என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "factory"

    • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. முயற்சியால் ராஜபாளையத்தில் மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது.
    • ராஜபாளையம் தொகுதி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியடைவார்கள்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மானியக்கோரிக்கை விவாதம் நடந்தது. ராஜபாளையம் தொகுதியில் விவசாயிகளின் 50 வருட கோரிக்கையான மாம்பழம் பதப்படுத்துதல் மற்றும் மாழ்பழக்கூழ் தொழிற்பேட்டை, தேங்காய் கொள்முதல் நிலையம் மற்றும் சிறு-குறு நடுத்தர தொழிற்பேட்டை அமைக்க கோரிக்கை விடுத்திருந்தேன்.

    இதையடுத்து முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி அமைச்சர் அன்பரசனால் ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர். அரசு மருத்துவமனை எதிர்ப்புறம் சின்மயா பள்ளி செல்லும் சாலையில் தென்காசி மெயின்ரோட்டில் இருந்து சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவில் புதிய தொழிற்பேட்டை அமைய உள்ளது என்ற அறிவிப்பு சட்டபேரவையில் வெளியிடப்பட்டுள்ளது.

    இதை ராஜபாளையம் தொகுதி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ராஜபா ளையம் பகுதியை சுற்றியுள்ள விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற காரணமாக இருந்து தொடர்ந்து வலியுறுத்திய வருவாய்த்துறை அமைச்சர் , தொழில்துறை அமைச்ச ருக்கு எனது சார்பிலும், விவசாயிகளின் சார்பிலும் ராஜபாளையம் தொகுதி பொதுமக்களின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.மானிய கோரிக்கையில் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் அன்பரசன், அந்த துறையின் நிர்வாக இயக்குநர் மதுமதி ஆகியோரை ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் என்ற முறையில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பேராவூரணியில் தென்னை சார்ந்த தொழிற்சாலை அமைக்க வேண்டும்.
    • சத்துணவு திட்டத்தில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் ஈஸ்ட் கோஸ்ட் தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு சங்கத் தலைவர் காந்தி தலைமை வகித்தார்.

    கௌரவ தலைவர் வேலுச்சாமி, துணை தலைவர் கோவிந்தசாமி, பொருளாளர் பன்னீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயலாளர் ராம்குமார் வரவேற்றார்.

    கூட்டத்தில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரூபாய் 25க்கு விற்ற தேங்காய் தற்போது ரூபாய் பத்துக்கு கீழ் விற்கப்படுகிறது.

    உற்பத்தி செலவுக்கு கூட கட்டுபடி ஆகாத விலையில் தேங்காய் விற்பதால், விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    பொதுமக்கள் அனைவரும் சமையல் உள்ளிட்ட அனைத்து தேவைக்கும் தேங்காய் எண்ணையை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

    பேராவூரணி தொகுதி சென்னைக்கு புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தும், புவிசார் குறியீடு பெறுவதற்கு ஆதாரங்களை திரட்டி தருவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    சத்துணவு திட்டத்தில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும். அனைத்து அங்காடிகளிலும் தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தென்னை சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், நாம் உழவர் இயக்க தலைவர் பிரபு ராஜா, மதுரை வேளாண் கல்லூரி முன்னாள் முதல்வர் வைரவன், தென்னை உற்பத்தியாளர் சங்க மாநிலச் செயலாளர் அறந்தாங்கி செல்லத்துரை, வடகாடு மிளகு உற்பத்தி அறிமுக விவசாயி பாலுச்சாமி, கீரமங்கலம் நக்கீரர் தென்னை மைய நிறுவனர் காமராசு, திருச்சி வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் இலக்குவணன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

    முடிவில் இணைச் செயலாளர் முகமது சமீர் நன்றி கூறினார்.

    • தொழிற்சாலை சட்ட திருத்தத்தை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தொழிற்சாலை சட்ட திருத்தத்தை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி தமிழ் மாநில குழு சார்பில் இன்று காலை தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம், அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாநிலச் செயலாளர் தில்லைவனம் தலைமை வகித்தார்.

    தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தினை தொடக்கி வைத்து பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்ப ட்டன. முடிவில் ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட தலைவர் சேவையா ஆர்ப்பாட்டத்தினை நிறைவு செய்து பேசினார்.

    இதில் மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், பொருளாளர் கோவிந்தராஜன், விவசாய தொழிலாளர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், பட்டு கைத்தறி சங்க மாநில தலைவர் மணிமூர்த்தி, மின்வாரிய சம்மேளன மாநிலத் துணைத் தலைவர் பொன்.தங்கவேல், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் அப்பாத்துரை, கும்பகோணம் அரசு போக்குவரத்து சங்க பொதுச்செயலாளர் தாமரைச் செல்வன், கட்டுமான சங்க மாவட்ட துணைத்தலைவர் செல்வம், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் செந்தில்நா தன், உடலுழைப்பு சங்க மாவட்ட பொருளாளர் சுதா, உழைக்கும் பெண்கள் அமைப்பு செயலாளர் பரிமளா, டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் கோடீஸ்வரன், நுகர்பொருள் வாணிபக்கழக சங்க மாவட்ட பொருளாளர் தியாகராஜன், தஞ்சை நகர தொழிற்சங்க தலைவர் பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சாரல் அக்ரோ ப்ராடக்ட் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலை மத்திய, மாநில அரசு மானியத்தில் இயங்கி வருகிறது.
    • கலெக்டர் ரவிச்சந்திரன் தொழிற்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள பூலாங்குளத்தில், மத்திய, மாநில அரசு மானியத்தில் சாரல் அக்ரோ ப்ராடக்ட் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையை புதிய தொழில் நுட்பத்தில் மேம்படுத்துவதற்காக அதன் நிர்வாக இயக்குனர் கே.ஆர். பால்துரை தலைமையில் பங்குதாரர்கள், தென்காசி கலெக்டரை சந்தித்து மனு அளித்திருந்தனர்.

    இந்நிலையில் கலெக்டர் ரவிச்சந்திரன் அந்த தொழிற்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது தவிட்டில் இருந்து எண்ணெய் தயாரிக்கும் முறைகள் குறித்தும், புதிய தொழில் நுட்பத்தில் மேம்படுத்துவது குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

    நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குனர் கே.ஆர். பால்துரை, பங்குதாரர்கள் வெண்ணிநாடார், ராஜன், தொழில்மைய மேலாளர் மாரியம்மாள் மற்றும் கே.ஆர்.பி. இளங்கோ, சஜனா, பரமசிவன், அலுவலர்கள் சேகர், தட்சணா மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தீக்காயங்களுடன் ஐந்து பேர் மருத்துவுமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இன்று திடீரென தீ விபத்து ஏறு்பட்டது. அம்பர்நாத் எம்ஐடிசியில் உள்ள தொழிற்சாலையில் நைட்ரிக் ஆசிட் டேங்க் அருகே மாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக குடிமை அதிகாரி தெரிவித்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து அம்பர்நாத், ஆனந்த் நகர் மற்றும் உல்லாஸ் நகரில் இருந்து தலா இரண்டு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சுமார் ஒன்றரை மணி நேரத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர் சூர்யகாந்த் ஜிமாட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், தீக்காயங்களுடன் ஐந்து பேர் மருத்துவுமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தானே குடிமை அமைப்பின் பேரிடர் கட்டுப்பாட்டு பிரிவு தலைவர் யாசின் தத்வி கூறினார்.

