என் மலர்
நீங்கள் தேடியது "flood"
- ரம்மியமான அழகுடன் விளங்கும் இந்த மலைக்குச் சுற்றுலா பயணிகள் ஏராளமாக வந்து செல்வார்கள்.
- ரம்மியமான அழகுடன் விளங்கும் இந்த மலைக்குச் சுற்றுலா பயணிகள் ஏராளமாக வந்து செல்வார்கள்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கல்வராயன் மலை இயற்கை அழகுடன் விளங்கும் மலைப் பகுதி. இங்கு பெரியார், மேகம், செருக்கலூர் என பல நீர்வீழ்ச்சிகள் உள்ளன. பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமான அழகுடன் விளங்கும் இந்த மலைக்குச் சுற்றுலா பயணிகள் ஏராளமாக வந்து செல்வார்கள். விடுமுறை நாட்களிலும் பண்டிகை நாட்களிலும் வெளி மாவட்டத்தில் இருந்தும் வெளி மாநிலங்களிலும் இருந்தும் ஏராளமானோர் வந்து இயற்கை ரசிப்பது வழக்கம் நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதற்கும், மலையைச் சுற்றிப் பார்ப்பதற்கும், வெள்ளி மலையில் உள்ள பள்ளத்தாக்கில் படகு சவாரி செய்வதற்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அப்படி வருபவர்கள் நீர்வீ ழ்ச்சிகளில் குளிக்கும்போது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. "பொதுமக்கள் நலன் கருதி நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதற்குத் தடை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் கடந்த சில தினங்களாக கல்வராயன் பகுதியில் பெய்ந்த மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக குளிக்க தடை விதித்த போதிலும் அந்தத் தடை நீடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நீர்வீழ்ச்சி பகுதிகளில் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளியூர்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் மலைபகுதி சாலையில் வரும் பொழுது மிகவும் ஜாக்கிரதையாகவும் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும் மழைக்காலம் என்பதால் சாலைகளில் பாறைகள் புரண்டு வரும் என்பதால் கவனமுடன் பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும், மழைக்காலம் முடிந்த பிறகும் நீர்வீ ழ்ச்சிகளில் குளிப்பதற்கும் மலையைச் சுற்றிப் பார்ப்பதற்கும் வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த பாதுகாப்புடன் வந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
+2
- வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் சாதாரண மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
- நிவாரண உதவிகளுக்கு மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் ஏற்பாடு செய்திருந்தார்.
சென்னை:
சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையில் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்தது.
சென்னை புறநகர் பகுதிகளான மணப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பாக்கம் பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மேல் தளங்களில் குடியிருந்தவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்று நேரில் பார்வையிட்டார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, பெஞ்சமின், சோமசுந்தரம், சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் உள்பட பலர் உடன் சென்றனர்.
முதலில் மணப்பாக்கம் திருவள்ளுவர் நகரில் தொடங்கினார். மெயின் ரோட்டில் இறங்கி தெருக்களுக்குள் சென்றபோது முட்டளவு தண்ணீர் தேங்கி நின்றது. அதில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நடந்து சென்று பொதுமக்களின் சிரமங்களை நேரில் பார்த்தார்.
அப்போது மின்சாரம் உள்ளதா? அரசு உதவிகள் கிடைத்ததா? வேறு ஏதேனும் உதவிகள் வேண்டுமா? என்று கேட்டார்.
அப்போது, பொதுமக்கள் 3 நாட்களாகியும் வெள்ளம் வடியவில்லை. வெள்ளத்தை அகற்றவும் நடவடிக்கை எடுக்கவில்லை. வீடுகளில் தங்க முடியாமல் உறவினர் வீடுகளுக்கும், சிலர் லாட்ஜூகளிலும் தங்கி இருக்கிறார்கள்.
எல்லா ஊர்களில் இருந்தும் தண்ணீர் இந்த பகுதிக்குத்தான் வருகிறது. முதலில் தண்ணீரை வடிய செய்ய வேண்டும். அதன்பிறகு தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றனர்.
