search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "emphasis"

    • திட்டப்பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய கவுன்சிலர் வலியுறுத்தினார்.
    • இந்த பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    விருதுநகர்

    விருதுநகர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுமதி ராஜசேகரிடம் 9-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சி லர் சரோஜா கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    கூரைக்குண்டு பஞ்சாயத்து சாத்தூர் ரோடு நான்கு வழிச்சாலை அருகே புதிய சமுதாயக்கிணறு கடந்த 2020-21ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் முடிக்கப்பட்டது. அதன் பின்னர் கிணற்று நீரை முத்துராமலிங்கம் நகர், நிறைவாழ்வு நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 300 குடும்பங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

    சமுதாய கிணற்றில் இருந்து கோடைகால தேவைக்கு குடிநீர் விநியோ கம் செய்ய முடியாத நிலையில் அது காட்சி பொருளாக உள்ளது.

    எனது முயற்சியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் பாலம்மாள் நகர் பகுதியில் புதிய கழிவுநீர் கால்வாய் ரூ.10லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இதற்காக மாவட்ட ஊராட்சி பொது நிதி ரூ.4.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டும் மேற்படி பணி நடைபெறா மல் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    கூரைக்குண்டு பஞ்சாயத்தில் 1, 4-வது வார்டு பகுதிகளான முத்துராம லிங்கம் நகர், பாலம்மாள் நகர் ஆகிய பகுதிகளில் இதுவரை கிராமசபை கூட்டம் நடத்தப்படவில்லை. மேற்படி பகுதியில் கழிவுநீர் கால்வாய் முறையாக பராமரிக்கப்படவில்லை.

    இதனால் எனது 9-வது வார்டு பகுதியின் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப் பட்டுள்ளது. இதுதொடர் பாக கூரைக்குண்டு பஞ்சாயத்து தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை தெரிவித்தும் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே இந்த பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருத்தங்கல், சாட்சியாபுரம் ரெயில்வே மேம்பால பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
    • ெரயில்வே வாரியம் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று பதில் அளிக்கப்பட்டது.

    விருதுநகர்

    மதுரையில் தென்னக ெரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தியதாவது:-

    விருதுநகர்-செங்கோட்டை ெரயில் பாதையில் திருத்தங்கல் மற்றும் சாட்சியாபுரத்தில் ெரயில்வே மேம்பால கட்டுமான பணிகளை விரைவுபடுத்த வேண்டும். இதுகுறித்து ெரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ள நிலையில் மாநில நெடுஞ்சாலை துறையின் மதிப்பீடு மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவ தாகவும் அது முடிந்த பின் விரைவுபடுத்தப்படும் என்றும் ெரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. சிலம்பு எக்ஸ்பிரஸ் சிலம்பு எக்ஸ்பிரஸ் ெரயிலை தினசரி ெரயிலாக மாற்ற வேண்டும் என்று கேட்டதற்கு தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு காரைக்குடி, மானாமதுரை வழியாக வாரம் 3 முறை மற்றொரு ெரயில் இயக்கப்பட உள்ளதாகவும், ெரயில் தினசரி ெரயிலாக இயக்க வாய்ப்பு இல்லை என்றும் அதில் கூடுதல் பெட்டிகளை இணைக்கவும் வாய்ப்பில்லை என்றும் பதிலளிக்கப்பட்டது.

    நாகர்கோவில்- தாம்பரம் எக்ஸ்பிரஸ் ெரயில் சாத்தூர் மற்றும் திருமங்கலம் ெரயில் நிலையங்களில் நின்று செல்லவும், கொல்லம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் சிவகாசியில் நின்று செல்லவும் நடவடிக்கை கோரியதற்கு சிவகாசியில் பயணிகள் கூட்டம் குறைவாக உள்ளதால் அதற்கு வாய்ப்பில்லை என்றும், நாகர்கோவில்- தாம்பரம் எக்ஸ்பிரஸ் ெரயில் சாத்தூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தினசரி ரெயில் செங்கோட்டை-சிவகாசி வழியாக பெங்களூருவுக்கு புதிய ெரயில், ஐதராபாத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ெரயில் வசதி, குருவாயூர்-புனலூர் ெரயில் மதுரை வரை நீட்டிப்பு, புதுச்சேரி- கன்னியாகுமரி பயணிகள் ெரயிலை தினசரி ெரயிலாக மாற்றம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான கூடுதல் ெரயில் வசதி தொடர்பான கோரிக்கை களுக்கு ெரயில்வே வாரியம் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று பதில் அளிக்கப்பட்டது.

