என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Independence Day"

    • காவல் துறை தலைமை இயக்குநரின் பரிந்துரைக்கேற்ப கீழ்கண்ட காவல் அதிகாரிகள், ஆளுநர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்படுகிறது.
    • விருதுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் சுதந்திரதின விழாவில் வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9.5.2022 அன்று சட்டப்பேரவையில் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கையிலன் போது "சமூகத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்காக கடுமையாகவும், உண்மையாகவும் உழைக்கும் அதிகாரிகள், காவலர்களை ஊக்குவிப்பதற்கென முதலமைச்சரின் பதக்கம் புதிதாக வழங்கப்படும் என அறிவித்தார்.

    அதனை தொடர்ந்து அரசாணை 3.8.2022 அன்று வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக காவல் துறை தலைமை இயக்குநரின் பரிந்துரைக்கேற்ப கீழ்கண்ட காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்படுகிறது.

    வெ.பத்ரிநாராயணன் (காவல் கண்காணிப்பாளர், கோவை மாவட்டம்), டோங்கரே பிரவின் உமேஷ் (காவல் கண்காணிப்பாளர், தேனி மாவட்டம்), மா. குணசேகரன், (காவல் துணை கண்காணிப்பாளர், இருப்பு பாதை, சேலம் உட்கோட்டம்), சு.முருகன் (காவல் சார்பு ஆய்வாளர், நாமக்கல் மாவட்டம்), இரா.குமார், (முதல் நிலை காவலர்-1380, நாமக்கல் மாவட்டம்)

    போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை ஒழிப்பதில் அஸ்ரா கர்க், (காவல் துறைத் தலைவர், தென் மண்டலம், மதுரை) சீரிய பணியை அங்கீகரித்து  ரொக்கப் பரிசு இல்லாமல், இந்த "சிறப்பு பதக்கம்" தனி நேர்வாக வழங்கப்படுகிறது.

    அஸ்ரா கர்க்கின் தனிப்பட்ட முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பு மிகுந்த கண்காணிப்பின் மூலம் போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டத்தின் கீழ் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

    மூத்த அதிகாரிகளுக்கு அவர் பயிற்சி அளித்துள்ளார் மற்றும் 2022-2023-ல் 1843 நபர்கள் பிணைக்கப்பட்டு உள்ளனர். இது சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கியது.

    விருதுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் சுதந்திரதின விழாவில் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2019, 2020-ம் ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் தேசியக் கொடி ஆர்டர்கள் மட்டுமே பெறப்பட்டன.
    • நடப்பாண்டு சுதந்திர தினத்துக்கு கடந்த ஒரு மாதமாக ஆர்டர்கள் பெறப்பட்டு வருகின்றன.

    கோவை:

    நாட்டின் சுதந்திர தினம் வருகிற ஆகஸ்டு 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி நாட்டின், பல்வேறு பகுதிகளிலும் தேசியக் கொடி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, கோவை டவுன்ஹாலில் தேசியக் கொடி தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    இங்கு கதர், வெல்வெட், மைக்ரோ துணிகளால் தேசியக் கொடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் கதர் துணிகளாலான தேசியக் கொடிகள் குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.2 ஆயிரம் வரை விற்கப்படுகின்றன.

    மைக்ரோ துணிகளால் தயாரிக்கப்படும் கொடிகள் குறைந்த பட்சம் ரூ. 30 முதல் ரூ.1500 வரை விற்பனை செய்யப்படுகின்றன. வெல்வெட் துணிகளால் தயாரிக்கப்படும் கொடிகள் அளவுகளுக்கு ஏற்றார்போல் ரூ.100 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

    இது குறித்து தேசியக் கொடி தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராஜேந்திரன் கூறியதாவது:-

    சுதந்திர தினம், குடியரசு தினத்தை முன்னிட்டு, வழக்கமாக 3 மாதங்களுக்கு முன்பாகவே கொடிகள் தயாரிக்கும் பணிகளைத் தொடங்கிவிடுவோம். இந்த ஆண்டு ஜூன் இறுதி வாரத்தில் இருந்து கொடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு இல்லாததால் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் தேசியக் கொடிகளுக்கான ஆர்டர்கள் அதிக அளவில் வருகின்றன.

