search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian coach"

    • பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான ட்ரெவர் பேலிஸ்-ன் இரண்டு ஆண்டு ஒப்பந்தம் முடிவடைந்துள்ளது.
    • அவரை தொடர்ந்து நீட்டிக்க வாய்ப்பில்லை.

    ஐபிஎல் 2025 அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன் மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு அணிகளும் ரீ-டெய்ன் செய்வதற்கான வீரர்களின் எண்ணிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

    ஒவ்வொரு அணியும் நிறைய வீரர்களை கழற்றிவிட்டுள்ளனர். கேப்டன்கள் கூட சில அணிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் வீரர்கள் மட்டுமின்றி பயிற்சியாளரை கூட சில அணிகள் மாற்ற செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    அந்த வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான ட்ரெவர் பேலிஸ்-ன் இரண்டு ஆண்டு ஒப்பந்தம் முடிவடைந்துள்ளது. அவரை தொடர்ந்து நீட்டிக்க வாய்ப்பில்லை. அதனால் பஞ்சாப் அணி இந்திய முன்னாள் வீரர்களை பயிற்சியாளராக நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    குறிப்பாக வீரேந்தர் சேவாக், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோரில் ஒருவரை பயிற்சியாளராக நியமிக்க உள்ளதாக பஞ்சாப் அணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதில் சேவாக், யுவராஜ் சிங் ஆகியோர் பஞ்சாப் அணிக்காக விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×