search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free Psychotherapy"

    • மன்ற செயலாளர் வெற்றிவேல் வரவேற்று பேசினார்.
    • ஏ.எம்.பொன்னுசாமி, முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    காங்கயம்:

    காங்கயம் மனவளக்கலை மன்ற அறிவு திருக்கோவில் அரங்கில் ஈரோடு எஸ்.கே.எம். சிகிச்சாலயா சித்த ஆயுர்வேத மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் இலவச சித்த ஆயுர்வேத சித்த மருத்துவ ஆலோசனை முகாம் நடந்தது.

    முகாமை காங்கயம் மனவளக்கலை மன்ற பொறுப்பாசிரியர் மேகநாதன் தொடங்கி வைத்து பேசினார். மன்ற செயலாளர் வெற்றிவேல் வரவேற்று பேசினார். மன்ற தலைவர் பழனிசாமி, பொருளாளர் நடராஜன் மற்றும் மன்ற நிர்வாகிகளான கமலஹாசன், கே.எஸ்.முருகசாமி,, ஏ.எம்.பொன்னுசாமி, முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    300 நோயாளிகள் சிகிச்சை பெற்றனர். முடிவில்ய மன்ற பேராசிரியர் கொங்குராஜ் நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை எஸ்.கே.எம். சித்த ஆயுர்வேத மருத்துவமனையின் இலவச முகாம் பொறுப்பாளர் உத்திரசாமி செய்திருந்தார். 

    ×