    மேலும், வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்வேறு கோரிக்கைகளை வைத்து கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் கல்குவாரி மற்றும் கிரஷர் தொழிற்சாலைகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

    அரசின் விதிகளுக்குட்பட்டு இயங்கிவரும் கல்குவாரிகள் தங்கள் உரிமைத்தை புதிப்பிக்க விண்ணப்பிக்கும் போது பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. 2014 ஆண்டிற்கு முன்பு இருந்த பழைய நடைமுறையிலேயே தற்பொழுதும் இயங்க அனுமதி வழங்க வேண்டும். மேலும் 5 ஹெக்டேருக்கு மேல் குவாரிகள் அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தி அதன்பின் உரிமம் வழங்கப்படுகிறது. இதில் 5 ஹெக்டேர் என்பதை 25 ஹெக்டேராக உயர்த்தி அனுமதி வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வைத்து கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆகவே கல்குவாரி மற்றும் கிரஷர்கள் தொழிற்சாலை உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலனை செய்து தமிழக அரசு விரைந்து அவற்றை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கான்கிரீட் வேலை நடந்து கொண்டிருக்கும்போது விபத்து
    • பீகார் மாநில தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

    தெலுங்கானா மாநிலத்தின் சூர்யபெட் மாவட்டத்தில் மெல்லச்செருவு கிராமத்தில் உள்ளது "மை ஹோம்" சிமென்ட் தொழிற்சாலை.

    இன்று அந்த தொழிற்சாலையில் அங்கு நடைபெற்று வந்த கான்கிரீட் அமைக்கும் பணியின்போது திடீர் விபத்து ஏற்பட்டது. கான்கிரீட் கலவையை எடுத்துச்செல்லும் இரும்பு குழாய்கள் உடைந்து ஒன்றன்பின் ஒன்றாக சரிந்தது. இதில் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இதில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தெரிகிறது. மேலும் சிலர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

    தகவலறிந்து விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், காயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பத்திரமாக அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    நிறுவனத்தில் திடீரென ஏற்பட்ட விபத்தின் காரணமாக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இடிபாடுகளில் இருந்து தற்போது வரை 3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவரின் சடலங்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் சிலர் உள்ளே சிக்கிக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

    பலியானவர்கள் உ.பி. மற்றும் பீகார் மாநிலங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் கண்டுள்ள காவல்துறையினர், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மை ஹோம் நிர்வாகம், எந்த கருத்தும் கூறவில்லை. வேறு எந்த விவரங்களும் வெளியாகவில்லை.

    • பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • சாதனங்கள் பழுதடைந்தும், சரியான முறையில் சுத்தம் செய்யாமலும் இருந்தது.

    கடலூர்:

    கடலூர் சிப்காட் பகுதியில் தனியார் தொழிற்சாலைகளை தமிழ்நாடு சட்டமன்றத் பேரவையின் உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ தலைமையில் உறுப்பினர்கள் எம்.எல்.ஏ க்கள் மோகன், ராமலிங்கம், விஸ்வநாதன், சக்கரபாணி, அருள் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ தலைமையில் உறுப்பினர்கள் மற்றும் கலெக்டர் அருண் தம்புராஜ், அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

    அப்போது தொழிற்சாலை வளாகத்தில் சென்று பார்த்தபோது, அங்கிருந்த சாதனங்கள் பழுதடைந்தும், சரியான முறையில் சுத்தம் செய்யாமலும் விபத்து ஏற்படுத்தக்கூடிய நிலையில் இருந்து தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகள், இந்த பகுதியில் பெரிய தொழிற்சாலையான இங்கு உரிய பராமரிப்பு இல்லாமல் சாதனங்களை பயன்படுத்தி வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஏதேனும் திடீர் விபத்து ஏற்பட்டால் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள மக்களின் நிலை என்ன ஆகும் என கேட்டு எச்சரிக்கை விடுத்தனர். இது மட்டும் இன்றி இது போன்ற அஜாகரதியான சூழ்நிலையில் தொழிற்சாலை இயங்கலாமா? என சரமாரியாக கேள்வியும் எழுப்பினார்கள்.

