என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gift"

    • 1,358 மாணவ மாணவிகள் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றனர்.
    • 35 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

    கடலூர்:

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி துறை மூலமாக 2022-23-ம் கல்வியாண்டில் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவி களுக்காக கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 77 ஆயிரத்து 339 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 41 ஆயிரத்து 413 மாணவர்களுக்கு வட்டார அளவில் போட்டி நடத்தி, அதில் முதல் 2 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மட்டும் மாவட்ட அளவில் 6.12.2022 முதல் 10.12.2022 வரை போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் 6,952 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 1,358 மாணவ மாணவிகள் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றனர். இதையடுத்து மாவட்ட அளவில் முதலிடத்தை பெற்ற மாணவ- மாணவிகளில் 491 பேர் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர். அதில் 35 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

    இதையடுத்து மாநில மற்றும் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற கடலூர் மாவட்ட மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி கடலூரில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். இதில் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் சரவணகுமார் நன்றி கூறினார்.

    • பொதுமக்களுக்கு குப்பையை தரம் பிரித்து தர வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது
    • என் குப்பை எனது பொறுப்பு தலைப்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மங்கலம் :

    சாமளாபுரம் பேரூராட்சியில் நகரங்களின் தூய்மையான மக்கள் இயக்கம் திட்டத்தின் சார்பில் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் என் குப்பை எனது பொறுப்பு தலைப்பில் பொதுமக்களுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பையை தரம் பிரித்து தர வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. கோவை எம்.பி, பி.ஆர்.நடராஜன் தூய்மை பணியாளர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் பரிசு வழங்கினார். இதில் சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி, துணைத்தலைவர் குட்டிவரதராஜன், தி.மு.க. சாமளாபுரம் பேரூர் செயலாளர் பி.வேலுச்சாமி, சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள், சாமளாபுரம் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தபால் துறையில் மகளிர் மதிப்பு திட்ட பயனாளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
    • மே மாதம் 1-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை மகளிருக்கான மகளிர் மதிப்பு திட்டத்தில் இணைவதற்கான சிறப்பு முகாம் நடந்தது.

    பெரம்பலூர்,

    சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு திருச்சி மத்திய மண்டலத்தை சேர்ந்த அனைத்து அஞ்சலகங்களிலும் கடந்த மே மாதம் 1-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை மகளிருக்கான மகளிர் மதிப்பு திட்டத்தில் இணைவதற்கான சிறப்பு முகாம் நடந்தது. இத்திட்டத்தின் கீழ் ரூ. 50 ஆயிரம் மற்றும் 50 ஆயிரத்திற்கு மேல் முதலீடு செய்த வாடிக்கையாளர்களில் 15 நபர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்டத்திற்குட்பட்ட அஞ்சலகங்களில் கணக்கு தொடங்கிய பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த வயலப்பாடி கிராமத்தை சேர்ந்த கனிமொழி, பூலாம்பாடியை சேர்ந்த சீதாலட்சுமி, நல்லறிக்கை கிராமத்தை சேர்ந்த முத்தம்மாள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த வாடிக்கையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கபடும்
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அரியலூர்:

    அரியலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் உலக திருக்குறள் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கிராமங்கள் மற்றும் நகரத்தின் முக்கிய பகுதிகளில் திருக்குறள் பெயர் பலகை வைப்பது, கூட்டமைப்பை வலுவப்படுத்துவது, சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் வழியில் நடத்துவது, 1330 திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பத்தாயிரம் பரிசு வழங்குவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்துக்கு, மாவட்டச் செயலர் நாகமுத்து தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலர் சௌந்தர்ராஜன்,மண்டலத் தலைவர் சின்னதுரை, மாவட்டத் தலைவர் இளங்கோ, துணைத் தலைவர் ரமேஷ், மாவட்ட மகளிர் அணிச் செயலாளரும், முன்னாள் அரசு வழக்குரைஞருமான சாந்தி, ஒருங்கிணைப்பாளர் செல்லபாண்டியன், துணைச் செயலர் செவ்வேல், கொள்கை பரப்புச் செயலர் பொய்யாமொழி, பெரம்பலூர் மாவட்ட நிர்வாக அமைப்பாளர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

    • இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘கோல்டு’.
    • இப்படத்தை ஏழு ஆண்டு இடைவெளிக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கினார்.

