என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Impact"

    • விவசாய நிலங்கள் மழை காலங்களில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வந்தது.
    • தண்ணீர் செல்ல தடையாக இருந்த செடி, கொடிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா அன்னப்பன்பேட்டை பகுதியில் உள்ள ஜெம்பு காவேரி வாய்க்காலில் ஏராளமாக செடிகள் மற்றும் ஆகாய தாமரை செடிகள் மண்டியிருந்தது. அதனால் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல பெருந்தடையாக இருந்து வந்தது.

    அதனால் ஜெம்புகாவேரி வாய்க்கால் மூலம் வடிகால் மற்றும் பாசன வசதிபெறக்கூடிய நெய்தலூர், குண்டூர், அன்னப்பன்பேட்டை மற்றும் பொந்தையா குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் மழை காலங்களில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வந்தது. இது குறித்த செய்தி மாலைமலர் நாளிதழில் வெளியாகி இருந்தது

    இதன் எதிரொலியாக அன்னப்பன்பேட்டை பகுதியில் உள்ள ஜெம்பு காவேரி வாய்க்காலில் தண்ணீர் செல்ல தடையாக இருந்த செடிகள், கொடிகளை உடனடியாக அகற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

    இதையடுத்து தண்ணீர் தற்போது தங்கு தடையின்றி பாசனத்திற்கு விரைந்து செல்கிறது.

    ஜெம்பு காவேரி வாய்க்காலில் தண்ணீர் செல்ல தடையாக இருந்த செடி, கொடிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாலைமலர் நாளிதழுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்து பாராட்டினர்.

    • 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்து வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • இப்பகுதியில் வழக்கம்போல் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    விழுப்புரம்:

    மரக்காணத்தில் மத்திய மாநில, அரசுகளுக்கு சொந்த மான சுமார் 3500 ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளது. இங்கு உப்பு உற்பத்தி ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையில் நடைபெறுவது வழக்கம். இப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்து வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த உப்பு உற்பத்தி தொழிலை நம்பி இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இப்பகுதியில் வழக்கம் போல் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வந்தது. தற்பொழுது தீவிரம் அடைந்துள்ள வடகிழக்கு பருவ மழையால் மரக்காணம் பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக வக்கீகம் கால்வாயில் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இப்பகுதியில் பெய்து வரும் கனமழையோடு பக்கிங்காம் கால்வாயில் இருந்து வரும் தண்ணீரும் கலப்பதால் உப்பளங்கள் அனைத்தும் மூழ்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக உப்பு உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தத் தொழிலை நம்பி இருக்கும் தொழிலா ளர்களும் வேலையில்லாமல் அவதிப்படும் நிலைஉள்ளது. இங்கு மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்க குறை ந்தது 3 மாதத்திற்கு மேல் ஆகும் என்று உப்பு உற்பத்தி யாளர்கள் கூறுகின்றனர்.

    • சுமார் 400 அடி நீளத்தில் காற்றாலை விசிறியின் இறக்கையை மிக நீளமான லாரியில் ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் போலீஸ் செக் போஸ்ட் எதிரே உள்ள சாலையில் வந்து கொண்டிருந்தது.
    • இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பரமத்திவேலூர்:

    சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரு பகுதியில் இருந்து மதுரை பகுதிக்கு சுமார் 400 அடி நீளத்தில் காற்றாலை விசிறியின் இறக்கையை மிக நீளமான லாரியில் ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் போலீஸ் செக் போஸ்ட் எதிரே உள்ள சாலையில் வந்து கொண்டிருந்தது.

    இந்த இறக்கை கொண்டு செல்லும் லாரியை எந்த வாகனமும் முந்தி செல்ல முடியாத சூழ்நிலையில் அனைத்து வாகனங்களும் பின்தொடர்ந்து சென்றன. இதனால் நீண்ட நேரம் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள், கார்கள் ,வேன்கள் என ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து சென்றன. இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    எனவே இறக்கைகளை கொண்டு செல்லும் லாரிகள் இரவு 10 மணிக்கு மேல் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆறுகளின் கரைகள் உடைந்து பாதிப்பு.
    • பொதுப்பணித்துறை மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதியில் அரசலாறு, திருமலைராஜன் ஆறு, முடிகொண்டான் ஆறு, வடக்கு புத்தாறு, தெற்கு புத்தாறு, வளப்பாறு, நரிமணி ஆறு, ஆழியான் ஆறு, பிராவடையானாறு ஆகிய ஆறுகள் ஓடுகின்றன.இந்த ஆறுகளுக்கு காவிரி நீர் வந்து சேர்ந்துள்ளது.

    இந்த நிலையில் தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் ஆறுகளில் அதிக அளவில் தண்ணீர் வரும்போதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆறுகளின் கரைகள் உடைந்து பாதிப்பு ஏற்படாமலும் இருக்க பொதுப்பணித்துறை மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்ப ட்டு வருகின்றன.

