போலீசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
ராமநாதபுரம்
தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத் ராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் வேதாளை கிளை சார்பில் பித்அத் ஒழிப்பு, சமுதாய பாதுகாப்பு விளக்கபொதுக்கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் இப்ராஹிம் சாபிர் தலைமை தாங்கினார். பொருளாளர் கரீம்ஹக் சாஹிப், துணைத்தலைவர் யாசர் அரபாத், துணைச்செயலாளர்கள் கீழை சித்தீக், ரஜப்தீன், உஸ்மான், மீரான் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் தினாஜ்கான் "தடம் மாறும் இளைய சமுதாயம்" என்ற தலைப்பிலும், மாநில செயலாளர் இம்ரான் "பித்அத் ஒழிப்பு மாநாடு ஏன்? எதற்கு?" என்ற தலைப்பிலும் மாநில செயலாளர் அன்சாரி "சமுதாய பாதுகாப்பு மாநாடு ஏன்?எதற்கு?" என்ற தலைப்பிலும் பேசினர். தீர்மானங்களை மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் வாசித்தார். ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் இளைய தலைமுறையினர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி சீரழிந்து வருகிறார்கள்.இந்த சீரழிவிற்கு காரணமான சமூக விரோதிகளை கண்டறிந்து போலீசார் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வேதாளை தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம், சுகாதார நிலையத்தை அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவமனையாக மாற்ற வேண்டும். வேதாளையில் இருந்து வலையர்வாடி வழியாக மெயின் ரோட்டுக்கு இணைக்கப்பட்டுள்ள தார்சாலையை அகலப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிளைத்தலைவர் அமீனுல்லாஹ் மிஸ்பாஹி நன்றி கூறினார்.
- சட்ட விரோதமாக இதுபோன்ற ஹூக்கா பார்களை நடத்துவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- காபி கடை என்ற பெயரில் ஹூக்கா பார் போதை மையத்தை நடத்தியவர் சிக்கியுள்ளார்.
சென்னை:
சென்னையில் போதை தரும் பொருட்களை கொண்டு ஹூக்கா பார் நடத்துவது சமீப காலமாக அதிகரித்துள்ளது.
சட்ட விரோதமாக நடத்தப்படும் இதுபோன்ற ஹூக்கா பார்களை நடத்துவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். வெளியில் தெரியாமல் ரகசியமாக நடத்தப்படும் ஹூக்கா பார்களுக்கு மத்தியில் 'காபி கடை' என்ற பெயரில் ஹூக்கா பார் போதை மையத்தை நடத்தியவர் சிக்கியுள்ளார்.
சென்னை ஆழ்வார் பேட்டை பகுதியில் 'காபி ரெஸ்டாரண்ட்' என்கிற பெயரில் காபி கடை ஒன்று நடத்தப்பட்டு வந்தது. இந்த காபி கடையில் ஹூக்கா பார் நடத்தப்பட்டு வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேனாம்பேட்டை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது காபி ரெஸ்டாரண்டை முகேஷ் என்பவர் நடத்தி வந்தது தெரியவந்தது. இவர் சட்டவிரோதமாக காபி ரெஸ்டாரண்டில் ஹூக்கா பார் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ஹூக்கா பாரில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு ஹூக்கா போதைக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், குழாய் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை மாநகர் முழுவதும் இதுபோன்று ஹூக்கா பார் நடத்துவோரை கைது செய்ய கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
- போதை மருந்து ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- இதில் 230 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை
சிவகங்கை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், போதைப்பொருள் எதிர்ப்பு கழகம் மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் இணைந்து போதை மருந்து ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி வரவேற்றார். சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆய்வுக்குழு செயலாளர் சார்பு நீதிபதி பரமேஸ்வரி தலைமை உரையாற்றினார். இளையான்குடி வட்டார மருத்துவ அலுவலர் அருண் அரவிந்த் ரிஷிஸ், சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முகம்மது, அப்ரோஸ், சேக் அப்துல்லா, பாத்திமா கனி, கல்லூரி போதைப்பொருள் ஒழிப்பு கழக ஒருங்கிணைப்பாளர் அஸ்மத்து பாத்திமா, இளையோர் செஞ்சிலுவைச்சங்கம் ஒருங்கிணைப்பாளர் நர்கீஸ் பேகம் ஆகியோர் செய்திருந்தனர். இதில் 230 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- சின்னார்கலால் சோதனை சாவடி அருகே போலீசார் காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