    நாங்கள் மொத்தமாக துணிகளை கொள்முதல் செய்து இருகூர், அரசூர், மேட்டுப்பாளையம், குறிச்சி, போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டெய்லர்களுக்கு அவற்றை பிரித்து வழங்குகிறோம். அவர்கள் அளவுக் கேற்ப அதைத் தைத்து எங்களிடம் திருப்பி தருவர். நாங்கள் அந்தக் கொடிகளில் 1 அங்குலம் முதல் 42 அங்குலம் வரை கொடியின் அளவுக்கேற்ப அசோக சக்கரத்தை, ஸ்கீரின்பிரிண்டிங் செய்து கொடிகளை தயாரிக்கிறோம்.

    கொரானா சமயத்தில் பொதுமுடக்கம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் 25 ஆயிரம் கொடிகளுக்கு மேல் விற்பனை செய்யப்படவில்லை. 2021 முதல் சுதந்திர தினம், குடியரசு தினத்துக்கு தலா 1 லட்சம் கொடிகளுக்கு மேல் ஆர்டர்கள் வருகின்றன. இதனால் டெய்லர்கள், சரக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் என 2 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக தேசியக் கொடி மட்டுமின்றி கட்சி கொடிகளின் ஆர்ட ர்களும் அதிக அளவில் வருவதால், கொடி தயா ரிப்பு தொழிலாளர்களுக்கு தொடர்ந்து பணிகள் கிடைக்கின்றன. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சுதந்திர தினத்துக்கு தேசியக் கொடி மட்டுமின்றி, மூவர்ணத்தில் பேட்ஜ், தொப்பி, சால்வை, பலூன், குடை, மோதிரம் உள்ளிட்ட பொருள்களையும் விற்பனைக்கு வைத்து ள்ளோம். இவற்றுக்கு மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது என்றார்.

    இதுகுறித்து நிறுவன உரிமையாளர் பாலா கூறியதாவது:-

    நாங்கள் தயாரிக்கும் தேசியக் கொடிகள் கோவை மட்டுமின்றி, கேரளம், ஆந்திரம், கர்நாடகம், தமிழகத்தில் மதுரை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, விருதுநகர், திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

    2019, 2020-ம் ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் தேசியக் கொடி ஆர்டர்கள் மட்டுமே பெறப்பட்டன. கடந்த ஆண்டு சுதந்திர தினத்துக்கு மொத்தமாக 1 லட்சம் கொடிகளுக்கு மேல் ஆர்டர்கள் பெறப்பட்டன.

    நடப்பாண்டு சுதந்திர தினத்துக்கு கடந்த ஒரு மாதமாக ஆர்டர்கள் பெறப்பட்டு வருகின்றன.

    பெறப்பட்ட ஆர்டர்க ளின் பேரில் தேசியக் கொடி தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆர்டர்கள் அதிக அளவில் பெறப்பட்டு வருவதால் இந்த ஆண்டும் 1 லட்சம் கொடிகளுக்கு மேல் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்து ள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விமான பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
    • சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    மீனம்பாக்கம்:

    சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை சீா்குலைக்க முயற்சி நடப்பதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்து உள்ளது.

    நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான ரெயில், பஸ் நிலையங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களை, பிரதான நுழைவு கேட் பகுதியிலேயே நிறுத்தி சந்தேகப்படும் வாகனங்களை பாதுகாப்பு படையினா் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்கின்றனர்.

    வெடிகுண்டு நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா்கள் மூலம் விமான நிலையம் முழுவதும் பரிசோதிக்கின்றனா். விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசாா் ரோந்து வந்து கண்காணிக்கின்றனா். மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அதிரடி வீரர்கள் மோப்ப நாய்களுடன் சென்னை விமான நிலையத்தின் உள்பகுதிகளில் தீவிரமாக சோதனை செய்து கண்காணித்து வருகின்றனர்.

    விமான நிலையத்தில் பாா்வையாளா்கள் வருகைக்கான தடை ஏற்கனவே கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அமலில் இருப்பதால் மேலும் தீவிரமாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. முக்கிய பிரமுகர்கள் வரும்போது வழங்கப்படும் பாஸ்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

    விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களுடன் கூடுதலாக கேமராக்களை அமைத்து விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் தொடா்ந்து கண்காணிக்கப்பட உள்ளது.

    விமான பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன் மேலும் ஒரு முறை விமானங்களில் ஏறும் முன் சோதனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. பயணிகள் எடுத்து வரும் கைப்பைகளை 'ஸ்கேனிங்' மூலம் சோதனை செய்யப்படுகிறது.

