என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fishermens"

    • பிரச்சினையை முடித்து வைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்ட வில்லை.
    • தமிழ்நாடு பிரச்சினை என்பது போல கண்டும் காணாமல் இருந்து வருகிறார்கள்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வேளாண்மைக்கு என நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது தமிழ்நாடு அரசின் சிறப்புக்குரிய ஒரு திட்டமாகும்.

    கரும்பு விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படக் கூடிய ஒன்று தான். இந்த நிதிநிலை அறிக்கையில் அது தொடா்பான அறிவிப்பு இல்லை என்பது உண்மை தான். ஆனால் மானியக் கோரிக்கையின் போது, கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறை வேற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது.

    தமிழக முதலமைச்சரும், துறைச் சாா்ந்த அமைச்சரும் விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன்.

    விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனும் கோரிக்கையில் நியாயம் உள்ளது. அதை அரசு பரிசீலனை செய்து தள்ளுபடி செய்யும் என நம்புகிறேன்.

    வேளாண் துறைக்கு மட்டு மல்ல கூட்டுறவுத்துறை, ஆவின் துறை உள்ளிட்ட 9 துறை இருக்கிறது. எல்லா வற்றிற்கும் சேர்த்து தான் 45 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    வேளாண் பட்ஜெட் என்றாலும் கூட பல நிதி வரவு செலவு அறிக்கை, நிதி பற்றாக்குறை இருக்கதான் செய்கிறது. இவற்றை யெல்லாம் கருத்தில் கொண்டு மானிய கோரிக்கையின் போது பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம், அரியலூர் மாவட்டத்தில் முந்திரி வளர்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்க நிறைவேற்ற முன்வர வேண்டும்.

    இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடித்து வருவது தொடர் கதையாக நீடிக்கிறது. தமிழ்நாடு அரசும் தொடர்ந்து பல தீர்மானங்களை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறது.

    மத்திய அரசு இந்த பிரச்சினையை முடித்து வைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்ட வில்லை. இது என்னவோ தமிழ்நாடு பிரச்சினை என்பது போல கண்டும் காணாமல் இருந்து வருகிறார்கள்.

    மத்திய அரசு நினைத்தால் தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைக்க முடியும். அந்த அளவிற்கு வலிமையுள்ள அரசாக இருக்கிறது. இலங்கை அரசோடும் இணக்கமான அரசாகவும் இருக்கிறது.

    தமிழ்நாட்டு மக்கள் மற்றும் மீனவா்களின் பிரச்சனைகளில் மத்திய அரசு ஒருதலைப்பட்சமாக அணுகுவதே பிரச்சனைகள் தொடா்வதற்கு காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுவை கடற்கரை ஒழுங்குமுறை சட்டத்தில் மீனவர்களுக்கு என்ன வேண்டும் என அனைத்து மீனவ சங்கங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • மீனவர்களின் வாழ்விடங்களும் வாழ்வாதார இடங்களும் பறிபோகும் நிலை உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரை ஒழுங்குமுறை சட்டத்தில் மீனவர்களுக்கு என்ன வேண்டும் என அனைத்து மீனவ சங்கங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    புதுவை அனைத்து மீனவ சங்கங்களின் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கூட்டத்துக்கு பின்னர் அனைத்து மீனவ சங்க நிர்வாகிகள் சந்திரன், ஆறுமுகம், ராஜ்குமரன், மாசிலாமணி, பெரியாண்டி, குமார், தேவநாதன், செல்வகுமாரி மற்றும் வீரமணி ஆகியோர் கூட்டம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசாங்கம் கடற்கரை ஒழுங்குமுறை சட்டத்தின் மூலமாக கடலிலும் கடற்கரையிலும் பல திட்டங்களுக்கு இடம் பிடிக்க முயற்சிக்கிறது. இதனால் மீனவர்களின் வாழ்விடங்களும் வாழ்வாதார இடங்களும் பறிபோகும் நிலை உள்ளது. ஏற்கனவே செயல்படுத்தப் பட்ட திட்டங்களினால், கடற்கரை கிராமங்களில் இடப்பற்றாக் குறை ஏற்பட்டு எதிர்கால மீனவர்களின் வாழ்வு கேள்விக் குரியாகியிருக்கிறது.

