என் மலர்
நீங்கள் தேடியது "elephant"
- யானைகள் ரெயில் தண்டவாளங்களை கடக்கும் 11 இடங்கள் அடையாளம் காணப்பட்டது.
- 2 இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
தமிழ்நாடு - கேரள வனப்பகுதிகளில் தண்டவாளங்களை கடக்க முற்படும்போது ரெயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க கோரியும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தெற்கு ரெயில்வே நிர்வாகம் மேற்கொள்ளக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் திண்டுக்கல்லைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தெற்கு ரெயில்வே தரப்பில் ஆஜரான வக்கீல் ராம்குமார், 'ரெயில் மோதி யானைகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு மற்றும் கேரள வனத்துறையுடன் இணைந்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் கோவை, பாலக்காடு ஒட்டிய வனப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது.
யானைகள் ரெயில் தண்டவாளங்களை கடக்கும் 11 இடங்கள் அடையாளம் காணப்பட்டது. இதில் 9 இடங்களில் சுரங்க வழித்தடங்கள் அமைக்கப்பட்டு தண்டவாளங்களுக்கு அடியில் யானைகள் கடந்து செல்லும் வகையில் வழி அமைக்கப்பட்டுள்ளது. 2 இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல போத்தனூர் - மதுக்கரை பகுதிகளில் தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் யானை நடமாட்டத்தைக் கண்டறியும் வகையில் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் 12 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் 2 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இந்த நவீன கேமராக்கள் யானைகள் ரெயில் தண்டவாளங்களுக்கு அருகில் உள்ள 150 மீட்டர் தூர சுற்றளவுக்குள் வந்தால் உடனடியாக அருகில் உள்ள ரெயில் நிலைய மேலாளர் மற்றும் ரெயி்ல் ஓட்டுநர்களுக்கு தகவல்களை அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
தெற்கு ரெயில்வே நிர்வாகத்தின் இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக பாலக்காடு - போத்தனூர் வழித்தடத்தில் கடந்த 27 மாதங்களாக ரெயில் மோதி ஒரு யானை கூட சாகவில்லை.'' என்று கூறினார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இதுகுறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி தெற்கு ரெயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர்.
- சதய விழா கொண்டாடப்படும் ஒரே மன்னர் ராஜராஜ சோழனுக்கு மட்டும் தான்.
- யானைகளில் வலம் வந்த சோழன் இடத்தில் நாம் வசிப்பது பெருமை.
தஞ்சாவூர்:
மாமன்னர் ராஜ ராஜ சோழனின் 1037-வது சதய விழா இன்று தஞ்சை பெரிய கோவிலில் தொடங்கியது. நாளை வரை இந்த விழா நடைபெறுகிறது. இன்று முதல் நாள் விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. முன்னதாக நடைபெற்ற மேடை நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசிய தாவது:-
மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழாவை நாம் கொண்டாடி வருகிறோம். எத்தனை மன்னர்கள் ஆண்டிருந்தாலும் சதய விழா கொண்டாடப்படும் ஒரே மன்னர் மாமன்னர் ராஜ ராஜ சோழனுக்கு மட்டும் தான். அவர் மக்கள் நலனில் அக்கறையோடு செயல்பட்டு ஆட்சி நடத்தினார். காலத்தால் அழிக்க முடியாத பல பொக்கிஷங்களை தந்தவர் மாமன்னர் ராஜராஜ சோழன். இதற்கு தஞ்சை பெருவுடையார் கோவிலே சான்று. 1000 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் மாமன்னர் குதிரை, யானைகளில் வலம் வந்திருப்பார். அந்த இடத்தில் தற்போது நாம் நிற்கிறோம். இது நமக்கெல்லாம் பெருமை. ஒரு மன்னர் போர் தொடுக்கும்போது படைகளுக்கு பின்னால் நிற்க கூடாது. முன் நின்று வழி நடத்த வேண்டும். அப்படித்தான் மாமன்னர் தமது படையை முன்னே நின்று வழி நடத்தியுள்ளார். பல போர்களில் வெற்றி கண்டுள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மீனாட்சி அம்மன் கோவில் யானைக்கு 2 ஆண்டுகளில் ரூ.9 லட்சம் செலவில் சிகிச்சை அளித்துள்ளனர்.