    பயணிகள் திரவப்பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன. விமானங்களில் சரக்கு பாா்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும் தீவிரமாக கண்காணித்து பல கட்ட சோதனைக்கு பின் ஏற்ற அனுமதிக்கப்படுகின்றன.

    விமான பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால் உள்நாட்டு பயணிகள் விமானம் புறப்படும் நேரத்துக்கு 1½ மணி நேரம் முன்னதாகவும், சா்வதேச பயணிகள் 3½ மணி நேரத்துக்கு முன்னதாகவும் வருவதற்கு சென்னை விமானநிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனா்.

    சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வருகிற 20-ந் தேதி நள்ளிரவு வரை இந்த பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும். வருகிற 13, 14, 15 ஆகிய தேதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பான 7 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்படும் எனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சிவகங்கையில் சுதந்திர தினவிழா ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
    • சுதந்திர தினவிழாவை சிறப்பாக கொண்டாட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அதிகாரிகளை கலெக்டர் அறிவுறுத்தினார்.

    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடுவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில், சுதந்திர தினவிழாவிற்கான அழைப்பிதழ் அச்சிடுதல், விழா மேடை மற்றும் பந்தல் அமைத்தல், விழா நடைபெறும் மைதானத்தை தயார்படுத்துதல், விழாவிற்கு வருகை தருகின்ற சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு மரியாதை செலுத்துதல், காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை சார்பில் அணி வகுப்பு மரியாதை செலுத்துதல், சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பராட்டுச்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்குதல் ஆகியவை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    இதற்கான முன்னேற்பாடுகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முறையாக மேற்கொண்டு, சுதந்திர தினவிழாவை சிறப்பாக கொண்டாட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அதிகாரிகளை கலெக்டர் அறிவுறுத்தினார்.

    சுதந்திர தினவிழாவை காண்பதற்காக வரும் பொது மக்களுக்கு தேவை யான குடிநீர் வசதி, போக்கு வரத்து வசதி, சுகாதார வசதி, பாதுகாப்பு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யவும் கலெக்டர் உத்தரவிட்டடார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் புஷ்பாதேவி உள்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சுதந்திர தினத்தையொட்டி ஆண்டுதோறும் வித்தியாசமாக ஓவியங்கள் வரைந்து வருகிறேன்.
    • மூங்கில், பேட்டரி செல், தங்கம், மெழுகு, மாத்திரை மற்றும் மாம்பழம் ஆகியவற்றில் ஓவியங்கள் வரைந்து சாதனை படைத்து உள்ளேன்.

    குனியமுத்தூர்:

    சுதந்திர தினம் வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

    இதனையொட்டி தற்போது சுதந்திர தின நிகழ்ச்சிகள் களைகட்ட தொடங்கி உள்ளன.

    இதன் ஒருபகுதியாக கோவையை சேர்ந்த வாலிபர் ஒருவர் சீதாப்பழத்தில் சுதந்திரத்துக்காக பாடுபட்ட 20 தலைவர்களின் ஓவியங்களை வரைந்து அசத்தி உள்ளார்.

    கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் ராஜா.

    ஓவியரான இவர் பல்வேறு ஓவியங்களை வரைந்துள்ளார். தற்போது சுதந்திர தினம் வருவதை முன்னிட்டு சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களை ஓவியமாக வரைய விரும்பினார்.

    அதுவும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என யோசித்த அவர், சீதாப்பழத்தில் 20 தலைவர்களின் ஓவியத்தை வரைந்தால் என்ன என்ற யோசனை அவருக்கு தோன்றியது.

    இதையடுத்து அவர் சீதாப்பழங்களை வாங்கி வந்தார். அதில் பச்சை, ஆரஞ்சு, வெள்ளை, நீலம், சிவப்பு ஆகிய வண்ணங்களை கொண்டு தலைவர்களின் படம் மற்றும் தேசியை கொடியை வரைந்தார்.

    ஒவ்வொரு சீதாப்பழத்திலும் ஒவ்வொரு தலைவர்களின் படங்களை வரைந்தார். அதன்படி சீத்தாப்பழத்தில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், சுப்பிரமணிய பாரதியார், விவேகானந்தர், வீரபாண்டி கட்டப்பொம்மன், வேலுநாச்சியார், வ.உ.சிதம்பரனார், மருது பாண்டியர், அம்பேத்கர், ஜவகர்லால் நேரு, பகத்சிங், ராஜேந்திரபிரசாத், சர்தார் வல்லபாய்படேல், பாலகங்காதர திலகர், அப்துல்கலாம், சந்திரசேகர ஆசாத், காமராஜர், ராதாகிருஷ்ணன், லாலா லஜபதிராய், அபுல்கலாம் ஆசாத் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை ஓவியமாக வரைந்துள்ளார்.

