search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elocution Competitions"

    • மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகின்ற 6-ந் தேதி நடைபெறுகின்றது.
    • மாணவர்கள் போட்டி நாளன்று காலை 9 மணிக்குள் வருகையைப் பதிவு செய்யவேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் எடு -த்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-

    கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களிடையே தமிழில் பேச்சாற்றலையும் படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகின்ற 6-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணியளவில் கடலூர் கடற்கரைச் சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள சி.கே.பள்ளியில் நடைபெறவுள்ளன. கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளுக்கு மூன்று பிரிவுகளில் தனித்தனியே முதல் பரிசு ரூ.10,000 , 2-ம் பரிசு ரூ.7,000, 3-ம் பரிசு ரூ.5,000 என வழங்கபெறவுள்ளன. இவ்வாறு கூறப்பட்டு ள்ளது. கடலூர் மாவ ட்டத்தில் உள்ள மேனிலைப் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு பயிலக்கூடிய மாணவர்களுள் ஒரு பள்ளியிலிருந்து ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் வீதம் மூன்று மாணவர்களை மட்டும் தேர்வு செய்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் அனுப்பவேண்டும். மாணவர்கள் போட்டி நாளன்று காலை 9 மணிக்குள் வருகையைப் பதிவு செய்யவேண்டும். போட்டிகளுக்கான தலைப்புகள் போட்டி நடைபெறும் அரங்கில் அளிக்கப்படும். கடலூர் மாவட்டத்திலுள்ள அரசு, மற்றும் அரசு உதவி பெறும் தனியார்மே னிலைப் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம். தமிழார்வமுள்ள மாண வர்கள் மேற்கூறியுள்ள போட்டிகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் அறிவித்துள்ளார்.

    ×