    எனவே மீனவர்களுக்கு கடலும் மிச்சம் இருக்கிற கடற்கரையும் அப்படியே வேண்டும், அதில் ஒரு பிடி மண்ணைக் கூட அரசாங்கமோ தனியாரோ எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த மண்ணும் கடலும் அவர்களுடைய அடுத்த தலைமுறைகளுக்கு வேண்டும். எனவே தற்போது வெளியிடப் போகும் கடற்கரை ஒழுங்கு முறை திட்டத்தில், கடலில் இருந்து ஆயிரம் மீட்டர் தூரத்திற்குள் உள்ள அத்தனை நிலப் பரப்பும் மீனவர்கள் வாழ்விடங்களுக்கும், தொழில் செய்வதற்கும் மட்டுமே ஒதுக்கப் படவேண்டும். கடல் முழுக்க மீன் பிடி தொழிலுக்கு மட்டுமே பயன் படுத்தப் பட வேண்டும். இந்த இடங்களில் எந்த ஓரு அரசு மற்றும் தனியார், வர்த்தக அல்லது சுற்றுலாத் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.

    வெளியிட இருக்கும் கடற்கரை ஒழுங்கு முறை திட்ட நகலை எளிய தமிழில் அச்சிட்டு வெளியிட வேண்டும். அதில் எல்லா கிராமங்களின் பெயரையும் தொழிற் செய்யும் இடங்களையும் பதிவு செய்ய வேண்டும். மீத முள்ள இடங்களையும் மீனவர்களின் எதிகால தேவைக்கு என்றே குறியிட்டு வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 11-ந்தேதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
    • 4 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் கீழவைப்பார் கிராமத்தை சேர்ந்த ஜெனிபர், ஆரோக்கியம், எக்லிண்டன், திருமூர்த்தி ஆகியோர் கடந்த 11-ந்தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக படகு விபத்துக்குள்ளாகியது. பின்னர் அவர்கள் 4 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினர்.

    இந்நிலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மீனவர்களை, விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் நேரில் சந்தித்து நலம் விசாரித்து நிதி உதவி மற்றும் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சின்னமாரிமுத்து, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மாதவடியான், ஒன்றிய மீனவர் அணி துணை அமைப்பாளர் ராஜ், கிளைச் செயலாளர்கள் சூசைபூபாலராயர், ரீகன், வில்லியம் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கடற்கரையில் வாகனங்கள் செல்வதற்கு வழிப்பாதை சரிவர இல்லாமல் இருந்து வந்தது.
    • சுமார் 800 மீட்டர் தூரத்துக்கு விஜயாபதி ஏ.ஆர்.ரகுமான் தனது சொந்த செலவில் பாதை வசதி ஏற்படுத்தி கொடுத்தார்.

    நெல்லை:

    கூடங்குளம் அருகே இடிந்தகரை மீனவர்கள் கடலில் மீன் பிடித்துவிட்டு கரைக்கு திரும்பும் போது கடற்கரையில் வாகனங்கள் செல்வதற்கு வழிப்பாதை சரிவர இல்லாமல் இருந்து வந்தது. இதன் காரணமாக படகுகளில் இருந்து தரையில் நிற்கும் வாகனங்களுக்கு மீன்களை எடுத்துச்செல்ல மீனவர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர்.

    இதனால் அந்த பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தர உதவிடுமாறு மீனவர்கள் தி.மு.க. இளைஞரணி நிர்வாகியான விஜயாபதி ஏ.ஆர்.ரகுமானிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் ஆலோசனையின்பேரில் மீனவர்கள் நலனை கருத்தில் கொண்டு விஜயாபதி ரகுமான் தனது சொந்த செலவில் கடற்கரையில் சாலை வசதி அமைக்க ஏற்பாடு செய்தார். இடிந்தகரையில் தரையில் இருந்து கடல் வரையிலும் சுமார் 800 மீட்டர் தூரத்துக்கு தனது சொந்த செலவில் பாதை வசதி ஏற்படுத்தி கொடுத்தார். அந்த பணிகளை நேற்று அவர் ஆய்வு செய்தார். அப்போது மீனவர் பிரதிநிதிகள் இடிந்தகரை வெனிஸ்லாஸ், ரமேஷ், ராமு, செல்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மழை வெள்ளத்தில் மட்டுமல்ல ஒவ்வொரு மழை வெள்ளத்திலும் உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டு கொண்டு வருவது நீங்கள்தான்.
    • தற்போது திராவிட மாடல் அரசு 2 இடங்களில் பாராட்டு விழாவை நடத்தி மீனவர்களை கவுரவித்துள்ளது.