    'நேரம்' படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்', தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது.


    'பிரேமம்' படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோல்டு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து இவர் 'நெஞ்சுக்கு நீதி', 'வீட்ல விஷேசம்' உள்ளிட்ட பல படங்களை தயாரித்த ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.


    அல்போன்ஸ் புத்திரன் பதிவு

    இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு 'கிஃப்ட்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். இப்படத்தில் சாண்டி, கோவை சரளா, சஹானா சர்வேஷ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




    • பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • நிகழ்ச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் நகர் மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    பூந்தமல்லி:

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செங்கல்பட்டு மண்டலம் சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி திருவேற்காடு நகராட்சியில் மக்களின் பங்களிப்போடு நகரை தூய்மையாக வைத்துக் கொள்வது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் நகர்ப்புறங்களை தூய்மையாக வைத்து கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    என் குப்பை எனது பொறுப்பு (கழிவுகளை பிரித்தல்), நகரங்களின் தூய்மைக்கு மக்களின் பங்களிப்பு, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்களின் பங்கு, மரம் வளர்ப்பதின் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நெகிழியினை தவிர்ப்பதன் அவசியம், நீர்நிலைகளை பாதுகாப்பது ஆகியவை குறித்து தொடர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இத்திட்டத்தின் படி சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை பாராட்டி பரிசு வழங்கி கவுரவிக்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் நகர் மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை பாராட்டி பொன்னாடை போர்த்தி பரிசு பொருட்களை நகர் மன்ற தலைவர் என்.இ.கே. மூர்த்தி வழங்கி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் நகர்மன்ற துணை தலைவர் ஆனந்தி ரமேஷ், ஆணையர் ஜஹாங்கீர் பாஷா, சுகாதார அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ், நகர் மன்ற உறுப்பினர் இளங்கோவன், மேற்பார்வையாளர்கள், பரப்பு ரையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தாசிம்பீவி மகளிர் கல்லுாரியில் பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது.
    • சிறந்த உணவு தயார் செய்தவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

    கீழக்கரை

    கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் கீழக்கரை நுகர்வோர் நலச்சங்கம், கிரியேட் தொண்டு நிறுவனம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், உணவு பாதுகாப்புத் துறை, இயற்கை வேளாண் கூட்டமைப்பு இணைந்து நடத்திய பாரம்பரிய உணவு திருவிழா கல்லூரி முதல்வர் சுமையா தலைமையில் நடைபெற்றது, கல்லூரி ஊட்டச்சத்து துறை தலைவர் முத்துமாரி ஈஸ்வரி வரவேற்றார்.

    நஞ்சில்லா இயற்கை உணவு பற்றியும், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கமாக பாரம்பரிய பண்பாட்டு உணவில் உள்ள மருத்துவ குணங்கள், ஊட்டச் சத்துக்கள் மற்றும்சமைக்கும் செயல்முறைகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. பாரம்பரிய உணவு சமைக்கும் போட்டி கல்லூரி மாணவியர்களுக்கும் பொதுமக்களுக்கும் நடத்தப் பட்டது. அதில் கேழ்வரகு மிக்ஸர், கேழ்வரகு கூழ், வரகு டோங்கா, உளுந்து களி போன்ற வித விதமான பாரம்பரிய உணவுகளைத் தயாரித்து அசத்தினர். சிறந்த உணவு தயார் செய்தவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

    திருப்புல்லாணி ஒருங்கிணைந்த குழந்தைகள்வளர்ச்சித் திட்டம் சார்பில் சிறு குறு தானியங்களில் திண்பண்ட சத்துப்பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டது.

