search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "he floated like a corpse"

    • அசோகன் (45), தறி தொழிலாளி. இவர் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள குட்டையில் மீன் பிடிக்க சென்றார்.
    • ஆனால் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் குட்டைக்கு சென்று தேடினர்.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டியை அடுத்த டி.அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அசோகன் (45), தறி தொழிலாளி. இவர் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள குட்டையில் மீன் பிடிக்க சென்றார். ஆனால் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் குட்டைக்கு சென்று தேடினர். அப்போது அவர் குட்டையில் பிணமாக மிதந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறினர். பின்னர் சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் உறவினர்களுடன் இணைந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×