அதை தொடர்ந்து காவியா நகர், பெல்நகர் பகுதிகளை பார்த்துவிட்டு மதனந்தபுரம், சிந்து காலனி, கொளப்பாக்கம் கணேஷ் நகர், ராமமூர்த்தி அவென்யூ உள்ளிட்ட பகுதிகளையும் பார்த்தார்.
வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் சாதாரண மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு நிவாரண உதவிகளுக்கு மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் ஏற்பாடு செய்திருந்தார்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 25 கிலோ அரிசி மூட்டை, காய் கறிகள், பால், ரொட்டி ஆகிய நிவாரண பொருட்களை 500 குடும்பங்களுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
- களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது
- நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக தலையணையில் இன்று காலை முதல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது
களக்காடு:
களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனைதொடர்ந்து களக்காடு தலையணையில் கடந்த 5-ந் தேதி முதல் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தடுப்பணையை மூழ்கடித்தப்படி தண்ணீர் பாய்ந்தோடியது.
இதையடுத்து தலையணையில் குளிக்க கடந்த 5-ந் தேதி முதல் வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் தண்ணீர் வரத்து குறைந்ததை அடுத்து 6 நாட்களுக்கு பின் கடந்த 11-ந் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையே நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக தலையணையில் இன்று காலை முதல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்படுவதாக வனசரகர் பிரபாகரன் அறிவித்துள்ளார்.
- பழமையான 5 மின் கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும்.
- 11 மின்கம்பங்கள் நடப்பட்டு, மின் கம்பிகள் பொருத்தப்பட்டு புதிய மின்விளக்குகளும் அமைக்கும் பணி.
சீர்காழி:
சீர்காழி வட்டத்தில் கடந்த 11ஆம் தேதி பெய்த கன மழையால் வெள்ளம் ஏற்பட்டு வேட்டங்குடி கிராமத்தை சூழ்ந்திருந்ததால் கிராம மக்கள் அவதி அடைந்து வந்தனர். கொள்ளிடம் பகுதியில் உள்ள அனைத்து சம்பா நெற்பயிர்களிலும் தண்ணீர் தேங்கி நின்றதால் நெற் பயிர்கள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கின. வேட்டங்குடி ஊராட்சி மிகவும் தாழ்வான பகுதியில் இருப்பதால் அங்குள்ள ஜீவா நகரில் உள்ள 250க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் மற்றும் குடிசை வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் கிராம மக்கள் நிலை குலைந்து அங்குள்ளவர்கள் பாதுகாப்பாக முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டு பின்னர் தண்ணீர் வடிந்த பிறகு வீடுகளுக்கு திரும்பினர்.
ஜீவா நகரில் பழமையான மின் கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் ஆபத்தான நிலையில் இருந்து வந்தது.இதனால் அப்பகுதிக்கு அடிக்கடி மின்சாரம் தொடர்ந்து விநியோகம் செய்ய முடியாதநிலை ஏற்பட்டதால் அங்குள்ள வர்கள் அவதி அடைந்து வந்தனர்.
வெள்ளம் பாதித்த கொள்ளிடம் பகுதிகளை சுற்றுச்சூழல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கடந்த 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை கிராமப் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து கிராம மக்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்து உடனுக்குடன் நடவடிக்கையை மேற்கொ ண்டு வந்தார்.
அப்போது வேட்டங்குடி ஊராட்சியில் உள்ள ஜீவாநகரில் உள்ள குடியிருப்புகளை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அங்குள்ளவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது அங்குள்ளவர்கள் அப்பகுதியில் உள்ள பழமையான 5 மின் கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும் என்று அமைச்சரிடம் நேரில் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் அமைச்சரோ அப்பகுதியில் உள்ள அனைத்து பழமையான மின்கம்பங்களையும் உடனடியாக அகற்றுவதற்கு மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தொடர்பு கொண்டு கிராமத்திற்கு நேரில் வரவழைத்து கிராம மக்கள் கேட்ட 5 மின் கம்பங்கள் மேலும் 6 மின்கம்பங்கள் உள்ளிட்ட 11 மின்கம்பங்கள் ஜீவா நகரில் நடப்பட்டு, மின் கம்பிகள் பொருத்தப்பட்டு புதிய மின்விளக்குகளும் அமைத்து தர நடவடிக்கை மேற்கொண்டார்.