    சென்னை:

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மிக்சாங் புயலால் ஏற்பட்ட வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட மீனவர்களுக்கு மீனவளத்துறை சார்பில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட மீனவ மக்களுக்கு பாராட்டு விழா நடந்தது. அதைத் தொடர்ந்து சென்னையில் இன்று பாராட்டு விழா நடக்கிறது.

    அதில் எனக்கு கூடுதல் பெருமை கூடுதல் மகிழ்ச்சி மழை வெள்ள நேரத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு படகுகளை எடுத்துச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் நீங்கள். வெள்ள நேரத்தில் முதலமைச்சரும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும், மேயரும், அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் மக்களை போய் சந்தித்தோம்.

    யாரும் வீட்டில் போய் ஒளியவில்லை. எல்லோரும் களத்தில் மக்களோடு மக்களாக நின்றோம். மீட்பு பணியில் நீங்கள் எங்களுக்கு துணை நிற்பீர்கள் என்ற தைரியத்தில் மக்களிடம் போய் நின்றோம்.

    மீனவர்கள் நலன் மீது அரசுக்கு எப்போதும் தனி அக்கறை உண்டு. மீனவர்களுக்கும் தி.மு.க. அரசு மீது மிகப்பெரிய அளவில் நம்பிக்கை இருக்கிறது.

    மழை வெள்ளத்தில் மட்டுமல்ல ஒவ்வொரு மழை வெள்ளத்திலும் உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டு கொண்டு வருவது நீங்கள்தான்.


    2015-ல் இதே போல் மிகப்பெரிய வெள்ளம் வந்தது. அப்போதும் மீனவ நண்பர்கள்தான் களத்தில் இறங்கி மக்களை காப்பாற்றினீர்கள்.

    தற்போது திராவிட மாடல் அரசு 2 இடங்களில் பாராட்டு விழாவை நடத்தி மீனவர்களை கவுரவித்துள்ளது. எனவே மீனவ மக்களிடம் எனக்கு பிடித்தது நேர்மையும், துணிச்சலும் தான். எதற்கும் கவலைப்படமாட்டீர்கள். யாருக்கும் பயப்படமாட்டீர்கள்.

    உங்களை நம்பி வந்தால் அது எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் நம்பி வந்தவர்களுக்கு தோளோடு தோள் நின்று காப்பாற்றுபவர்கள் தான் நீங்கள்.

    இன்று மிகமிக முக்கியமான நாள். மதுரையில் ஜல்லிக்கட்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் திறந்து வைத்து உள்ளார். அந்த துறைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். ஆனால் அந்த விழாவுக்கு செல்லாமல் இன்று உங்கள் விழாவில் பங்கேற்றுள்ளார்.

    அந்த அளவுக்கு இது முக்கியமான நிகழ்ச்சி என்பதை நீங்கள் உணர வேண்டும். மீனவர்களை பாராட்டுகிற நிகழ்ச்சியில் ஏன் ஜல்லிக்கட்டு பற்றி பேசுகிறேன் என்று உங்களுக்கு வியப்பாக இருக்கும். அதற்கு ஒரு காரணம் உள்ளது.

    2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நடந்தது. அப்போது மாணவர்கள் இளைஞர்கள் தெருவில் இறங்கி கடற்கரையில் போராடினார்கள். குறிப்பாக கடந்த 25 வருடத்தில் இந்தியாவிலேயே இவ்வளவு பெரிய போராட்டம் நடந்தது என்றால் அது ஜல்லிக்கட்டு போராட்டம்தான்.