    இதுகுறித்து ஓவியர் ராஜா கூறியதாவது:-

    சுதந்திர தினத்தையொட்டி ஆண்டுதோறும் வித்தியாசமாக ஓவியங்கள் வரைந்து வருகிறேன்.

    இதற்கு முன்பாக மூங்கில், பேட்டரி செல், தங்கம், மெழுகு, மாத்திரை மற்றும் மாம்பழம் ஆகியவற்றில் ஓவியங்கள் வரைந்து சாதனை படைத்து உள்ளேன்.

    அந்த வகையில் நடப்பாண்டும் இளைஞர்கள் மத்தியில் தேசத்தலைவர்கள் மற்றும் தேசப்பற்றை நினைவுகூரும் வகையில் சீத்தாப்பழத்தில் தேசியக்கொடிகளுடன் 20 தலைவர்களின் படங்களை ஓவியமாக வரைந்து உள்ளேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கன்னாவின் பாட்டனார் ஒரு இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஆவார்
    • பல்வேறு துறையை சேர்ந்த முக்கியஸ்தர்களை இந்த குழு சந்திக்கிறது

    இம்மாதம் 15ம் தேதி இந்தியாவின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

    புது டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெறவிருக்கும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி உரையாற்றுவார்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சிறப்பு விருந்தினர்களாக அமெரிக்காவின் பாராளுமன்றத்தை சேர்ந்த ஒரு குழு வருகிறது.

    இந்திய மற்றும் இந்திய அமெரிக்கர்களின் நலனுக்கான அமெரிக்கா பாராளுமன்ற அமைப்பின் தலைவர்களான அமெரிக்காவின் பாராளுமன்றத்தை சேர்ந்த இந்திய-அமெரிக்கர் ரோ கன்னா மற்றும் மைக்கேல் வால்ட்ஸ் ஆகிய இருவர் இக்குழுவிற்கு தலைமை தாங்குகின்றனர்.

    இவர்களுடன் டெபோரா ராஸ், கேட் கம்மாக், ஸ்ரீ தானேதார், ரிச் மெக்கார்மிக், எட் கேஸ் மற்றும் ஜாஸ்மின் க்ராக்கெட் ஆகியோர் இணைந்து வருகின்றனர்.

    இவர்கள் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற பிறகு, இந்தியாவின் வர்த்தக, தொழில்நுட்ப, அரசாங்க, மற்றும் திரைத்துறை பிரமுகர்களை மும்பை மற்றும் ஹைதராபாத் நகரங்களில் சந்திக்க இருக்கிறார்கள். மேலும், புது டெல்லியில் உள்ள ராஜ் காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவகத்திற்கும் செல்கிறார்கள்.

    "இப்பயணத்தில் இந்திய பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மற்றும் பல பிரமுகர்களை சந்திக்க இருக்கிறோம். இந்தியாவிற்கு இந்த குழுவினருடன் வருவதும் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதும் ஒரு பெருமைக்குரிய செயல். என் பாட்டனார் அமர்நாத் வித்யாலங்கர் இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர். இது எனக்கு ஒரு உணர்வுபூர்வமான பயணம். இந்திய-அமெரிக்க உறவில் இது ஒரு மைல்கல்" என இந்த வருகை குறித்து ரோ கன்னா கருத்து தெரிவித்தார்.

    • சுதந்திர தின விழா முடியும் வரையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே போலீசார் விடுமுறை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
    • சோதனை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் 16-ந்தேதி வரை நீடிக்கும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    சென்னை:

    நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி சுதந்திர தின கொண்டாட்டங்கள் களைகட்ட உள்ளன.