அதன்பேரில் ஒரே நாளில் புதன்கிழமை ஜீவா நகரில் 11 மின்கம்பங்கள் புதியதாக நடப்பட்டு புதியதாக மின் கம்பிகளும், மின்விளக்குகளும் பொறுத்தப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டன. இதனால் ஜீவா நகர் இரவு நேரங்களில் பகலை போன்று காட்சியளிக்கின்றன.
மக்கள் கோரிக்கையை ஏற்று புதியதாக 5 மின்கம்பங்களுக்கு பதிலாக 11 மின்கம்பங்களை அமைத்துக் கொடுத்து மின்விளக்குகளை புதியதாக பொருத்தி அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்த அமைச்சர் மெய்யநாதனுக்கு அப்பகுதி ஒன்றியக் குழுஉறுப்பினர் அங்குதன் மற்றும் ஜீவா நகர் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
- மலை கிராமங்கள் துண்டிப்பு
- 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து நாசமானது
வேலூர்:
மாண்டஸ் புயல் கரையைக் கடந்த நிலையில் வேலூர் மாவட்டத்திலும் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த சிங்கிரி கோவில் அருகே பாயும் நாகநதி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் காற்று காரணமாக காத்தாளம்பட்டு, தெற்கு கொல்லைமேடு, சிங்கிரிகோவில் உள்ளிட்ட பகுதியில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு இருந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து நாசமானது.
அமிர்தி நீர்வீழ்ச்சியில் தொடர் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் அமிர்தி சிறு மிருககாட்சி சாலைக்கு அருகே உள்ள தரைப்பாலும் முழுவதுமாக மூழ்கியுள்ளது.
தொடர்ந்து வெள்ளம் அதிகரித்து வருவதால் ஜமுனா மரத்தூர், நாடனூர், நம்மியம்பட்டு, தொங்குமழை, கானமலை, பாலாம்பட்டு உள்ளிட்ட மலை குக் கிராமங்களுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது.தற்போதைக்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியவில்லை.
- சுமார் 30க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். பாலம் வழியாக வனத்துறையினர் அழைத்து வந்து பாதுகாத்தனர்.
- நீர்வரத்து சீராகும் வரை இந்த தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரப்பகுதியில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. தேவதானப்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட இந்த அருவியில் கடந்த மாதத்தில் இருந்தே தண்ணீர் குறைந்து காணப்பட்டது. கடந்த வாரம் முதல் விட்டு விட்டு பெய்த மழையினால் அருவிக்கு தண்ணீர் வந்தது. இதனால் விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர்.
மதிய வேளையில் திடீரென அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. கொடைக்கானல் அடுத்துள்ள வெள்ளகவி, வட்டக்கானல் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இருந்தபோதும் சுற்றுலா பயணிகள் தண்ணீர் வரத்து அதிகரித்ததை கவனிக்காமல் ஆனந்தமாக குளித்துக் கொண்டு இருந்தனர்.
ஒரு கட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படவே கரைக்கு அப்பால் 30 பேர் சென்றனர். அவர்கள் வெள்ளத்தை கடந்து வர முடியாமல் தவித்தனர். இதனைத் தொடர்ந்து ரேஞ்சர் டேவிட்ராஜா தலைமையில் வனவர் பூவேந்திரன், கண்காணிப்பாளர்கள் தமிழழகன், ஈஸ்வரன், காவலர்கள் விவேக், செந்தில் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு சுற்றுலா பயணிகளை மேலே ஏற அனுமதித்தனர்.
