search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "election manifesto"

    • பல்வேறு தரப்பட்ட பொதுமக்களை சந்தித்து தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளை கேட்டு வருகிறது.
    • 27-ந்தேதி சென்னை (மாலை 3 மணி முதல்) காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் மத்திய மாவட்டம்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலுக்காக தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரித்து வருகிறது. இதற்காக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான குழு ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகளை அறிய பல்வேறு தரப்பட்ட பொதுமக்களை சந்தித்து தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளை கேட்டு வருகிறது.

    இந்த குழுவினர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று வந்த நிலையில் கடந்த சில நாட்களாக சட்டசபை நடைபெற்ற காரணத்தாலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருவதாலும் இக்குழுவினர் சுற்றுப்பயணம் கீழ்க்கண்டவாறு மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

    23-ந்தேதி வேலூரில் சந்திப்பு காலையில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், ஆரணி மாலை 3 மணி திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு 26-ந்தேதி தஞ்சாவூரில் சந்திப்பு காலையில் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மாலை 3 மணிக்கு விழுப்புரத்தில் சந்திப்பு. கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள்.

    27-ந்தேதி சென்னை (மாலை 3 மணி முதல்) காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் மத்திய மாவட்டம்.

    28-ந்தேதி சென்னை (காலை 10 மணி) சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு.

    • அனைத்து கட்சிகளையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரவணைத்து தான் செல்கிறார்.
    • தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம்.

    மதுரை:

    மதுரையில் தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு மனுக்களை பெற்ற கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரையில் இன்று நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் சிறு, குறு தொழி ல்களை ஊக்கப்படுத்த வேண்டும் என அதிகளவில் மனு வழங்கியுள்ளனர். பிரதமர் மோடி 3 முறை தமிழகம் வருகை தந்தும் சென்னை மற்றும் தென் மாவட்ட வெள்ள சேதங்களுக்காக நிவாரண நிதி 1 ரூபாய் கூட தரவில்லை. முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்தே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட போதிலும் எந்தவித பாரபட்சமும் காட்டப்படவில்லை. அனைத்து கட்சிகளையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரவணைத்து தான் செல்கிறார்.

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள அறிவிப்புகளை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்புடையது அல்ல. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். தென் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் நிதியை ஒவ்வொரு ஆண்டும் குறைத்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக ரெயில்வே திட்டங்களுக்கான நிதியை ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 5-ந்தேதி வேலூர் மண்டலம், 6-ந்தேதி விழுப்புரம் மண்டலத்தில் மக்களை சந்திக்கிறோம்.
    • மக்கள் தங்கள் பரிந்துரை, கருத்துகளை இ-மெயில் மூலமாகவோ, கொரியர் மூலமாகவோ அனுப்பலாம்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * நாளை முதல் சுற்றுப்பயணம் செய்து மக்களிடம் கருத்து கேட்க உள்ளோம்.

    * மண்டலம் வாரியாக மக்களை சந்தித்து கருத்து கேட்கிறோம்.

    * 5-ந்தேதி வேலூர் மண்டலம், 6-ந்தேதி விழுப்புரம் மண்டலத்தில் மக்களை சந்திக்கிறோம்.

    * மக்கள் தங்கள் பரிந்துரை, கருத்துகளை இ-மெயில் மூலமாகவோ, கொரியர் மூலமாகவோ அனுப்பலாம்.

    * 10 பேர் கொண்ட குழுவும், நேரடியாக சென்று மக்களை சந்தித்து கருத்து கேட்க உள்ளோம்.

    * நாளை சென்னை, வேலூர் மண்டலங்களில் கருத்து கேட்க உள்ளோம் என்று தெரிவித்தார்.

    • இன்றைய கூட்டத்தில் எந்தெந்த ஊர்களுக்கு பயணம் செய்கிறோம் என்கிற பட்டியல் முடிவானது.
    • தேர்தல் அறிக்கைக் குழுவின் சுற்றுப்பயண விவரங்களை தி.மு.க. இன்று வெளியிட்டது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்காக தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை கூட்டம் சென்னை அறிவாலயத்தில் இன்று நடந்தது.