    • சிங்கம்புணரியில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
    • இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு குடியிருப்பு பகுதியில் குளம்போல் கழிவுநீர் தேங்கியுள்ளது. அங்கு கடந்த 2 ஆண்டுகளாக தெருக்களில் இருந்து வரும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.

    இதுபற்றி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த பருவமழை காலத்தில் தேங்கிய மழைநீருடன் அப்பகுதி குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரும் சேர்ந்து சுமார் 2 ஏக்கருக்கும் மேற்பட்ட காலி மனையிடங்களில் தேங்கிள்ளது.

    இதன் காரணமாக கடுமை யான துர்நாற்றம் மற்றும் கொசுத்தொல்லையால் குடியிருப்பு வாசிகள் மற்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், ஒவ்வாமை மற்றும் தோல் அரிப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    எனவே இந்தப்பகுதியில வசித்து வரும் மக்கள் தங்களுடைய வீடுகளை காலி செய்து வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே பல மாதங்களாக தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றி குடியிருப்பு பகுதிகளுக்கு அரசு கழிவுநீர் கால்வாய் அமைத்து தரும்படி இந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

    • ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியில் 5-வது புத்தக கண்காட்சி நடந்தது.
    • மாணவ-மாணவிகள் புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும் என கலெக்டர் வலியுறுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கம் இணைந்து நடத்திய 5-வது புத்தகதிருவிழா மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராம லிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் ராஜ கண்ணப்பன் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று பேசினார்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பேசியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இளைஞர்களிடையே வாசிப்புத்தன்மையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்குடன் இந்த புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவி யர்கள் கலந்துகொண்டு பயன்பெறும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த கண்காட்சி தொடங்குவதற்கு முன்பு மாணவ, மாணவியர்களுக்கு உண்டியல் வழங்கப்பட்டு சேமிப்பு பழக்கம் உரு வாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாணவ மாணவியர்களும் தங்களது விருப்பத்திற்கேற்ற புத்தகங்களை வாங்கி பயன்பெறலாம். அதுமட்டுமின்றி நகரின் முக்கிய பகுதிகளுக்கு நடமாடும் நூலகம் சென்று மாணவ, மாணவியர்களும் பொதுமக்களும் பயன் பெறும் வகையில் ஒருமாத காலத்திற்கு இந்த பேருந்து செயல்பட உள்ளன. எனவே பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் புத்தக கண்காட்சிகளை நாள்தோறும் பார்வையிட்டு வாழ்வில் பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத்தொடர்ந்து புத்தகத்திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற சிறந்த வாசகர்கள் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட மேனகாவிற்கு பாராட்டுசான்று மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கப்பரிசு கலெக்டர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) சேக் மன்சூர் , ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, கலை இலக்கிய ஆர்வலர் சங்கத்தின் தலைவர் மரு.சின்னத்துரை அப்துல்லா, செயலாளர் மரு.வான்தமிழ் இளம்பரிதி, ராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் பிரவின் தங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • துப்புரவு பணியாளர்களின் பிரச்சினைகள் உடனடியாக களையப்பட வலியுறுத்தப்பட்டது
    • நடிகை ரோகிணி பங்கேற்றார்

    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் விட்டனஸ் திரைப்படம் திரையிடலும், அப்படத்தின் கலைஞர்களுக்கு பாரா ட்டு விழாவும் புதுக்கோ ட்டையில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வன் தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலாளர் டாலின் சரவணன் வரவேற்றார்.

    இதில் கலந்து கொண்ட நடிகை ரோகிணி பேசிய போது, சாக்கடைகள், குப்பைகளை அகற்றும் சக மனிதர்களை நாம் சாதாரணமாக கடந்து செல்வது இந்த நூற்றாண்டின் அவலம். மலக்குழிக்குள் கூட மனிதர்கள் இறங்குவது இன்னும் நின்றபாடில்லை. இந்த சமூக அவலத்தை விட்டனஸ் திரைப்படம் கலைவடிவில் பேசியுள்ளது.

    இதுபோன்ற கொடுமைக்கு உள்ளாகி இறந்து போகும் துப்புரவு பணியாளர்களின் மரணத்திற்கான நீதியின் குரலை எழுப்பி உள்ளது.