இதனைத் தொடர்ந்து அருவியில் வழக்கமான வலது பாதையில் அவர்கள் கரையேறினர். சிலரை வனத்துறையினர் தண்ணீரில் இறங்கி தூக்கிவிட்டனர். சுமார் 30க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். பாலம் வழியாக வனத்துறையினர் அழைத்து வந்து பாதுகாத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அருவியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
கும்பக்கரை அருவியில் இன்று 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து சீராகும் வரை இந்த தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். தேனி மாவட்ட த்தில் கடும் கோடை வெப்பம் நிலவி வரும் நிலையில் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களது பகுதிகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.
- வறட்சியால் பாதிக்கப்பட்ட சோமாலியாவுக்கு இந்த கனமழையானது ஓரளவு நிவாரணம் அளிக்கும்.
ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியா நாட்டில் கடந்த 2 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இங்குள்ள ஷபெல்லே மற்றும் ஜூபா நதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ளப்பெருக்கால் பல வீடுகள், பள்ளி கட்டிடங்கள் சேதம் அடைந்தன. ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களது பகுதிகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். இருப்பினும் இந்த சம்பவத்தில் இதுவரை 21 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட சோமாலியாவுக்கு இந்த கனமழையானது ஓரளவு நிவாரணம் அளிக்கும் என்றாலும் தற்சமயம் அது ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீள சில நாட்கள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.
- சைனபுரம், காரியா குடல் தடுப்பணைகள் முழு கொள்ளளவு எட்டியது
- குடிநீர் 6 மாதத்திற்கு தடையின்றி கிடைக்கும் என்று அதிகாரி கூறினார்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது.
இதனால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. நேற்று முன்தினம் இரவு காவேரிப்பாக்கம் பகுதியில் கன மழை பெய்ததால் நெமிலி கொசஸ் தலை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனை பாலத்தின் மீது செல்லும் பொது மக்கள் கண்டு ரசித்தனர். இது குறித்து நீர்வளத் துறை உதவி பொறியாளர் சந்திரன் கூறுகையில்:-
நெமிலி கொசஸ்தலை ஆற்றில் கட்டப்பட்டுள்ள சைனபுரம், காரியா குடல் தடுப்பணைகள் முழு கொள்ளளவு எட்டியது.
இதனால் சுற்றுவட்டார பகுதிகளான சயனபுரம், ரெட்டிவலம், கீழ்வெண்பாக்கம், அசநெல்லி குப்பம், கரியாக்குடல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாய பாசனத்திற்கு தேவையான நீர் கிடைக்கும்.
மேலும் மக்களுக்கு குடிநீர் 6 மாதத்திற்கு தடையின்றி கிடைக்கும் என்று கூறினார்.
- குடிநீர் குழாய் வெடித்ததில் தண்ணீர் அப்பகுதி முழுவதும் ஆறாக சென்றது. சுமார் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது.
- குடிநீர் குழாய் வெடித்த வழி தடப் பகுதி மட்டும் தடை செய்யப்பட்டுள்ளது.
பள்ளிப்பாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அடுத்த ராஜவீதி பகுதி சாலையில் ஓரத்தில் மண்ணுக்கு அடியில் பிரதான குடிநீர் குழாய் செல்கிறது.
இந்த குடிநீர் குழாய் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதாகும். பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு இந்த குழாய் மூலம் திருச்செங்கோடு பகுதி வரை செல்கிறது. ஆங்காங்கே துளையிட்டு குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு ஏற்றி, அதன் பிறகு பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு ராஜவீதி பகுதி உள்ள சாலையில் குடிநீர் குழாய் பயங்கர சத்தத்துடன் வெடித்து சுமார் 10 அடி ஆழத்துக்கு சாலையில் பள்ளம் ஏற்பட்டது. சாலையில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் செல்வதால் அழுத்தம் ஏற்பட்டு வெடித்ததாக கூறப்படுகிறது.
குடிநீர் குழாய் வெடித்ததில் தண்ணீர் அப்பகுதி முழுவதும் ஆறாக சென்றது. சுமார் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் சேறும் சகதியமாக மாறிவிட்டன.