- கொச்சி பகுதியிலும் போதை பவுடர் மற்றும் ஹாசிஸ் எண்ணை கடத்தி வந்த 2 பேர் பிடிப்பட்டனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போதை பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் மாநில எல்லைகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தின் உடுமலை பேட்டை வழியாக கேரளாவின் மறையூருக்கு ஒரு கார் வந்தது. சின்னார்கலால் சோதனை சாவடி அருகே போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் கஞ்சா மற்றும் போதை பவுடர் இருந்தது. அதனை கண்டுபிடித்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் காரில் இருந்த தாம்சன் செபாஸ்டியான் (வயது 23) மற்றும் அவரது கூட்டாளிகள் உள்பட 4 பேர் பிடிப்பட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து தேவிகுளம் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தினர். போதை பொருள் கடத்தி வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுபோல கொச்சி பகுதியிலும் போதை பவுடர் மற்றும் ஹாசிஸ் எண்ணை கடத்தி வந்த 2 பேர் பிடிப்பட்டனர். இவர்களில் ஒருவர் மாணவர் ஆவார். 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் எங்கிருந்து போதை பொருளை கடத்தி வந்தனர் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபோல கொச்சியை அடுத்த கலூர், பச்சலம், எமலக்கரை பகுதியில் போதை பொருள் விற்றதாக வடமாநில தொழிலாளி ஒருவரும் சிக்கினார். அவரையும் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்தும் போதை பொருள்களை பறிமுதல் செய்தனர். கடந்த 2 நாட்களில் மட்டும் கொச்சி மற்றும் மறையூர் பகுதிகளில் போதை பொருள் வைத்திருந்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- போதை பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
- கடலூர் ஜவான் பவன் சாலையில் தொடங்கி அண்ணா பாலம் வழியாக கடலூர் டவுன்ஹால் வரை சென்று முடிவடைந்தது.
கடலூர்:
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, போதை பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி கடலூர் ஜவான் பவான் சாலையில் நடைபெற்றது. இப் பேரணியை கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ, மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, உதவி ஆணையர் லூர்துசாமி, கோட்ட கலால் அலுவலர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தப் பேரணி கடலூர் ஜவான் பவன் சாலையில் தொடங்கி அண்ணா பாலம் வழியாக கடலூர் டவுன்ஹால் வரை சென்று முடிவடைந்தது. அப்போது போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. இந்த பேரணியில் தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதி பெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், மாநகராட்சி கவுன்சிலர் சரத் தினகரன், கல்லூரி மாணவ -மாணவிகள், அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
- குழந்தைகள் தவறுதலாக உபயோகப்படுத்திவிடும் அபாயம் உள்ளது.
- சூப்பர் மார்க்கெட், மருந்து கடைகளில் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிரு ப்பதாவது:-
அபாயகரமான 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கலந்த "ரேடால்" என்ற மருந்தானது வீட்டில் எலிகளை கட்டுப்படுத்த பயன்படு த்தப்பட்டு வருகிறது. இதனை குழந்தைகள் தவறுதலாக உபயோக ப்படுத்தி விடும் அபாயம் உள்ளது.
இதற்கு எதிர்வினை மருந்து இல்லை. இதனால் மத்திய, மாநில அரசுகள் இதன் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை தடைசெய்துள்ளனர்.