    அப்போது இருந்த ஆட்சியாளர்கள் போராட்டத்தை ஒடுக்க நினைத்த போது மாணவர்கள் இளைஞர்களுக்கு ஆதரவாக இருந்தது மீனவர்கள்தான்.

    ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் போராடினார்கள். ஆனால் அந்த மாணவர்களுக்காக இந்த மீனவ நண்பர்கள் போராடினீர்கள். அதுதான் உங்களது மனித நேயம்.

    கடந்த 2½ ஆண்டுகளில் ஏராளமான நலத்திட்டங்களை மீனவர்களுக்கு அரசு நிறைவேற்றி உள்ளது. இனிவரும் காலங்களிலும் பல்வேறு திட்டங்களை உங்களது கோரிக்கைகளை முதலமைச்சர் நிச்சயம் செய்து தருவார்.

    இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் யார் உண்மையான கடவுள், யார் உண்மையான இறைவன் என்றால் இன்னொரு உயிரை காப்பாற்றுகிறவன் தான் உண்மையான இறைவன். அப்படி பார்த்தால் நீங்கள் கடவுளுக்கு சமம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், புயல் மழையின் போது மீனவர்கள் மிகச் சிறப்பாக பணியாற்றினார்கள். அவர்களுக்கு பாராட்டு விழா நடத்துவது உண்மையில் சிறப்பு வாய்ந்தது. மீனவர்களின் பணியை பாராட்டி 1200 மீனவர்களுக்கு சான்றிதழ் நிவாரணப் பொருட்கள் வழங்கி கவுரவித்துள்ளோம் என்றார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு, கலாநிதி எம்.பி., மேயர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள், த.வேலு, ஐடீரீம் மூர்த்தி, எஸ்.எஸ். பாலாஜி கலந்து கொண்டனர்.

    • குட்டி ரோந்து கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இந்த பகுதியில் மீன்பிடிக்க அனுமதி இல்லை.
    • மீனவர்களை தாக்கி இங்கிருந்து செல்லுமாறு விரட்டி அடித்தனர்.

    மண்டபம்:

    ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் இந்திய-இலங்கை கடல் எல்லையை ஒட்டியுள்ள நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது குட்டி ரோந்து கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இந்த பகுதியில் மீன்பிடிக்க அனுமதி இல்லை. எனவே இங்கிருந்து செல்லுங்கள் என மீனவர்களை எச்சரித்தனர். உடனடியாக 10-க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீனவர்கள் அவசரம், அவசரமாக கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

    ஆனாலும் இலங்கை கடற்படை வீரர்கள் அத்துமீறி ராமேசுவரம் மீனவர்களின் படகுகளில் தாவிக்குதித்து அவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களை பறித்துக்கொண்டனர். அத்துடன் மீன்பிடி உபகரணங்கைளையும் சேதப்படுத்தினர். தொடர்ந்து மீனவர்களை தாக்கி இங்கிருந்து செல்லுமாறு விரட்டி அடித்தனர்.

    இதனால் பீதியடைந்த மீனவர்கள் மீன்பிடிப்பதை பாதியிலேயே விட்டு விட்டு கரைக்கு புறப்பட்டனர். அப்போது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தாக கூறி ராஜா, கீதன், சகாயராஜ், ஆகியோருக்கு சொந்தமான மூன்று மீன்பிடி விசைப்படகுகளையும், அதிலிருந்து டைட்டஸ், சரவணன், ஜெரோம், யாக்கோபு உள்ளிட்ட 23 ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து அதனை தங்களது ரோந்து கப்பலில் கட்டி இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் அவர்கள் இலங்கை காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்திய இலங்கை கடற்படை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்று விடுமுறை என்பதால் நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் அவர்கள் விடுதலை ஆவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்பது தெரியவரும்.