    இதையொட்டி தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    சென்னையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் வாகன சோதனை, தங்கும் விடுதிகளில் சோதனை ஆகியவையும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மாநகர் முழுவதும் இரவு ரோந்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    வாகன சோதனையின் போது சந்தேக நபர்கள் சுற்றி திரிந்தால் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று இன்ஸ்பெக்டர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

    திருவல்லிக்கேணி, பெரியமேடு, எழும்பூர், கோயம்பேடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சந்தேகத்துக்கிடமான லாட்ஜூகளில் யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பதை கண்டறிய திடீர் சோதனையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சுதந்திர தின விழா முடியும் வரையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே போலீசார் விடுமுறை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    வணிக வளாகங்கள், கோவில்கள் ஆகியவற்றில் பாதுகாப்பை பலப்படுத்தி போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இந்த சோதனை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் 16-ந்தேதி வரை நீடிக்கும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • சுதந்திர தினத்தையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
    • துணியால் ஆன ஒரு கொடி ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    நெல்லை:

    சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அரசு அலுவ லகங்கள், பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்களில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்படுவது வழக்கம். வருகிற 15-ந்தேதி நாடு முழுவதும் சுதந்திர தினவிழா உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது.

    தபால் நிலையத்தில் விற்பனை

    சுதந்திர தினத்தையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதைத் தொடர்ந்து பொதுமக்களும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுவதற்கு தயாராகி வருகிறார்கள். இதையொட்டி நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தேசிய கொடிகள் விற்பனைக்காக குவிந்துள்ளது. அதனை பொதுமக்களும், வியாபாரி களும், மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் வாங்கி செல்கின்றனர்.

    இந்நிலையில் பாளை தலைமை தபால் நிலையத்தில் தேசிய கொடிகள் விற்பனை தொடங்கி உள்ளது. இதற்காக இன்று 1,,400 தேசிய கொடிகள் வந்தது. துணியால் ஆன ஒரு கொடி ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

    இ-போஸ் வசதி

    இந்த விற்பனையை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சிவாஜிகணேசன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வணிகவரி அதிகாரி ராஜேந்திர போஸ் மற்றும் அண்ணாமலை, ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே தேசிய கொடியை வாங்குவதற்காக இ-போஸ்ட் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இதில் விண்ணப்பித்தால் தபால் அலுவலக ஊழியர்கள் நேரில் சென்று வீடுகளில் தேசிய கொடியை வழங்குவார்கள். கடந்த ஆண்டு தபால் அலுவலகங்களில் தேசிய கொடி விற்பனை பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்தாண்டு தேசிய கொடி விற்பனை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

    • தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க தமிழக அரசு போக்குவரத்து கழகம் திட்டமிடப்பட்டது
    • பயணிகள் பாதுகாப்பாக திட்டமிட்டபடி பயணிக்க உடனே முன்பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    சென்னை:

    அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

    வார இறுதி நாளான இரண்டாம் சனிக்கிழமை (12-ம் தேதி) மற்றும் ஞாயிற்றுக்கிழமையை (13-ம் தேதி) தொடர்ந்து, வரும் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அரசு விடுமுறை தினம் என்பதால் அரசுத்துறை மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் ஒரு நாள் விடுப்பு எடுக்கும்பட்சத்தில் தொடர்ந்து 4 நாட்கள் விடுப்பு கிடைப்பதால் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கும், சுற்றுலா செல்வதற்கும் மற்றும் ஆடி மாதம் கோவில் திருவிழாக்களுக்குச் செல்லவும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

    தற்போது பயணிகள் முன்பதிவும் கூடுதலாகவே உள்ளது. வெளி ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் முன்பதிவு செய்வதன் மூலம் பயணிகளின் கூடுதல் தேவையை அறிந்து அதற்கு ஏற்றவாறு கூடுதல் பஸ்களை போக்குவரத்துக் கழகங்கள் இயக்க திட்டமிட இயலும். மேலும், பயணிகள் சிரமமின்றி, பாதுகாப்பாக திட்டமிட்டபடி பயணிக்கவும் உடனடியாக முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    8-ம் தேதி அன்று (நேற்று) வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமை வரை பயணிகள் அதிகளவில் முன்பதிவு செய்துள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுநாள்வரை சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து பயணம் மேற்கொள்ள 11-ம் தேதி 18,199 பயணிகளும், 12-ம் தேதி 6,949 பயணிகளும் மற்றும் 13-ம் தேதி 4,514 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.

    பயணிகள் எந்தவித சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 11-ம் தேதி கூடுதலாக 500 பஸ்களும் மற்றும் 12-ம் தேதி 200 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

    இதேபோல் கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவிலிருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 1,100 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுமட்டுமின்றி, 15-ம் தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொள்ள இதுவரை 12,257 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

    சிறப்பு பஸ் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிவகாசியில் தேசியக் கொடிகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • பேப்பர் கொடி மற்றும் அட்டையால் தயாரிக்கப்படும் கொடிக–ளின் விலை கடந்த ஆண்டை விட சற்று கூடுதலாக இருக்கும்.