    ஆறுகள் மற்றும் வடிகால்களின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகாமல் இருக்க திருமருகல் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் முன்பு மணல் மூட்டைகள் தயார் நிலையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

    இந்த மணல் மூட்டையில் அடுக்கி இருப்பதை நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது பொதுப்பணித்துறை தஞ்சை கீழ் காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் இளங்கோ, நன்னிலம் பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளர் செங்கவராயன், திருமருகல் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாத்திமா ஆரோக்கிய மேரி, திருமருகல் உதவி பொறியாளர்கள் சரவணன், செல்வகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    • வீடுகளை விட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டு உணவுகள் வழங்கப்பட்டு வந்தன.
    • சாலை மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சூரக்காடு கிராமத்தில் கனமழையால் வீடுகள் தண்ணீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டு உணவுகள் வழங்கப்பட்டு வந்தன.

    இந்த நிலையில் தற்போது தண்ணீர் வடிந்த நிலையில் வீட்டிற்கு திரும்பிய மக்கள் தங்கள் பகுதிகளுக்கு அதிகாரிகள் யாரும் பார்க்க வரவில்லை, நிவாரணமும் வழங்கவில்லை.

    இதனால் வாழ்வாதாரம் இழந்து சமைப்பதற்கு கூட பொருட்கள் இல்லாமல் குழந்தைகளை வைத்து கொண்டு சிரமபடுவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சீர்காழி - நாகப்பட்டினம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி வட்டாட்சியர் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் மறியல் விலகிக் கொள்ளப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • தீயாய் பரவும் ‘மெட்ராஸ்-ஐ’ நோயார் தினமும் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
    • கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கருப்பு கண்ணாடி அணிந்து கொள்வதால் நோய் மற்றவர்களுக்கு பரவும் தன்மை குறையும்

    மதுரை

    மதுரையில் தீயாய் பரவி வரும் மெட்ராஸ்- ஐ கண் நோயால் தினம் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகி றார்கள்.

    தற்போது மழை மற்றும் பனிக்காலமாக இருப்பதால் பருவநிலை மாற்றம் காரணமாக பல்வேறு தொற்று நோய்கள் மனிதர்களுக்கு பரவி வருகிறது.

    அந்த வகையில் மெட்ராஸ் -ஐ என்று அழைக்கப்படும் கண் வலி நோய் தற்போது மதுரை பகுதியில் அதிகளவில் பரவி வருகிறது. காட்டுத் தீப்போல ஒவ்வொரு நாளும் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இந்த கண் நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு இந்த நோய் பரவும் தன்மை கொண்டதால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு முன்னெச்ச ரிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று டாக்டர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    மதுரையில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் மெட்ராஸ்-ஐ யால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 500-க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கான சிகிச்சையில் கண்களுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

    கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுக்கு இந்த நோய் வராமல் தடுக்கும் வகையில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதுடன் கைகளையும் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    மேலும் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கருப்பு கண்ணாடி அணிந்து கொள்வதால் நோய் மற்றவர்களுக்கு பரவும் தன்மை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு இந்த கண் வலி எளிதில் பரவும் என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் அருகில் செல்வதை தவிர்த்து தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கைகளை கொண்டு கண்களை கசக்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் டாக்டர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.

    சுமார் 5 நாட்களுக்கு கண்கள் சிவந்து வீக்கம் ஏற்பட்டு நீர் வடியும் தன்மை கொண்ட இந்த நோய் காரணமாக கண் உறுத்தல் உள்ளிட்ட வலியும் காணப்படும் என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்திக் கொள்வது தான் இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • மாரியம்மன் கோவில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • சீர்காழி- மயிலாடுதுறை சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கதிராமங்கலம் முதல் மயிலாடுதுறை வரை சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

    இதையொட்டி சாலையின் இரு புறங்களிலும் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியால் சாலை ஓரம் உள்ள குடியிருப்புகள் பாதிக்கப்படுவதாக கூறி பொதுமக்கள் மயிலாடுதுறை சாலை திருநன்றியூர் மாரியம்மன் கோவில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்துக்கு பா.ம.க. மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி தலைமை தாங்கினார்.

    அப்போது குடியிருப்பு வாசிகளுக்கு இடையூறாக அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், அமைக்கப்பட்ட வடிகாலை அப்புறப்படுத்தக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் புயல் பாலச்சந்திரன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

    இந்த போராட்டத்தால் சீர்காழி- மயிலாடுதுறை சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மசோதாக்களின் மீது முடிவெடுக்காமல் தமிழக ஆளுநர் அவற்றை கிடப்பில் போட்டு வைத்துள்ளார்
    • புதுச்சேரி மக்கள் இப்போது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் நகர காங்கிரஸ் கட்சி தலைவர் சர்புதீன் மரைக்காயர் இல்லத் திருமணம் நாகூரில் நடைபெற்றது.