    இந்நிலையில் இலங்கையில் பாராளுமன்ற பொது தேர்தல் வரும் நாம் 14ஆம் தேதி நடைபெற உள்ளதால் ஒரே இரவில் 23 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வேண்டும், இலங்கையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

    கடந்த 29-ந்தேதி கொழும்புவில் நடைபெற்ற இரு நாட்டு மீன்வளத்துறை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் மீனவர் கைது நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என இந்திய சார்பில் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியான நிலையில் மீண்டும் 23 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது வேதனை அளிப்பதாக ராமேசுவரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
    • சுமார் ஆயிரக் கணக்கான மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

    தூத்துக்குடி:

    தமிழகத்தில் கடந்த மாதம் 15-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழை கிடைக்கும். இந்த ஆண்டு இதுவரை போதிய மழை இல்லாத நிலையில் தற்போது வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனிடையே இலங்கை அருகே கடலில் புயல் மையம் கொண்டுள்ளதால் நெல்லை மாவட்ட கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் எனவும், மறு உத்தரவு வரும் வரை நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் ராதாபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் மீனவர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

    இந்த தகவல் நெல்லை மாவட்ட கடலோர மீனவ கிராமங்களில் உள்ள ஆலய ஒலிபெருக்கிகள் மூலம் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து இன்று நெல்லை மாவட்டம் உவரி, கூட்டப்பனை, கூடுதாழை மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்பிடி படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.

    அதேநேரம் இடிந்தகரை, கூட்டப்புளி, பெருமணல், தோமையர்புரம் பகுதியில் கட்டுமரத்தில் 8 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் இன்று அதிகாலை 3 மணி அளவில் புறப்பட்டு சென்று விட்டனர். நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என்பதால் தூத்துக்குடி வ.உ.சி. துறை முகம் உள்ளிட்ட பல்வேறு துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    மேலும் வங்க கடல் பகுதி மற்றும் குமரி கடல் பகுதிகளில் காற்று 75 கிலோமீட்டர் வரை வீசக்கூடும். இதனால் பாதுகாப்பு கருதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். மேலும் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருக்கும் மீனவர்கள் பத்திரமாக கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரிய தாழை வரை 300 விசைப் படகுகள் மீன்பிடி துறை முகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுமார் ஆயிரக்கணக்கான நாட்டுப் படகுகள் மற்றும் பைபர் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் ஆயிரக் கணக்கான மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

    இதே போல கனமழை எச்சரிக்கை காரணமாக திருச்செந்தூர், மணப்பாடு, ஆலந்தலை, கொம்புத்துறை, புன்னக்காயல் பகுதிகளிலும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 

    • சுனாமி தாக்கி 20-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
    • மீனவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.

    தூத்துக்குடி:

    கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி ஏற்பட்ட சுனாமியால் பெரும் உயிர்ச் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டது. சுனாமி தாக்கிய 20-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் அப்பகுதியை சேர்ந்த அண்ணா சங்குகுளி மீனவர் சங்கம் சார்பில் அதன் தலைவர் இசக்கிமுத்து தலைமையில் மீனவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.

    அப்போது, இனிமேல் இப்படி ஒரு பேரழிவை இயற்கை தந்து விடக்கூடாது என்று வேண்டி கடல் தாய்க்கு மலர் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினார்கள். இதில் திரளான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

    சுனாமியால் உயிரிழந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    இதில், அண்ணா சங்கு குளி சங்க துணைத்தலைவர் மாரி லிங்கம், பொருளாளர் விமல்சன் ஆலோசகர் பாத்திமா பாபு, செயலாளர் முருகையா, பரதவர் முன்னேற்ற பேரவை தூத்துக்குடி மாவட்ட இளைஞர் அணி தலைவர் பாலன் உள்ளிட்ட அப்பகுதி மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 5.23 மணிக்கு தொடங்கியது.
    • தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது 100-வது செயற்கைக்கோளை ஏவுவதன் மூலம் வரலாறு படைக்க தயாராகி வருகிறது. இந்த மைல்கல் பணி நாளை காலை 6.23 மணிக்கு, ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-02 என்ற வழிசெலுத்தும் செயற்கைக்கோள் புவி ஒத்திசைவான பரிமாற்ற சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட உள்ளது.

    இந்த ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 5.23 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையல், பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.
    • நாகை-திரிகோணமலை இடையே எண்ணை குழாய் ஒப்பந்தம்.

