என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Examination"

    • கண்புரை, குழந்தைகளின் கண் நோய், கிட்ட பார்வை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது.
    • கண் அறுவை சிகிச்சைக்காக 142 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா மதுக்கூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதுக்கூர் அரிமா சங்கம், மதுரை கண் அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தியது.

    அரிமா சங்கத் தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.

    இதில் கண்புரை, சக்கரை நோய், , குழந்தைகளின் கண் நோய், கிட்டப் பார்வை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது.

    முகாமில் 398 பேர் சிகிச்சை பெற்றனர். இதில் கண் அறுவை சிகிச்சைக்காக மதுரை கண் அரவிந்த் மருத்துவமனைக்கு 142 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இவர்களுக்கு உணவு, தங்குமிடம், போக்குவரத்து, கண் குறை அறுவை சிகிச்சை என எல்லாமே இலவசமாக வழங்கப்படுகிறது. முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

    இதில் அரிமா சங்கத் தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்டத்தில் இன்று நடந்த குரூப் -1 தேர்வு எழுத 18 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
    • குரூப் - 1 தேர்வை மாவட்டம் முழுவதும் 11,238 பேர் எழுதினர். 7,440 பேர் தேர்வு எழுத வரவில்லை.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் இன்று நடந்த குரூப் -1 தேர்வு எழுத 18 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்து இருந்தனர். மாவட்ட முழுவதும் 42 மையங்கள் அமைக்கப்பட்டு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடந்தது. காலை, 8:30 மணிக்குள் தேர்வர்கள் அனைவரும் மையங்களுக்கு வந்தனர். அவர்களின் நுழைவு சீட்டை சரிபார்த்து அலுவலர்கள் உள்ளே அனுப்பி வைத்தனர்.

    கண்காணிப்பு பணியில் 16 பறக்கும் படை குழுவினர் ஈடுபட்டனர். தேர்வு மையங்களில், தேர்வை வீடியோவில் பதிவு செய்தனர். தேர்வு எழுத செல்வோருக்கு சிறப்பு பஸ்கள், மையங்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க ஜெனரேட்டர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. குரூப் - 1 தேர்வை மாவட்டம் முழுவதும் 11,238 பேர் எழுதினர். 7,440 பேர் தேர்வு எழுத வரவில்லை.

    • முகாமில் 485 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.
    • 116 பேருக்கு கண் அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி கோகனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கமும், ஏவிஆர் தனலட்சுமி ஜுவல்லரி மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய மாபெரும் இலவசகண் சிகிச்சை முகாம் நடைபெ ற்றது.

    முகாமிற்குசங்கத் தலைவர் எஸ்பாண்டிய ராஜன் தலைமைவகித்தார்.

    மண்டல ஒருங்கிணைப்பாளர் வ.பாலசுப்பி ரமணியன், மாவட்டத் தலைவர்கள் எம்.நீலகண்டன், கே.இளங்கோ, சங்கச் செயலாளர் எம்.எஸ்.ஆறுமுகம், பொருளாளர் சங்கர்ஜவான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் தனலட்சுமி ஜுவல்லரி நிறுவனர் சுதர்சனவள்ளி பாலாஜி குத்து விளக்கு ஏற்றினார்.

    முகாமை கண்பார்வை மாவட்ட தலைவர் வி.விஜயகுமார் தொடங்கி வைத்தார்.

    மண்டலத் தலைவர்சிவகுமார், வட்டாரத் தலைவர் குருநாதன், கண் சிகிச்சை முகாமின் ஒருங்கிணை ப்பாளர் செல்வகுமார், ஏவிஆர் தனலட்சுமி பாலாஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    இந்நிக ழ்ச்சியில் கண் மருத்துவர்கள், செவிலியர்கள், சாசனச் செயலாளர் வ.ஜெய்சங்கர், சாசன பொருளாளர் மைதீன்பிச்சை, செய்தி தொடர்பாளர் கதிரவன், சபரி முத்துகுமார்உள்ளிட்ட உறுப்பினர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

    முகாமில் 485 பேருக்கு கண் பரிசோதனை செய்ய ப்பட்டது. அதில் 116 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • நரம்பியல், சர்க்கரை நோய் ஆகியவற்றிற்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை.
    • ஆங்கில மாதம் கடைசி சனிக்கிழமைகளில் கட்டணமில்லா தொடர் மருத்துவ முகாம் நடைபெறும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி மற்றும் 30-வது வார்டு கவுன்சிலர் யு.என். கேசவன் ஆகியோர் இணைந்து நடத்தும் கட்டணமில்லா தொடர் மருத்துவ முகாம் இன்று தஞ்சை மானம்புசாவடி கிருஷ்ணன் கோவில் முதல் தெரு ஸ்ரீஸ்வாம் நர்சரி பள்ளியில் தொடங்கியது.