    மேலும் தொழிற்சா லைகளை சரியான முறையில் பராமரித்து உயிர் பலி ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கையும் விரைவில் ஏற்படுத்த வேண்டும். இதனை உறுதி மொழி குழுவினரால் மீண்டும் சில நாட்களில் திடீர் ஆய்வு செய்யப்படும். அப்போதும் இது போன்ற நிலை நீடித்தால் அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். மேலும் தொழிற்சாலை வளாகத்தில் புதிதாக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் ஏதேனும் தொழிற்கூடங்கள் அல்லது வேறு ஏதேனும் தொடங்கினால் உரிய அனுமதி பெற்று தொடங்க வேண்டும் என்று கூறினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் அனைத்திலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது.
    • தொழில் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டியவர்கள் தெருவில் வந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

    கோவை:

    கோவை இடையர்பாளையம், கணபதி, குறிச்சி, சிட்கோ, காளப்பட்டி, நீலாம்பூர் உள்பட மாவட்டம் முழுவதும் கிரைண்டர், மிக்சி உதிரி பாகங்கள், வாகன உதிரிபா கங்கள் உள்பட பல்வேறு உதிரி பாகங்கள் தயாரிக்கக்கூடிய 50 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த தொழிற்சாலைகளில் இருந்து தயாராகும் பொருட்கள் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மூலப்பொருட்கள் விலை உயர்வு, பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட பல இன்னல்களை தொழில் துறையினர் சந்தித்து வருகின்றனர்.

    இந்நிலையில் மின் கட்டணமும் உயர்ந்துள்ளதால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர். மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோவை மாவட்ட தொழில்துறையினர் தொடர்ந்து பல்வேறு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    சமீபத்தில் கூட சென்னை சென்று, அமைச்சர்களை சந்தித்து பேசினர். ஆனாலும் தொழில் முனைவோரின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. இதையடுத்து மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று கோவை மாவட்டத்தில் உள்ள சிறு, குறு தொழிற்சாலைகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடந்தது. கோவை இடைய ர்பாளையம், கணபதி, குறிச்சி, சிட்கோ, காளப்பட்டி, நீலாம்பூர் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் அனைத்திலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது. அங்கு பணியாற்றியவர்களும் கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.

    மேலும் கோவை மாவட்ட தொழில் முனைவோர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்தபடி ஊர்வலமாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு கலெக்டரை சந்தித்து தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    இதேபோல் கோவை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்களிலும் இன்று கருப்பு கொடியேற்றப்பட்டு போராட்டம் நடந்தது.

    இதுதொடர்பாக தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்ட மைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் 13 ஆண்டுகளுக்கு பிறகு இன்று 50 ஆயிரம் தொழில் நிறுவனங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. அன்று மின்தடைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம், இன்று மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்று வருகிறது.

    நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். உச்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். மேற்கூரை சூரியஒளி ஆற்றல் உற்பத்திற்கு நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

    12 கிலோ வாட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 3பி-யிலிருந்து 3ஏ1 பிரிவின் கீழ் மாற்றுதல், 2 ஆண்டுகளுக்கு மின் கட்டண உயர்வை கைவி டுதல் என்பன 5 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. இதில் 12 கிலோவாட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 3பியில் இருந்து 3ஏ1 பிரிவின் கீழ் மாற்றுதல் என்ற ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் அரசு நிறைவேற்றியுள்ளது.

    மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி எங்கள் கூட்டமைப்பில் உள்ள 300-க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் சார்பில் இன்று கோவை உள்பட தமிழகம் முழுவதும் தொழில் நிறுவனங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.

    தொழில் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டியவர்கள் தெருவில் வந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அடுத்த கட்டமாக சென்னையில் வருகிற 16-ந் தேதி 25 ஆயிரம் தொழில் முனைவோர் பங்கேற்கும் மாபெரும் உண்ணாவிரத போரா ட்டம் நடத்தப்படும். எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • அங்கு வைத்திருந்த கயிறு, பஞ்சு கட்டுகள், காயர் பித் கேக்குகள் அனைத்தும் எரிந்து சாம்பலானது.
    • எரிந்து சாம்பலான பொருட்களின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி நாட்டாணிக்கோட்டை பகுதியில் ஆர்ஜி ஃபைபர் என்ற பெயரில் தேங்காய் மட்டையிலிருந்து பஞ்சு,கயிறு தயாரிக்கும் நிறுவனம் உள்ளது.வழக்கம் போல் நேற்று மாலை வேலை முடித்து சென்றார். இந்நிலை யில் இன்று அதிகாலை எதிர்பாராத விதமாக திடீரென தீப்பற்றியதில் நிறுவனத்தில் இருந்த தளவாட சாமான்கள் , தயாரித்து வைத்திருந்த கயிறு, பஞ்சுகட்டுகள், காயர் பித் கேக்குகள் அனைத்தும் எரிந்து சாம்பலானது.

    மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்ப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் உடனடியாக தீயை அணைத்து, மேலும் பரவாமல் தடுத்தனர்.எரிந்து சாம்பலான பொருட்களின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது .

    • வருமான வரியை கட்டவில்லை என்று எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
    • வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர்:

    சென்னை ேவப்பேரியில் உள்ள தனியார் நிறுவனம், பூங்கா நகரில் உள்ள இன்னொரு நிறுவனம் மற்றும் மாதவரம் பூங்காநகர் ஆகிய இடங்களில் உள்ள மேலும் 2 தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றை குறிவைத்து வருமான வரித்துைற அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இரும்பு பொருட்கள் மற்றும் மருந்து ரசாயனம் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்யும் இந்த 4 நிறுவனங்களிலும் முறை யாக வருமான வரியை கட்ட வில்லை என்று எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    சென்னை அண்ணா சாலையில் உள்ள அடுக்கு மாடி வணிக வளாகம் ஒன்றில் 5-வது மாடியில செயல்பட்டு வரும் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் 10-க்கும் மேற்பட்ட வரு மான வரித்துறை அதிகாரி கள் சோதனை நடத்தினர். அந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஆராய்ச்சி பிரிவு அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. சென்னை எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலை யில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றுள்ளது. இதுபோன்று சவுகார் பேட்டையில் உள்ள வணிக வளாகத்திலும், மாதவரம் நடராஜன் சாலையில் உள்ள குடோன் மற்றும் அலுவலகத் திலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். சவுகார் பேட்டை பகுதியில் மட்டும் மொத்தம் 5 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

    இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான தொழிற்சாலை கடலூர் - சிதம்பரம் சாலையில் உள்ள சிப்காட் வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்த மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள். கடலூர் குடிகாடு பகுதியில் சிப்காட்டில் உள்ள இந்த மருந்து தொழிற்சாலைக்கு சென்னையில் இருந்து 4 வாகனங்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர் அதிரடி இன்று காலையில் வந்தனர். தொழிற்சாலைக்குள் சென்ற அதிகாரிகள் அங்குள்ள அலுவலகம் மற்றும் தொழிற்சாலை மற்றும் ஸ்டோர் ரூம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். சோதனையின் முடிவில் தான் ஆவணங்கள் ஏதாவது கைப்பற்றபட்டதா என்பது தெரிய வரும். தனியார் மருந்து கம்பெனியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் சம்பவம் கடலூர் சிப்காட் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கலெக்டரின் உத்தரவின் பேரில் இப்பணி அப்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
    • பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்தனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ளது ராஜபாளையம் கிராமம். இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தார் தொழிற்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்கு ராஜபாளையம் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    தொழிற்சாலையால் விலை நிலங்கள் பாதிப்பு, நிலத்தடி நீர்மட்டம், சுற்றுச் சூழல் பாதிப்பு. சுவாசக் கோளாறு உள்ளிட்ட ஏற்படும் பிரச்சினைகள் ஏற்படும் என்று கூறி மாவட்ட கலெக்டரில் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து கலெக்டரின் உத்தரவின் பேரில் இப்பணி அப்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் அப்பகுதியில் மீண்டும் தார்தொழிற்சாலை அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் ராஜ பாளையம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் தொழிற்சாலை அமைப்பதற்கான பணியைதடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் பெரியபாளைம் போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர் தனபால் உள்ளிட்ட வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    ×