search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "expensive in"

    • பரவலாக மழை பெய்ததன் காரணமாக சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது.
    • இதன் காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திராவில் இருந்தும் தினமும் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.

    இந்நிலையில் தமிழகத்தில் பரவலாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்ததால் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு சில காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக சின்ன வெங்காயம் விலை 3 மடங்கு உயர்ந்து விட்டது. இதுபோல் தக்காளி விலையும் உயர்ந்து வருகிறது.

    ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டிற்கு தினமும் கம்பம், ஒட்டன்சத்திரம், தாளவாடி, பல்லடம், திருப்பூர், கொடுமுடி போன்ற பகுதிகளில் இருந்து 15 டன் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வந்தது.

    இந்நிலையில் பரவலாக மழை பெய்ததன் காரண மாக சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது. இன்று காலை மார்க்கெட்டிற்கு 5 டன் மட்டுமே சின்ன வெங்காயம் விற்பனைக்கு வந்து இருந்தது.

    இதன் காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்ற சின்ன வெங்காயம் இன்று ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனையானது.

    அதேசமயம் பெரிய வெங்காயத்தின் விலை வழக்கம் போல் 30 முதல் 40 ரூபாய்க்கு விற்பனையானது.

    இதே போல் கடந்த சில நாட்களாக தக்காளி விலை குறைந்து வந்த நிலையில் மழை காரணமாக வரத்து குறைந்து மீண்டும் விலை உயர்ந்துள்ளது. வ.உ.சி. மார்க்கெட்டிற்கு தினமும் 7 ஆயிரம் பெட்டி தக்காளிகள் வரத்தாகி வந்த நிலையில் இன்று 3 ஆயிரம் தக்காளி பெட்டிகள் மட்டுமே வரத்தாகியுள்ளது.

    இதனால் கடந்த வாரம் ரூ.25 முதல் 30 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.50 வரை விற்பனையானது. இன்று தாளவாடி, ஆந்திரா குப்பம் போன்ற பகுதியில் இருந்து தக்காளி விற்பனைக்கு வந்தது. ஆந்திரா தக்காளி ஒரு கிலோ ரூ.40 முதல் 45 வரையும், தாளவாடி தக்காளி ஒரு கிலோ ரூ.50-க்கும் விற்பனையானது.

    ×