- கடந்த 2020 மே முதல் கண் குறைப்பாட்டுக்காக உயர்ரக சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மதுரை
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடப்பது வழக்கம். வீதி உலாவின் போது சுவாமி முன்பு செல்வதற்காக யானை, ஒட்டகம் மற்றும் காளை ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
பெண்யானை
இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கடந்த 2000-ம் ஆண்டு அருணாசல பிரதேசம் மாநிலத்தில் இருந்து பாா்வதி என்ற பெண் யானை வாங்கப்பட்டு கோயில் நிா்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
பார்வதிக்கு கடந்த 2020-ம் ஆண்டு இடது கண்ணில் பாா்வை குறைபாடு ஏற்பட்டது. எனவே அதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இது தவிர பார்வதிக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே பாா்வதிக்கு 2 கண்களிலும் கண்புரை ஏற்பட்டு வெண்படலம் உருவானது. எனவே சென்னையில் இருந்து வந்த நிபுணர் குழு, மதுரையில் உள்ள கால்நடை டாக்டர்களுடன் ஒருங்கிணைந்து சிகிச்சை அளித்தனா். ஆனாலும் சிகிச்சையில் பெரிதாக முன்னேற்றம் இல்லை.
எனவே தாய்லாந்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் பிரத்யேக மருத்துவ குழுவினா் மதுரை வந்து சிகிச்சை வழங்கி சென்றனர்.யானை பாா்வதிக்கு மருத்துவ சிகிச்சை கொடுத்த வகையில், கடந்த 2 ஆண்டுகளில் எவ்வளவு செலவு ஏற்பட்டது? தாய்லாந்து மருத்துவக் குழுவினருக்கு எவ்வளவு தொகை தரப்பட்டது? என்பவை தொடர்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தது.
அதற்கு கோவில் நிா்வாகம் கொடுத்த பதிலில், யானை பாா்வதிக்கு கடந்த 2020 மே முதல் கண் குறைப்பாட்டுக்காக உயர்ரக சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை மருந்துகள் வாங்கியது, வெளிநாட்டு- உள்நாட்டு மருத்துவா்கள் விமான கட்டணம் உள்பட மொத்தம் ரூ. 9,08,018 செலவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு யானை லட்சுமி தொடர்ச்சியாக ஆசி வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- திடீரென மயங்கி விழுந்த லட்சுமி, சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தது.
புதுவையில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 1997-ம் ஆண்டு யானை ஒன்று தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது. அந்த யானைக்கு லட்சுமி என்று பெயர் சூட்டப்பட்டது.
லட்சுமி யானை நாள்தோறும் கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. தொடர்ந்து பக்தர்களிடம் அமோக வரவேற்பை யானை லட்சுமி பெற்றுள்ளது. புத்துணர்ச்சி முகாமுக்கு செல்லும் நாட்கள் தவிர மற்ற நாட்களில் கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு யானை லட்சுமி தொடர்ச்சியாக ஆசி வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் யானை லட்சுமி இன்று காலை வழக்கம் போல் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் நடைபயிற்சிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளது.
அப்போது திடீரென மயங்கி விழுந்த லட்சுமி, சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் 25 ஆண்டுகளாக பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த யானை லட்சுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஹெர்பீஸ் என்ற வைரஸ் தாக்கி யானைக்குட்டிகள் உயிரிழந்தது ஆய்வில் தெரியவந்தது.
