என் மலர்
நீங்கள் தேடியது "Function"
- மாவட்ட இணை செயலாளர் நன்றி கூறினார்.
- பட்டதாரி ஆசிரியர் கழக பரிசளிப்பு விழா நடைபெற்றது
பெரம்பலூர்:
பெரம்பலூரில் பட்டதாரி - முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் 49 - ம் ஆண்டு பரிசளிப்பு விழா மற்றும் பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட தலைவர் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அருண்குமார், மாவட்ட பொருளாளர் இலக்கியசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக பூலாம்பாடி பிளஸ் மேக்ஸ் குரூப் ஆப் கம்பெனி நிர்வாக இயக்குனர் டத்தோ பிரகதீஸ்குமார் கலந்துகொண்டு, பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு பெற்று தந்த ஆசிரியர்கள் மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு பெற்றுதந்த தலைமையாசிரியர்கள், 2022-2023 கல்வியாண்டில் ஓய்வு பெறும் ஆசிரியர்கள் ஆகியோர்களை பாராட்டி பரிசு வழங்கி பேசினார்.
தொடர்ந்து மாநில சிறப்பு தலைவர் சுப்ரமணியன், மாநில தலைவர் மகேந்திரன், மாநில பொதுசெயலாளர் சுந்தரமூர்த்தி, மாநில பொருளாளர் துரைராஜ், கவுரவ தலைவர் பாபுவாணன், முன்னாள் மாநில துணை தலைவர் தங்கராஜ் ஆகியோர் பேசினர். இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மகளிரணி செயலாளர் ஜெயந்தி வரவேற்றர். முடிவில் மாவட்ட இணை செயலாளர் லட்சுமணன் நன்றி கூறினார்.
- கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் தை முதல் செவ்வாய் காட்சி திருவிழா முன்னிட்டு நாள் கால் நடுதல் காப்பு கட்டுதல் விழா நடைபெற்றது.
- தொடர்ந்து காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜையும் 7 மணிக்கு அம்பாள் குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான மஞ்சள், மா பொடி, திரவியம், தேன், பால், சந்தனம் கும்பாபி ஷேகம்
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் தை முதல் செவ்வாய் காட்சி திருவிழா முன்னிட்டு நாள் கால் நடுதல் காப்பு கட்டுதல் விழா நடைபெற்றது.
தொடர்ந்து காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜையும் 7 மணிக்கு அம்பாள் குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான மஞ்சள், மா பொடி, திரவியம், தேன், பால், சந்தனம் கும்பாபி ஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட திருவிழா கால்நட்டிகாப்பு கட்டி சிறப்பு சோடனை தீபாராதனை நடந்தது. லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வ சுப்பிரமணியன் செய்தார்.
இதில் பஞ்சாயத்து தலைவி முத்துலட்சுமி மணி, சுப்பாராஜ் சங்கரேஸ்வரி, யோகிஸ்வரார் சங்க முன்னாள் தலைவர் ஆனாந்த் மாரியப்பன், ஆறுமுகம், மகாராஜா, மாரீஸ்வரன், விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, பூமாதேவி, பூமாலட்சுமி, காந்திமதி ,மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலய குழுவினர் செய்தார்கள்.
- பொருட்கள் வாங்கும்போது தர முத்திரைகளை பார்க்க வேண்டும்
- குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் விழா
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே பொம்மனப்பாடி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியை தமிழரசி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கதிரவன் கலந்துகொண்டு பேசுகையில், நுகர்வோர் பாதுகாப்பு, நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள், பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற செயல்பாடுகள் குறித்து விரிவாக பேசினார். மேலும் ஒவ்வொரு மாணவர்களும் நுகர்வோர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வினை முழுமையாக அடைந்து தனது பெற்றோரிடமும், அருகாமையில் இருப்பவரிடம் இதுபற்றி விளக்கமாக கூற வேண்டும் எனவும், கண்டிப்பாக பொருட்கள் வாங்கும் போது கவனித்து வாங்க வேண்டும், பொருட்கள் வாங்கும்போது அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தர முத்திரைகளை பார்த்து வாங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதில் ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர். முன்னதாக குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ரவிக்குமார் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் ஞானசேகரன் நன்றி கூறினார்.