    துப்புரவுப் பணியாளர்களுக்கான பணிபாதுகாப்பு, ஊதியம் வழங்கப்படுவதில் உள்ள பிரச்சினைகளை உடனடியாக களையப்ப ட வேண்டும். இனி ஒரு மனிதர்கூட மலக்குழியில் இறங்கக்கூடாது என்பதே முக்கியம். அரசாங்கங்கள் உட னடியாக கழிவுநீர்தொ ட்டிகளுக்குள் சுத்தம் செய்யும் கருவிகளை தருவிக்க வேண்டும். அதுவே சகமனிதன் மீதான அக்கறையையும் பொறுப்பு ணர்வையும் உறுதி செய்யும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர்ம துக்கூர்ராமலிங்கம் , எம்.எல்.ஏ.சின்னத்துரை, கவிஞர் கவிவர்மன், மாநில துணைத் தலைவர்கள் முத்துநிலவன், நீலா, கவிஞர்கள் தங்கம்மூர்த்தி, இளங்கோ உள்ளிட்டோ ர்பங்கேற்றனர். பொருளாளர் ஜெயபாலன் நன்றி கூறினார்.

    • டாஸ்மாக் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.
    • தெருவியாபார தொழிலாளர்கள் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயத்தை கைவிட வேண்டும், போக்குவரத்து கழக பணியிடங்களை தனியாரிடம் வழங்க கூடாது, டாஸ்மாக் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும், தெருவியாபார தொழிலாளர்கள் சட்டத்தை அமுல்படுத்துவது, நலவாரிய பதிவுகளை எளிமைபடுத்தி நிதி உதவிகளை அதிகப்படுத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் இன்று தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைெபற்றது.

    இதற்கு தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சந்திரகுமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், பொருளாளர்கோ விந்தராஜன், வங்கி ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர்அன்பழகன், அரசு போக்குவரத்து சங்க நிர்வாகிகள்தா மரைச்செல்வன், கஸ்தூரி, கே.சுந்தர பாண்டியன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச்செயலாளர்அ ப்பாத்துரை, சுப்பிரமணியன் , தங்கராசு, நுகர் பொருள் வாணிபகழக சங்க மாவட்ட நிர்வாகிகள் ஞானசேகரன், தியாகராஜன், உடல்உழைப்பு சங்க நிர்வாகிகள்பரிமளா, சுதா,கல்யாணி, மின்வாரிய சம்மேளன மாநில துணைத்தலைவர் பொன்.தங்கவேல், நிர்வாகிகள் நாகராஜன், லெட்சுமணன், கட்டுமான சங்க நிர்வாகிகள்செல்வம், சிவப்பியம்மாள், குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறே தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர்.

    அவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தினர். இதனால் ஏ.ஐ.டி.யூ.சி நிர்வாகிகள் தபால் நிலையம் முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது கோரிக்கைகளை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 45 பேரை போலீசார் கைது செய்தனர். இதேப்போல் கும்பகோணம், பட்டுக்கோட்டையிலும் ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    • உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட மெரினா கடற்கரையில் வாய்மை இயக்கம் மூலம் வாய்மை விருதுகள் வழங்கப்பட்டது.
    • இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசு பள்ளியில் இருந்து மாணவர்களுக்கு தனித்திறமையை ஊக்கப்படுத்தும் விதத்தில் பல போட்டிகள் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட மெரினா கடற்கரையில் வாய்மை இயக்கம் மூலம் வாய்மை விருதுகள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசு பள்ளியில் இருந்து மாணவர்களுக்கு தனித்திறமையை ஊக்கப்படுத்தும் விதத்தில் பல போட்டிகள் நடைபெற்றது.

    ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி ,நடனப் போட்டிகளும் சிறந்த சமூக சேவைக்கான விருது, கலை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றன.இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பரிசுகளைப் பெற்றார்கள், இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.

    அரசு பள்ளி மாணவர்களின் தனித்திறமைகளை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் .

    மேலும் பங்கேற்ற அரசு பள்ளி மாணவர்களை வாழ்த்தி பாராட்டி பரிசுகளை வழங்கினார். இதில் தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகம், மணிமாறன் மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார்.
    • கல்லூரியை இடமாற்றம் செய்ய வேண்டாம் என 30.09.2022-ல் வலியுறுத்தியுள்ளேன்.