- முதலில் யானை குட்டியின் தோல் மற்றும் சுவாசக்குழாயில் பாதிப்பு ஏற்படுத்தும் இந்த வைரஸ், பின்னர் தீவிரமடைந்து 24 மணி நேரத்துக்குள் உயிரிழப்பை ஏற்படுத்தும்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி வனப்பகுதியில் கேரள மாநிலத்தின் எல்லையான செம்பக்காடு, மறையூர், மூணார் வனப்பகுதி உள்ளது. இந்நிலையில் கேரள மாநிலம் மூணாறு குண்டல எஸ்டேட் பகுதியில் அம்மாநில வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது 3 யானைக்குட்டிகள் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் உயிரிழந்த யானைக்குட்டிகளின் உடல்கள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் ஹெர்பீஸ் என்ற வைரஸ் தாக்கி யானைக்குட்டிகள் உயிரிழந்தது ஆய்வில் தெரியவந்தது. இந்த ஹெர்பீஸ் நோய் தொற்றானது 1990 ம் ஆண்டு ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட தொற்று நோய் என கண்டறியப்பட்டது.
முதலில் யானையின் தோல் மற்றும் சுவாசக்குழாயில் பாதிப்பு ஏற்படுத்தும் இந்த வைரஸ், பின்னர் தீவிரமடைந்து 24 மணி நேரத்துக்குள் உயிரிழப்பை ஏற்படுத்தும். இந்த வைரஸ் தொற்றால் ஒரே வாரத்தில் 3 ஆண் குட்டியானைகள் உயிரிழந்தது கேரள வனத்துறை மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை வனப்பகுதி யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீரை தேடி சுழற்சி முறையில் இடம் பெயர்ந்து வேறு இடங்களுக்கு செல்வது வழக்கம். உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகம் கேரள வனப்பகுதியான செம்பக்காடு, மறையூர், மூணார் பகுதியை ஒட்டி உள்ளதால் யானைகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய உடுமலை வனக்கோட்ட உதவி வன பாதுகாவலர் கணேஷ் ராம் தலைமையில் வனத்துறை அதிகாரிகள், வேட்டை தடுப்பு காவலர்கள் உடுமலை தமிழக-கேரள வனப்பகுதியில் யானைகளின் நட மாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- விருதுநகருக்கு லாரியில் கொண்டுவரப்பட்ட அந்த யானையை கீழே இறக்க முயற்சித்தனர்.
- ஏற்கனவே இந்த யானை ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்தபோது கடந்த மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது.
விருதுநகர்:
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு விருதுநகரில் உள்ள ஒரு கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி ராஜபாளையத்தில் இருந்து தனியாருக்கு சொந்தமான யானை வரவழைக்கப்பட்டது.
விருதுநகருக்கு லாரியில் கொண்டுவரப்பட்ட அந்த யானையை கீழே இறக்க முயற்சித்தனர். இறக்கிய பின்னர் அந்த யானை, திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு தரையில் படுத்துக்கொண்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் கால்நடை துறை இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் கோவில் ராஜா மற்றும் டாக்டர்கள் விரைந்து வந்து யானைக்கு சிகிச்சை அளித்தனர்.
இதுபற்றி கால்நடைத்துறை அதிகாரி கூறியதாவது:-
ஏற்கனவே இந்த யானை ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்தபோது கடந்த மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. அப்போதும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போதே யானைக்கு மூன்று மாதம் ஓய்வு கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தோம். ஆனாலும் யானையின் உரிமையாளர்கள் தொடர்ந்து இம்மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு யானையை அழைத்து வரும் நிலை உள்ளது. தற்போதும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. யானைக்கு 56 வயதாகிறது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதுவை மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி 42 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக இறந்தது.
- அறங்காவலர் குழு தலைவர் ராமச்சந்திரன், நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன் ஆகியோர் ஹோமத்தை நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி 42 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக இறந்தது.
இதையடுத்து மணக்குள விநாயகர் கோவிலில் கணபதி ஹோமம் மற்றும் சாந்தி ஹோமம் நடைபெற்றது இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்தது. காலை 9 மணிமுதல் 12.30 மணி வரை கோவிலில் கணபதி ஹோமம் சாந்தி ஹோமம் நடைபெற்றது. யானை ஆன்மா சாந்தி அடையவும், புதுவை மக்களின் நன்மைக்காகவும் இந்த ஹோமம் செய்யப்பட்டது.
