search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elder Couple Suicide"

    • தம்பதி சுப்புராம்- காமாட்சி ஆகியோரின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.
    • வீட்டில் இருந்த போது ஏற்பட்ட பிரச்சினையில் விபரீத முடிவை எடுத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    கூடுவாஞ்சேரி:

    கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் சுப்புராம் (வயது87). இவரது மனைவி காமாட்சி(84). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    வயதான தம்பதியான சுப்புராமும், காமாட்சியும், மகள் பாரதி வீட்டில் வசித்து வந்தனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை மகள் செய்து கொடுத்து இருந்தார்.

    இந்தநிலையில் பாரதி, தனது குடும்பத்தினருடன் ஜமீன் பல்லாவரத்தில் உள்ள தேவாலயத்துக்கு சென்றார். வீட்டில் அவரது பெற்றோர் சுப்புராம்- காமாட்சி மட்டும் இருந்தனர்.

    இரவு அவர்கள் வீடு திரும்பியபோது, சுப்புராமும், காமாட்சியும் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனை கண்டு பாரதி கதறி துடித்தார். தகவல் அறிந்ததும் மணிமங்கலம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தம்பதியின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தம்பதி சுப்புராம்- காமாட்சி ஆகியோரின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. அவர்கள் வீட்டில் இருந்த போது ஏற்பட்ட பிரச்சினையில் இந்த விபரீத முடிவை எடுத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    மேலும் தம்பதியினர் இருவரும் நோய்வாய்ப்பட்டு இருந்ததாகவும், இதனால் மன உளைச்சல் அடைந்து தற்கொலை முடிவை எடுத்தனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

    இது தொடர்பாக மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தம்பதியின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வயதான தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×