    இந்த ஆலோசனையில் கனிமொழி எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, எம்.எம்.அப்துல்லா எம்.பி., சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.

    இன்றைய கூட்டத்தில் எந்தெந்த ஊர்களுக்கு பயணம் செய்கிறோம் என்கிற பட்டியல் முடிவுசெய்யப்பட்டது. அந்தப் பட்டியல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து ஒப்புதல் பெறப்பட்டது.

    இந்நிலையில், தேர்தல் அறிக்கைக் குழுவின் சுற்றுப்பயண விவரங்களை தி.மு.க. வெளியிட்டுள்ளது.

    தூத்துக்குடியில் பிப்ரவரி 5, கன்னியாகுமரியில் பிப்ரவரி 6, மதுரை பிப்ரவரி 7, தஞ்சாவூர் பிப்ரவரி 8, சேலம் பிப்ரவரி 9, கோயம்புத்தூர் பிப்ரவரி 10, திருப்பூர் பிப்ரவரி 11, ஓசூர் பிப்ரவரி 16, வேலூர் 17, ஆரணி பிப்ரவரி 18, விழுப்புரம் பிப்ரவரி 20 மற்றும் சென்னையில் பிப்ரவரி 21, 22 ,23 ஆகிய தேதிகளில் தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அங்கு இருக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், கல்வியாளர்கள் மற்றும் மக்கள் கோரிக்கைகளை கேட்டறிந்து அதன்பின் தேர்தல் அறிக்கை குழு கூடி அறிக்கை தயார் செய்யப்படும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

    • முதலில் எந்தெந்த ஊர்களுக்கு பயணம் செய்கிறோம் என்கிற பட்டியல் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • எந்த விஷயத்தை முக்கியமான அடிப்படையாக கொண்டு தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படுகிறது என்பது முதல்வரிடம் அறிக்கையை கொடுத்த பிறகு தெரிவிக்கப்படும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை கூட்டம் சென்னை அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

    ஆலோசனையில் டி.கே.எஸ்.இளங்கோவன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, எம்.எம்.அப்துல்லா எம்.பி., சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.

    ஆலோசனைக்குப்பிறகு கனிமொழி எம்.பி. கூறியதாவது:

    வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலுக்காக திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்கு இருக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், கல்வியாளர்கள் மற்றும் மக்கள் கோரிக்கைகளை கேட்டறிந்து அதன்பின் தேர்தல் அறிக்கை குழு கூடி அறிக்கை தயார் செய்யப்படும்.

    அதற்காக முதலில் எந்தெந்த ஊர்களுக்கு பயணம் செய்கிறோம் என்கிற பட்டியல் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த பட்டியலை முதல்வரிடம் காண்பித்து ஒப்புதல் பெறப்பட்ட பிறகு அந்த ஊர்களுக்கு பயணம் செய்து எந்தெந்த கருத்துகளை எடுத்துக்கொண்டு நாங்கள் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்போகிறோம் என்பது குறித்து அடுத்தடுத்த கூட்டங்களில் முடிவு செய்யப்படும்.

    எந்த விஷயத்தை முக்கியமான அடிப்படையாக கொண்டு தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படுகிறது என்பது முதல்வரிடம் அறிக்கையை கொடுத்த பிறகு தெரிவிக்கப்படும்.

    அமைப்புகளின் கருத்துகளை பெற மின் அஞ்சல், அலைபேசி எண்கள் ஓரிரு நாட்களில் கொடுக்கப்படும்.

    தேர்தல் அறிக்கை எப்போதும் கதாநாயகனாக இருக்க வேண்டும் என்றில்லை கதாநாயகியாகவும் இருக்கலாம் என்று தெரிவித்தார்.

    • நாளை முதல் நாளில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர் தொகுதிக்கு வேட்பாளர்களை தேர்வு செய்ய கருத்து கேட்கப்படுகிறது.
    • வேட்பாளர் தேர்வு பட்டியல் குழுவில் உதயநிதி ஸ்டாலினும் இடம் பெற்றுள்ளதால் அவரது நம்பிக்கையை பெற்றவர்களுக்கே சீட் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் அனேகமாக ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த தேர்தலை சந்திக்க அகில இந்திய அளவில் காங்கிரஸ், தி.மு.க., ஐக்கிய ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 26 கட்சிகள் சேர்ந்து பா.ஜனதாவுக்கு எதிராக இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளது.