இது பற்றி தகவல் அறிந்ததும் உடனடியாக அதிகாரிகள், மோட்டாரை நிறுத்தி, குழாயில் தண்ணீர் விநியோகத்தை நிறுத்தனர். இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்தை தடை செய்து, பள்ளம் ஏற்பட்ட பகுதியை சுற்றிலும் பொது மக்கள் செல்லாதவாறு பாதுகாப்பு வளையம் அமைத்தனர். குடிநீர் குழாய் வெடித்த வழி தடப் பகுதி மட்டும் தடை செய்யப்பட்டுள்ளது.
பின்னர் மோட்டார் கொண்டு வரப்பட்டு குடியிருப்புகளில் சூழ்ந்த வெள்ளம் அப்புறப்படுத்தினர். இதையடுத்து சகஜமான நிலை ஏற்பட்டது.
- பேரிடர் குழுவால் மீட்கப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
பேரிடர் குழுவால் மீட்கப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பன்னு, டேரா, கரக் மற்றும் லக்கி மார்வார்ட் ஆகிய பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதில் சுமார் 70 வீடுகள் இடிந்து விழுந்து சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார்.
- வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
- பல இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சண்டிகர் :
வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று அரியானாவில் கனமழை வெளுத்து வாங்கியது. காலை முதலே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அந்த வகையில் பஞ்ச்குலா மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த பேய் மழையால் அங்குள்ள காக்கர் ஆற்றில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்ந்தது. இந்த காட்டாற்று வெள்ளத்தில் ஆற்றங்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று அடித்து செல்லப்பட்டது.
காரில் கோவிலுக்கு வந்த பெண், கோவிலில் இருந்து திரும்பி வந்து, காரில் அமர்ந்திருந்தபோது,திடீர் வெள்ளம் வந்து காரை இழுத்து சென்றது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
எனினும் மீட்பு குழுவினர் வருவதற்குள் கார் காட்டாற்று வெள்ளத்தின் நடுவே சிக்கிக்கொண்டது. இதையடுத்து, வெள்ளத்தில் சிக்கிய காரில் ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணை கயிறு கட்டி மீட்க உள்ளூர் மக்கள் முடிவு செய்தனர்.
அதன்படி அங்கிருந்த இளைஞர்கள் சிலர் ஒரு கம்பத்தில் கயிற்றை கட்டி, அதை பிடித்து மெல்ல மெல்ல நகர்ந்து, பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தின் நடுவே சிக்கிய காரை அடைந்தனர். அதன் பின்னர் நீண்ட போராட்டத்துக்கு பின் காரில் இருந்த பெண்ணை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். உடனடியாக அந்த பெண் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவர் தற்போது நலமுடன் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய பெண்ணை கயிறு கட்டி பத்திரமாக மீட்டதை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். பதைபதைக்க வைக்கும் அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
- இடுக்கி மாவட்டத்தில் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
- தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரளா மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை மற்றும் மிக கனமழை பெய்து வருகிறது.
பல இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் ஏராளமான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. மேலும் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் ஊருக்குள் தண்ணீர் புகுந்திருப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இடுக்கி மாவட்டத்தில் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதேபோல் இடுக்கி, கோழிக்கோடு, பத்தனம் திட்டா, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அணைகளுக்கும் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அந்த அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
சபரிமலை வனப்பகுதியில் கனமழை பெய்வதால் பம்பை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதே போல் மாநிலம் முழுவதும் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. அங்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களை மீட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் ஆயிரகணக்கானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தங்கு தடையின்றி வழங்கப்படுகிறது.
கனமழை காரணமாக கேரளாவில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து உள்ளனர். ரூ.8 கோடிக்கும் மேல் பயிர்கள் சேதம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
கனமழைக்கு இதுவரை 150-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து உள்ளன. அவற்றை சீரமைக்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கேரளாவில் இன்றும் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அங்கு மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர் கோடு ஆகிய 5 மாவட்டங்களில் 6 முதல் 11 சென்டிமீட்டர் வரை இன்று மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பத்தனம்திட்டா, கோட்டையம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.