    கிரியேட் தொண்டு நிறுவன தலைவர் துரைசிங்கம், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை டாக்டர் விஜயகுமார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் நாராயணன், திருப்புல்லாணி வேளாண் உதவி இயக்குனர் அமர்லால், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் கலா, கீழக்கரை நுகர்வோர் நலச் சங்க செயலாளர் செய்யது இப்ராஹிம், பாக்கர் அலி, இயற்கை வேளாண் கூட்டமைப்பு ஒருங்கி ணைப்பாளர் கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர்.

    கிரியேட் திட்ட இயக்குனர் சுரேஷ் கண்ணா நன்றி கூறினார். ஏராளமான கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளையின் துணைப் பொது மேலாளர் அல்ஹாஜ் சேக் தாவூத் கான், துறைப் பேராசிரியர்களும் செய்திருந்தனர்.

    • கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற ஜூட்ஸ் பள்ளிக்கு பரிசு வழங்கப்பட்டன
    • 4-ம்வகுப்பு மாணவி யாக்காவுக்கு நிர்வாகிகள் பரிசு வழங்கி கவுரவித்தனர்.

    அரவேணு,

    கோத்தகிரி ரோட்டரி சங்கத்தின் 2023-24ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. முன்னாள் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். செயலாளர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் புதிய தலைவராக ராஜ்குமார், செயலாளர் நஞ்சன் , பொருளாளர் கமலசீரலன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து மாநில அளவிலான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற ஜூட்ஸ் பள்ளிக்கு பரிசு வழங்கப்பட்டன நெருப்பு வளையத்தை வேகமாக சுற்றி சாதனை படைத்த ஒரசோலை பகுதியை சேர்ந்த 4-ம்வகுப்பு மாணவி யாக்காவுக்கு நிர்வாகிகள் பரிசு வழங்கி கவுரவித்தனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குண்டன், சாந்தி ராமு, ரோட்டரி ஆளுநர் சுரேஷ் பாபு மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், துணை ஆளுநர் முரளிதரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி நல்லசிவம், முன்னாள் தலைவர்கள் தேவராஜ், ரவிக்குமார், முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் வீரபத்திரன், ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • விழா பள்ளியின் தலைமையாசிரியர் மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
    • முன்னதாக ஆசிரியர் வேம்பையன் அனவைரையும் வரவேற்றார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த பன்னாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்றம் தொடக்க விழா பள்ளியின் தலைமையாசிரியர் மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

    தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை வில்லவன் கோதை, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குமணன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கார்த்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக ஆசிரியர் வேம்பையன் அனவைரையும் வரவேற்றார்.

    கலை இலக்கிய, பண்பாட்டு பயிற்றுநர் தென்னடார் அம்பிகாபதி சிறப்புரையாற்றினார்.

    இதில் ஆசிரியர் ரமேஷ் குமார், தர்மதுரை, யூடஸ் சுகிலா, வீரமணி, சித்ரா, பிரதீபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின், போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • நேர்மையை பாராட்டி அவருக்கு ரூ. 3 ஆயிரம் பரிசாக வழங்கினார்.
    • ஆகாச மாரியம்மன் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தகட்டூர் கடைத்தெருவில் ஒரு பவுன் தங்க செயின் கீழே கிடந்ததுள்ளது.

    அதை அப்பகுதியில் பழக்கடை வைத்துள்ள செந்தில் என்பவர் எடுத்து வர்த்தக சங்கம் மூலம் வாய்மேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    பின், போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நகை பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி பகுதியை சேர்ந்த முனியப்பன் உடையது என்பது தெரியவந்தது.

    பின்னர், ஆவணங்களை சமர்ப்பித்து நகையை பெற்றுக்கொண்ட முனியப்பன், நகையை மீட்ட செந்தில்ன் நேர்மையை பாராட்டி அவருக்கு ரூ. 3 ஆயிரம் பரிசாக வழங்கினார்.

    செந்தில் அந்த பணத்தை வாங்க மறுத்து பின், அதை வாங்கி தகட்டூர் சுப்பிரமணியன்காடு ஆகாச மாரியம்மன் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினார்.