    பாரதிய ஜனதா கட்சி அடுத்த வாரம் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்தியா கூட்டணியிலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

    தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான 'இந்தியா கூட்டணி'யில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள்,

    ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்று உள்ளன. கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியும் இந்த கூட்டணியில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தொகுதி பங்கீடு குறித்து பேசவும், தேர்தல் அறிக்கை தயார் செய்யவும் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 குழுக்களை உருவாக்கி உள்ளார்.

    அதன்படி கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, திருச்சி சிவா எம்.பி., எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி எம்.பி. தலைமையில் டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, கோவி செழியன், ராஜேஸ்குமார் எம்.பி., எழிலரசன் எம்.எல்.ஏ. அப்துல்லா எம்.பி. எழிலன் எம்.எல்.ஏ. ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

    தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும் மேற்பார்வையிடவும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இதன் தொடக்கமாக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் குழுவில் இடம் பெற்றிருந்த முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை கண்டறிந்து அதற்கேற்ப வேட்பாளர்களை தேர்வு செய்வது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    அது மட்டுமின்றி தற்போது எம்.பி.யாக இருப்பவரின் செயல்பாடு எப்படி உள்ளது? அவருக்கே மீண்டும் சீட் கொடுக்கலாமா? அல்லது வேறு நபருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கலாமா? என்பது பற்றியும் அறிய முடிவு செய்யப்பட்டது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி நிலவரம் எவ்வாறு உள்ளது? எந்தெந்த தொகுதிகள் சாதகமாக இருக்கும் என்பது பற்றியும் எந்தெந்த தொகுதிகளில் பிரச்சனை உள்ளது என்பதையும் முதலில் கண்டறிய முடிவு செய்யப்பட்டது.

    இதையொட்டி ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், மாநகராட்சி மேயர், துணைமேயர், மண்டலக்குழு தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், நகரமன்ற தலைவர்கள், ஒன்றியக் குழுத் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரையும் வரவழைத்து தொகுதி நிலவரத்தை தெரிந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி நாளை மதியம் 3 மணி முதல் ஒவ்வொரு தொகுதி வாரியாக நிர்வாகிகளை வரவழைத்து கருத்து கேட்டு வேட்பாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    நாளை முதல் நாளில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர் தொகுதிக்கு வேட்பாளர்களை தேர்வு செய்ய கருத்து கேட்கப்படுகிறது.

    அதன்பிறகு 27-ந்தேதி பொள்ளாச்சி, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய தொகுதிகளுக்கு கருத்து கேட்கப்படுகிறது. இப்படி தொடர்ச்சியாக 5-ந்தேதி வரை கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு வேட்பாளர்களை இறுதி செய்கிறார்கள்.

    அதன் பிறகு 40 தொகுதிகளுக்கும் யார்-யாரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி பெற முடியும் என்ற பட்டியலை தி.மு.க. தலைவர், முதலமு.க. ஸ்டாலின் கவனத்துக்கு இந்த குழு கொண்டு செல்லும். அதன் அடிப்படையில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும்.

    பாராளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள இன்னும் 2 மாத காலமே உள்ளதால் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிட வாய்ப்புள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேலம் மாநாட்டில் பேசும்போது பாராளுமன்ற தேர்தலில் இளைஞரணியினர் போட்டியிட அதிக வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டிருந்தார்.

    இப்போது வேட்பாளர் தேர்வு பட்டியல் குழுவில் உதயநிதி ஸ்டாலினும் இடம் பெற்றுள்ளதால் அவரது நம்பிக்கையை பெற்றவர்களுக்கே சீட் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

    இந்த நிலையில் இன்று பாராளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் கனிமொழி எம்.பி. தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் கூடியது. இக்கூட்டத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பிரச்சனைகளை கண்டறிந்து அதை தேர்தல் அறிக்கையில் இடம் பெற செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

    • திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • சென்னை அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி எம்.பி. தலைமையிலான தி.மு.க. தேர்தல் அறிக்கை குழுவின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி எம்.பி. தலைமையிலான தி.மு.க. தேர்தல் அறிக்கை குழுவின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது.