ஹோமத்தில் வைக்கப்பட்ட கலசநீர் யானை நின்றஇடம், கொட்டில், அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தெளிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அறங்காவலர் குழு தலைவர் ராமச்சந்திரன், நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன் ஆகியோர் ஹோமத்தை நடத்தினர்.
யானையின் இறுதி சடங்கு செய்த போது அதன் தந்தம் அப்புறப்படுத்தப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. முதல்-அமைச்சரின் பரிந்துரையின் பேரில் வனத்துறையிடம் இருந்த லட்சுமியின் தந்தத்தை வாங்கி பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- அட்டகாசம் செய்யும் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- வனத்துறையினர் பலாப்பழங்களுடன் கருப்பன் யானைக்காக கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் விடிய விடிய காத்திருந்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கருப்பன் யானை அட்டகாசம் செய்து வருகிறது.
இரவு நேரங்களில் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கருப்பன் யானை, காலிபிளவர், முட்டைகோஸ், மக்காச்சோளம், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. பின்னர் அதிகாலை நேரமானதும் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வந்தனர்.
எனவே அட்டகாசம் செய்யும் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் பொள்ளாச்சியில் இருந்து கபில்தேவ், கலீம், அரிசி ராஜா ஆகிய 3 கும்கிகளை கொண்டு வந்தனர். அந்த கும்கிகள் ஜோரை காடு ரங்கசாமிகோவில் அருகில் கட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 3 கும்கிகள் மற்றும் 4 கால்நடை மருத்துவர்கள் மற்றும் 150 வனத்துறையினர் கொண்ட குழுவினர் கருப்பன் யானையை பிடித்து மயக்க ஊசி செலுத்த தயார் நிலையில் இருந்தனர்.
இதற்காக வனத்துறையினர் பலாப்பழங்களுடன் கருப்பன் யானைக்காக கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் விடிய விடிய காத்திருந்தனர். ஆனால் உஷாரான கருப்பன் யானை இரவில் வனப்பகுதியில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.
எனவே இன்று காலை அடர்ந்த வனப்பகுதிக்கே சென்று கருப்பன் யானையை தேட வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர். பின்னர் கும்கிகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தவும் முடிவு செய்து உள்ளனர்.
- யானைகள் மீது மோதிய வேகத்தில் ரெயில் என்ஜின் மற்றும் ஒரு பெட்டி தடம் புரண்டது.
- ரெயிலுக்கு அடியில் யானைகளின் உடல்கள் சிக்கி இருந்தன.
கொழும்பு:
இலங்கையின் மட்டக் களப்பு அருகே ஹபரணை- கல்ஒயா ரெயில் நிலையம் இடையே தண்டவாளத்தை யானைகள் கடக்க முயன்றன. அப்போது பயணிகள் ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்த யானைகள் மீது ரெயில் மோதியது.
ரெயில் மோதியதில் மூன்று யானைகள் உயிரிழந்தன. யானைகள் மீது மோதிய வேகத்தில் ரெயில் என்ஜின் மற்றும் ஒரு பெட்டி தடம் புரண்டது. இதனால் ரெயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த விபத்தால் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
ரெயிலுக்கு அடியில் யானைகளின் உடல்கள் சிக்கி இருந்தன. சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்றனர்.
ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டனர். பின்னர் யானைகளின் உடல்கள் மற்றும் தடம் புரண்ட ரெயிலை மீட்கும் பணி நடந்தது.
- தஞ்சை பெரிய கோவிலில் இன்று மாட்டு பொங்கலை முன்னிட்டு மகா நந்திக்கு 2 டன் அளவிலான காய்கறி, பழம், இனிப்பு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
- இந்த கோவில் கஜ பூஜை செய்வதற்கு15 வருடங்களாக யானை இல்லை, யானை இல்லாதது மிகப்பெரிய வருத்தத்தை அளிக்கிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரிய கோவிலில் இன்று மாட்டு பொங்கலை முன்னிட்டு மகா நந்திக்கு 2 டன் அளவிலான காய்கறி, பழம், இனிப்பு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. 108 பசுக்களுக்கு கோ பூஜை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அ.ம.மு.க. மாநகர செயலாளர் ராஜேஸ்வரன் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-
தமிழ்நாடு மக்கள் நோய் நொடியின்றி எல்லா செல்வங்களும் பெற, விவசாயம் செழிக்க, நீர் பற்றாக்குறை இருக்க கூடாது. அனைத்து ஜீவ நாடிகள் நன்றாக வாழ வேண்டும் என கோரிக்கை வைத்து கோ பூஜை சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது.