    சென்னை:

    தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 7 நாடுகள் ஒருங்கிணைந்து "பிம்ஸ்டெக்" என்ற கூட்டமைப்பை உருவாக்கி இருக்கின்றன.

    இந்த கூட்டமைப்பில் இந்தியா, இலங்கை, வங்க தேசம், நேபாளம், தாய்லாந்து, மியான்மர், பூடான் ஆகிய 7 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. வங்கக் கடலை சார்ந்துள்ள இந்த நாடுகள் அதன் அடிப்படையில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

    1997-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நாட்டில் சந்தித்து பேசுவதை வழக்கத்தில் வைத்து உள்ளனர். இந்த சந்திப்பின் போது 7 நாடுகளுக்கு இடையே வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு, தீவிர வாத தடுப்பு, சுகாதாரம் உள்பட 14 விசயங்களில் இணைந்து செயல்பட ஆய்வு செய்யப்படும்.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான (2025) "பிம்ஸ்டெக்" கூட்டமைப்பு மாநாடு தாய்லாந்து நாட்டில் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 3 மற்றும் 4-ந்தேதிகளில் இந்த மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற் கான பணிகளை தாய்லாந்து அரசு செய்து வருகிறது.

    "பிம்ஸ்டெக்" கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் 3-ந்தேதி தாய்லாந்து நாட்டுக்கு புறப்பட்டு செல்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    மாநாட்டில் அவர் வங்க தேசம், இலங்கை நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவார் என்று வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தாய்லாந்து மாநாட்டை முடித்துக் கொண்டு 5-ந்தேதி பிரதமர் மோடி தாயகம் திரும்ப திட்டமிட்டு இருக்கிறார். அப்போது வரும் வழியில் அவர் இலங்கைக்கு செல்ல முடிவு செய்துள்ளார். இலங்கையில் அவர் சில ஒப்பந்தங்களை செய்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே கடந்த டிசம்பர் மாதம் இந்தியா வந்தார். டெல்லியில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசி விட்டு சென்றார். அப்போது அவர் பிரதமர் மோடியை தங்கள் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதை ஏற்று பிரதமர் மோடி இலங்கை பயணத்துக்கு திட்டமிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    இதற்கு முன்பு மோடி பிரதமராக பதவி ஏற்ற பிறகு 2015, 2017, 2019-ம் ஆண்டுகளில் 3 தடவை இலங்கைக்கு சென்று இருக்கிறார். தற்போது 4-வது முறையாக அவர் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்.

    இந்த பயணத்தின் போது ராமேசுவரத்தில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி இலங்கை அதிபருடன் ஆலோசிப்பார் என்று தெரிகிறது.

    மேலும் நாகப்பட்டினத்தில் இருந்து திரிகோணமலைக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் எண்ணை குழாய் அமைப்பது பற்றி ஒப்பந்தம் செய்வார் என்று தெரிகிறது.

    இதுதவிர இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே மின்சார பகிர்வுக்கான பேச்சுவார்த்தையும் நடத்தப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

    பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தின்போது தமிழக மீனவர்கள் பிரச்சனை பற்றி விவாதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பும், கேள்விக்குறியும் எழுந்து உள்ளது.

    கடந்த சில மாதங்களாக கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து செல்வது அதிகரித்து வருகிறது.

    மீன்பிடி படகுகளுடன் சிறை பிடிக்கப்படும் தமிழக மீனவர்கள் சிறிது காலத்துக்கு பிறகு விடுவிக்கப்பட்டாலும் அவர்களது படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் திரும்பி கிடைப்பது இல்லை. இதனால் தமிழக மீனவர்கள் வாழ்வதாரம் மிக மிக கடுமையாக பாதிக்கப்படுகிறது.

    இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பிரதமர் மோடி இலங்கை செல்வதால் தமிழக மீனவர்கள் பிரச்சனை பற்றி பேசுவாரா? என்ற ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    மீன்பிடி படகு மீது சரக்கு கப்பல் மோதிய விபத்தில் மாயமான 9 மீனவர்களை உடனடியாக கண்டுபிடிக்க நீர்மூழ்கி வீரர்களை பயன்படுத்த வேண்டும் என்று அரசுக்கு மீனவ அமைப்புகள் வலியுறுத்தி உள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கொச்சி, முனம்பம் மீன்பிடி துறைமுகத்தில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.