    அதில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ், முன்னாள் எம்.எல்.ஏ நிஜாமுத்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அப்போது நாராயணசாமிக்கு, ஷாநவாஸ் எம்.எல்.ஏ சால்வை அணிவித்து வரவேற்று பேசியதாவது:-

    புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதை எதிர்த்து அன்று நாராயணசாமி குரல் எழுப்பினார்.

    அதையே இன்றைய முதலமைச்சர் ரங்கசாமியும் செய்து வருகிறார். ஆளுநரால் புதுச்சேரிக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கும் பிரச்சனை தான். 20- க்கும் மேற்பட்ட மசோதாக்களின் மீது முடிவெடுக்காமல் தமிழ்நாடு ஆளுநர் அவற்றை கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.

    இதையெல்லாம் எதிர்த்து அனைவரும் போராட வேண்டும். புதுச்சேரி மக்கள் இப்போது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் அங்கு மாற்றம் நிகழும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்வில் காங்கிரஸ் பிரமுகர்கள் நவ்ஷாத், ரபீக், விடுதலை சிறுத்தை கட்சி பொறுப்பாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் முத்துலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிராம்பட்டினம்- பட்டுக்கோட்டை சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல்.
    • அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வட மாநில தொழிலாளிகளுக்கு அனைத்து கட்டிடங்கள் சம்பந்தமான வேலைகளும் வழங்கப்படுவதால் கட்டிடத் தொழிலையே வாழ்வாதாரமாக உள்ள தமிழகத்தைச் சார்ந்த கொத்தனார், ஆசாரிகள், பெயிண்டர்கள் உள்ளிட்ட கட்டிட தொழிலாளிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இங்குள்ள கூலி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று 100 மேற்பட்ட பெண்கள் உட்பட 300 கட்டிட தொழிலாளிகள் அதிராம்பட்டினத்திலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள சேர்மன்வாடி பகுதியில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த அதிராம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சக்கரவர்த்தி மற்றும் போலிசார் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததால் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
    • மழைநீர் வடிந்து மீண்டும் 2-வது முறையாக உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கி உள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, அகஸ்தியம்பள்ளி, கோடியக்காடு, கடிநெல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.

    தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்ததாக உப்பு உற்பத்தியில் வேதாரண்யம் 2-ம் இடம் வகிக்கிறது.

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முடிந்து, பாத்திகளில் தேங்கி இருந்த தண்ணீரை வெளியேற்றி உப்பு உற்பத்தி தொடங்கப்பட்டது.

    உப்பு உற்பத்திக்கு தயாரான நிலையில் பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    மீண்டும் 2-வது முறையாக இந்த ஆண்டு உப்பு பாத்திகளை சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    இந்தாண்டு உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கி நடைபெற்ற நிலையில் மழையால் பாதித்தது.

    உப்பு எடுக்கும் தருவாயில் திடீரென பெய்த கனமழையால் உப்பு பாத்திகள் முழுமையாக சேதமடைந்துள்ளது.

    பாத்திகளில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து மீண்டும் 2-வது முறையாக உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கி உள்ளது.

    எனவே மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டதால் உப்பு உற்பத்தியாளர்களுக்கும், உப்பள தொழிலாளர்களுக்கும் மத்திய-மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும்.
    • அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    மத்திய அரசு மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையம் அருகில் ஆட்டோ தொழிலாளர் சங்கம், அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் ஆகியவை அடங்கிய சி.ஐ.டி.யூ. சார்பில் 15 நிமிடம் அனைத்து வாகங்களையும் நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது.

    இதற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட துணைச்செயலாளர் நபி, மாவட்டக்குழு உறுப்பினர் செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் நிர்வாகிகள் பாஸ்கர், மனோகரன், அப்துல் ஹமீது, சுல்தான், நவாஸ்கான், புரோஸ்கான் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • காரைக்காலை அருகே செல்லூர் கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து, சீரமை க்காமல் உள்ளது.
    • இந்த சாலை மறியலால், காரைக்கால்-கும்பகோணம் வழியே சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்ப ட்டது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அருகே செல்லூர் கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து, சீரமை க்காமல் உள்ளது. இந்த சாலையை, உடனே சீரமைக்க வலியுறுத்தி, புதுச்சேரி அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் தொகுதி எம்.எல்.ஏ.க்களிடம், கிராம மக்கள் பலமுறை மனு கொடுத்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. தற்போது, அந்த சாலை மிகவும் மோசமாகி, போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையாக மாறியுள்ளதால், அரசின் அலட்சியப்போக்கை கண்டித்து, கிராம மக்கள் காரைக்கால்-கும்பகோணம் செல்லும் பிரதான தேசிய நெடு ஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  தொடர்ந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம், திருநள்ளாறு, அம்பகரத்தூர் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது கிராம மக்கள் ஒரு மாதத்திற்குள் சாலை அமைக்கும் பணியினை தொடங்க வேண்டும். இல்லையேல், மீண்டும் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால், காரைக்கால்-கும்பகோணம் வழியே சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்ப ட்டது.

    ×