எனவே, இந்த எலி மருந்தை மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட், மருந்து கடைகளில் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த மருந்தை எக்காரணத்துக்காகவும் வாங்க வேண்டாம். "ரேடால்" மருந்து விற்கக்கூடிய விற்பனையாளர்களை கண்டறிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலர்கள் மூலம், மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆய்வில் "ரேடால்" மருந்து விற்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட விற்பனை யாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், "ரேடால்" மருந்து விற்பது குறித்து பொதுமக்களுக்கு தெரியவந்தால், வட்டார பூச்சி மருந்து ஆய்வாளர்களிடம் புகார் அளிக்கலாம். தொலைபேசி எண்கள்:-
குத்தாலம்- 98945 48257, மயிலாடுதுறை- 88700 68125, செம்பனார்கோயில்- 63698 95439, சீர்காழி- 80722 20767, கொள்ளிடம்- 99944 82889 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- போதை பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
- வயிற்றில் மாத்திரை வடிவில் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.
புதுடெல்லி:
எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் இருந்து டெல்லிக்கு வந்து விமானத்தில் போதை பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது நைஜீரிய பெண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து அதிகாரிகள், அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதில் அவரது வயிற்றில் மாத்திரை வடிவில் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை வெளியே எடுத்தனர்.
95 ஓவல் வடிவ காப்ஸ்யூல்கள் எடுக்கப்பட்டன. அவற்றுக்குள் போதை பொருள் இருப்பது தெரிந்தது. 511 கிராம் எடையுள்ள போதை பொருள் இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.75 லட்சம் ஆகும்.
இதையடுத்து நைஜீரிய பெண் கைது செய்யப்பட்டார். அயன் பட பாணியில் போதை பொருளை மாத்திரைகளாக விழுங்கி அப்பெண் கடத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நாமக்கல்லில் உள்ள பஸ் நிலையத்தையொட்டி உள்ள ஒரு சில கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- ஒரு கடையில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் சிக்கியது. இதையடுத்து அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
நாமக்கல்:
நாமக்கல்லில் உள்ள பஸ் நிலையத்தையொட்டி உள்ள ஒரு சில கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் தலைமையில் சமூக அலுவலர் மணிகண்டன், கிஷோர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் என 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இன்று காலை நாமக்கல் பஸ் நிலையத்தை யொட்டியுள்ள கடைகளில் அதிரடியாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது ஒரு கடையில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் சிக்கியது. இதையடுத்து அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
தொடர்ந்து அதிகாரிகள் ஒவ்வொரு கடையாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
- கடந்த இரண்டு நாட்களாக, எனது ‘இறைவன் மிகப் பெரியவன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது
- ஜாபர்சாதிக், கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘மங்கை’ படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
"செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே. சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை" என்று தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் குறித்து இயக்குநர் அமீர் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த இரண்டு நாட்களாக, எனது 'இறைவன் மிகப் பெரியவன்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த 22-ம் தேதி நான் 'இறைவன் மிகப் பெரியவன்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்த போது, திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன்.
உண்மை எதுவென்று இப்போது வரை எனக்குத் தெரியவில்லை. எதுவாயினும், செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே.
நடிகர்களோடும், தயாரிப்பாளர்களோடும் சமரசங்களுக்கு உட்பட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கொள்கைக்கு நான் எப்போதும் எதிரானவன் என்பதை ஊடகத் துறையினர் நன்கு அறிவர். அந்த வகையில், சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போதும், நான் பத்திரிகையாளர்களை வழக்கமாகச் சந்திக்கும் எனது அலுவலகத்தில் திரைப்பட பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன். முழு விபரங்கள் தெரிந்த பிறகு, விரைவில் பத்திரிகை மற்றும் ஊடக துறையினரைச் சந்திக்கின்றேன்" என தெரிவித்துள்ளார்.மேலும் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜாபர், கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள 'மங்கை' படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில், சுமார் 2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களைக் கடத்த முயன்ற கும்பல், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், இவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், இந்தக் கும்பலின் தலைவனாகச் செயல்பட்டவர், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து ஜாபர் சாதிக் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்
மேலும் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜாபர்சாதிக், கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள 'மங்கை' படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2021-ம் ஆண்டு முதல் போதை மாத்திரைகள் விற்பனை தொடர்ச்சியாகவே நடைபெற்று வருகிறது.
- போதை மாத்திரைகளுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் அது கட்டுக்குள் வராமலேயே உள்ளது.