    ராமன்துறை, முள்ளூர் துறையைச் சேர்ந்த மீனவர்கள் உள்பட 14 பேர் யேசுபாலன் என்பவரது படகில் முனம்பம் துறைமுகத்தில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்க சென்றனர்.

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு கப்பல் மீன்பிடி படகு மீது மோதியது. இதில் ராமன்துறை, முள்ளூர் துறையைச் சேர்ந்த யாக்கோபு, யுகநாதன், சகாயராஜ் ஆகிய 3 மீனவர்கள் பலியானார்கள். 2 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

    பலியான மீனவர்களின் உடல்கள் உடனடியாக சொந்த ஊர் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அரசு அதிகாரிகள் மீனவர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.

    மேலும் கடலில் மூழ்கி மாயமான 9 மீனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடலில் மாயமான 9 மீனவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. இதுபற்றி மீனவ அமைப்பினர் கூறும்போது, படகு மீது கப்பல் மோதிய நேரத்தில் மீனவர்கள் 9 பேரும் படகின் அடித்தளத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    இதனால் கப்பல் மோதியதும் படகின் அடித்தளத்தில் இருந்த 9 பேரும் கடலுக்கு அடியில் ஆழமான பகுதிக்கு சென்றிருக்கலாம். இவர்களை உடனடியாக கண்டுபிடிக்க நீர்மூழ்கி வீரர்களால் மட்டுமே முடியும். எனவே அரசு நீர்மூழ்கி வீரர்களை விபத்து நடந்த பகுதிக்கு உடனடியாக அனுப்பி தேடுதல் வேட்டையை முடுக்கி விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மீன்பிடி படகு மீது மோதிய கப்பல் மத்திய அரசுக்கு சொந்தமான சரக்கு கப்பல் என்று கூறப்படுகிறது. நேற்று மங்களாபுரம் துறைமுகப் பகுதியில் சந்தேகப்படும் கப்பல் ஒன்றை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே கப்பல் மோதி படகு உடைந்த விபத்தில் பலியான 3 மீனவ குடும்பத்தினருக்கும் அரசு ரூ.10 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசில் வேலை வழங்க வேண்டும். இதுபோல காயமடைந்தவர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வெடிகளை வெடிக்கச் செய்து மீன் பிடித்ததை படம் பிடித்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கடலோர காவல்படையினர் தேடி வருகின்றனர்.
    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள நம்புதாளையைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவரது பைபர் படகில் முத்துராஜா (வயது 24), செல்வம் (19), பூவரசன் (24), காளதாஸ் (18) ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றனர்.

    அப்போது புதுக்குடியைச் சேர்ந்த ராஜ்குமரன் என்ற பெயர் கொண்ட பைபர் படகில் இருந்த சிலர் கடலில் வெடிகுண்டு வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அதனை முத்துக்கிருஷ்ணன் படகில் 4 பேரும் செல்போனில் படம் பிடித்துள்ளனர். இதனால் வெடி வைத்து மீன் பிடிப்பதை போலீசிடம் காட்டிவிடுவார்கள் என புதுக்குடியைச் சேர்ந்த மீனவர்கள் வேகமாக வந்து நம்புதாளை மீனவர்கள் படகில் மோதி அவர்கள் வைத்திருந்த மொபைல் போன்களை கடலில் வீசி 4 மீனவர்களையும் கல், கம்பு, கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கி உள்ளனர்.

    மேலும் தகாத வார்த்தைகளை பேசியும் வெடிகுண்டு வீசி படகை தகர்த்து விடுவோம் என மிரட்டிச் சென்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    சப்-இன்ஸ்பெக்டர் காசி வழக்குப்பதிவு செய்து வெடிவைத்து மீன் பிடித்ததோடு, மீனவர்களை தாக்கிய புதுக்குடி மீனவர்களை தேடி வருகிறார்.
    ×