    இந்த நிகழ்ச்சிக்கு 30-வது வார்டு கவுன்சிலர் யு.என். கேசவன் தலைமை தாங்கினார். முகாமை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி மங்கள தீபம் ஏற்றினார்.

    சௌராஷ்ட்ர கல்வி நிதி உதவி சங்கம் துணைத் தலைவர் ராமச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் சுப்பராமன், உமாபதி, ஆதிநாராயணன், ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த முகாமில் ரத்த அழுத்தம் பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை, எடை, உயரம், இ.சி.ஜி‌. கால் பாதம், நரம்பியல், சர்க்கரை நோய் ஆகியவற்றிற்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மேலும் மருந்துகள் வழங்கப்பட்டது.

    இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    பிரதி ஆங்கில மாதம் கடைசி சனிக்கிழமைகளில் கட்டணமில்லா தொடர் மருத்துவ முகாம் நடைபெறும் என்று கவுன்சிலர் யு.என். கேசவன் தெரிவித்தார்.

    இதில் 30-வது வார்டு பகுதி சபா குழு உமாபதி, ராமமூர்த்தி ,ஜெகநாதன், ரங்கராஜன், தஞ்சாவூர் ஏன்சியன்ட் சிட்டி லயன்ஸ் சங்கம் தலைவர் பாலகிருஷ்ணன், செயலர் சுந்தர், பொருளர் தமிழவதி, துணைத் தலைவர் துரை பத்மநாபன், சங்க நிர்வாகி ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கோவிந்தராஜு நன்றி கூறினார்.

    • தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வா ணையம், காவல்துறையில் 2-ம் நிலை காவலர், தீயணைப்பு வீரர், சிறைக்கா வலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நாளை நடத்துகிறது.
    • சேலம் மாவட்டத்தில் 19,532 ஆண்கள், 1430 பெண்கள் என 22 மையங்களில் 20,962 பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்.

    சேலம்:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வா ணையம், காவல்துறையில் 2-ம் நிலை காவலர், தீயணைப்பு வீரர், சிறைக்கா வலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நாளை நடத்துகிறது. சேலம் மாவட்டத்தில் 19,532 ஆண்கள், 1430 பெண்கள் என 22 மையங்களில் 20,962 பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்.

    இந்த எழுத்து தேர்வில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோதா கூறியுள்ளதாவது: -

    நாளை காலை 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 10 மணிக்கு மேல் வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வுக் கூட அனுமதிச் சீட்டினை கொண்டு வராதவர்கள் மையத்திற்குள் அனும திக்கப்பட மாட்டார்கள். அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறாத விண்ணப்ப தார்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இணைய தளத்தில் (www.tnusrb.tn.gov.in) இருந்து அழைப்பு கடித நகலை பதிவிறக்கம் செய்து, தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும். தேர்வுக் கூட நுழைவு சீட்டில் விண்ணப்பதாரரின் புகைப்படங்கள் இல்லா மல் இருந்தாலோ அல்லது தெளிவாக இல்லாமல் இருந்தாலோ விண்ணப்பதாரர் தங்களது புகைப்படத்தினை ஒட்டி அல்லது பி பிரிவு அதிகாரியிடம் சான்று

    ஒப்பம் பெற்று வரவேண்டும்.

    விண்ணப்பதாரர் புகைப்படத்துடன் கூடிய அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டையான ஆதார், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒரு அசலை கொண்டு வர வேண்டும். செல்போன், எலக்ட்ரானிக் வாட்ச், கால்குலேட்டர் மற்றும் எந்தவித எலக்ட்ரானிக் உப கரணங்களும் அறைக்குள் எடுத்து வரக்கூடாது. கருப்பு அல்லது நீலநிற பந்துமுனை பேனாகொண்டு வரவேண்டும். வேறு எந்த வித சொந்த உடமைகளை கொண்டு வர கூடாது. 22 தேர்வு மையங்களிலும் வீடியோ கேமராக்கள் மூலம் ஒளிப்பதிவு செய்து தேர்வு கண்காணிக்கப்படும்.