திருச்சி,
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், காணக்கிளிய நல்லூர் கிராமத்தில் நந்தியாற்றின் குறுக்கே 9.24 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை அமைக்கும் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், தியாகராஜன், நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் சுப்பிரமணியன், செயற்பொறியாளர் நித்தியானந்தன், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், உதவி இயக்குனர் ஊராட்சிகள் கங்காதரணி, காணக் கிளியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சிங்கராயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மாநில அளவில் தேர்தல் நடைமுறைகளுக்கான சிறந்த ஒட்டு மொத்த செயல் திறனுக்கான விருதை அரியலூர் கலெக்டருக்கு கவர்னர் ரவி வழங்கினார்.
- விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மற்றும் சுயஉதவிக்குழுக்களுக்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியால் விருதுகள் வழங்கப்பட்டன.
அரியலூர்
சென்னை கலைவாணர் அரங்கில் 13-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நேற்று நடைபெற்ற மாநில விருதுகள் வழங்கும் விழாவில் வாக்காளர் சேர்ப்பு முகாம்களில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட கலெக்டர்கள், அலுவலர்கள் மற்றும் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மற்றும் சுயஉதவிக்குழுக்களுக்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியால் விருதுகள் வழங்கப்பட்டன. அதில், அரியலூர் மாவட்டத்திற்கு தேர்தல் நடைமுறைகளுக்கான சிறந்த ஒட்டு மொத்த செயல் திறனுக்கான விருதினை கலெக்டர் ரமணசரஸ்வதிக்கு கவர்னர் ரவி வழங்கி, பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து, சிறந்த வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான விருதினை கவர்னர் ரவி அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளத்துக்கு வழங்கினார். மேலும், சுவர் ஓவியப்போட்டி சிறப்பு பள்ளி மாநில அளவில் 2-வது இடம் பெற்ற அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் குறுக்குரோடு ஹெலன் கெல்லர் காதுகேளாதோர் சிறப்பு பள்ளி மாணவன் சதீசுக்கும், இதேபோன்று மாநில அளவில் 3-வது இடம் பெற்ற மாணவன் அன்புமணிக்கும், ரங்கோலி போட்டியில் மாநில அளவில் 8-வது இடம் பெற்ற அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், விழுதுடையான், பெரியாத்துக்குறிச்சியைச் சேர்ந்த ஆப்பிள் சுயஉதவிக்குழுவினருக்கும் கவர்னர் ரவிகையால் விருதுகள் வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- கலெக்டர் கொடியேற்றினார்
- 10லட்சம் மதிப்பில் 94 பேருக்கு நலத்திட்ட உதவி
பெரம்பலூர்:
இந்தியத்திருநாட்டின் 74-வது குடியரசு தின விழா முன்னிட்டு பெரம் பலுார் மாவட்ட கலெக் டர் அலுவல க பெருந் திட்ட வளாகத்தில் உள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண் புறாக்களை பறக்க விட்டார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். விழாவில் காவல்துறையில் சிறப் பாக பணிபுரிந்த 18 காவ–லர்களுக்கு முதல–மைச்சர் பதக்கங்களையும், 47 காவலர்களுக்கு நற்சான்றி–தழ்களையும் வழங்கினார்.
விழாவில் குடியரசு தின போலீசார் அணிவகுப்பிற்கு ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில், முதலாம் படைப்பிரிவிற்கு ஆயுதப் படை போலீஸ் சப்-–இன்ஸ்பெக்டர் பத்பநா–பனும், இரண்டாம் படைப் பரிவிற்கு ஆயுதப்ப–டை போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் சீ மானும், மூன்றாம் படைப்பிரிவிற்கு ஆயு–தப் படை போலீஸ் சப்-–இன்ஸ்பெக்டர் சந்திர–போசும் தலைமை–யேற்று வழி நடத்தி சென்ற–னர்.
மேலும் ஊர்க்காவல் படை அணிவகுப்பை ஆல்பர்ட் தலைமையேற்று வழி நடத்தி சென்றார். முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் போரை ஒத்த நடவடிக்கையில் உயிரிழந்த படைவீரரின் குடும்பத்திற்கு ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பராமரிப்பு மானியத்தையும், மாவட்ட மாற்றுத்திறனாளி கள்நலத்துறையின் மூலம் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.13 ஆயிரத்து 549 மதிப்பிலான திறன் பேசியினையும்,
தோட்டக்கலைத்துறை–யின் மூலம் தேசிய தோட் டக்கலை இயக்கத்தின் மூலம் ஒருவருக்கு ரூ.75 ஆயிரம் மதிப்பிலான மினி டிராக்டர் எந்திரத்தையும், வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் ஒருவ–ருக்கு ரூ.1.லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான பவர் வீடர் கருவியினையும், ஆதிதிராவிடர் நலத்துறை–யின் மூலம் ஒருவ–ருக்கு ரூ.5,ஆயிரத்து 580 மதிப்பி–லான மின்மோட்டா–ருடன் கூடிய தையல் எந்தி–ரத்தை–யும் மேலும் பல்வேறு துறை–களின் மூலம் மொத்தம் 94 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட–பிரியா வழங்கினார்.
நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பி–ரண்டு ஷியாமளா, மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் கலந்து கொண்டார். குடியரசு தினத்தினை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் தலைமையில் வெங்கடா பிரியா பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம் நொச்சியம் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.அதனைத் தொடரந்து மதனகோபாலசுவாமி கோவிலில் நடைபெற்ற சமபந்தி நிகழ்வில் மாவட்ட கலெக்டர் வெங்கடா பிரியா மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் தைப்பூச கொடியேற்றம் நடைபெற்றது.
- விழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனத்தில் முருகப்பெருமான் திருவீதி உலா வருவார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கொடிப்பட்டம் திருவீதி உலா வந்த பின் கொடிமரத்திற்கு புனித தீர்த்தங்களால் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்பின்னர் பக்தி பரவசத்துடன் கொடியேற்றப்பட்டது. மேலும் காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான் உற்சவ மூர்த்திகளுக்கு பூஜைகளுக்கு பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனத்தில் முருகப்பெருமான் திருவீதி உலா வருவார். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 4-ந் தேதி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
- நாளை நடைபெறுகிறது
- சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளியின் வெள்ளி விழா நடைபெற உள்ளது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் வெள்ளி விழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 30 மணிக்கு பள்ளியின் வளாகத்தில் நடைபெற உள்ளது என பள்ளி தாளாளர் பி. முருகேசன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது.பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா கீழப்புலியூரில் மிகச் சிறப்பாக கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருவது சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இங்கு பயிலும் மாணவ, மாணவிகள் நல்ல மதிப்பெண்கள் பெற்று 100சதவீதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் டாக்டர்கள் கார்த்திக் ராஜா , ராதிகா ஜெகதீஸ்வரி, செல்வமணிகண்டன், நிரஞ்சன், இந்தியன் வங்கியின் உதவி மேலாளர் இன்ஜினியர் ராம்குமார், திருச்சூரில் கனரா வங்கியின் உதவி மேலாளராக பணிபுரியும் சினேகா பொய்யாமொ ழியு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.மேலும் 2021 -2022 கல்வி ஆண்டில் பிளஸ் டூ பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி நிசாந்தி பெயரில் நிஷாந்தி பிளாக் என்று பெயரிட்டவளாகத்தை மாணவி கையால் திறந்து வைத்து சிறப்பிக்க உள்ளார்.இந்நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாக சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் திருமதி பாரதி பாஸ்கர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்ற உள்ளார். பள்ளியில் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த ஆசிரியர்கள் ஒன்பது நபர்களுக்கு ஹீரோ ஸ்கூட்டி வழங்கப்படும் .நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் பி முருகேசன், நிறுவனர் பரமசிவம், முதல்வர் உமா மற்றும் ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.இவ்விழாவில் மாணவ மாணவிகளின் பெற்றோ ர்கள்கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- 9 வகையான திரவிய பொடிகளில் அபிஷேகம்
- சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன
ஆலங்குடி,
ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளத்தில் பெரியநாயகி அம்பா ள் பிரசித்தி பெற்ற உடனுறை அரங்குள நாதர் கோவிலில் தை மாத பிரதோஷத்தை யொட்டி சிவன் சன்னதியில் உள்ள நந்திக்கு பால், தயிர், சந்த னம் உள்ளிட்ட 9 வகையான திர வியங்களால் அபிஷேகம் நடைபெற்றதுபின்னர் மூலஸ்தானத் தில் உள்ள சுயம்புலிங்க சிவபெரு மான், பெ ரியநாயகி அம்பாளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட் டது. பின்னர் சிவபெருமானை காளை வாகனத்தில் எழுந்தருள செய்து 3 முறை கோவில் பிரகா ரத்தில் பக்தர்கள் உலா வந்தனர்.இதேபோல் காசிக்கு வீசம் கூட என்று அழைக்கப்படும் திருவிளை யாட்பட்டி திருமூலநாதர்- திரிபுரசுந்தரி அம்பாள் கோவில், திருக்கட்ட ளை சோமசுந்த ரேஸ்வரர்-மங்களநாயகி அம்பாள் கோவில், திரும லை ராய சமுத்திரம் கதிர்காமேஸ்வரர்- கதிர்காமேஸ்வரி அம்பாள் கோவில், பாலையூர் கலங்கரை புராதன ஈஸ்வரர் கோவில், விஜய ரெகுநாதபுரம் சிவன் கோவில்களில் பிரதோஷ விழா வையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது,
- வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தார்
- தைத்தேர்விழா நிறைவு
திருச்சி,
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் உற்சவம் கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைத்தேரோட்ட உற்சவத்தையொட்டி தினமும் காலையும், மாலையும் நம்பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி உத்திரவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தைத் தேர் உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தைத் தேரோட்டம் கடந்த 3-ந் தேதி நடைபெற்றது. உற்சவத்தின் பத்தாம் நாளான நேற்று முன்தினம் சப்தாவரணம் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளினர். இதையொட்டி மாலை 3 மணிக்கு நம் பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ரெங்க விலாச மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து இரவு புறப்பட்டு வாகன மண்டபம் சென்றடைந்தார். வாகன மண்டபத்தில் இருந்து ஆளும் பல்லக்கில் புறப்பட்ட நம்பெருமாள் உத்திரவீதிகளில் வலம் வந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் பெருமாளை சேவித்தனர். பின்னர் வாகன மண்டபம் வந்தடை அவர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் தைத் தேர் திருவிழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- மலேசிய தொழிலதிபர் டத்தோ.பிரகதீகுமார் பேச்சு
- பள்ளி ஆண்டு விழா
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியின் 8வது ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் ராம்குமார் தலைமை வகித்தார். பள்ளிமுதல்வர் ஹேமா அனைவரையும் வரவேற்றார்.பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களில் 7பேர் தேர்வு செய்து நிகழ்ச்சிக்கு முன்னிலை வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.விழாவில் பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியை சேர்ந்த மலேசிய தொழிலதிபர் டத்தோ.பிரகதீஸ்குமார் சிறப்பு விருச்தினராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றி பேசியதாவது.பள்ளியில் படிக்கும் குழந்தைகள் இளம் பருவம் முதல் வாழ்க்கையில் உன்னால் முடியும் என்று தன்னம்பிக்கையுடன் உழைத்து நேர்மையாக வாழ்ந்தால் உயர்ந்த இடத்தை அடைய முடியும். அப்படி உயர்ந்த இடத்தை அடைவதற்கு படிப்பு மிகவும் முக்கியம் எனவும் பேசினார். விழாவை பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிதுணை தலைவர் மோகனசுந்தரம், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் ஆர்.பிரபு மற்றும் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பை அரசுப் பள்ளி மாணவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை அனைவருக்கும் உணர்த்த வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் பேசினார்.அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் வகையில், பெரம்பலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் பயிற்சி வகுப்பை பார்வையிட்டு அவர் பேசும்போது, மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளையும் எளிதில் எதிர்கொள்ளும் வகையில், வார இறுதி நாள்களில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இப்பயிற்சியில், பெரம்பலூர் ஒன்றியத்தி லிருந்து 49 மாணவர்களும், வேப்பந்தட்டை ஒன்றியத்திலிருந்து 65 மாணவர்களும், ஆலத்தூர் ஒன்றியத்திலிருந்து 31 மாணவர்களும், வேப்பூர் ஒன்றியத்திலிருந்து 51 மாணவர்களும் என மொத்தம் 196 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இப்பயிற்சி வகுப்புகளை, மாவட்டத்தில் உள்ள 138 மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சுழற்சி முறையில் நடத்தி வருகின்றனர். இந்தப் பயிற்சி வகுப்பில் அளிக்கப்படும் அறிவுரைகளையும், நுணுக்கங்களையும் கற்று போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும். கல்வி மட்டுமே நம்மை உயர்த்தும் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.அரசுப் பள்ளி மாணவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை அனைவருக்கும் உணர்த்தும் வகையில், நன்கு படித்து நீட் தேர்வை எளிதில் எதிர்கொண்டு, அனைவரும் மருத்துவ ர்களாக வர வேண்டும். கல்விக்காக உங்களுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என்று பேசினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.அறிவழகன், மாவட்டக் கல்வி அலுவலர் குழந்தைராஜன் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.