    திருவாரூர்:

    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-

    2017-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் குடவாசலில் அரசு கலைக் கல்லூரி அமைப்பதற்கு உத்தரவிடப்பட்டு தற்போது கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    இதனை வேறு பகுதிக்கு மாற்றுவதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கல்லூரியை இடமாற்றம் செய்ய வேண்டாம் என 30.09.2022-ல் வலியுறுத்தியுள்ளேன்.

    இந்த கல்லூரியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவ மாணவிகள் சிறப்பாக கல்வி கற்று வருகின்றனர்.

    இக்கல்லூரி இடமாற்றம் செய்யப்படும் தகவல் அறிந்த அப்பகுதியினர் குடவாசலில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

    அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உறுதி அளித்ததன் பேரில் அந்த போராட்ட விலக்கிக் கொள்ளப்பட்டது.

    எனவே குடவாசலில் உள்ள அரசு கல்லூரியை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யாமல், அதே பகுதியிலேயே இடம் தேர்வு செய்து கல்லூரியை அமைக்க வேண்டும்.

    இக்கல்லூரி நன்னிலம் இரா.காமராஜ் எம்.எல்.ஏ. தனது தொகுதிக்கு கோரிக்கை வைத்து பெறப்பட்ட கல்லூரி ஆகும். எனவே அந்த தொகுதியிலேயே இக்கல்லூரி அமைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    இதற்கு பதில் அளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது, குடவாசல் அரசு கலைக் கல்லூரிக்கு இடம் பார்க்கும்பணி நடைபெற்று வருகிறது.

    உரிய இடம் கலெக்டரால் தேர்வு செய்யப்பட்டு, கல்லூரி கட்டிடம் கட்டப்படும்.

    இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

    • துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என சட்டசபையில் காமராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை.
    • இந்த ஆண்டு தொடக்கத்திலேயே விளத்தூர் துணைமின் நிலையம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    திருவாரூர்:

    நன்னிலம் சட்டமன்ற தொகுதி விளத்தூரில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என சட்டசபையில் காமராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார். தமிழ்நாடு சட்டசபையில் காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    நன்னிலம் சட்டமன்ற தொகுதி வலங்கைமான் ஒன்றியம் விளத்தூரில் துணை மின் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதற்கான நிலத்தையும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கியுள்ளனர்.

    நிலம் தேர்வு குறித்து உரிய அதிகாரிகளும் ஆய்வு செய்து விட்டனர்.

    கடந்த ஆண்டு துணை மின்நிலையம் அமைக்கப்பட்டுவிடும் என மின்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

    ஆனால் பணிகள் நடைபெறவில்லை.

    இந்த ஆண்டு தொடக்கத்திலேயே விளத்தூர் துணைமின் நிலையம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு இரா.காமராஜ் எம்எல்ஏ கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு பதில் அளித்த மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, நன்னிலம் சட்டமன்ற தொகுதி விளத்தூரில் 5.35 கோடி அளவில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

    விரைவில் ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

    • வீரவள்ளி, வாணரப்பேட்டை , திப்புராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் மின் விளக்குகள் எரிவதில்லை.
    • இதனால் அப் பகுதிகளில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வம்பாக் கீரப்பா ளையம், நேதாஜிநகர், உடையார் தோட்டம், பெரிய பள்ளி, வீரவள்ளி, வாணரப்பேட்டை , திப்புராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால் அப் பகுதிகளில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

    மேலும் சமூக விரோதிகள் சாலையில் செல்பவர்களிடம் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடு கின்றனர். ஆகையால் அப் பகுதியில் மின் விளக்குகள் அமைத்து அதற்கான சுவிட்சை அங்காளம்மன் கோவில் தெருவில் வைக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதனை தொடர்ந்து கென்னடி எம்.எல்.ஏ. மின் துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று நகர செயற்பொறியாளர் கனிய முதனிடம் இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தினார். அப்போது சாலையில் உள்ள அனைத்து மின் விளக்குகளையும், ஹைமாஸ் விளக்குகளையும் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

    இதையடுத்து உடனடியாக நடவடி க்கைகள் மேற்கொண்டு மின் விளக்குகளை சீரமை ப்பதாக செயற்பொறி யாளர் உறுதி அளித்தார். அப்போது தி.மு.க. மாநில இளைஞரணி ராஜி, மாநில மீனவரணி விநாயகம், லாரன்ஸ், ரகுமான் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக முறைப்படி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
    • விவசாயிகளுடைய பெயரில் வழங்கப்பட்ட கடன் தொகைக்கு வட்டி மானியம் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகில் உள்ள திருமண்டக்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் 24-வது நாள் தொடர் போராட்டம் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் தங்க.காசிநாதன் தலைமையிலும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் நாக.முருகேசன் முன்னிலையிலும் நடைபெற்றது.