    இவ்வாறு போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.

    • சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஊரக வளர்ச்சித்துறை ஊராட்சித்துறையின் சார்பில் மருத்துவ முகாம் நடந்தது.
    • இதில் 400-க்கும் மேற்பட்ட அரசு பணியாளர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஊரக வளர்ச்சித்துறை ஊராட்சி துறையின் சார்பில் அரசு பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவமுகாம் நடந்தது. வட்டார அளவிலான அரசு அலுவலர்கள், ஊராட்சி அளவிலான பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்த முகாமில் பங்கேற்றனர். சிங்கம்புணரி யூனயின் துணைத்தலைவர் சரண்யா ஸ்டாலின் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். துணை இயக்குநர்கள் ராஜசேகரன், விஜயசந்திரன், ஒன்றிய கவுன்சிலர் உதயசூரியன் பெரிய கருப்பி முத்தன், சிவபுரிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி திரவியம், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், லட்சுமணராஜ், முதன்மை மருத்துவ அலுவலர் அயன்ராஜ், வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு முன்னிலை வகித்தனர். சிவகங்கை மாவட்ட விரிவாக்க கல்வியாளர் மதியரசு, துணை இயக்குநர் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சாகுல் அமீது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் 400-க்கும் மேற்பட்ட அரசு பணியாளர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. டாக்டர்கள் செந்தில்குமார், முத்தமிழ் செல்வி, செந்தில், சித்தா மருத்துவர் சரவணன், எஸ்.புதூர் மருத்துவ அலுவலர் சினேகா, நெற்குப்பை மருத்துவர் இளவதனா ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.

    • 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான ஓட்டு னர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வருகிற 3-ந் தேதி நாமக்கல் கவின் கிஷோர் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. 
    • மாத ஊதியம் ரூ.15,235 மொத்த ஊதியமாக வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 10 நாட்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படும்.

    நாமக்கல்:

    108 ஆம்புலன்ஸ் சேவைக்கான ஓட்டு னர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வருகிற 3-ந் தேதி நாமக்கல் கவின் கிஷோர் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. 

    ஓட்டுனர்களுக்கான அடிப்படை தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஆண், பெண் கலந்து கொள்ளலாம். உயரம் 162.5 சென்டிமீட்டர் இருக்க வேண்டும். வயது 24 முதல் 35 மிகாமல் இருக்க வேண்டும். இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓராண்டும் நிறைவு பெற்று இருக்க வேண்டும்.

    ஓட்டுனர்களுக்கான தேர்வு முறை எழுத்துத் தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு, மனிதவளத் துறை நேர்காணல், கண்பார்வை, மருத்துவம் சம்பந்தப்பட்ட தேர்வு சாலை விதிகளுக்கான தேர்வுகள் நடைபெறும். மாத ஊதியம் ரூ.15,235 மொத்த ஊதியமாக வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 10 நாட்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படும்.

    மருத்துவ உதவியாளர்க ளுக்கான தகுதி பி.எஸ்.சி.நர்சிங் அல்லது ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி. 12 -ம்வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும் லைப் சயின்ஸ் பட்டதாரி பிரிவில் பிஎஸ்சி ஜூவாலஜி, பாட்டனி, கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி இவைகளில் ஏதேனும் ஒன்று முடித்தி ருக்க வேண்டும். இவர்க ளுக்கு ஊதியம் ரூ.15 435 வழங்கப்படும்.

    வேலைவாய்ப்பு முகாமுக்கு வரும் விண்ணப்ப

    தாரர்கள் அசல் சான்றி தழ்களை அனைத்தையும் நேரில் கொண்டு வர வேண்டும் என நாமக்கல் 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • தமிழகம் முழுவதும் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் வருவாய் அலகில் காலியாக உள்ள கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு வருகிற 4-ந்தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது.
    • விண்ணப்பதாரர்கள் தங்களது அனுமதி சீட்டினை http://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-174 என்ற இணையதள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் வருவாய் அலகில் காலியாக உள்ள கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு வருகிற 4-ந்தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது.

