search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Identity Card Community-verified icon Verified"

    • கலெக்டர் வழங்கினார்
    • 236 பேர் பயனடைந்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் மாதாந் திர மாற்றுத் திறனாளிகளுக் கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது.

    கலெக் டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, முகாமில் கை, கால் பாதிக்கப்பட்டவர்கள் 124 நபர்களுக்கும், காது கேளா தோர் 48 நபர்களுக்கும், கண் பாதிக்கபட்பட்ட 37 நபர்களுக் கும், பொது நல மருத்துவம் தொடர்பாக 12 நபர்களுக்கும் மற்றும் குழந்தை நல மருத்துவம் தொடர்பாக 15 நபர்களுக்கும் சம்பந்தப்பட்ட மருத்துவர்களால் மாற்றுத்தி றனாளிகள் என மொத்தம் 236 பேருக்கு தேசிய அடையாள அட்டை பெற மருத்துவ சான்றுடன் கூடிய அடையள அட்டைகளை வழங் கினார்.

    மேலும் 29 நபர்களுக்கு முதல்-அமைச்சர் காப்பீட்டு திட் டத்தில் பதிவு மேற்கொள்ளப்பட்டது. அறிவுசார் குறைபாடு உடையவர்களுக்கான பராமரிப்பு உதவித்தொகை வேண்டி 12 நபர்களும், வங்கிக்கடன் வேண்டி 8 நபர்களும், பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி 9 நபர்களும், சக்கர நாற்காலி வேண்டி 5 நபர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    இனிவரும் காலங்களில் மாதத்தின் முதல் வார செவ்வாய்க் கிழமை தோறும் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளா கத்தில் மாற்று த்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெறும் என கலெக்டர் தெரிவித்தார்.

    முகாமில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை முடநீக்கவியல்

    வல்லுநர் ஸ்டெல்லா மேரி, எலும்பியல் மருத்துவர் வெங்கடேஷ்

    மற்றும் மருத்துவர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • 16 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு, மாதத்தின் முதல் வாரம் செவ்வாய்க்கிழமை தோறும் கலெக்டர் தலைமையில் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இனிவரும் காலங்களில் நடைபெறும்.

    நேற்று நடைபெற்ற இம்முகாமில் கலந்த கொண்ட 132 நபர்களில் 78 நபர்களுக்கு மாற்றுத்திறனாளி களுக்கான அடையாள அட்டையும், 27 நபர்களும் முதல் -அமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் பதிவும், மற்றும் 52 புதிய பயனாளிகளுக்கு யுடிஐடி போர்ட்டலில் பதிவும் மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் 56 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி நல வாரியம் பதிவு மேற்கொள்ளப்பட்டது. மேலும், செயற்கை கால் வேண்டி 4 நபர்களும், அறிவுசார் குறைபாடுயவர்களுக்கான பராமரிப்பு நிதி உதவித்தொகை வேண்டி 19 நபர்களும், வங்கி கடன் வேண்டி 17 நபர்களும், பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி 5 நபர்களும், சக்கர நாற்காளி வேண்டி 16 நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    இம்முகாமில் மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார், மருத்துவர்கள், மாற்றுத்திறனாளி நல அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×