    ஆலோசனையில் டி.கே.எஸ்.இளங்கோவன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி., சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., எம்.எம்.அப்துல்லா எம்.பி., டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க உரிய சட்டம் இயற்றுவது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.#LSpolls #CPM #ElectionManifesto
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் பாராளுமன்ற தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு:

    பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க உரிய சட்டங்கள் இயற்றப்படும். மக்களவை, சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும்

    தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18,000 நிர்ணயிக்கப்படும். விலைவாசி உயர்வை பொறுத்து ஊதிய உயர்வு வழங்கப்படும்.

    விவசாயிகளுக்கு உற்பத்தி செலவை விட 50 சதவீதம் அதிக தொகையில் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய சட்டம் இயற்றப்படும் 

    தனியார் காப்பீடு நிறுவன சிகிச்சை முறை நிறுத்தப்பட்டு, சுகாதாரத்திற்கு ஜிடிபியில் 5 சதவீதம் ஒதுக்கப்படும். அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் வேலை என்பது அடிப்படை உரிமையாக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #LSpolls #CPM #ElectionManifesto
    பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, அமமுக கட்சியின் தேர்தல் அறிக்கையினை துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். #TTVDhinakaran #AMMK
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையினை அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ளார்.

    இதில் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

    கல்லூரி மாணவர்களுக்கு இலவச கையடக்க கணினி (டேப்) வழங்கப்படும்.

    விவசாயம் மற்றும் சுற்றுச் சூழலை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை.

    டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்.

    ஜிஎஸ்டி கவுன்சில் நிர்வாகத்தில் உரிய மாற்றங்கள் செய்யப்படும்.

    அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.

    இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்பட்டு இலவச விதைகள் வழங்கப்படும்.

    விவசாயத்திற்கு இலவச ஆழ்துளை கிணறு அமைக்கப்படும்.

    மாணவர்கள் நல வாரியம் அமைக்கப்படும், கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும்.



    நீட் தேர்வை ரத்து செய்து, பழைய முறை கொண்டு வரப்படும்.

    ஏழை பெண்கள் திருமணத்திற்கு இலவச அத்தியாவசிய  வீட்டு உபயோகப்பொருட்கள் வழங்கப்படும்.

    இளைஞர்கள் சுய உதவி குழு அமைக்கப்படும்.

    வெளிநாட்டு வாழ் தமிழ் மக்களுக்கு தனி நல வாரியம்.

    பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சுங்க சாவடிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

    மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படும்.

    தனியார் நிறுவன ஊழியர்களின் திருமண செலவுகளுக்கு ரூ. 2 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

    ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும்.

    கோவை, திருச்சி, மதுரைக்கு மெட்ரோ ரெயில் சேவை விரிவாக்கம் செய்யப்படும்.

    இவ்வாறு தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #TTVDhinakaran #AMMK
    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தலைமைக் கழகத்தில் தொடங்கியது. #parliamentelection #admk #election manifesto

    சென்னை, பிப். 4-

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கையினை தயார் செய்வதற்கான குழு ஏற்கனவே அறிவிக்கப்பட் டிருந்தது.

    அதன்படி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்- அமைச்சரு மான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங் கிணைப் பாளரும், முதல்- அமைச்சரு மான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமைக் கழகத்தில் இன்று கழக தேர்தல் அறிக்கையை தயார் செய்யும் குழுவினருக்கு ஆலோசனைகளை வழங்கி பணியினை தொடங்கி வைத்தார்கள். அப்போது தலைமை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    தேர்தல் அறிக்கையினை தயார் செய்வதற்காக அறிவிக்கப்பட்டுள்ள கழக அமைப்புச் செயலாளர்கள் பொன்னையன், நத்தம் விசுவநாதன், அமைச் சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண் முகம் மற்றும் செம்மலை, பி.எச்.மனோஜ் பாண்டியன், ரபிபெர்னார்ட் ஆகியோர் கலந்து கொண்டனர். #parliamentelection #admk #election manifesto

    ×