    சேலம் மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 119 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பதா ரர்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் எழுத்துத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

    இணையவழியில் பதிவு செய்து ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பத்தில் பதிவு செய்த கைபேசி எண், மின்னஞ்சல் முகவ ரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன் மூலம் அனுமதிச்

    சீட்டினை விண்ணப்ப தாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள

    லாம் அல்லது கிராம உதவியா ளர் பணிக்கு இணைய வழியில் விண்ணப்பித்த இணையதள முகவரியான https://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-174 என்ற இணைய தளத்தினுள் சென்று பதிவு எண்ணினையும், கைப்பேசி எண்ணையும் பதிவு செய்து அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்ப

    தாரர்களுக்கு தபால் மூலம் தேர்வு அனுமதிச் சீட்டு அனுப்பி வைக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    இதே போல நாமக்கல் மாவட்டத்தில், கிராம உதவி யாளர் பணியிடம் நிரப்புவது தொடர்பாக, இணையதளம் வாயி லாக வரப்பெற்ற விண்ணப்பங்களை பரிசீ லனைசெய்து தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் கைபேசி எண்ணிற்கும், மின்னஞ்சல்

    முகவரிக்கும், குறுஞ்செய்தி யாக அனுப்பப்பட்டுள்ளது.

    விண்ணப்பதாரர்கள் தங்களது அனுமதி சீட்டினை http://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-174 என்ற இணையதள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இந்த தேர்வுக்காக கொல்லிமலை வட்டாட்சியர் அலுவலகம், நாமக்கல் மோகனூர் சாலை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, சேந்தமங்கலம் ரெட்டிபட்டி பாரதி மேல்நிலைப்பள்ளி, மோகனூர் அணியாபுரம் எஸ்.ஆர்.ஜி. பொறியியல் கல்லூரி, பரமத்திவேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி, வேலூர், குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி, கே.எஸ்.ஆர். தொழில்நுட்ப கல்லூரி. கே.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

    தேர்வு அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டவர்கள், 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்குள் தங்க ளுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு அனுமதி சீட்டுடன் வரவேண்டும். தேர்வு எழுத கருப்புமை கொண்ட பால்பாயிண்ட் பேனாவை மட்டுமே விண்ணப்பதாரர்கள் பயன்ப டுத்த வேண்டும். அனுமதி சீட்டு மற்றும் கருப்புமை கொண்ட பால்பாயிண்ட் பேனாவை தவிர வேறு எந்த பொருட்களையும் தேர்வு அறைக்குள் கொண்டு வரக்கூடாது. செல்போன், புத்தகங்கள், கைப்பைகள் மற்றும் வேறு எந்த ஒரு மின்னணு சாதனங்களையும் தேர்வு மையத்திற்குள் கொண்டுவரக் கூடாது என்று மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்து உள்ளார்.

    • ஸ்கில் டெஸ்ட் என்று சொல்லக்கூடிய திறன் தேர்வு இந்த மாதம் 15 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.
    • தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தலாம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் தியாகி நாராயணசாமி நகராட்சி மேல் நிலைப்பள்ளியில் கிராம உத வியாளர் பதவிக்கான தேர்வு நடைபெற்ற தேர்வு மையத்தை கலெக்டர் இரா. லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வுக்குப் பின் கலெக்டர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணைப்படி தமிழக முழுவதும் கிராம நிர்வாக உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடை பெறுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம உதவியாளர் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 29 பதவிகளுக்கு எழுத்து தேர்வு நடைபெறுகிறது.

    2119 நபர்கள் தேர்வு எழுதி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள நான்கு தாலுக்காகளிலும் தேர்வு நடைபெற்றது.

    அதில் தமிழில் படிப்பதை எழுத வேண்டும். ஆங்கிலத்தில் படிப்பதை எழுத வேண்டும். ஸ்கில் டெஸ்ட் என்று சொல்லக்கூடிய திறன் தேர்வு இந்த மாதம் 15 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

    விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் அலை பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இந்த திறன் தேர்வு வட்டாட்சியர் தலைமை குழு அமைத்து அதன் கீழ் கமிட்டி அமைத்து நடைபெற உள்ளது.