    செந்திலின் நேர்மையை வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் பொதுமக்கள் வெகுவாய் பாராட்டினர்.

    • ஃபெர்ராரி 488 ஜிடிபி (Ferrari 488 GTB ) எனும் விலையுயர்ந்த சொகுசு கார் பரிசு
    • இத்தனை குழந்தைகளை பெற்று கொடுத்ததற்கு நன்றி

    மலேசியாவில் தனது அன்பு மனைவிக்கு ஒரு தொழிலதிபர் பொது இடத்தில் வழங்கியிருக்கும் பரிசு குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.

    அந்த வீடியோவில் காணப்படுவது:-

    அந்த தொழிலதிபர் மலேசியா நாட்டின் பெடாலிங் ஜெயா பகுதியில் 128 ஸன்வே சாலையில், ஸன்வே பல்கலைகழகம் அருகில் காஃபி ஷாப் நடத்தி வருகிறார். அவர் தனது மனைவியை ஒரு சிகப்பு நிற துணியால் மூடப்பட்ட ஒரு காரை நோக்கி அழைத்து செல்கிறார்.

    அந்த கார் முழுவதும் சிகப்பு மற்றும் வெள்ளை நிற பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அந்த காரின் பிராண்ட் அந்த துணியில் தெரிகிறது. இருவரும் அந்த காரை நெருங்கும்போது அந்த தொழிலதிபர், காரிலிருந்து அந்த துணியை மெதுவாக விலக்குகிறார்.

    அதில் ஃபெர்ராரி 488 ஜிடிபி (Ferrari 488 GTB ) எனும் விலையுயர்ந்த சொகுசு கார் தெரிகிறது. அதன்விலை சுமார் ரூ. 3.68 கோடிகளாகும் (Singapore Dollar 351,800).

    இக்காட்சிகளை பலர் தங்கள் ஸ்மார்ட்போன்களில் படம் பிடித்தனர். இந்த காட்சிகளுக்கு ஆதரவாகவும், விமர்சித்தும் பல கருத்துக்கள் வலைதளங்களில் பதிவிடப்படுகிறது.

    "எனக்காக இத்தனை குழந்தைகளை பெற்று கொடுத்ததற்கு நன்றி. உனக்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும்" என அவர் மென்மையாக மனைவியிடம் தெரிவித்ததாக ஒரு சமூக வலைதள பயனாளி தெரிவித்தார்.

    சாதாரண நிலையிலிருந்து மிகப்பெரும் தொழிலதிபரான அவர்கள் இருவரின் ஒற்றுமையை நெட்டிசன்கள் வியந்து பாராட்டி கருத்து தெரிவிக்கின்ற அதே வேளையில், அவரது பகட்டான செயலை விமர்சித்தும் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த கடை இருக்கும் முழு தெருவும் போக்குவரத்து தடையால் ஸ்தம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாரதியார் நினைவுநாள் போட்டிகளில் இஸ்லாமியா பள்ளி மாணவிகள் பரிசுகள் வென்றனர்.
    • இவர்களை பள்ளி தாளாளர் எம் எம்.கே.முகைதீன் இப்ராஹிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள், அலு வலர்கள் பாராட்டினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் தமிழ்ச் சங்கம் சார்பில் 102-வது பாரதியார் நினைவு நாள் கலை போட்டிகள் நடந்தது. இதில் கீழக்கரை இஸ்லா மியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர்.

    மனப்பாட போட்டியில் சம்சுன் நிஹாஸா, பாத்திமா சனா, மாறு வேடப் போட்டியில் சித்தி தஸ்ரிபா, தாருன் நிஹா, கட்டுரைப் போட்டியில் சம்சுன் ஃபசிஹா, ஆமினா ருஷ்தா, பேச்சுப்போட்டியில் நஸாஹா, பஸ்ஹா ஆகியோர் பரிசுகள் பெற்றனர். இவர்களை பள்ளி தாளாளர் எம் எம்.கே.முகைதீன் இப்ராஹிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள், அலு வலர்கள் பாராட்டினர்.

    ×