தஞ்சை பெரிய கோயில் உலகப் புகழ் பெற்றது .
இந்த கோவில் கஜ பூஜை செய்வதற்கு15 வருடங்களாக யானை இல்லை.
யானை இல்லாதது மிகப்பெரிய வருத்தத்தை அளிக்கிறது. தஞ்சை மக்களுக்கும் பெரிய கோயிலுக்கும் புகழ் சேர்க்கும் வகையில் பெரிய கோயிலுக்கு யானை அளிக்குமாறு தமிழக அரசுக்கு தஞ்சை மக்கள் சார்பில் வேண்டுகோள் வைக்கிறேன்.
தஞ்சை பெரிய கோயிலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் அதிகமாக வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு மாற்று பாதை அமைத்து தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- துதிக்கையை உயர்த்தி விநாயகரை யானைகள் வழிபட்டன.
- யானைகள் துதிக்கையால் தண்ணீரை விநாயகர் மீது ஊற்றி அபிஷேகம் செய்தன.
கோவை :
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப்பை அடுத்த கோழிகமுத்தியில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை பிடித்து அதற்கு பயிற்சி அளித்து வளர்த்து வருகின்றனர். மேலும் கும்கி யானைகளும் உள்ளன. ஆண்டுதோறும் பொங்கலுக்கு மறுநாள் யானை பொங்கல் விழா கொண்டாடப்படும்.
அதன்படி கோழிகமுத்தி வளர்ப்பு யானைகள் முகாமில் யானை பொங்கல் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மலைவாழ் மக்களுடன் சுற்றுலா பயணிகள் சேர்ந்து பொங்கல் வைத்தனர். அதை தொடர்ந்து முகாமில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. முன்னதாக வளர்ப்பு யானைகள் துதிக்கையால் தண்ணீரை விநாயகர் மீது ஊற்றி அபிஷேகம் செய்தன. இதை தொடர்ந்து யானைகள் துதிக்கையை தூக்கி விநாயகரை வழிபட்டன.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், கோழிகமுத்தி, வரகளியாறு முகாம்களில் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் கலீம், கபில்தேவ், முத்து ஆகிய யானைகள் காட்டு யானைகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதன் காரணமாக அந்த 3 யானைகளும் பொங்கல் விழாவில் கலந்துகொள்ளவில்லை. விழாவில் யானைகளுக்கு ஆப்பிள், கரும்பு, வாழைப்பழம், பொங்கல், ராகி உள்ளிட்டவை வழங்கப்பட்டன என்றனர்.
- ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் 55 வயதுடைய மங்களம் என்ற பெண் யானை உள்ளது.
- ரூ. 8 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில், நீச்சல் குளம் அமைக்கப்பட்டு, பாதுகாப்பான இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம்:
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் 55 வயதுடைய மங்களம் என்ற பெண் யானைக்கு கோவில் வளாகத்திலேயே நன்கொடையாளர் ஏற்பாட்டில் ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில், நீச்சல் குளம் அமைக்கப்பட்டு கான்கீரிட் தளமும், நீச்சல் குளம் கட்டப்பட்டு பாதுகாப்பான இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நீச்சல் குளத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கல்யாணசுந்தரம் எம்.பி, அரசு கொறடா கோவி.செழியன், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், சாக்கோட்டை அன்பழகன், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன், மயிலாடுதுறை இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் உமாதேவி, கோவில் செயல் அலுவலர்கள் ஆறுமுகம், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.