    சிவகாசி

    சுதந்திர தின கொண்டாட் டத்திற்கு இந்திய நாடே தயாராகி வருகிறது. சுதந்திர தின கொண்டாடத்தில் அனைவரின் நெஞ்சங்களி–லும் தவறாமல் இடம் பிடிப் பது மூவர்ண தேசிய கொடி என்றால் அது மிகையல்ல. விருதுநகர் மாவட்டம் சிவ–காசியில் உள்ள அச்சகத்தில், சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தேவையான தேசிய கொடிகள் அச்சடிக் கும் பணிகளும், தயாரான கொடிகள் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிக–ளும் விறுவிறுப்பாக நடை–பெற்று வருகிறது.

    சிவகாசி அச்சகத்தில் துணியிலான தேசிய கொடி–கள், வார்னிஷ் பேப்பர், பளபளக்கும் ஆர்ட் பேப்பர், அட்டை உள்ளிட்டவைகளில் தயாராகி வருகின்றன. சட் டையில் குத்தும் வகையில் பேப்பர் தேசிய கொடிகளும், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் முகப்புக–ளில் பொருத்தும் வகையி–லான அட்டையால் தயாரிக் கப்படும் தேசிய கொடிகள் அதிகளவில் தயாராகி வரு–கின்றன. மேலும் இந்தியா வரை படத்துடன் கூடிய தேசிய கொடிகள், தேசத்தந்தை மகாத்மா காந்தி உருவத்து–டன் கூடிய தேசிய கொடி–கள், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால்நேரு உருவத்து–டன் கூடிய தேசிய கொடிகள் அழகிய வடிவங்களுடன், கண்ணை கவரும் டைகட்டிங் வடிவத்துடன் தயாரிக்கப் பட்டு வருகின்றன. மேலும், தொப்பி வடிவில் தலையில் மாட்டிக்கொள்ளும் வகை–யில் தேசியக் கொடிகள், கைகளில் மாட்டிக் கொள் ளும் வகையிலான தேசிய கொடிகளும் தயாரிக்கப்பட் டுள்ளன.

    தேசிய கொடிகள் தயா–ரிப்பில் முன்னணியில் இருக்கும் அச்சக உரிமையா–ளர் கூறும்போது, எங்களது அச்சகத்தில் பல்வேறு வகை–களிலான அச்சு பணிகள் நடந்து வருகின்றன. சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய கொடிகள் தயாரிக் கும் பணிகளையும் செய்து வருகிறோம். ஆரம்பத்தில் தமிழகத்தில் உள்ள பிரப–லமான பள்ளிகள், கல்லூரி–களில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கா க தேசிய கொடிகளை மொத்தமாக ஆர்டர்கள் கொடுத்து வாங்கினார்கள். பொதுமக்கள் பயன்ப–டுத்துவதற்காக ஸ்டேசனரி கடைகளில் பல வடிவங்க–ளிலான தேசிய கொடிகள் விற்பனைக்கு வந்துள்ளது. படிப்படியாக தமிழகம் முழு–வதும் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை சட்டைக–ளில் குத்திக் கொள்ளும் உற்சாகம் தொடங்கியது. இது தமிழகத்தை தாண்டி புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் பரவியது. அங்குள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் கடை–களில் விற்பனை செய்வ–தற்கான தேசிய கொடிகள் ஆர்டர்கள் அதிகளவில் கிடைத்தது.

    ஒரு முறை எங்களது நிறுவனத்தில் தேசிய கொடி–கள் வாங்குபவர்கள் பின்னர் தொடர்ந்து ஒவ் வொரு ஆண்டும் ஆர்டர்கள் கொடுத்து வருகின்றனர். இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு நாடு தயாராகி வரும் நிலையில், தேசிய கொடிக்கான ஆர்டர்களும் எதிர்பார்த்த அளவில் சிறப்பாக உள்ளது. பேப்பர் கொடி மற்றும் அட்டையால் தயாரிக்கப்படும் கொடிக–ளின் விலை கடந்த ஆண்டை விட சற்று கூடுதலாக இருக்கும். ஆனால் இந்த சின்ன விலையேற்றம் பெரிய பாதிப்பை ஏற்படுத்த–வில்லை. கடந்த இரண்டு மாதங்களாக தேசிய கொடி–கள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது எடுக்கப்பட்ட ஆர்டர்களுக்கு கொடிகள் அனுப்பி வைக்கும் பணிகள் நடந்து வரு–கின்றன என்றார்.

    • சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
    • சென்னைக்கு 75 சிறப்பு பேருந்துகள் பயணிகளின் தேவைக்கேற்ப இயக்கம் செய்யப்படுகிறது.

    மதுரை

    தமிழ்நாடு அரசு போக்கு–வரத்துக் கழகத்தின் மதுரை மேலாண் இயக்குநர் ஆறுமு–கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா–வது:-

    வார இறுதி நாட்கள் மற்றும் சுதந்திர தினவிழா தொடர் விடுமுறை வரு–வதை முன்னிட்டு வருகிற 11.8.2023 முதல் 15.8.2023 வரை திருச்சி, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் பல் வேவறு பகுதிகளுக்கு 200 பேருந்துகளும்,

    சென்னையில் இருந்து 11 மற்றும் 12-ந்தேதிகளில் மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட் டங்களுக்கு 85 பேருந்துகளும், வார விடுமுறை மற்றும் சுதந்திர தினவிழா முடிந்து 15.8.2023 அன்று ஊர் திரும்ப ஏதுவாக மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட் டங்களிலிருந்து சென் னைக்கு 75 சிறப்பு பேருந்து–கள் பயணிகளின் தேவைக் கேற்ப இயக்கம் செய்யப்ப–டுகிறது.

    மேலும் 16.8.2023 அன்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டும் மதுரை கோட்ட இயக்க பகுதிகளிலி–ருந்து தாணிப்பாறை சுந்தர மகாலிங்கம் கோவில், இருக் கன்குடி மாரியம்மன் கோவில், மாசாணியம்மன் கோவில், ராமேசுவரம் கோவில் மற்றும் பிற பகு–திகளுக்கு பயணிகளின் தேவைக்கேற்றார்போல் சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட உள்ளது.

    பயணிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதற்கு ஏதுவாகவும், பயணிகளுக்கு வழிகாட்டவும், சிறப்பு பேருந்துகளை கண்காணிக்க–வும், முக்கிய பேருந்து நிலை–யங்களில் அலுவலர்கள், பொறியாளர்கள், கண்கா–ணிப்பாளர்கள், பணியா–ளர்கள் மற்றும் பயணசீட்டு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • திண்டுக்கல் ரெயில்நிலை யத்தில் ரெயில்வே பாதுகாப்பு போலீசார் இன்றுமுதல் தொடர் தீவிர சோதனை பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
    • வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணி ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    நாட்டின் சுதந்திர தினம் வருகிற 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனைமுன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சி களுக்கு ஏற்பாடு செய்யப்ப ட்டு வருகிறது. அதேவேளை யில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் ரெயில்நிலை யத்தில் ரெயில்வே பாதுகாப்பு போலீசார் இன்றுமுதல் தொடர் தீவிர சோதனை பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    தண்டவாள பகுதி முழுவதும் தொடர்ந்து மெட்டல்டிடெக்டர் மூலம் சோதனை மேற்கொண்ட னர். ரெயில்நிலையங்களுக்கு வரும் பயணிகளின் உடமை களும் முழுமையாக பரிசோதனை செய்ய ப்பட்டது. ரெயில்நிலை யங்களுக்கு வரும் பார்ச ல்கள் அனைத்தும் கடுமையான பரிசோதனை களுக்கு பின்பே உரியவர்களி டம் வழங்கப்பட்டது. மேலும் ரெயில்நிலைய வளாகத்தில் நிறுத்தி உள்ள ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ரெயில்நிலைய வளாகம் முழுவதும் தீவிர கண்கா ணிப்பில் கொண்டுவர ப்பட்டுள்ளது. சந்தேக ப்படும்படியான நபர்கள் யாரேனும் சுற்றிவரு கிறார்களா என சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து ரெயில்நிலைய ங்களிலும் இதுபோன்ற சோதனை மேற்கொள்ள ப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதேபோல் பஸ்நிலையம், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விடுதிகள், லாட்ஜ்களில் வெளியூர் நபர்கள் யாரேனும் சந்தேக ப்படும்படியாக தங்கி உள்ள னரா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். வழி பாட்டு தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணி ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×