    இதில் வந்து தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தலாம். என கலெக்டர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

    இந்த ஆய்வின் போது மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, தாசில்தார் மகேந்திரன், சமூக நலத்துறை தாசில்தார் தையல்நாயகி, தலைமை இடத்து துணை வட்டாச்சியர் தெட்ஷிணாமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்

    • மத்திய அரசால் நடத்தப்படும் பிரதமர் யாசவி தேர்வு தேசிய அளவில் நடைபெற்றது.
    • ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் சுபாஷ் கண்ணன் பொது பிரிவில் தமிழ்நாடு அளவில் 18-வது இடத்தையும், பொருளாதார அளவில் பின்தங்கிய பிரிவில் பூஜா என்ற மாணவி 5 -வது இடத்தையும் பிடித்தனர்.

    சங்கரன்கோவில்:

    மத்திய அரசால் நடத்தப்படும் பிரதமர் யாசவி தேர்வு தேசிய அளவில் நடைபெற்றது. இந்த தேர்வில் 9 மற்றும் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தமிழ்நாடு அளவில் 9-ம் வகுப்பில் 170 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் 9-ம் வகுப்பில் தேர்வெழுதிய ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் சுபாஷ் கண்ணன் பொது பிரிவில் தமிழ்நாடு அளவில் 18-வது இடத்தையும், பொருளாதார அளவில் பின்தங்கிய பிரிவில் பூஜா என்ற மாணவி 5 -வது இடத்தையும் பிடித்தனர். தமிழ்நாடு அளவில் 11-ம் வகுப்பில் 251 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் 20 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக வித்யா என்ற மாணவி பொது பிரிவில் தமிழ்நாடு அளவில் 18-வது இடத்தையும், முத்துலட்சுமி என்ற மாணவி பொருளாதார அளவில் பின்தங்கிய பிரிவில் 15-வது இடத்தையும் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற 22 மாணவ, மாணவிகள் பிரதமர் யாசவி உதவித்தொகைக்கு பெற தகுதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் பெற்றோர்கள், பயிற்சி அளித்த ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • ஆயுதப்படை மைதானத்தில் அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
    • ஊர்க்காவல் படையில் திருநங்கை தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 36 பணியிடங்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் உடற்தகுதி தேர்வும், சான்றிதழ் சரிபார்ப்பும் நடந்தது.

    இதில் தகுதி அடிப்படையில் 34 ஆண்கள், ஒரு பெண், ஒரு மூன்றாம் பாலினத்தவர்(திருநங்கை சிவன்யா) என மொத்தம் 36 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இவர்களுக்கு பணி நியமன ஆணைகளை போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா வழங்கினார். பணி நியமன ஆணை பெற்றவர்களுக்கு
    தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    தஞ்சை மாவட்ட ஊர்க்காவல் படையில் திருநங்கை தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிகழ்ச்சியில் ஊர்க்காவல் படை உதவி சரக தளபதி செந்தில்குமார், மண்டல தளபதி சுரேஷ், துணை மண்டல தளபதி மங்களேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    • சுமார் ஒரு லட்சத்து 18 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
    • 11-ம் வகுப்பு மாணவி அபிநயா 100-க்கு 97 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம்.

    வேதாரண்யம்:

    தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் ஒரு லட்சத்து 18 ஆயிரம் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

    அதில், நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் தென்னம்புலம் கிராமத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி அபிநயா 100-க்கு 97 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.

    இதனை, யாதவர் ஆலோசனை மையம் சார்பில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மாணவிக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டி திருவள்ளுவர் உருவம் பொறித்த கேடயம், திருக்குறள் புத்தகம் மற்றும் ரொக்க பரிசு வழங்கினர்.

    இதில் யாதவர் ஆலோசனை மைய மாநில தலைவர் ஜம்புலிங்கம், மகளிர் பிரிவு ஜெயமீனாகுமாரி, சித்ரா, மாநில பொது செயலாளர் ராகவன், நாகை மாவட்ட அமைப்பாளர் வீரையன், மாவட்ட பொருளாளர் ராமநாதன், உறுப்பினர்கள் ராமமூர்த்தி துரை, ரவி, ஒன்றிய கவுன்சிலர் உஷாராணி, கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமரன், அஞ்சலக பணியாளர் சௌந்தராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×