சென்னை:
சென்னை மாநகரில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக கஞ்சா விற்பனையை தடுக்க அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வாகனங்களில் கடத்தப்படும் கஞ்சா பொட்டலங்களை ரகசிய தகவலின் பேரில் போலீசார் பறிமுதல் செய்து வருகிறார்கள். பஸ்கள் மற்றும் ரெயில்கள் மூலம் கடத்தப்படும் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டு வருகிறது. இப்படி வாகன சோதனையின் மூலமாக போதைப்பொருட்கள் பிடிபடுவதால் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து வாங்கி சென்னையில் விற்பனை செய்து வருகிறார்கள்.
படித்த இளைஞர்களும் இதில் அதிக அளவில் ஈடுபட்டு வருகிறார்கள். கூரியர் சர்வீஸ் மூலமாக இந்த மாத்திரைகளை போதை கும்பலிடம் இருந்து குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வாங்கி சப்ளை செய்து வருகிறார்கள். மருத்துவத் துறையில் தூக்கமின்மை மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளாக பயன்படுத்தப்படும் இந்த மாத்திரைகளை மருந்து சீட்டுகள் இல்லாமல் கொடுக்கக்கூடாது.
இதுதொடர்பாக போலீசார் அனைத்து மருந்து கடைகளுக்கும் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். இதனால் மருந்து கடைகளில் இந்த போதை மாத்திரைகளை நேரடியாக வாங்குவது சிரமமான விஷயமாகவே இருந்து வருகிறது. அதே நேரத்தில் சட்ட விரோதமாக இந்த போதை மாத்திரைகள் பார்சல்கள் மூலமாக அனுப்பப்பட்டு சென்னையில் கல்லூரி மாணவர்கள், வாலிபர்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது என மருந்து கடை உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, டாக்டர்களின் பரிந்துரை மருந்து சீட்டு இல்லாமல் மேற்கண்ட மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது என்கிற சட்டத்தையும் மீறி போதைக்காக மாத்திரைகளை ஆன்லைனில் விற்று வருகிறார்கள். அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மற்ற போதைப்பொருட்களை பயன்படுத்தும்போதும் மது குடித்த பிறகும் தலை சுற்றல் உள்ளிட்ட போதைக்கான அறிகுறிகள் காணப்படும் என்றும் ஆனால் இந்த மாத்திரைகளை பயன்படுத்துவதால் அதுபோன்ற அறிகுறிகள் எதுவும் இருக்காது. உள்ளுக்குள் இருந்தே இந்த போதை மாத்திரை வேலை செய்யும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் போதை மாத்திரைகளை பயன்படுத்தி இருப்பவர்களை வீட்டில் இருக்கும் பெற்றோரால் கூட கண்டுபிடிக்க முடியாது என்பதால் இளைஞர்கள் அதிக அளவில் அதனை பயன்படுத்தி வரும் அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது. இப்படி சென்னை மாநகரில் சத்தம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வரும் போதை மாத்திரைகள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அதிக அளவில் பிடிபட்டுள்ளன. 23 வழக்குகள் போடப்பட்டு 40 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். 2000 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. இந்த 40 பேரின் வங்கி கணக்குகளையும் முடக்குவதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். போதை மாத்திரைகளை வாங்குவதற்கு ஆன்லைன் மூலமாகவே பணம் செலுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
2021-ம் ஆண்டு முதல் போதை மாத்திரைகள் விற்பனை தொடர்ச்சியாகவே நடைபெற்று வருகிறது. இதுவரை 1243 வழக்குகள் போடப்பட்டு 2423 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இப்படி தொடர்ச்சியாக போதை மாத்திரைகளுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் அது கட்டுக்குள் வராமலேயே உள்ளது. போதை மாத்திரைகளை பொடியாக்கி அதனை தண்ணீரில் கரைத்து நரம்பு வழியாக ஊசி மூலம் உடலில் ஏற்றுக் கொள்கிறார்கள். இதனை ஏதாவது ஒரு இடத்தில் இருந்தே பயன்படுத்தி விடவும் முடிகிறது. இப்படி போதை மாத்திரைகள் சென்னை மாநகர இளைஞர்களின் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரும் நிலையில் அதனை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.