    விவசாயிகள் தினத்தை முன்னிட்டு கரும்பு விவசாயிகள் தேசிய கொடியை கையில் ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் கலந்து கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி யில் கூறியிருப்பதாவது:-

    கரும்பு விவசாயிகள் போராட்டம் 24 நாட்களைக் கடந்தும் நடந்து வரும் வேளையில் மத்திய,மாநில அரசுகள் கவலை கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

    விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக முறைப்படி போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே இந்த ஆலையை நிர்வகித்து வந்த திருவாரூரான் சர்க்கரை ஆலை உரிமையாளர் கால்ஸ் நிறுவனத்திற்கு இந்த ஆலையை விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையினை பட்டுவாடா செய்யாமல் விற்று இருக்கிறார்.

    இந்த ஆலையை புதிதாக வாங்கிய நிறுவனமும் இவர்களுக்கு பட்டுவாடா செய்ய வேண்டிய சுமார் 100 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டு வருகிற இத்தொகையை இதுவரை தராமல் ஏமாற்றி வருவது வருத்தம் அளிக்கிறது.

    கரும்பு விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் மோசடியாக கடன் பெற்று இருப்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். குறிப்பாக ஆலை முதலாளிகள், வங்கி நிர்வாகத்தினர் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவேண்டும். மேலும் உடனடியாக உரிய விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டும்.

    விவசாயிகளுடைய பெயரில் வழங்கப்பட்ட கடன் தொகைக்கு வட்டி மானியம் வழங்க வேண்டும். ஆலை நிர்வாகத்திடம் இருந்து பெறவேண்டிய தொகையைப் பெற்று கரும்பு விவசாயிகளின் பிரச்சனைக்கு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இப்போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாதவன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி திருவாரூர் மாவட்ட செயலாளர் சித்தாடி ராஜா, உழவர் உரிமை இயக்க தஞ்சை மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி பாபநாசம் ஒன்றிய செயலாளர் தமிழ் வேந்தன், பாபநாசம் ஒன்றிய தலைவர் தமிழ் மாறன், திருவாரூர் மாவட்ட பொருளாளர் ஹென்றிதாஸ், குடவாசல் ஒன்றிய செயலாளர் சாலமன், குடந்தை ஒன்றிய முன்னணி பொறுப்பாளர் ஸ்ரீராம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்கு மார் ஊர் பெரியோர்களுடன் சந்தித்தார்.
    • அப்போது முத்தியால்பேட்டை தொகுதிக்கு வழங்கப்படும் குடிநீரில் அதிக தாது உப்புக்கள் கலந்துள்ளது.

    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்கு மார் ஊர் பெரியோர்களுடன் சந்தித்தார். அப்போது முத்தியால்பேட்டை தொகுதிக்கு வழங்கப்படும் குடிநீரில் அதிக தாது உப்புக்கள் கலந்துள்ளது. சாதாரணமாக குடிநீரில் 50 முதல் 150 றி.டி.எஸ். அளவுள்ள குடிநீரை பருகுவது மட்டுமே நமது உடல் நலத்திற்கு பாதுகாப்பானது.

    அதே குடிநீரில் றி.டி.எஸ். 1,000-க்கு மேல் இருந்தால் நிச்சயம் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும் என்று புகார் தெரிவித்தார். மேலும் முத்தியால்பேட்டை தொகுதி காட்டாமணி குப்பம் குடிநீர் மேல்நிலைத்தேக்க தொட்டிக்கு 6 இடங்களில் இருந்து கொண்டு வரப்படும் குடிநீரில் அதிக அளவு உப்பு உள்ளது. இந்த குடிநீர் முத்தியால்பேட்டை சோலை நகர், வ.உ.சி.நகர், மஞ்சினி நகர், அங்காளம்மன் நகர், விஸ்வநாதன்நகர் ஆகிய பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    எனவே , முத்தியால்பேட்டை தொகுதிக்கு வழங்கப்படும் குடிநீரை மாற்றி, குறைந்த தாது உப்புத்தன்மையுடைய, மக்களுக்கு பாதுகாப்பான தரமான குடிநீர் வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

    ×