search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ethazilali Sau"

    • புளியம்பழம் பறித்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கிளியாப் பட்டு சேரியந்தல் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 44) தொழிலாளி. இவர், நேற்று திருவண்ணாமலை- அவலூர்பேட்டை சாலையில் உள்ள புளியமரத்தில் ஏறி புளியம்பழம் உலுக்கி கொண்டிருந்தார்.

    அப்போது மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக் காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் தகவல் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு ப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×